Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

பஸ் கண்டெக்டர் : யோவ் உள்ளே தான் கடல் மாதிரி இடம்

இருக்கே ... உள்ள வா

யோகத்தார் : பருவால்ல அண்ணே எனக்கு நீச்சல் தெரியாது ..... நான் கரையிலேயே நிக்குறேன்

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply

இரண்டாம் உலகப்போரின் போது ரஷிய நாடு தான் அதிக அளவிலான உயிர் இழப்பை சந்தித்தது. 1923 ஆம் வருடம் பிறந்த ஆண்களில் 80 சதவீத பேர்கள் இந்த போரில் உயிரிழந்தனர், என்ற கொடுமையான தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படையெடுத்து வந்த ஜெர்மன் வீரர்களுடன் ரஷியா சண்டையிட்ட ஸ்டாலின்கிராட் போர் தான் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போராக கருதப்படுகிறது. 8 மாதங்கள் நடைப்பெற்ற இந்த போரில் கிட்டத்தட்ட 120,000 மக்கள் உயிரிழந்தனர்.

இவ்வளவையும் தாண்டி ரஷ்யா மீண்டு எழுந்ததை போல என்றோ ஒரு நாள் ஈழத்தமிழினமும் மீண்டு எழும்......அதுவரை உங்கள் வெற்றிகளை கொண்டாடுங்கள் ......அதுவரை உங்கள் அடக்குமுறைகளால் அகம் மகிழ்ந்திருங்கள் .....

நிச்சையம் ஒரு நாள் எழுவோம்....

Link to comment
Share on other sites

பிட்சா சதுர பெட்டியில் வருகிறது .

பெட்டியை திறந்தால் அது வட்டமாக இருக்கிறது.

அது சாப்பிடும்போது முக்கோண வடிவத்தில் இருக்கிறது .

மனிதர்கள்

கூட பிட்சா மாதிரிதான் .

இயல்பு ஒருமாதிரி .

தோற்றம் புதுமாதிரி.

பழகுதல் முற்றிலும் வேறுமாதிரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப்போரின் போது ரஷிய நாடு தான் அதிக அளவிலான உயிர் இழப்பை சந்தித்தது. 1923 ஆம் வருடம் பிறந்த ஆண்களில் 80 சதவீத பேர்கள் இந்த போரில் உயிரிழந்தனர், என்ற கொடுமையான தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படையெடுத்து வந்த ஜெர்மன் வீரர்களுடன் ரஷியா சண்டையிட்ட ஸ்டாலின்கிராட் போர் தான் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போராக கருதப்படுகிறது. 8 மாதங்கள் நடைப்பெற்ற இந்த போரில் கிட்டத்தட்ட 120,000 மக்கள் உயிரிழந்தனர்.

இவ்வளவையும் தாண்டி ரஷ்யா மீண்டு எழுந்ததை போல என்றோ ஒரு நாள் ஈழத்தமிழினமும் மீண்டு எழும்......அதுவரை உங்கள் வெற்றிகளை கொண்டாடுங்கள் ......அதுவரை உங்கள் அடக்குமுறைகளால் அகம் மகிழ்ந்திருங்கள் .....

நிச்சையம் ஒரு நாள் எழுவோம்....

 

ரஷ்யர்கள் சுலபமாக மீண்டும் எழுந்தற்கு முக்கிய காரணி அவர்களிடம் இருக்கும் வளம்மிக்க இயற்கை வளங்கள் மட்டுமே.

 

ஆனால் ஈழத்தவரிடம் ?????? :(  இருக்கும் சந்தர்ப்பங்களையும் தட்டி வீழ்த்தும் பரம்பரையாச்சே!!!!  :lol:  :D

Link to comment
Share on other sites

ஈழத்தமிழரிடம் யாரிடமும் இல்லாத உழைப்பு இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிட்சா சதுர பெட்டியில் வருகிறது .

பெட்டியை திறந்தால் அது வட்டமாக இருக்கிறது.

அது சாப்பிடும்போது முக்கோண வடிவத்தில் இருக்கிறது .

மனிதர்கள்

கூட பிட்சா மாதிரிதான் .

இயல்பு ஒருமாதிரி .

தோற்றம் புதுமாதிரி.

பழகுதல் முற்றிலும் வேறுமாதிரி.

 

உண்மை..உண்மை

Link to comment
Share on other sites

Hahaha

கத்தி படம் குறித்துப் பேசினாலே சீறிப் பாய்கிறார் சீமான், கேள்வி எழுப்புவர்கள் மீது.

விஜய்யும் முருகதாஸும் என் தம்பிங்க... கத்தி படத்தை எதிர்க்க முடியாது... என்னய்யா செய்வ.. என்று கடுங் கோபத்துடன் கேட்கிறார் தன் முன்னால் நின்று கேள்வி எழுப்பும் நிருபர்களிடம்.

எல்லாத்துக்கும் இந்த சீமான்தான் போராடணுமா... எனக்காக ஏன் காத்திருக்கணும்... இறங்கிப் போராடுங்க.. ஆனா கத்தி படத்துக்காக நான் போராட மாட்டேன்.. லட்சம் பிரச்சினையை வச்சிக்கிட்டு போராடிக்கிட்டிருக்கேன், வந்துட்டாங்க கத்தி சுத்தின்னு..', என்று அடித்துச் சொல்கிறார் சீமா

Link to comment
Share on other sites

100 Km வேகமாக போக வேண்டிய நெடுஞ்சாலைகளில் 60 Km வேகத்தில் ஹாயாக போகின்றவர்களிடம்

ஏன்டா டேய் உங்க கிட்ட இருந்தெல்லாம் லைசன்ஸ் புடுங்க மாட்டாங்களா எண்டு விவேக் வாய்ஸ் ல கேக்க தோணுது.....

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர்., ஆட்சியில், மதுரையில் பிரதமர் இந்திராவுக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டபோது, கருணாநிதி உட்பட தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரையில் போராட்டம் நடந்தது. இதுதான், அழகிரி பங்கேற்ற முதல் போராட்டக்களம்.

Link to comment
Share on other sites

தான் நடித்து வந்த அத்தனை படங்களையும் தூக்கிப் போட்டு விட்டாராம் பவர் ஸ்டார் அதேசமயம் ஆனந்தத் தொல்லை படத்தை மட்டும் எப்படியாவது ரிலீஸ் செய்யப் போகிறாராம்.

அந்தத் தொல்லையோடு எல்லாத் தொல்லையும் ஒழியட்டும்.. .....

Link to comment
Share on other sites

சென்னை அமிர்தால படிச்சா தலையெழுத்து மாறும் எண்டு தெரிஞ்சிருந்தா நான் அங்கயே படிச்சிருப்பனே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அமிர்தால படிச்சா தலையெழுத்து மாறும் எண்டு தெரிஞ்சிருந்தா நான் அங்கயே படிச்சிருப்பனே....

 

'அமிர்தா' ங்றது கேர்ள் ஃப்ரண்டா...? :icon_idea:

அப்படியாவது உங்களுக்கு கால்கட்டு நடந்தால் சரிதான்...

இங்கே திரியில் கடலை போடுவது குறையுமே! :)

 

Link to comment
Share on other sites

நியூஸ் : 2 நாளுக்குள்ள யாரும் அவசரப்பட்டு வண்டிக்கு பெட்ரோல் போடாதீங்க... லிட்டருக்கு 2 ரூபாய் குறையுமாம்

அது வரைக்கும் வண்டிய என்ன தள்ளிட்டா திரிய முடியும்.....நல்லா போடுறாங்கையா நீயுசு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் : 2 நாளுக்குள்ள யாரும் அவசரப்பட்டு வண்டிக்கு பெட்ரோல் போடாதீங்க... லிட்டருக்கு 2 ரூபாய் குறையுமாம்

அது வரைக்கும் வண்டிய என்ன தள்ளிட்டா திரிய முடியும்.....நல்லா போடுறாங்கையா நீயுசு....

 

 

ஏனப்பா சுண்டல்

அது என்னைப்போல நிறைகுடங்களுக்கு சொன்னது :lol:

காலியானவங்களுக்கு இல்லைப்பா... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

யுவன் ஷங்கர் ராஜா இசையமைச்ச பாடல்களிலே உருப்படியான பாட்டெண்டா அஞ்சான் பட ஏக் தோ தீன் பாட்டுத்தான்.....

Link to comment
Share on other sites

சட்டசபையில் அம்மாவின் அறிவிப்பை கேட்டு பின்னாடி இருக்கிற அமைச்சர் கோகிலா இந்திரா அழுவிறா......

Link to comment
Share on other sites

தி மு க ஒரு பழைய அம்பாசிடர் கார்

நாஞ்சில் சம்பத்

அம்மா குடுத்த இன்னோவா கார் எப்பிடிலாம் பேச சொல்லுது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைச்ச பாடல்களிலே உருப்படியான பாட்டெண்டா அஞ்சான் பட ஏக் தோ தீன் பாட்டுத்தான்.....

 

அல்லாவுக்கு மாறினது வேலை செய்யுது போலை...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவுக்கு மாறினது வேலை செய்யுது போலை...

அல்லாவுக்குத்தான்

பகிடிக்கும்   வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாதே... :lol:  :D

Link to comment
Share on other sites

பிறப்பால் விளைந்த வரம்

வளர்ப்பில் இட்ட உரம்

களைப்பில் நாம் இருந்தால்

மறக்கும் நம் குணம்

ஆழம் அறியாமல் அலைக்கழிந்து

மேலே நுணிப்புல் மேய்ந்து

தானே உணராமல் தறிகெட்டு

வேறிடம் நோக்கி இடம்பெயர்ந்தால்

இல்லை என்றால் எங்குமில்லை

மதங்களை மனிதன் படைத்தானா

மதமாய் மனிதன் ஜனித்தானா

பார்த்து பரவசத்தில் தனதாக்க

வாணிகப் பொருளா மதம்

விளம்பரம் செய்து வீடுபெற

விளையாட்டு பொருளா மதம்

ஒருவர் நிலை தாழ்ந்து பரிதவிக்க

உதவிக் கரம் நீடடி உதவுங்கள்

உதவாத மதம்தான் தீர்வு என

கொம்பு சீவி கூர் பாய்ச்சாதீர்

மீளா துயர் வறுமை தீர

மனதிற்கு ஆறுதல் உதவியே தவிர

மதமாற்றம் தீர்வு அல்ல மாறாய்

மனதை எமாற்ற மயக்கும் வித்தை

தன் மதம் தன்னை அறியாதான்

புகுந்த மதம் எவ்வாறு அறிவான்

தாய் பால் குடித்து வளர்ந்தபின்

டப்பா பாலே சிறந்தது என்பானோ?

Link to comment
Share on other sites

மறைந்த என்.டி.ஆர். தெலுங்கு தேசத்தை உருவாக்கியபோது, கட்சியின் சட்ட விதிகளை உருவாக்க நினைத்தார். அப்போது தி.மு.க.வின் பை-லா பற்றி அறிந்திருந்ததால் அதன் மீது அவருக்கு ஈர்ப்பு வந்து உபேந்திரா என்பவரை கலைஞரிடம் அனுப்பி வைத்தார். அதன்படி அமைந்ததுதான் தெலுங்கு தேசத்தின் சட்ட விதிகள். இன்றைக்கும் அந்த கட்சி இயங்குவது தி.மு.க.வின் சட்ட விதிகளின்படிதான்.

Link to comment
Share on other sites

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் பாக்கணும் வித்தியாசமா இருக்கும் எண்டு நினைக்கிறன்....

Link to comment
Share on other sites

இதயச்சந்திரன் அவர்கள் கூறியது போல வாழ் நாளில் சில வருடங்களாவது தனித்தமிழீழ அரசில் வாழ்ந்த திருப்த்தி கடைசி வரை எனக்குள் இருக்கும்.......

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டு தகவல்களின் படி அஞ்சான் ஊத்திக்கிச்சாமே .......

என்னோட செல்லத்தோட படம் எண்டு சொல்லிட்டு திரிஞ்ச கொஞ்ச பொண்ணுங்கள தேடிட்டு இருக்கன்....

Link to comment
Share on other sites

சும்மா இருக்கிறது என்கிறது சுலபமில்லை. பிறந்த குழந்தை கூட கை காலை உதைக்கிறதே? அதுக்கு என்ன தெரியும்? நாம் எல்லாருமே அறியாமலே பல விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் துடிக்கிறதுலேந்து, மூச்சு விடுகிறது போல பலது.

ஒரு கதை. ஒரு கோவில். புதுசா ஒரு மணியக்காரர் வந்தார். எல்லா விஷயங்களையும் ஒரு அலசல் செய்யணும்ன்னு பார்த்தார். கோவில்ல நடக்கிர ஒவ்வொரு காரியத்தையும் கவனித்தார்.

சுவாமிக்கு நைவேத்தியம் செஞ்ச பிறகு பிரசாத உருண்டை வினியோகத்தை பாத்தார். ஏதோ ஒரு நியமத்தில அதை எல்லாம் வினியோகிச்சாங்க. சும்மா கோவில் தூண்ல சாஞ்சு கொண்டு இருந்த ஒத்தனுக்கும் கொடுத்ததை பாத்தார். அப்புறமா அர்ச்சகரை கூப்பிட்டு "யார் அது? ஏன் கொடுத்தீங்க?" ன்னு கேட்டர். "அவர் ஒரு சாது. ரொம்ப நாளா கொடுத்து வரோம்'" ன்னு சொன்னாங்க. எதுக்கு தண்டமா இப்படி கொடுக்கிறீங்க, நிறுத்துங்கன்னு உத்திரவு போட்டார்.

அடுத்த நாள் சாதுவுக்கு உருண்டை கிடைக்கலே. என்ன விஷயம்ன்னு விசாரிச்சார். மணியக்காரர் "ஏன் சும்மா உக்காந்து இருக்கிறவனுக்கு பிரசாதம்? கொடுக்காதேன்னு உத்திரவு போட்டுட்டார்" ன்னு பதில் கிடைச்சது. "அப்படியா? அந்த மணியக்காரரை கூப்பிடு" ன்னார். மணியக்காரரும் வந்தார். "ஏம்பா, நீதான் சும்மா இருக்கிறவனுக்கு பிரசாதம் கொடுக்காதேன்னு சொன்னாயா?” ன்னு கேட்டர்.” ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” "சரி, இங்க வா. இந்த தூண் பக்கத்திலே கொஞ்ச நேரம் அசையாம சும்மா உக்காரு" ன்னார். மணியக்காரரும் உக்காந்தார். நாலு ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. அவருக்கு இருப்பு கொள்ளலே. அசைய ஆரம்பிச்சார். "அட அசையறியே? நான் சும்மாதானே உக்கார சொன்னேன்?” திருப்பி முயற்சி பண்ண மணியக்காரருக்கு இது கஷ்டம்ன்னு புரிஞ்சு போச்சு. அர்ச்சகரை பாத்து "இனிமே இவருக்கு 2 உருண்டை கொடுங்க" ன்னு உத்திரவு போட்டார்.

அது மாதிரி யாராலேயும் ஒரு வேலையும் செய்யாம இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.