Jump to content

இ.தொ.கா.வே இந்திய வம்சாவளியினரின் பாதுகாவலன்: ராதாகிருஷ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0182(3).JPG

க.கோகிலவாணி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்திய வம்வசாவளியினரின் பாதுகாவலனாக கடந்த 75 வருடங்களாக செயற்பட்டு வருகின்றது. பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வதாரங்களை உயர்த்தி, அவர்களது அடிப்படை உரிமைகளை பெற்றுகொடுத்து கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் அவர்களை உயர்வடைய செய்வதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது' என முன்னாள் பிரதி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான பி.ராதாகிஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தனது பவள விழாவை கொழும்பிலுள்ள அதன் தலைமயகத்தில் கொண்டாடியது. இலங்கை தொழிலாளர் காங்கிஸின் உப-தலைவர் பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானது திருவுருவ படத்திற்கு மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த 1939 ஆம் ஆண்டு தொழிற்சங்கமாக ஸ்தாபிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பெருந்தோட்டத்துறை மக்களுக்காக, இந்திய வம்சாவளி மக்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தனது 75 ஆவது வருடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்த 75 வருட காலத்தில் இ.தொ.கா.வானது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டிருந்தது.  என்பதை ஒருவரும் மறுத்துவிடமுடியாது. அத்தனை இன்னல்களையும் தகர்த்தெறிந்து அது இன்று தனது வெற்றிப்பாதையில் தலை நிமிர்ந்து நிற்கின்றது. 

இலங்கையில் உள்ள பலம்பெறும் கட்சி என்றால் அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான். இன்று நாட்டில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஸ்தாபிப்பதற்கு முன்பே இக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

அத்தகைய பெறுமையுடைய இக்கட்சியினை வளர்ச்சிப் பாதையில் கொன்றுச்சென்ற பெருமை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானைச் சாறும். வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு துயரங்களை அனுபவித்த பெருந்தோட்டத்துறை மக்களின் உரிமைகளை வென்றெடுத்து அவர்களின் உரிமைகளை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நிலைநாட்டினார்.

அவரைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இக்கட்சியினை வெற்றிபாதையில் கொண்டுசெல்கின்றார். 

இதன் ஒரு அங்கமாக, இந்திய அரசாங்கத்திடமிருந்து 4,000 வீடுகளை பெற்று அதனை தனது  மக்களுக்காக வழங்கவுள்ளார்' என அவர் மேலும் தெரிவித்தார்.

'அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மக்களுக்காக சொந்த காணியை விற்றார்'

'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்டடமானது தியாகத்தின் அடிப்படையில் தியாகத்தின் அத்திரவாத்தில்தான் கட்டப்பட்டுள்ளது.  ஆரம்பக்காலத்தில் பெருந்தோட்டத்துறை மக்கள் வருமானம் இன்றி இருந்தபோது எமது பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்  தனது சொந்த காணியை விற்று அதில் வந்த பணத்தைகொண்டு இந்த தொழிலாளர்களை காப்பாற்றினார்' என இலங்கை தொழிலாளர் காங்கிஸின் முக்கியஸ்தரும் பிரபல தொழிலதிபருமான தே.ஈஷ்வரன் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'தனது வாழ்வில் இன்பங்களை எல்லாம் தியாகம் செய்துதான் இந்த தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்டடத்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்  வடிவமைத்தார். இதனால் அவர், பலரினது திட்டுக்களுக்கு ஆளாகினார். பலர் அவரை தள்ளி வைத்தனர், பலர் அவரை குறை கூறினார். இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு அவர் இந்த நிறுவனத்தை உயர்வடைய செய்தார். இன்று அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வழியில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றார். 

எதிர்காலத்தில், இந்நிறுவனம் தனியே பெருந்தோட்டத்துறை மக்களுக்கு மட்டுமன்றி முழுநாட்டுக்குமே சேவை செய்ய வேண்டும் என்று கோருகின்றேன்' என மேலும் அவர் தெரிவித்தார். 

(படங்கள்- ஷண்)

DSC_0181(3).JPG

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.