Jump to content

சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார் என மின்னஞ்சல் செய்தி கிடைத்திருக்கிறது.

The public meeting will be held at theRegbyrne Community Centre, Darcy Road, WentworthvilleWhen : Saturday, 14th April 2012Time : 3.45pm for 4.00pm start.

Link to comment
Share on other sites

முடிந்தால் உறவுகள் சென்று சந்தியுங்கள்.

என்னிடம் உள்ள ஒரு கேள்விகள்:

- சிங்களம் ஏமாற்றி வரும் நிலையில், ஏன் கூட்டமைப்பு ஒரு தீர்வை சர்வதேசத்தின் முன் வைக்கக்கூடாது?

- நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை திட்டங்களை ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றா விட்டால் கூட்டமைப்பு என்ன செய்ய உத்தேசித்துள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ்மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு சரவதேசத்திடம் கூட்டமைப்பு கோரவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை யாழுக்கு கூட்டியரேலாதோ ;)

கூட்டிவந்தாலும் உள்ளத்தில் உள்ளதுகளை கேட்டால் தனிமனிததாக்குதல் ....... களவிதி மீறல் என்று கூறி நீக்கினாலும் நீக்கிடுவார்கள். :lol::D

சிட்னியில் இருக்கும் எமது உறவுகளான கந்தப்பு புங்கையூரான் சுண்டல் உடையார் போன்றோர் எமது சார்பில் அவரிடம் கேட்க்கவேண்டிய கேள்விக்கணைகளை தொடுக்கலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

எதுக்கு இப்ப வந்து வாங்கிக்கட்டப்போறார்?

ஆனாலும் அவரது இந்த நிலைப்பாட்டுக்கான விளக்கங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

கேள்வி

நாம் அறிந்தவரை எந்தவொரு நாட்டிலும் பேச்சுவார்த்தை குழுவினர் இறுதியில் கூட்டாகவோ அல்லது தனியாகவோ அன்றைய பேச்சுவார்த்தை முடிவுகளை அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். ஸ்ரீ லங்கா அரசோ தமிழ் கூட்டமைப்போ ஏன் இவ்வாறான அறிக்கை எதனையும் விடுவதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

அவருக்கு உண்மையாகவே உடம்புக்கு சுகமில்லையா அல்லது உங்கள் கேள்விகளை எதிர் கொள்ள திரணியில்லையா?

Link to comment
Share on other sites

கேள்வி:

நாம் அறிந்தவரை எந்தவொரு நாட்டிலும் பேச்சுவார்த்தை குழுவினர் இறுதியில் கூட்டாகவோ அல்லது தனியாகவோ அன்றைய பேச்சுவார்த்தை முடிவுகளை அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். ஸ்ரீ லங்கா அரசோ தமிழ் கூட்டமைப்போ ஏன் இவ்வாறான அறிக்கை எதனையும் விடுவதில்லை?

இலங்கை அரசு எதற்கும் இதுவரையில் உடன் படவில்லை. அதை கூட்டமைப்பு வெளியில் சொல்லியிருக்கிறது.

அதற்கு மேல் கூட்டமைப்பு எதையாவது வெளியில் சொல்வதாயின் அது இரகசிய பேச்சுவார்த்தைகள் அல்லாமல் பகிரங்க சவால்களாகத்தான் போய் முடியும்.

பகிரங்க சவால்கள், தமிழர் தரப்பிலிருந்து இன்னொரு ஆயுதப்போராட்டத்திற்கு தயாரான பின்பே விடப்படவேண்டும். ஆயுதப் போராட்டமா அல்லது ஐ.நா வாக்கெடுப்பா என்பதை தமிழர் பொறுத்திருந்து முடிவு எடுக்க வேண்டும்.

கூட்டமைப்பு 65 வருடங்களில் சாத்தியமாகாத பேச்சுவார்த்தையின் மூலமான தீர்வை செய்து முடிக்கும் என்று எதிர்பார்ப்பது கனவு மட்டுமே. அரசாங்கம் சங்கட சூழ்நிலையைக்கண்டால் உடன் படிக்கை ஒன்றை எழுதிவிட்டு இனக்கலவரத்தை தூண்டி அதை அழித்துவிடும். இதையேதான் அரசு சென்றமாத ஐ.நா. பிரேரணையின் போதும் முயற்சித்தது. எனவே கூட்டமைப்பின் தீர்வு எந்த விதத்திலும் நிரந்தர தீர்வாக முடியாது. கூட்டமைப்பு இரகசியங்களை வெளியில் சொல்லி, தான் தான் பேச்சுவார்த்தைகளை குழப்பியதாக பழியை வாங்குவதால் ஒரு முன்னேற்றமும் வராது.

இதை பேச்சுவார்த்தைக்கு அனுசரனையான நாடுகள் விரும்பமாட்டா. அனுசரனை நாடுகளுக்கு உள்ளே கிடைக்கும் முன்னேற்றங்கள் பற்றி நன்கு தெரியும். அமெரிக்கா நடைமுறைப்படுத்தபடப் போவதில்லை என்ற பிரேரணையை நிறைவேற்றிவிட்டு காவல் இருக்கிறது. அமெரிக்காவின் அடுத்த படி நடவடிக்கைகள் கூட தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அம்சங்களை கொண்டிருக்குமா அல்லது இப்படி ஏகாந்தத்தில் தான் சஞ்சரிக்குமா என்பது தெரியாது.

அமெரிக்கா "ஒற்றைநாட்டு" தீர்வை மனதில் வைத்து, இலங்கை அரசை விழுத்தி, தீர்வை கொண்டுவர காய்களை நகர்த்துகிறது என்று வைத்தால், அது பர்மிய அர்சாங்கத்தில் அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றியை இலங்கையிலும் சோதித்து பார்க்கிறது என்று கொள்ளலாம். ஆனால் இங்கே நிலமை வேறு.

இலங்கையின் சர்வாதிகாரம் இலங்கை மக்கள் விளிப்பாக இருந்து தங்களால் தமக்கு ஏற்படுத்தி கொள்ளப்பட்ட பாதுகாப்புக் கவசம். அதாவது சர்வாதிகாரம் அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது. சிங்கள மக்களின் பரம விரோதிகளான தமிழரை எதிர்த்துப் போராட அவர்களால் அரசுக்கு திரும்பத் திரும்ப வழங்கப்பட்டஆணை (mandate)தான் இலங்கையின் சர்வாதிகார சூழ்நிலை . இதையேதான் D.S. சோல்பரியிடம் வாதாடி கேட்டு வெற்றி பெற்றார். இதை பண்டாரநாயக்கா, டட்லி, சிறிமா, J.R., பிறேமதாசா, சந்திரிக்கா, மகிந்தா வரை படிப்படியாக, அதிகாரங்கள் தேவையானபோது, மக்களிடம் சென்று, கேட்டுப்பெற்று அரசை பலப்படுத்தினார்கள். இங்கே இராணுவப் புரட்சியால் சர்வாதிக்காரம் திணிக்கப் படவில்லை. இந்த ஜனநாயக சர்வாதிகாரத்தை J.V.P எதிர்த்து பலதவைகள், ஆயுதத்தாலும் வாக்கெடுப்பாலும், தோல்வி கண்டது. அதாவது இலங்கை என்ற அரசியல் அமைப்புக்குள், சிங்கள மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அரசு கடமைப் பட்டிருக்கிறது.

சோல்பரி அரசியல் அமைப்பிலிருந்த சிறப்பம்சம் இங்கிலாந்து சுபிறீம் கோடு இலங்கை அரசியல் அமைப்பின் மீது எப்போதும் தான் தீர்வு வழங்கத்தக்க பலத்தை தன்னிடம் கையடக்க படுத்தியிருந்தது. அப்படி ஒரு பாதுகாப்பு இனி எந்த சட்டத்திலும் வரப்போவதில்லை. இருந்தும் அதுவே நமக்கு பாதுகாப்பு வழங்க தவ்றிவிட்டது.

எனவே ஒற்றை நாடென்ற பேச்சு வார்த்தைகளிலிருந்து வரும் தீர்வு 65 வருடங்களிலிருந்து வந்த தீர்வை விட மாறுதலாக இருக்க முடியாது. ஒற்றை நாட்டுக்கு மேல் எந்த பேச்சுவார்த்தையின் தீர்வும் சிங்கள அரசாங்கங்களிடம் இருந்து வராது. ஆபிரகாம் லிங்கன் சிங்கள மக்களிடம் பிறக்க முடியாது.

எப்படி இதை சோல்பரி விளங்கத்தவறினாரோ அதே போல்த்தான் அமெரிக்காவின் தற்போதைய கொள்கைகளுக்கு வழி வகுத்த பிரபல ராஜதந்திரி ரொபேட் பிளேக்கும் இதை விளங்கத்தவறி, அமெரிக்காவின் இலங்கை சம்பந்தமான கொள்கைகளை நெறிப்படுத்திவிட்டார். இதனால் ஏற்பட்ட நிலைமைகளை வைத்து நாம் அமெரிக்காவும், மேற்குநாடுகளும் கூட்டமைப்பை தூண்டி பேச்சு வார்த்தைகளை நடத்தி தீர்வைக்கொண்டுவரும் என்று எதிர் பார்க்கிறோம். இந்த எதிர் பார்ப்பிலிருந்து கூட்டமைப்பின் மீது சரமாரியான கேள்விகள் எழும். இவை பேச்சுவார்த்தையின் பல படிகளிலும் பல கோணங்களிலுமிருந்து வரும். ஆனால் கூட்டு மொத்தமாக இவைகளின் பொருள் ஒன்றுதான்; அதாவது மலடியைப் பிடித்து பிள்ளை பெறு என்று துன்புறுத்துவதுதான்.(யாழ் நிர்வாகம் இந்த சொல்வடையை வெட்டாது என்று நம்புகிறேன்)

தீர்வு பேச்சுவார்த்தைகள் மூலம் வரும் என்று நம்பாத தாயக மக்கள் நீதியைக் கோரியே கூட்டமைப்புக்கு வாக்களித்தார். அதாவது கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்கள் சர்வதேசத்திடம் போர்குற்ற விசாரணையைக் கேட்டார்கள்

கூட்டமைப்பை சாராமல் புலம்பெயர் தமிழர் செய்யத்தக்கது போர்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வைப்பது. இதை இந்தியா விரும்பாவிட்டாலும் அமெரிக்கா(ஒபாமா அரசு) ஆதரிக்கிற சந்தர்ப்பம் இருக்கிறது. சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டால், இது ஒரு தீர்வுக்கு வழி வகுக்கும்.

போர்க்குற்ற விசாரணையில் அரசுகள் கடைசியிலும், NGOக்கல் தான் முதலிலும் பங்கு பற்றும். (அத்தாவது ஊரில் இருக்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மாதிரி - ஆரம்பத்தில் சிறிதளவு பெற்ரோல் தெளித்து "ஸ்ராட்" போட்டால், இயங்கத்தொடங்கியவுடன் மண்ணெண்னெயில் தொடர்ந்து ஒடி காரியத்தை முடிக்கும் - ஆரம்பத்திற்கு NGOக்கள் வேண்டும்) இதை விளங்கி தமிழர்கள் எல்லோரும் இந்த தொண்டு நிறுவனகளுடன் தொடர்பு வைத்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

மெல்பேர்னில் எங்கட ஆட்கள் கேட்ட கேள்வியிலேயே வைத்த கலக்க தொடங்கி இருக்கும், சிட்னிக்கு வந்து சந்திப்பு நடத்தினால் ....... அசிங்கமாக போய்விடும் அதனாலேயே வரவில்லை என்று நினைக்கின்றேன். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை)

recipe-chutney-bengal-gram-coconut-chutney.jpg

தோழர் சிக்கல் கிட்னியிலா.. அல்லது தேங்காய் சட்னியிலா... என தெளிவாக விசாரித்தீர்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு உண்மையாகவே உடம்புக்கு சுகமில்லையா அல்லது உங்கள் கேள்விகளை எதிர் கொள்ள திரணியில்லையா?

உண்மையில் சுகமில்லை. அவரைப் பரிசோதித்த வைத்தியரை எல்லோருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

Reference : http://www.padalay.com/

அவுஸ்ரெலியா மெல்பேணில் நடந்த கூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு! பற்றிய பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@யோக்கர் அவர்களே,

என் பதிவுகளை பகிரும்போது தயவு செய்து ஒரு மடல் அனுப்பி அனுமதி கேட்டால் நன்றாக இருக்கும். இதை நானே முறையாக யாழ் களத்தில் பகிர்வதாக இருந்தேன். பரவாயில்லை.

நன்றி,

ஜேகே

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஜேகே அவர்களே, ஒரு ஆர்வக்கோளரில இங்க பதிந்துவிட்டேன் !!!

உங்கள் பதிவுக்கு தொடுப்பாக மாற்றிவிடுகிறேன்.

உங்கள் பதிவுக்கு காப்புரிமையபோடுங்கோ !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவாயில்லை ... பகிர்வதில் பிரச்சனையில்லை .. ஆனால் எனக்கு தெரியாமல் போனால், விமர்சனங்களுக்கு பதிலளிக்கமுடியாது இல்லையா? அதனால் தான்.

Link to comment
Share on other sites

ஜேகே,

உங்களது வலைப்பதிவில் காப்புரிமை பற்றி எதுவும் இல்லை. உங்களது பதிவுகளை ஏனைய இணையத் தளங்களில் வெளியாகும் பதிவுகள் போலவே யாழ் உறுப்பினர்களால் யாழில் பதிய முடியும். உங்களது வலைப்பதிவில் வெளியாகும்போது உடனடியாக இங்கு இணைத்து விட்டீர்களானால் இந்தப் பிரச்சனை வராது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இணையவன் ... காப்புரிமை பற்றி குறிப்பிடுகிறேன். தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.