Jump to content

முருகா நீயும் சுழியன்டாப்பா..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கு முதல்முதல் வந்தவுடன் மனிசி முருகன் கோவிலுக்கு போகவேணும் வாங்கோ என அழைத்தாள்.மறு பேச்சு இல்லாமல் வெளிக்கிட்டு போனேன்.புதுசா என்னைத்தை செய்தாலும் ஆண்டவனிடம் அனுமதி பெறுவது எங்கன்ட மனசில் பதிந்த ஒன்று..

காரில் போகும் பொழுது மனிசி சிட்னி முருகனின் சரித்திரம் சொல்லிகொண்டு வந்தாள் .நல்லூர் கந்தனுக்கு ஒரு கதை இருக்கு,செல்வசந்நிதிமுருகனுக்கு ஒரு கதை இருக்கு அதுபோல் நம்மட சிட்னி முருகனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.ஒரு முருகதொண்டன் அவரை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து தனது வீட்டில் வைத்திருந்து ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பாடசாலை மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு எம்பெருமான் முருகனுக்கு பிராமணர்களின் ஆசியுடன் பூஜை செய்து வந்தவராம்.

அந்த காலகட்டத்தில் அவுஸ்ரேலிய ஜனநாயக கட்சிகள் அரசாண்ட காலம்...சேர சோழர்கள் ஆண்ட காலம் போல் இதுவும் ஒன்று. ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருந்தும் பக்தர்கள் முருக தரிசனத்திற்கு அலையேனவந்து எம்பெருமானுக்கு ஒரு நிரந்தர ஆலயம் அமைக்க வேணும் என்று எகமனதாக முடிவெடுத்து சிட்னி சைவமன்றம் என ஒரு அமைப்பை உருவாக்கி வைகாசி குன்றில் எம்பெருமான் முருகனுக்கு ஒருசிறு காணியும் வாங்கி ஒரு மண்டபம் அமைத்து அவனை குடியமர்த்தினார்கள் என சிட்னி முருகன் படலத்தை சொல்லிகொண்டே வந்தாள்.

சிவனின் கடைசி பெடி முருகன் வைகாசி குன்றில் இருந்தான்.ஆங்கிலபெயர் .....பெரும் தெருவும் மோட்டார் வீதியும் சந்திக்கும் ஒர் முக்கோணவடிவ காணியில் ஒரு சிறு மண்டபத்தில் தாய் தந்தை சகோதரத்துடன் அலங்கார கோலத்தில் வீற்றிருந்தான். நல்லூரானை அலங்கார கந்தன் என்பார்கள் அதுபோல சிட்னி முருகனை ஆடம்பர முருகன் என்று சொல்லலாம்.முருகா அவுஸ்ரேலியாவுக்கு உன்னை நம்பி குடிபெயர்ந்துள்ளேன்

எல்லாம்தந்து என்னை காத்தருள்வாய் என வேண்டுகொள் வைத்து வழிபட்டேன்...தொடர்ந்து முருகனிடம் சென்று வந்தேன். சென்றும் வருகின்றேன் .தொடர்ந்தும் செல்வேன்... ஒவ்வொரு கிழமையும் அவுஸ்ரேலிய பாடசாலை மண்டபத்திற்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பது கந்தனின் மனதில் நல்லதாக படாதமையால் தனது பக்தர்களின் மனதில் உள்புகுந்து பக்தர்களே நீங்கள் எனக்கு நிரந்தர மண்டபம் அமைத்து ஏன் என்னை வழிபட நடவடிக்கை எடுக்க கூடாது என கேட்டுவைத்தார்.இந்த கேள்வி எல்லா முருக அடியார்களையும் சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும்.இதனால் எழுந்ததுதான் சிட்னிமுருகனுக்கு நிரந்தர கோவில் கட்டும் எண்ணமாகும்.அது இருக்கட்டும் இப்ப விசயத்திற்கு வருவோம் இருபது வருடங்களுக்கு.முதல் எம்மவர்களால் உருவாக்கப்பட்ட முருகனின் மண்டபத்தை சூழ பல குடியிருப்புக்கள் இருந்தன யாவும் அவுஸ்ரேலிய வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள்.மண்டபத்தில் இருந்த முருகனுக்கு கோவிலில் குடியிருந்து தனது பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது.எனக்கும் தொடர்மாடி வீட்டிலிருந்து தனிவீட்டுக்கு குடிபெயர வேண்டும் என்றஎண்ணம் உண்டாக முருகனிடம் வேண்டுகோள் வைத்து வங்கியிடம் கடன் கேட்டேன் வங்கி கேட்ட கடனை தந்தது .தனி வீடு வாங்கி குடி பெயர்ந்தேன். என்னுடைய எண்ணத்தை வங்கி நிறைவேற்ற முருகனின் எண்ணத்தை முருகு பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.முருகனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. கோவில் கும்பாபிசேகம் மிகவும் விபரிசையாக நடை பெற்றது.அந்த தெருவில் அப்படியான ஒரு சன நடமாட்டத்தை அந்த வீதிவாசிகள் தங்கள் வாழ்நாளில் கண்டிருக்கமாட்டார்கள்.சனநடமாட்டம் மட்டுமல்ல வாகன நெரிசலையும்தான்.குடியிருப்புக்கான பகுதியில் எப்படி இப்படி மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்தார்கள் என அந்த வீதிவாசிகள் நிச்சயம் குரல் கொடுத்திருப்பார்கள்.கும்பாபிசேகத்தை தொடர்ந்து முருகனின் விசேட தினங்கள் மற்றும் ,வெள்ளிக்கிழமைகள் தோறும் வழிபாடுகள் நடைபெற தொடங்கிற்று.

வீதிவாசிகள் சிறு சிறு தொல்லைகளை எதிர் நோக்கத் தொடங்கினார்கள்.எங்களுக்கு சிறு தொல்லையாகத் தெரிந்த விடயம் வீதிவாசிகளுக்கு பெரியதொல்லையாக தென்பட்டது.நாங்கள் பக்தியுடன் எம்பெருமானுக்கு செய்த விடயங்கள யாவற்றையும் வீதிவாசிகள் தொல்லையாக எடுத்துகொண்டார்கள்.

வெள்ளிக்கிழமை வேலை முடிந்தவுடன் வீட்டை வந்து குளித்து காரில் முருகனை இரவு ஏழுமணி பூஜையில் தரிசிக்க போனால் எனக்கு முதலே பல முருகபக்தர்கள் தங்களது காரை அந்த சிறிய வளவில் நிறுத்தி விடுவார்கள இதனால் எனக்கு அங்கு நிறுத்தமுடியாமல் போய்விடும்.பிறகு என்ன வீதிகளில் தான் நிறுத்த வேண்டும். வீதிகளிலும் எம்மவர்களின் வாகனங்கள்தான் அதிகமாக இருக்கும்.முருகனை தரிசிக்கவேண்டும் என்ற ஆவலால் சில சமயங்களில் யாராவது வீட்டின் ட்ரைவ்வே க்கு முன்னால் ஒருமாதிரி சுழிச்சு காரை நிறுத்தி விட்டு சென்றுவிடுவேன்.செல்லும்பொழுது அவர்களின் வீட்டின் பூந்தோட்டாத்திலிருந்து அழகான ரோஜா பூக்களை பறித்தெடுத்து சென்று காணிக்கையாக கொடுத்ததும் உண்டு. பூஜை முடிந்தவுடன் ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள் ,கோவிலுக்கு அருகாண்மையிலுள்ள வீடுகளின் முன்பு உங்களின் வாகனங்களை தரிக்காதீர்கள்,பூக்களை பறிக்காதீர்கள் என்று ஆனால் நான் கண்டு கொள்வதில்லை.முருகன் கைவிடமாட்டான் என்ற ஒரு துணிவு.

வீதிவாசிகள் பொலிஸில் முறையிட்டார்கள்,நகரசபையில் மனுத்தாக்கல் செய்தார்கள் நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை காலப்போக்கில் எங்களுடைய தொல்லை தாங்கமுடியாமல் வீதிவாசிகள் வீடுகளை விற்பனை செய்துவிட்டு புறநகர்பகுதிகளுக்கு செல்ல தொடங்கினாரகள்.முருகனுக்கும் அவரகளின் காணிகள் மீது ஆசையிருந்தமையால் பக்தர்கள் மூலம் காணிகளையும் வீடுகளையும் தனதாக்கி கொண்டான்.இன்று முருகன் பல இன்வென்ஸ்மன்ட் புரொப்பட்டிக்கு சொந்தகாரன்.அன்று வீதிவாசிகளின் வீடுகளுக்கு முன்னால் ட்ரைவ்வேயில் காரை நிறுத்தியமைக்காக பொலிஸில் முறையிட்டார்கள் ஆனால் இன்று அதேவீதிவாசிகளின் காணிகளின் உள்ளே எமது வாகனங்களை நிறுத்துகிறோம்.எம்பெருமான் மகிமையோ மகிமை....

முருகா நீ சுழியன்டாப்பா..ஆனால் இன்னும் ஒரெ ஒரு வெள்ளை இனத்தவன் அசையாமல் இருக்கின்றான் அவன் உன்னை விட சுழியன்.எம்மவர்கள நம்புகிறார்கள், நீ அவனையும் வெகு சீக்கிரத்தில் வெளியேற்றிவிடுவாய் என்று உன்னை நம்பியோரை கைவிடமாட்டாய் என நானும் நம்புகிறேன்.

பக்தர்கள் சாப்பாட்டுகடை ஒன்றை உனக்காக ஆரம்பித்து பகுதிநேர வருமானத்திற்காக உதவினார்கள்.நீ உனது முழுநேர தொழிலை உட்கார்ந்திருந்து கவனிக்க பக்தர்கள் பகுதிநேர வருமானத்திற்காக நன்றாக உழைத்தார்கள்.நீயும் கோடிஸ்வரன் ஆகிவிட்டாய்.

மண்டபத்தினுள் குடி புகுந்தவுடன் பெற்றோரையும் சகோதரத்தையும் ஸ்பொன்சர் பண்ணி அழைத்த எம்பெருமான் காலபோக்கில் பல உறவுக்காரர்களை ஸ்பொன்சர் செய்து கூட்டுகுடும்பமாக வாழ்கிறான்.பழனிமுருகன்,நல்லூர் கந்தன்,செல்வசந்நிதி முருகன் மற்றும் மாமன்,மாமி எல்லோரும் அடக்கம். சைவனாக இருந்த நீ இப்ப இந்துவாக மாறிவிட்டாய்.இதனால் உனது குடும்பம் இப்ப பெரியது.வரும் காலங்களில் இன்னும் பல உறவுகளை நீ ஸ்பொன்சர் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.உன்னால் முடியும் நீ ஒரு சுழியன்டாப்பா!

சதாரண மக்கள் குடியிருப்பாக(low density zone) இருந்த உனது வாழ்விடத்தை வியாபர அதாவது கொமர்சல் பகுதியாக(commercial zone) மாற்றிவிட்டாய் ,நகரசபை நிர்வாகத்தினரின் சிந்தையில் புகுந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்திய நீ மகா சுழியன் எல்லாம் வல்ல இறைவன் .... கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற எம்மவர்களின் கூற்றுக்கிணங்க பலர் இன்று உனது ஊருக்கே குடியெர்ந்துள்ளன்ர் ,இன்னும் பலர் குடிபெயர இருக்கின்றனர். ஒரு ஊரையே உன்பக்தர்களின் குடியிருப்பு ஆக்கிய பெருமை உன்னையேசாரும்.....

என்னதான் இருந்தாலும் , உன்ட சனம் முள்ளிவாய்காலில் அவதிப்படும் பொழுது கண்டுகொள்ளவில்லை.சிட்னியில வந்து பெரிய நடப்படிக்கிறாய் ..........

எண்டுபோட்டு யாழில் இந்த கிறுக்கலை நாளைக்கு போடுவம் என நித்திரைக்கு சென்றுவிட்டேன்...

" அடெ புறம்போக்கு,முழமாறி ,முடிச்சு அவுக்கி நானே கேட்டனான் சிட்னிக்கு வரப்போறன் எண்டு நீங்கள்

தானே ,சிவனே எண்டு சும்மா இருந்த என்னை இங்க எடுப்பிச்சனியள்...அங்க சுத்த பசுப்பாலில்உடனே கறந்த சுத்த பசுப்பாலில் கிடைச்ச அபிசேகத்தை கெடுத்து போட்டு இப்ப குளிர் பாலை லீட்டர் கணக்காய் மக்கள் ஊத்தக்காரணமே நீங்கள் தானேடா"என கத்தி கொண்டே வேலுடன் என்னைநோக்கி பாய்ந்தார். நான் ஐயோ முருகா! என்னை ஒன்றும் செய்யாதே என கை எடுத்து கும்பிடுகிறேன் ஆனால் முருகன் என்னை நோக்கி வந்து பாய்துகொண்டேஇருந்தார் உடனே ஒம் நமச்சிவாய எனகத்தி கொண்டே சிவனின் காலில் விழுகின்றேன் .....பக்கத்தில் படுத்திருந்த மனிசி என்னப்பா என்ன நடந்தது என என்னை எழுப்பினாள் .முருகன் வேலால் குத்த வாற மாதிரி ஒரு கனவு கண்டனான் .உதுக்குத்தான் நான் சொல்லுறனான் படுக்க போகும்பொழுது விபூதி பூசி நல்ல நினைவுகளுடன் படுக்கவேணும் எண்டு .சொல்லிபோட்டு "நினவு நல்லது வேணும்" என்ற பாரதி பாடலை பாடிக்காட்டினாள்....

நானும் ஒமோம் எண்டு போட்டு ஓம்முருகா,ஓம்நமச்சிவாய,என உரத்தகுரலில் சொல்லிகொண்டு ...மனதில் எவனடி படுக்கப்போகும்பொழுது நல்லெண்ணத்துடன் படுக்கப்பபோறான்.........வாய் ஓம் முருகா என்றது....

Link to comment
Share on other sites

புத்தன்... என்ன இருந்தாலும் என்ரை அப்பன் முருகனை இப்பிடி நக்கல் நளினம் பண்ணக் கூடாது. ராவைக்கு கனவில வேல் வந்து குத்தும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சூப்பர் புத்தன் அண்ணா. உங்கள் கதையில் ஒவ்வொரு வரியும் அலுப்புத்தட்டாமல் ரசிக்கக்கூடிய மாதிரி இருக்கும். சமூக விடயங்களை எள்ளலுடன் படம்பிடித்துக் காண்பிப்பதில் கில்லாடி நீங்கள். :)

 

அது சரி உங்க முருகன் மட்டும் சுழியனோ, வேற ஆக்களும் இருக்கினமோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சுழியன்தான்

ஆனால் இவருக்கே அல்வா கொடுத்த பரம்பரை நாங்கள்.........

மிகுதி புங்கையர் சொல்வார் சிட்னியிலிருந்து.......

 

கதை அருமை

கண் வெட்டாமல் வாசித்து முடித்தேன்

தொடரட்டும் சுழியர்களின் சரித்திரம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்லூர் கந்தனோ...., சிட்னி முருகனோ....

அவர்கள் எல்லாம்... எமது குல தெய்வங்கள்.

மீண்டும்.....  இந்தப் பாட்டை, கேளுங்க .

புத்தா.... ஒனக்கு, நேரம் சரியில்லை...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி எழுதிறதிலை புத்தனண்ணாவை அடிக்க ஆளில்லை. :)

வேலோடை இருக்கும் "விக்கி"னம் தீர்ப்பவை எல்லாம் ஃபளாஸ் அடிச்சுப் போகினம். :rolleyes:

கதையிலை அந்த மாதிரி சுழிச்சிருக்கிறியள். சூப்பர் புத்தன் அண்ணா. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்... என்ன இருந்தாலும் என்ரை அப்பன் முருகனை இப்பிடி நக்கல் நளினம் பண்ணக் கூடாது. ராவைக்கு கனவில வேல் வந்து குத்தும். :D

 

எல்லாம் பக்தி முத்தி போனதால் வந்த கிறுக்கள்....நன்றிகள் சோழியன்

கதை சூப்பர் புத்தன் அண்ணா. உங்கள் கதையில் ஒவ்வொரு வரியும் அலுப்புத்தட்டாமல் ரசிக்கக்கூடிய மாதிரி இருக்கும். சமூக விடயங்களை எள்ளலுடன் படம்பிடித்துக் காண்பிப்பதில் கில்லாடி நீங்கள். :)

 

அது சரி உங்க முருகன் மட்டும் சுழியனோ, வேற ஆக்களும் இருக்கினமோ? :D

 

நன்றிகள் யாழ்வாலி.....பல சுழியன்கள் இருக்கிறோம்.... :D

 

நன்றிகள் டொங்கி....நானும் ஒரு முருகபக்தன் ஆக்கும்....பாடலுக்கு நன்ரிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில விடியக்காலமை, ஒவ்வொரு சனிக்கிழமை காலமையும் போய், முருகனைக் கண்ணுக்க வைக்காட்டால், எனக்குப் பத்தியப்படாது! நான் சொல்லுறது, அந்தகாலத்துக் கோயிலைப் புத்தன்!

 

அதாவது இந்தக்காலத்துக் கலியாண மண்டபம்!

 

ம்ம்... முருகன் இப்ப எங்கையோ போட்டான்!  :D

 

கொம்மேர்சியல் கிச்சின், புதுக்கார் (பழைய காரும் தான்) வாங்கிறவை, அருச்சனை செய்யிறதுக்கும், தேசிக்காய் நசிக்கிறதுக்கு எண்டே, ரெண்டு பெர்மினன்ட் 'பார்க்கிங் ஸ்பொட்ஸ்" எண்டால் முருகனர செல்வாக்கைப் பாருங்களன்!

 

சுத்தி வர இருந்த ஆக்களையெல்லாம் ஒரு மாதிரிக் கலைச்சுப் போட்டு, நம்மிட 'சீனியர்ஸ்' க்கு வாடைக்கு விடுகிறான்!

 

இப்ப தான் விளங்குது, முருகன் ஒரு மேட்டுக்குடி.............! :D

 

முருகா, நான் பகிடிக்குச் சொன்னனான்! 

 

கோவிச்சுக் கீவிச்சுப் போடாதையப்பு! :o

 

எண்டாலும் 'கொடியேத்தம்' எங்கட தானே. புத்தன்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசிக் குன்றேறி நின்றாய்!

வருகின்ற துன்பங்கள் தனை  நீக்கி நின்றாய்!

 

இன்னும் அருகினில் நீ வர வேண்டும்!

உனது பெருங்கோவில் மணி கேட்டு,

அடியேனின் இருள் நீங்க வேண்டும்! :D

 

800px-Sydney_murugan_koyil.jpg

 

Link to comment
Share on other sites

வழைமைபோல கலக்கல் கிறுக்கல். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

" அடெ புறம்போக்கு,முழமாறி ,முடிச்சு அவுக்கி நானே கேட்டனான் சிட்னிக்கு வரப்போறன் எண்டு நீங்கள்
தானே ,சிவனே எண்டு சும்மா இருந்த என்னை இங்க எடுப்பிச்சனியள்...அங்க சுத்த பசுப்பாலில்உடனே கறந்த சுத்த பசுப்பாலில் கிடைச்ச அபிசேகத்தை கெடுத்து போட்டு இப்ப குளிர் பாலை லீட்டர் கணக்காய் மக்கள் ஊத்தக்காரணமே நீங்கள் தானேடா"என கத்தி கொண்டே வேலுடன் என்னைநோக்கி பாய்ந்தார். நான் ஐயோ முருகா! என்னை ஒன்றும் செய்யாதே என கை எடுத்து கும்பிடுகிறேன் ஆனால் முருகன் என்னை நோக்கி வந்து பாய்துகொண்டேஇருந்தார் உடனே ஒம் நமச்சிவாய எனகத்தி கொண்டே சிவனின் காலில் விழுகின்றேன் .....பக்கத்தில் படுத்திருந்த மனிசி என்னப்பா என்ன நடந்தது என என்னை எழுப்பினாள் . //// 
லொஜிக் இடிக்குதே புத்தா ஜெய் ஜக்காம்மா அண்டாள பரமேஸ்வரியே எண்டெல்லோ நீங்கள் பாஞ்சு காலிலை விழுந்திருக்கவேணும்  :lol:
:lol: :D ?? கலக்கல் படைப்புக்குப் பாராட்டுக்கள் :) :) .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எங்கு சென்றாலும் கடவுளையும் கூட்டிச்செல்கின்றான்
இதே மாதிரித்தான் அன்று வெள்ளையர்கள் சிலுவையுடன் வந்தனர்.
ஆனால் தமிழன் சேர்ந்தான்
இங்கே வெள்ளைகள் சேரவில்லை தப்பினேன் பிழைத்தேன் என விட்டுவிட்டு ஓடுகின்றார்கள்
 

அது முருகனின் மகிமை தான் :D
 

பதிவிற்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் புலம்பெயர்ந்து சீக்கிரமே செல்வச் செழிப்போடு வாழுகின்றார்கள். அதைப் பார்த்து மற்றவர்களுக்கு எப்பவும் பொறாமைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் புலம்பெயர்ந்து சீக்கிரமே செல்வச் செழிப்போடு வாழுகின்றார்கள். அதைப் பார்த்து மற்றவர்களுக்கு எப்பவும் பொறாமைதான்.

 

தங்களையும் தங்களைச்சார்ந்தவர்களையும் வைத்து ஏனைய புலம்பெயர்தமிழர்களையும்  தங்கள் சமநிலை தராசில்  தரவு தருவது தப்பு.

Link to comment
Share on other sites

 
முருகனை கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கோ புத்தன். இல்லாவிட்டால் வேல், இன்னோரென்ன ஆயுதங்களால் கனவில் வந்து விரட்டுவார்.
 
கனடாவிலும்,அமெரிக்காவிலும் ஆளை விட்டால் காணும் என்று கோயில்களை சுற்றி இருக்கும் வெள்ளைகள் எடுக்கினம் ஓட்டம். :D கோயில்களில் வந்து இலவசமாக சாப்பிடும் வெள்ளைகளும் இருக்கினம். :lol:
 
தமிழர்களின் சுழியனுக்கு பின்னர் சிட்னி முருகனையும் சுழியனாக்கிய புத்தன்  simply superb.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களையும் தங்களைச்சார்ந்தவர்களையும் வைத்து ஏனைய புலம்பெயர்தமிழர்களையும்  தங்கள் சமநிலை தராசில்  தரவு தருவது தப்பு.

தமிழர்களின் வளர்ச்சியைப் பார்த்து வேறு இனத்தவர்கள் பொறாமைப்படுவார்கள் என்று சொல்லவந்தேன்! :)  நான் வரும்போது ஒரு கடனும் இல்லாமல் வந்தேன். இப்ப நிறையக் கடனோடு இருக்கின்றேன், ஆனால் அதையெல்லாம் முதலீடு என்று நம்புவதால் கடன் என்று கவலைப்படுவதில்லை. கவலையில்லாமல் வாழ கடனட்டைக்காரன் கேட்கும் ஆகக் குறைந்த மாதக் கட்டணத்தைச் செலுத்த உழைத்தால் போதும் என்று ஒருவர் சொன்ன அறிவுரைப்படி வாழ்வு போகின்றது. :mellow:  

சிட்னி முருகனின் வளர்ச்சியைப் பார்த்தால் எப்படி இருக்கின்றது. ஒரு காலத்தில் பாடசாலை அறைகளில் வாடகையில் வழிபடப்பட்ட முருகன் இப்போது தனது சொந்த இடத்தில் கோபுரம் உள்ள கோயிலில் இருப்பதும் பல புறோப்பேட்டீஸ்களுடன் இருப்பதும் அதிகமான தமிழர்கள் வேகமாகவே பணம் படைத்தவர்களாக மாறிவிட்டார்கள் என்றுதானே காட்டுகின்றது. இது மற்றைய நாடுகளுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வளர்ச்சியைப் பார்த்து வேறு இனத்தவர்கள் பொறாமைப்படுவார்கள் என்று சொல்லவந்தேன்! :)  நான் வரும்போது ஒரு கடனும் இல்லாமல் வந்தேன். இப்ப நிறையக் கடனோடு இருக்கின்றேன், ஆனால் அதையெல்லாம் முதலீடு என்று நம்புவதால் கடன் என்று கவலைப்படுவதில்லை. கவலையில்லாமல் வாழ கடனட்டைக்காரன் கேட்கும் ஆகக் குறைந்த மாதக் கட்டணத்தைச் செலுத்த உழைத்தால் போதும் என்று ஒருவர் சொன்ன அறிவுரைப்படி வாழ்வு போகின்றது. :mellow:  

சிட்னி முருகனின் வளர்ச்சியைப் பார்த்தால் எப்படி இருக்கின்றது. ஒரு காலத்தில் பாடசாலை அறைகளில் வாடகையில் வழிபடப்பட்ட முருகன் இப்போது தனது சொந்த இடத்தில் கோபுரம் உள்ள கோயிலில் இருப்பதும் பல புறோப்பேட்டீஸ்களுடன் இருப்பதும் அதிகமான தமிழர்கள் வேகமாகவே பணம் படைத்தவர்களாக மாறிவிட்டார்கள் என்றுதானே காட்டுகின்றது. இது மற்றைய நாடுகளுக்கும் பொருந்தும்.

 

உங்கள்  கருத்துக்குள்ளேயே  பல மாறுதல்கள்

தடுமாற்றங்கள்

 

நிறையக்கடனோடு இருப்பவர்கள்

எப்படி பணக்காரர்களாக இருக்கமுடியும்???

 

முதலீட்டிலிருந்து

கடனைக்கழித்துப்பார்த்தால்

பூச்சியமாவது வரணும்

பலருக்கு அதுவே -தான் நிற்கிறது... :(  :(  :(

அதுவும் கனடாவில் பலரைப்பார்த்தேன்

ஆளுக்கு

பிள்ளைகள் உட்பட

பல லட்சம் டொலர்கள் கடனாளியாக உள்ளார்கள்.

(வங்கிகள் அள்ளிக்கொடுத்ததன் விளைவு :( )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்  கருத்துக்குள்ளேயே  பல மாறுதல்கள்

தடுமாற்றங்கள்

 

நிறையக்கடனோடு இருப்பவர்கள்

எப்படி பணக்காரர்களாக இருக்கமுடியும்???

ஒரு தடுமாற்றமும் இல்லை.  தமிழர்களில் அதிகம் பணம் படைத்தவர்களாக ஆகிவிட்டார்கள் என்றுதான் தெரிகின்றது. இலண்டனில் பலர் நல்ல தொழில், வியாபாரம் என்று செய்து பெரிய வீடும், பீமா, மெர்சடீஸ், ஜீப் என்றும் இருக்கின்றார்கள். அப்படியான அதிகமான பணக்காரர்களில் ஒருவனாக இல்லை. அப்படியான நோக்கமும் இல்லை!

அத்தோடு பணம் சேர்க்கவேண்டும், ஆடம்பரமாக வாழவேண்டும் என்பதில் எல்லாம் ஆசையில்லை. எனவே எனது முதலீடு எப்பவும் மைனஸில்தான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

நானும் அடிக்கடி என்னுடைய குறைகளை சொல்ல முருகனிட்ட போறதால். நானும் கதையை இரசித்தேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சுழியன்தான்

ஆனால் இவருக்கே அல்வா கொடுத்த பரம்பரை நாங்கள்.........

மிகுதி புங்கையர் சொல்வார் சிட்னியிலிருந்து.......

 

கதை அருமை

கண் வெட்டாமல் வாசித்து முடித்தேன்

தொடரட்டும் சுழியர்களின் சரித்திரம்..

 

நன்றிகள் விசுகு...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...அடுத்த முறை சுழிச்சிகள் பற்றி கிறுக்கிறேன்.. :D

நல்லூர் கந்தனோ...., சிட்னி முருகனோ....

அவர்கள் எல்லாம்... எமது குல தெய்வங்கள்.

மீண்டும்.....  இந்தப் பாட்டை, கேளுங்க .

புத்தா.... ஒனக்கு, நேரம் சரியில்லை...... :D

 

நன்றிகள் தமிழ்சிறி ...நான் முருகனையே சுழிச்சு போடுவன் :D

சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி எழுதிறதிலை புத்தனண்ணாவை அடிக்க ஆளில்லை. :)

வேலோடை இருக்கும் "விக்கி"னம் தீர்ப்பவை எல்லாம் ஃபளாஸ் அடிச்சுப் போகினம். :rolleyes:

கதையிலை அந்த மாதிரி சுழிச்சிருக்கிறியள். சூப்பர் புத்தன் அண்ணா. :):icon_idea:

 

நன்றிகள் ஜீவா வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

< நான் பகிடிக்குச் சொன்னனான்!  :icon_idea:

 

நன்றிகள் புங்கையூரன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.அவன் ஒரு மேட்டுக்குடி சுழியன்.... :D

வழைமைபோல கலக்கல் கிறுக்கல். தொடருங்கள்.

 

நன்றிகள் குருவே

" அடெ லொஜிக் இடிக்குதே புத்தா ஜெய் ஜக்காம்மா அண்டாள பரமேஸ்வரியே எண்டெல்லோ நீங்கள் பாஞ்சு காலிலை விழுந்திருக்கவேணும்  :lol: :lol: :D ?? கலக்கல் படைப்புக்குப் பாராட்டுக்கள் :) :) .

 

 

நன்றிகள் கோமகன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நாலு சுவத்திற்குள் நடப்பது எல்லாம் வெளியே சொல்லமாட்டமல்ல.....

தமிழன் எங்கு சென்றாலும் கடவுளையும் கூட்டிச்செல்கின்றான்

இதே மாதிரித்தான் அன்று வெள்ளையர்கள் சிலுவையுடன் வந்தனர்.

ஆனால் தமிழன் சேர்ந்தான்

இங்கே வெள்ளைகள் சேரவில்லை தப்பினேன் பிழைத்தேன் என விட்டுவிட்டு ஓடுகின்றார்கள்

 

அது முருகனின் மகிமை தான் :D

 

பதிவிற்கு நன்றிகள் 

 

நன்றிகள் வாத்தியார் வருகைக்கும் கருத்துக்கும் வெள்ளைகள் நிம்மதி வேண்டி ஓடுதுகள்

தமிழர்கள் புலம்பெயர்ந்து சீக்கிரமே செல்வச் செழிப்போடு வாழுகின்றார்கள். அதைப் பார்த்து மற்றவர்களுக்கு எப்பவும் பொறாமைதான்.

 

நன்றிகள் கிருபன் எல்லாம் அந்த முருகன் செயல் :D

தமிழர்கள் புலம்பெயர்ந்து சீக்கிரமே செல்வச் செழிப்போடு வாழுகின்றார்கள். அதைப் பார்த்து மற்றவர்களுக்கு எப்பவும் பொறாமைதான்.

 

நன்றிகள் கிருபன் எல்லாம் அந்த முருகன் செயல் :D

தங்களையும் தங்களைச்சார்ந்தவர்களையும் வைத்து ஏனைய புலம்பெயர்தமிழர்களையும்  தங்கள் சமநிலை தராசில்  தரவு தருவது தப்பு.

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்குமாரசாமி

 
தமிழர்களின் சுழியனுக்கு பின்னர் சிட்னி முருகனையும் சுழியனாக்கிய புத்தன்  simply superb.

 

nunavilan

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்nunavilan

நானும் அடிக்கடி என்னுடைய குறைகளை சொல்ல முருகனிட்ட போறதால். நானும் கதையை இரசித்தேன்....

 

நன்றிகள் யாழ்கவி

 புத்தன் அண்ணா கில்லாடி நீங்கள்.

 

நன்றிகள் kkaran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகள் தந்த ரதி,உடையார்,நந்தன்,சுமேரியர் மற்றும் சபேசனுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

முருகன் பவரான கடவுள் தான்... நல்லா சொன்னீங்க புத்து சார்... :D :D :D

இங்கை லண்டனிலை ஒரு பிள்ளையார் இருக்கிறார் செல்வநாயகம் எண்டவருக்கு அளவில்லாமல் அருள் குடுத்தாலை அவர் செல்வ விநாயகராம்... இதுக்கு முதல் அருள் வாங்கினவர் வட்டிக்கு காசு குடுத்ததாலை வட்டி செல்வ விநாயகர் எண்டும் சொல்லுகினம்... ஆனால் பாருங்கோ பிள்ளையாராலை குடும்பத்தை நல்லா வைச்சு பராமரிக்க முடியேல்லை... ஒருவேளை அருள் வாங்கிறவையை பராமரிக்கிறாரோ என்னவோ...???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.