Jump to content

எனக்கு விடை தெரியாது


Recommended Posts

ஒரு அரசன் தன் மனைவிக்கு தினம் தினம் ஒரு முத்தை பதினாறு ஆண்டுகளுக்கு பரிசாக கொடுக்கிறான் . அரசி அந்த முத்துகளை பெரிய மாலையாக கோர்த்து கட்டிலின் மேல் குறுக்கும் நெடுக்குமாக கோர்த்து வைக்கிறாள் . அரசனின் ஐந்து வயது மகன் கட்டிலின் மேல் தொங்கி கொண்டு இருக்கும் முத்து மாலையை பிடித்து இழுத்து விடுகிறான் முத்து மாலை அறுந்து விடுகிறது . முத்துமாலை அறுந்துவிட்டதால் அதிலிருக்கும் முத்துகள் சிதறிவிடுகிறது ...

கதை முடிந்துவிட்டது புதிருக்கு போகலாம் வாங்க

மாலையில் இருந்த முத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு நிலத்தில் விழுந்தன கட்டிலின் மேலே உள்ள மெத்தையில் மூன்றில் ஒரு பங்கு விழுந்தன கட்டிலுக்கு அருகில் இருந்த பட்டு கம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு விழுந்தன

முத்துகள் உதிரும் போது அரசன் இரு கைகளையும் ஏந்தி பிடித்தான்

ஒருகையில் பதினாறில் ஒரு பங்கும் மறு கையில் பத்தில் ஒரு பங்கும் விழுந்தன . அரசனை போலவே அரசியும் கையேந்தினால் அவள் கையில் எட்டில் ஒரு பங்கு விழுந்தன .கீழே விழாமல் நூலில் சில முத்துகள் இருந்தன

அரசி மொத்தம் கோர்த்த முத்துகள் எத்தனை , மெத்தையில் விழுந்த முத்துகள் எத்தனை, பட்டு கம்பளத்தில் விழுந்த முத்துகள் எத்தனை , அரசனின் கைகளில் விழுந்தவை எத்தனை, அரசி கையில் விழுந்தவை எத்தனை , நூலில் விழாமல் இருந்த முத்துகள் எத்தனை ?

தெரிந்தவர்கள் கூறுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் இருந்த முத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு நிலத்தில் விழுந்தன= 1152

மெத்தையில் மூன்றில் ஒரு பங்கு விழுந்தன =1920

கட்டிலுக்கு அருகில் இருந்த பட்டு கம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு விழுந்தன = 960

முத்துகள் உதிரும் போது அரசன் இரு கைகளையும் ஏந்தி பிடித்தான்

ஒருகையில் பதினாறில் ஒரு பங்கும் = 360

மறு கையில் பத்தில் ஒரு பங்கும் விழுந்தன = 576.

அரசனை போலவே அரசியும் கையேந்தினால் அவள் கையில் எட்டில் ஒரு பங்கு விழுந்தன = 720

.கீழே விழாமல் நூலில் சில முத்துகள் இருந்தன = 72

அரசி மொத்தம் கோர்த்த முத்துகள் எத்தனை =5760

Link to comment
Share on other sites

இந்த கேள்வி தவறென்பதே என் கருத்து.

வருடத்தில் 365 1/4 நாட்கள் உண்டு. (அதாவது 3 வருடத்திற்கு 365 நாளெனின் நான்காவது வருடம் 366 நாள்.)

இதன்படி பார்த்தால் 16 ஆண்டுகளில் 5844 நாட்கள்.

அரசன் அரசிக்கு கொடுத்த முத்துகளின் எண்ணிக்கை 5844 என வரும்.

நிலத்தில் விழுந்த முத்துகளின் எண்ணிக்கையை கணிக்க இதனை 5 ஆல் பிரிக்க முடியாது.

பிரித்தால் 1168.8 என்றே வரும். இது சாத்தியமில்லை.

மாறாக ஒரு லீப் வருட ஒரு நாளை கணக்கெடுக்காவிட்டால் 16 ஆண்டுகளில் 5840 நாட்கள் என வரும்.

அரசன் அரசிக்கு கொடுத்த முத்துகளின் எண்ணிக்கையும் 5840 என வரும்.

இங்கு நிலத்தில் விழுந்த முத்துகளின் எண்ணிக்கையை கணிக்க முடிந்தாலும் மெத்தையில் விழுந்த முத்துகளின் எண்ணிக்கையை கணிக்க முடியாது. கணித்தால் 1946.66666 என வரும். இது சாத்தியமில்லை.

எனவே ஒரு வருடத்தில் (..........) இத்தனை நாட்கள் உள்ளது என கொண்டு விடையளியுங்கள் என கேட்டிருக்க வேண்டும்.

அரசி மொத்தம் கோர்த்த முத்துகள் எத்தனை =5760

5760 /16= 360.

இங்கு உடையார் அண்ணாவுக்கு எப்படி ஒரு வருடத்தில் 360 நாள் வந்தது என எனக்கு விளங்கவில்லை. ஒரு மாதத்தில் "30 நாட்கள்" என கொள்ளுமாறு இங்கு கூறப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1169

1948

974

365

584

731

73

மொத்தம்= 5844

இது சரியா இருக்கும் என்று நினைக்கிறன். இன்னும் இப்படி புதிர் போடுங்கோ..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேள்வி தவறென்பதே என் கருத்து.

வருடத்தில் 365 1/4 நாட்கள் உண்டு. (அதாவது 3 வருடத்திற்கு 365 நாளெனின் நான்காவது வருடம் 366 நாள்.)

இதன்படி பார்த்தால் 16 ஆண்டுகளில் 5844 நாட்கள்.

அரசன் அரசிக்கு கொடுத்த முத்துகளின் எண்ணிக்கை 5844 என வரும்.

நிலத்தில் விழுந்த முத்துகளின் எண்ணிக்கையை கணிக்க இதனை 5 ஆல் பிரிக்க முடியாது.

பிரித்தால் 1168.8 என்றே வரும். இது சாத்தியமில்லை.

மாறாக ஒரு லீப் வருட ஒரு நாளை கணக்கெடுக்காவிட்டால் 16 ஆண்டுகளில் 5840 நாட்கள் என வரும்.

அரசன் அரசிக்கு கொடுத்த முத்துகளின் எண்ணிக்கையும் 5840 என வரும்.

இங்கு நிலத்தில் விழுந்த முத்துகளின் எண்ணிக்கையை கணிக்க முடிந்தாலும் மெத்தையில் விழுந்த முத்துகளின் எண்ணிக்கையை கணிக்க முடியாது. கணித்தால் 1946.66666 என வரும். இது சாத்தியமில்லை.

எனவே ஒரு வருடத்தில் (..........) இத்தனை நாட்கள் உள்ளது என கொண்டு விடையளியுங்கள் என கேட்டிருக்க வேண்டும்.

5760 /16= 360.

இங்கு உடையார் அண்ணாவுக்கு எப்படி ஒரு வருடத்தில் 360 நாள் வந்தது என எனக்கு விளங்கவில்லை. ஒரு மாதத்தில் "30 நாட்கள்" என கொள்ளுமாறு இங்கு கூறப்படவில்லை.

நீங்க சொல்வது சரி காதல். கேள்வியில் தரவு குறைவு.

அரசி எத்தனை முத்துக்கள் கோர்த்துள்ளார் எனக் கேட்கப்பட்டுள்ளதால், அவர் சிலவற்றை கோர்க்கவில்லை என அனுமானிக்கலாம்

கொடுக்கப்பட்ட முத்துகளின் அதி கூடிய எண்ணிக்கை = 5844 or 5840 கொடுக்கப்பட்ட தரவுகளின் படி கோர்த்த முத்துக்கள் 16, 5, 3 ஆல் வகுபடக்கூடியதாக இருக்கவேண்டும், அதாவது 240 யின் மடங்காக, 240 யினால் வகுபடக் கூடிய மிகப் பெரிய எண் = 5760

Link to comment
Share on other sites

1169

1948

974

365

584

731

73

மொத்தம்= 5844

இது சரியா இருக்கும் என்று நினைக்கிறன். இன்னும் இப்படி புதிர் போடுங்கோ..! :)

5844/5 = 1168.8

உங்களுக்கு எப்படி 1169 வந்தது?

முத்துகளின் எண்ணிக்கை என்பது மட்டந்தட்டி போடக்கூடிய ஒன்றா என்ன? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5844/5 = 1168.8

உங்களுக்கு எப்படி 1169 வந்தது?

முத்துகளின் எண்ணிக்கை என்பது மட்டந்தட்டி போடக்கூடிய ஒன்றா என்ன? :)

நீங்கள் எல்லாவற்றையும் தசமத்திற்கு (decimal) மாற்றி.. மட்டம் தட்டி ( rounding up) பார்த்தால்.. கணிதம் திருத்தமாக அமையாது. பின்னமாக (fraction) வைத்து கணக்கை செய்வது கூடிய திருத்தமாகும்..!

உ+ம்: கணிதத்தில் பை(Pi) = 3.14159265 என்று வரும். இதையே பின்னமாகக் கொண்டால் 22/7 .

வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்...

7 cm ஆரையுள்ள வட்டத்தின் சுற்றளவை காண்கிறேன்:

சுற்றளவு = 2 x (pi) x r

தசம பெறுமதி பை இன் பிரகாரம் = 2 x 3.14159 x 7 = 43.98226

இதையே பின்னத்தில் செய்து பாருங்கள் = 2 x 22/7 x 7 = 44

எப்பவும் தசமத்தில் மாற்றிக் கணக்குப் பார்த்தால் அதை மட்டம் தட்டித்தான் திருத்திக்க வேண்டி இருக்கும். பின்னத்தில் வைத்துச் செய்தால் கூடிய திருத்தமாக அமையும். நான் பின்னத்தில் வைத்து.. செய்து கண்டேன்..! பிரச்சனை கொடுக்கப்பட்ட முத்துக்களின் எண்ணிக்கையில் இல்லை. அதை கணக்குப் பார்க்கும் வழிமுறையிலேயே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.