Jump to content

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

Link to comment
Share on other sites

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :):):) +1 .

Link to comment
Share on other sites

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

Link to comment
Share on other sites

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில்.

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

கண்முன் விரிந்து

கனவுவெளியெங்கும்

விதைந்து கிடக்கிற

எங்கள் மீதான வன்மங்கள்

ஒருநாள்

ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

கருகிய பயிர்களும்,

கண் விழிக்கும் காலம்,

கண் முன்னே விரிகிறது!

உரிமையின் தேவையின்,

உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :) :) :) +1 .

கருத்துக்கு நன்றிகள், கோமகன்!

தாழ்மைக்கு என்ன தேவை, இப்போது?

உணர்வு பற்றிய உங்கள் கருத்து, உண்மையானதே!

சில வேளைகளில், கணணி ஒன்று, கவிதை எழுதியமாதிரிப் போய்விடாமலிருக்க அவ்வாறு எழுதினேன்!

இனி எழுதும்போது, கவனத்தில் கொள்கிறேன்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

நன்றிகள்,மல்லிகை வாசம்!

ஊர் கூடித் தேரிழுப்பதில், இன்னும் நம்பிக்கையுள்ளவன் நான்!

விடிகாலை வானம், எவ்வளவு அழகானது?

கண்முன் விரிந்து

கனவுவெளியெங்கும்

விதைந்து கிடக்கிற

எங்கள் மீதான வன்மங்கள்

ஒருநாள்

ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

கருத்துக்கு நன்றிகள், சாந்தி!

'கொலைக் களங்கள்' ஒளிநாடாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்!

சிந்திய கண்ணீர், காய முன்பு எழுதி முடிக்க நினைத்தேன்!

இப்போது பார்க்கும் போது, இன்னும் மெருகூட்டியிருக்கலாம் என்று தோன்றுகின்றது!

Link to comment
Share on other sites

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிகாலம் பிறக்கக்,

காத்திருக்கும் கபோதிகள்!

கண்ணீர்க் குமுறலுடன் ,

கண்ணில் விரிந்தது அவலம்!

காற்றையும் நஞ்சாக்கிய,

கனரக ஆயுதங்களின் குமுறல்!

கார்வண்ணன் தேரோட்டாத,

குருசேத்திரப் போர்க்களம்!

கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,

குருதியில் குளித்தன சருகுகள்!

கூட்டாக நடத்திய கொலைக்களம்..

கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!

கொஞ்சிக் குலாவுகின்றன,

காந்தீயக் கோழைகள் !

நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

உலகத்தின் இயக்கம், ஒரே திசையில் என்றுமே பயணித்ததில்லை!

சுழற்சி முறையிலேயே உலகம் இயங்குகின்றது!

எங்கள் காலமும் விரைவில் வரும் என நம்புவோம்!

அதை விரைவாகக் கொண்டுவர எம்மால் முடிந்ததைச் செய்வோம்!

தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிகள், கல்கி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

அருமையான வரிகள் ரோமியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஒரு பச்சை....

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்

கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

கருத்துக்கு நன்றிகள், ரதி!

அருமையான வரிகள் ரோமியோ

நன்றிகள், வல்வை!

கீழ்வானம் வெளிக்கும் போது,

காரிருள் கடை கட்டும்! :D

நல்ல கவிதை ஒரு பச்சை....

கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

போர்குற்றம் ஏந்துகின்ற தூபிகளின் கீழ் அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளின் ஆன்மா, எப்போதோ உயிர் விட்டிருக்கும்!

சிங்களத்தின் புத்த கோவில்களும், தாஜ் மகால் கல்லறையும், எனது பார்வையில் ஒன்றே!

கருத்துக்கு நன்றிகள், புத்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

crying_buddha.jpg?m=1330419081

துருபதா தேவியின்,

துகில் களைந்தவன் கூடத்.

தூயவனாகி விட்டான்!

உயுருள்ள பெண்ணொன்றின்,

உடைகள் கலைகையில்,

ஓடிவந்தான், கண்ணன்!

ஓவென்ற அலறலில்,

நாங்கள் அழுகையில்.

ஓடி ஒளித்தான்,அவன்!

//கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்

கண்ணகி எரித்தகதை

இன்னும் சரித்திரத்தில்-படிக்க

இலக்கியப் புத்தகத்தில்

எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்

எங்கள் தேசத்தில்

மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்

இன்னும் எரியவில்லை

வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு

வளர்த்த கடாவெட்டி

புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்

பூவிழந்து போயினரே

கொழுத்த அரக்கர்கள்-எங்களை

கொன்று புதைக்கையிலே

பழுத்த தேவர்கள்-ஞானப்

பால் குடிக்கப்போயினரோ

கற்பூரச் சட்டிகளை-கைகளில்

கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்

கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்

கண்மூடிச் சயனத்திலோ //

எப்பவோ எழுதிய எனது கவிதை ஒன்றில் இருந்து சிலவரிகள் புங்கை அண்ணா...உங்கள் கவிதை இதை நினைவூட்டியது..நன்றி புங்கை அண்ணா அருமையான கவிக்கு...

Link to comment
Share on other sites

கலிங்கத்து மன்னனின்,

கால் பட்ட தூசியும்,

காந்தீய தேசத்தின்.,,

கதை கேட்டு விலகியோடும்!

கலிங்கத்துப் பரணியில்,

கூழுண்ட பேய்களும்,

கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!

வலிமையான வரிகள்

நன்றி புங்கை

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.எமக்காக வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் கொலைக்கூட்டத்தையும்,கொலைக்கு அனுசரணையாக இருந்தவரையும் தண்டிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,

பாவத்தின் சின்னமாகும்!

பூவேந்தி நீ செல்லும்,

புத்தனின் தூபிகள்,

போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

புங்கையூரானே படைப்புக்குப் பாராட்டுகள். வளர்க உங்கள் பணி.

வலிமை நிறை வரிகள்!

இது சிங்கள தேசத்தின் நிரந்தரக் குறியீடாகவே இருக்கப் போகிறது. ஆனால் இனவாத உருவேறிக் கருக்கொண்டு பிறக்கும் புதிய குருத்துகள் கூட நவீன உலகின் நடைமுறைகளை ஏற்குமா? மன்னிப்புக்கோருமா? என்பது விடைகாண முடியா வினாவாகும். ஆனால் எமக்கானதை நாமே அடைய வேண்டும். 'கம்மாலையின் இரும்பாவோம் காலத்தை எமதாக்குவோம்'

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை புங்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.
    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
    • நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.  
    • ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர்  வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள்    மேலும் நாவற்குழியில்.  பெரிய றால்.  பண்ணை ஒன்று   வெள்ளைக்காரன் வைத்திருந்தார்    1980 இல் கொழும்பில்  கிரான்பாஸ் றோட்டில்.  லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி  ஜாம். பட்டர்.  தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார்   1980 தான்  அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.