Jump to content

கரிக்காய் பொரித்தேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இதுதான்

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி."

Link to comment
Share on other sites

கரி என்றால் யானை. அதாவது அப்பெண் யானையைப் பொரியல் செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். யானைப் பொரியலா? அது எப்படி என்று யோசிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதாவது கரி என்றால் யானை; அதேபோல் யானைக்கு அத்தி என்று வேறுஒரு பெயரும் உண்டு. இங்கு அத்திக்காய்ப் பொரியல் என்பதையே கரிக்காய்ப் பொரியல் என்று புலவர் கூறியிருக்கிறார்.

கன்னி என்றால் திருமணம் ஆகாதப் பெண். அப்படியென்றால் பெண்ணையா வறுவல் (தீய்த்தல் என்றால் வாணலியில் இட்டு வறுத்தல் என்று அர்த்தம்) செய்தாள்?. கன்னி என்றால் வாழைக்காய் என்று மற்றும் ஒரு பொருள் உள்ளது. அதாவது வாழைக்காய் வறுவல் என்பதையே கன்னிக்காயைத் தீய்த்தாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியிருக்கிறார்.

பரி என்றால் குதிரை. குதிரையை அப்பெண் பச்சடி செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். உண்மையில் அப்பெண் குதிரையைப் பச்சடி செய்தாளா?. இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை இலாவகமாகக் கையாண்டுள்ளார். பரி என்றால் மா என்று இன்னும் ஒரு பொருள் உண்டு. அதாவது மாங்காய்ப் பச்சடி செய்தாள் என்று கூறுவதற்குப் பதில் பரிக்காய்ப் பச்சடி பண்ணாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியுள்ளார்.

அப்பைக்காய் என்றால் அழகிய கத்தரிக்காய் என்று அர்த்தம். அதாவது கத்தரிக்காய் நெய் துவட்டல் செய்திருந்தாள் என்பதையே அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள்(சமைத்தாள்) என்று புலவர் கூறியிருக்கிறார். எதற்க்காக உருக்கம்உள்ள என்ற வார்த்தையைப் புலவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், கிராமப்புறங்களில் கத்தரிக்காயை நெய்வடியும் (உருக்கமுள்ள) காய் என்று கூறுவார்கள்.

இவ்வாறு அத்தைமகள் சமைத்த உணவில், உப்பு அதிகமாக உள்ளதாகவும் (உப்புகாண் சீச்சி உமி) ஆகவே சீச்சி என்று கூறி உமிழ்ந்ததாகவும் புலவர் பாடலை நகைச்சுவையுடன் முடித்துள்ளார்.

Link to comment
Share on other sites

அதெல்லாம் ஒன்றுமில்லை blue bird... :rolleyes: பொரியல், தீயல், பச்சடி, நெய்துவட்டல் எல்லாம் ஆக்கப்பட்டு இருந்தது, அதை புலவர் சாப்பிடும் நேரத்தில் எதிரே யானை சைசில் அத்தைமகள் உப்போடு வருவதைக் கண்டதும் 'உப்புக்காண் சீச்சி உமி' என்று அலறி அடித்து முடிக்கிறார்... ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்காய் என்று அத்திக்காயை அழைப்பதுண்டு!

கன்னிக்காய் வாழைக்காய் என நினைக்கின்றேன்!

பரிக்காய் என்பதில் நீலமேகத்துடன் உடன்படுகின்றேன்! மாங்காய்!

ஆக நீலமேகம் கூறுவது சரி போல் உள்ளது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அதை புலவர் சாப்பிடும் நேரத்தில் எதிரே யானை சைசில் அத்தைமகள் உப்போடு வருவதைக் கண்டதும் 'உப்புக்காண் சீச்சி உமி' என்று அலறி அடித்து முடிக்கிறார்... ^_^

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எப்பிடி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!! :lol: அந்தப் புலவர் கேள்விப்படால் :icon_mrgreen:

BLUE BIRD இன் விளக்கம் பொருத்தமாக உள்ளது.

Link to comment
Share on other sites

எப்பிடி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!! :lol: அந்தப் புலவர் கேள்விப்படால் :icon_mrgreen:

BLUE BIRD இன் விளக்கம் பொருத்தமாக உள்ளது.

அலைமகள்! எல்லாம் வெட்டி ஒட்டல் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை வெட்டினாலும் ஒட்டினாலும் பொருள் வந்து சேர்ந்துவிட்டது.

சரி அடுத்த காய் பற்றி தமிழின் விளையாடல் எப்படி இருக்கிறது என்று நயக்கலாம்... அநேகமாக இதற்குப் பொருளை வெட்டி ஒட்டத்தேவையில்லாமல் இருக்கலாம்.....எல்லோருக்கும் பிடித்தமான மிகவும் கவர்ச்சியான பாடல் இது

எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

கேளுங்கோ ரசியுங்கள் எல்லாக் காய்களுக்கான பொருளையும் பதிவிடுங்கள்....

முக்கியமாக இந்தப்பாடலில் எத்தனை காய்கள் இடம்பெற்றிருக்கின்றன அக்காய்கள் எவை இந்தப்பாடலில் அந்தக்காய்களின் பொருளைக்கண்டு பிடியுங்கள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ


இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணளவாக நாலு.

:o :o :o

தப்பிலி நான் பாடல் காட்சியில் வரும் ஆட்களை(காய்களை) கேட்கவில்லை :icon_mrgreen:

பாடும் மொழியில் வெளிப்படும் தாவரக்காய்களை கேட்கிறேன் :D

Link to comment
Share on other sites

:o :o :o

தப்பிலி நான் பாடல் காட்சியில் வரும் ஆட்களை(காய்களை) கேட்கவில்லை :icon_mrgreen:

பாடும் மொழியில் வெளிப்படும் தாவரக்காய்களை கேட்கிறேன் :D

தாவரக்காய்கள் மூன்று.

ஏலக்காய், ஜாதிக்காய், வெள்ளரிக்காய் மாத்திரமே.

மற்றைய காய்கள்

அத்திக்காய் - அந்தத் திக்காய்............. என்று பொருள்படுவது போல மற்றைய காய்களையும் வைத்து கவிஞர் வரிகளில் விளையாடியுள்ளார்.

நாலாவது காய்

எனது பார்வையில். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாவரக்காய்கள் மூன்று.

ஏலக்காய், ஜாதிக்காய், வெள்ளரிக்காய் மாத்திரமே.

மற்றைய காய்கள்

அத்திக்காய் - அந்தத் திக்காய்............. என்று பொருள்படுவது போல மற்றைய காய்களையும் வைத்து கவிஞர் வரிகளில் விளையாடியுள்ளார்.

நாலாவது காய்

எனது பார்வையில். :lol:

நாலாவது காயா???? இதில நாலாவது காய் எது தப்பிலி? :unsure:

இந்தப்பாட்டில் உள்ள காயில் ஒன்றா?

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி." :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்

2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!

3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)

4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.

5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்

6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்

7.அவரைக்காய் அவரை காய்  என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை)  ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.

8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.

9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)

10. இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11.உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

12.ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.

13.ஜாதிக்காய் சாதிக்காய்

14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்

தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.

15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.

  ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்

16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )

(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு

18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.

19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)

இது

வெள்ளரிக்காயா

விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.

இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.

Link to comment
Share on other sites

காரென்று பேர்படைத்தாய் கசனத்துறும் போது

நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்தபின்

வாரொன்று மென்மயில் நேர்ஆய்ச்சியர் கைவந்த பின்

மோரென்று பேர்படைத்தாய்! முப்பேரும் ஏற்றாயே!

பொருள்

மோர்க்காரியிடம் மோர் வாங்கும் போது அது தண்ணியாக இருக்கிறது. அதனை நகைச்சுவவையாக சொல்ல வந்த கார்மேகம்:

நீர், வானத்திலிருந்தால் அதற்கு கார் என்று பெயர். தரைக்கு வந்தால் ‘நீர்’ என்று பெயர். தரைக்கு வந்தால் ‘நீர்’ என்று பெயர். ஆய்ச்சியர் என்று சொல்லக்கூடிய இடைச்சியரின் மோர் கூடைக்கு வந்தால் அதற்கு ‘மோர்’ என்று பெயர். எனவே, மோர் தண்ணீராக அதாவது கெட்டியாக இல்லாமல், தண்ணீரைக் கலந்து விற்பனை செய்வதால் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார் காளமேகப்புலவர். இவ்வாறு காளமேகப் புலவரின் பலப்பாடல்கள், இரட்டை அர்த்தங்கள் நிறைந்த நகைச்சுவைப் பாடல்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்

2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!

3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)

4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.

5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்

6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்

7.அவரைக்காய் அவரை காய் என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை) ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.

8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.

9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)

10. இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11.உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

12.ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.

13.ஜாதிக்காய் சாதிக்காய்

14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்

தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.

15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.

ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்

16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )

(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு

18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.

19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)

இது

வெள்ளரிக்காயா

விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.

இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.

நன்றி புலவர் உங்கள் பொழிப்புரை நன்றாக இருக்கிறது. தோண்டத் தோண்ட பொருள் சுரக்கும் அருமையான பாடல் இது. தமிழ் சினிமாவில் இப்பாடலைப் போல் இதுவரை எப்பாடலையும் எந்த கவிஞர்களும் இதுவரை எழுதவில்லை. இந்த இடத்தில் கவியரசு கண்ணதாசன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

இந்தப்பாடல் பலருக்கு இன்னும் பல அர்த்தங்களை எடுத்தியம்பக்கூடிய அளவுக்கு பன்முகப் பொருள் கொண்டது. எனது சிற்றறிவுக்கு எட்டிய காய்களை இங்கு பதிவிடுகின்றேன். என் கவனத்திற்குத் தவறிய காய்களை நீங்கள் யாராவது அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள்

17 jhtuf;fha;fis rpy ,lq;fspy; xyp kUtpa epiyapy; Ngr;Rtof;Fj; njhdpapy; mikf;fg;gl;bUf;fpwJ ,g;ghly;

1. mj;jpf;fha;

2. Myq;fha;

3. ,j;jpf;fha;

4. fd;dpf;fha;

5. ghitf;fha; (ghfw;fha;)

6. mtiuf;fha;

7. Nfhitf;fha;

8. khJsq;fha;

9. Vyf;fha;

10. thof;fha; (thiof;fha;)

11. ahjpf;fha;

12. tpsq;fha; (tpshq;fha;)

13. JhJtoq;fha; (JhJtsq;fha;)

14. kpsfha;

15. Ruf;fha;

16. nts;supf;fha;

17. nfhw;wtiuf;fha; (nfhj;jtiuf;fha;)

fha; vd;gJ ngauhfTk; tpidahfTk; xNu rkaj;jpy; Njhd;WkhW mikag; ngw;wJjhd; ,e;jg;ghlypd; rpwg;G

ngauhfTk tpidahfTk; Njhd;whj epiyapy; Njhd;Wk; fha; vd;w gjk; Ntw;Wik cUghfTk; mzp nra;fpwJ

fha; vd;gJ ngau;r;nrhy;yhf tUk;NghJ cjhuzj;jpw;F

ntapy; fha;fpwJ vd;why; ntk;ik epiyiaf; Fwpf;Fk;

mijNa epyh fha;fpwJ vd;why; Fspu;ikiaf; Fwpf;Fk;

mJNt tpidahf khWk; NghJ

fbe;J nfhs;sy; my;yJ Nfhgq;nfhs;sy; vd;gjhf nghUs;gLk;

,e;jf; fha; vd;gJ ,lj;jpw;Nfw;g gd;Kfg; nghUs;glf;$ba xU jkpo; nrhy; xU fhyKk; ehq;fs; rpwpJ epd;W ,j;jifa thu;j;ijfisAk; mtw;wpd; gd;Kfg; nghUisAk; Mj;khu;j;jkhf ,urpg;gjpy;iy கல்விச்சாலைfspy; xj;j fUj;Js;s nrhw;fs; vd;w ngaupy; kdg;ghlk; gz;zp vOJtNjhL vq;fs; juTfs; Kw;Wg; ngw;WtpLk; Njly; மேற்nfhs;SksTf;F vq;fSf;F mtfhrNkh my;yJ Mu;tNkh ,Ug;gjpy;iy.

Link to comment
Share on other sites

நீங்கள் கேட்ட காய்களின் எண்ணிக்கைத் தொகை 29 சகாரா அக்கா.. சரியா இருக்கா என்று எண்ணிப் பாருங்கள்... :D:)

1. அத்திக்காய்

2. ஆலங்காய்

3. இத்திக்காய்

4. கன்னிக்காய்

5. ஆசைக்காய்

6. பாவைக்காய்

7. அங்கேகாய்

8. அவரைக்காய்

9. கோவைக்காய்

10. மாதுளங்காய்

11. என்னுளங்காய்

12. இரவுக்காய்

13. உறவுக்காய்

14. ஏழைக்காய்

15. நீயும்காய்

16. நிதமுங்காய்

17. இவளைக்காய்

18. உருவங்காய்

19. பருவங்காய்

20. ஏலக்காய்

21. வாழக்காய்

22. ஜாதிக்காய்

23. கனியக்காய்

24.விளங்காய்

25. தூதுவழங்காய்

26. மிளகாய்

27. சுரக்காய்

28. வெள்ளரிக்காய்

29. கொற்றவரங்காய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி என்னுடைய தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தாவரக் காய்கள் என்று கேட்டிக்கவேண்டும்

தாவரக்காய்கள் 17

நீங்கள் வேற்றுமை உருபிணைந்த காய்களையெல்லாம் இணைத்திருக்கிறீர்கள் சரி இதில் எத்தனை காய்களில் "ஆய்" வேற்றுமை உருபு இணைந்திருக்கிறது சொல்லுங்கள்

மவனே என்னை மாட்டி விட்டா நானும் மாட்டி விடுவனெல்லோ :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

Link to comment
Share on other sites

குட்டி என்னுடைய தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தாவரக் காய்கள் என்று கேட்டிக்கவேண்டும்

தாவரக்காய்கள் 17

நீங்கள் வேற்றுமை உருபிணைந்த காய்களையெல்லாம் இணைத்திருக்கிறீர்கள் சரி இதில் எத்தனை காய்களில் "ஆய்" வேற்றுமை உருபு இணைந்திருக்கிறது சொல்லுங்கள்

மவனே என்னை மாட்டி விட்டா நானும் மாட்டி விடுவனெல்லோ :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நான் அழுதுடுவேன்... :D^_^

இதில முதல் பாதியும் கடைசிப்பாதியும் நான் பாட்டைக் கேட்டு எழுதினது, நடுவில் உள்ளது இணையத்தில் தேடி எடுத்தது... :D:lol:

Link to comment
Share on other sites

சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்... :)

:icon_mrgreen:

எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே... :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே... :lol: :lol: :lol:

ஒரு இணைப்பில் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது... :D^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களைக்கவர்ந்த அந்த இணைப்பை இங்கு ஒட்டிவிடுங்கள் குட்டி :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol: :lol: :D

என்னுடன் சேர்ந்து நடக்க வந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . நிட்சயம் எனக்குத் தெரிந்தவற்ரையும் இணைப்பேன் . தமிழால் இணைவோம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.