Jump to content

புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லை! - டெஸ்மன் டி சில்வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லை! - டெஸ்மன் டி சில்வா 
[saturday 2014-07-26 09:00]
desmond-de-silva-200-news-2.jpg
விடுதலைப் புலிகளே போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று தான் உரையாற்றியதாக வெளியான செய்தியை, அனைத்துலக சட்ட நிபுணர் சேர் டெஸ்மன் டி சில்வா நிராகரித்துள்ளார். இலங்கை இராணுவத்தினால் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட போர் அனுபவக் கருத்தரங்கில் சேர் டெஸ்மன் டி சில்வா உரையாற்றியதாகவும், அதில், போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்றும், அவர்கள் 3 இலட்சம் பொதுமக்களை தப்பிச் செல்ல விடாமல் பயணமாக பிடித்து வைத்திருந்ததாகவும், அதுவே உலகின் மிகப்பெரிய பயண நாடகம் என்றும், இதுவே மிகப் பெரிய போர்க்குற்றம் என்றும் கூறியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் நேற்று முன்தினம் வெளியான கட்டுரை ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
 
இந்தத் தகவல்களை சேர் டெஸ்மன் டி சில்வா நிராகரித்துள்ளார். தீவிரவாதத்தை தோற்கடித்த சிறிலங்காவின் அனுபவங்கள் என்ற இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் கருத்தரங்கில், தாம் பங்கேற்றதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என்று அவர் தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றதாக, அதில் உரையாற்றியதாக கூறப்படும் அனைத்துமே தவறான தகவல்கள். அந்தக் கருத்தரங்கிற்குத் தாம் அழைக்கப்படவில்லை என்றும் அதில் தாம் உரையாற்றவில்லை என்றும் டெஸ்மன்ட் டி சில்வா தெரிவித்துள்ளார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.