Jump to content

இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

29 அக்டோபர் 2012

யாழ்.குடாநாடு மற்றும் முல்லைத்தீவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை இன்றிரவு புயல் தாக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.தற்போது முல்லைத்தீவு கரையிலிருந்து சுமார் நூறு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள மினி புயல் இன்று நள்ளிரவு முல்லைத்தீவு மற்றும் குடாநாட்டு கரைகளை தாண்டி செல்கையில் குறிப்பிடத்தக்க அபாயங்களை விளைவிக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திருகோணமலையின குச்சவெளி முதல் வடமராட்சியின் முனை வரையான கரையோர கிராமங்களை அது கடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கின் கரையோர கிராமங்களென பருத்தித்துறை முனை வரையான கரையோரப்பகுதிகளை சேர்ந்த மக்களை சுமார் 500 மீற்றர் தூரம் கடற்கரை பகுதிகளிலிருந்து இடம்பெயருமாறு அரச அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்றிரவு அறிவித்துள்ளது.இதையடுத்து இன்றிரவு தொடர்ச்சியாக கரையோரப்பகுதிகளினில் பதற்றமான நிலையே காணப்பட்டது.பரவலாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகள் மற்றும் தேவாலயங்களினில் தங்கியுள்ளனர்.குறிப்பாக தொடச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக வடமராட்சி கிழக்கினில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக அண்மைக்காலங்களினில் மக்கள் மீள்குடியமர்ந்த அப்பிரதேசங்களினில் போதிய வீட்டு வசதிகள் ஏற்படுத்தப்படாமையினால் மக்கள் அடை மழை காரணமாக வெளியேறி தேவாலயங்கள் மற்றும் பாடசாலை கட்டிடங்களை அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக குடாநாட்டின் பல பகுதிகளினிலும் மின் துண்டிப்பு அமுலில் இருந்தே வருகின்றது.அதே வேளை அபாய எச்சரிக்கையினையடுத்து மீனவர்கள் எவரும் இப்பகுதிகளினில் கடலுக்கு தொழிலுக்கு சென்றிருக்கவில்லை. தமது படகுகளை கடல் அலைகள் இழுத்து செல்லாதிருப்பதையுறுதிப்படுத்தும் வகையினில் அவற்றை நகர்த்தும் பணிகளிலும் மீனவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

29௰௨012 09.01

இலங்கையின் வட பகுதியை குறைந்தளவு வலுவுடைய புயல் காற்று தாக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவின் கிழக்கு பகுதியை இந்தப் புயல் தாக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கடற்பரப்பு கடும் சீற்றத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் குச்சவெளி பிரதேசத்தில் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்;றப்பட்டுள்ளனர். குறித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டுள்ளனர். நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கையை இந்தப் புயல் ஊடறுத்துச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் குச்சவெளி கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடாவில் நிலவி வரும் அசாதாரண நிலைமை காரணமாகவே நாடு முழுவதிலும் கடுமை மழையுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இடைவிடாது மழை பெய்து வருவதனால் சில பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84856/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

புயல் காட்டுக்குள் அநாதரவாக விடப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது. எப்பவுமே மரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டவர்களைத் தான் மாடேறி மிதிக்கும் போல.

Link to comment
Share on other sites

புயல் காட்டுக்குள் அநாதரவாக விடப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது. எப்பவுமே மரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டவர்களைத் தான் மாடேறி மிதிக்கும் போல.

இயற்கையும் எம் இனத்தை தான் எப்போதும் ஏறி மிதிக்க ...நினைக்கும் ..............என்ன சாபக்கேடோ ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு,கிழக்கில் சூறாவளி அபாயம் ௲ நேற்றிரவு ஆயிரக்கணக்கான கரையோர மக்களை வெளியேற்றியது சிறிலங்கா அரசு.

சிறீலங்கா | ADMIN | OCTOBER 30, 2012 AT 08:43

சிறிலங்காவின் வடக்குப் பகுதி ஊடாக சிறியளவிலான சூறாவளி இன்று அதிகாலை கரையைக் கடக்கும் என்பதால், நேற்றிரவு அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான கரையோரப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர வேண்டுகோளை அடுத்து, குச்சவெளி தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோரப்பகுதி மக்கள் நேற்றிரவு 10.30 மணி தொடக்கம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கரையோரத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதிகளில் வசித்த மக்களே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பொதுமக்களை வெளியேற்றும் இந்த அவசர நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம், காவல்துறை, மற்றும் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://thaaitamil.com/?p=37010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4ம்இணைப்பு - முல்லைத்தீவில் கடும் காற்றினால் பறந்தன தறப்பாள் குடிசைகள்

30 அக்டோபர் 2012

முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களின் குடிசைகள் நேற்று பகல் வீசிய காற்றினால் தூக்கி வீசப்பட்டன. தங்குவதற்கு பொதுக் கட்டடங்கள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

இதேவேளை, கடலோரப் பகுதியில் சூறாவளி மற்றும் சுனாமி ஏற்படலாம் என இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இரவோடிரவாக மக்கள் இடம்பெயர்ந்து இரணைப்பாலை பற்றிமா தேவாலயம் மற்றும் இரணைப்பாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை என்பவற்றில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

புதுமாத்தளன், பழையமாத்தளன், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று இரவு 9.30 மணிவரை 100 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைப்பாலைக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்தத் தகவலை இரணைப்பாலை பங்குத் தந்தை அருட்செல்வன் அடிகளார் உறுதிப்படுத்தினார். மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவளை முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்து 25 வரையான குடும்பங்கள் இடம் யெர்ந்து முள்ளிவாய்க்கால் அ.த.க. பாடசாலையில் தஞ்சம் புகுந்துந்துள்ளன.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் தறப்பாள் கொட்டகைகள் பல தூக்கி வீசப்பட்ட நிலையிலேயே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து காற்று பலமாக வீசியதுடன் கடும் மழையும் பெய்துள்ளது. சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வீசிய காற்றால் முள்ளிவாய்க்கால் அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், சிவநகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தறப்பாள் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மக்கள் இல்லிட நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளனர். இதேவேளை அந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்குவதற்கு பொது கட்டடங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி உள்ளது.

காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தப் பகுதிகளில் மேலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய காற்றுடன் கூடிய மழை அவற்றின் சேதம் தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபர் கூறுகையில், 'நேற்றுப் பிற்பகலில் இருந்து பலத்த காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளோம்.

இதுவரைக்கும் மக்களுக்கு பலத்த சேதம் எதுவும் ஏற்பட்டதாக தரவுகள் இல்லை. காற்றுடன் மழை தொடர்வதால் சேத விவரம் குறித்து தற்போது கூறமுடியாது' என்றார்.

முல்லைத்தீவு கடலுக்குக் கிழக்காக 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையங்கொண்டு நகர்ந்து வருவதால் அது கரையை எட்டும்போது சூறாவளி ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் புயல் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் - வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று மதியம் புயல் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. முல்லைத்திவிற்கு கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேல் மற்றும் வடமேல் பகுதியாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும், புயல் அபாயம் இன்னமும் குறைவயவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வட, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலை நாடு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் காரணமாக நாடு முழுவதிலும் 100000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84856/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.