Jump to content

Sep 29 அன்று Toronto வில்: சுனிலா அபேசேகரா நினைவுகளுடன் தோழமையைக் கொண்டாடுவோம் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போக முடிந்த கனடிய உறவுகள் போறது நல்லது!

 

நான் அங்கிருந்தால், கட்டாயம் போயிருப்பேன்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  Sunila-abeyasekara-260913-CTC-seithy-150

அண்மையில் காலமான மனித உரிமைப் போராளியும், சிங்களக் கலைஞரும் , மிக நீண்ட நாட்களாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்து வந்தவருமான சுனிலா அபயசேகர அவர்களது வாழ்வையும் , பங்களிப்பையும் நினைவு கூறும் முகமாக நேற்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஒரு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வினை கனடியத் தமிழர் பேரவை ஒழுங்கு படுத்தியிருந்தது.

  

இந்நிகழ்வில் தமிழ் , சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் நிகழ்விற்கு வந்தவர்களை கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் வரவேற்றுப் பேசினார். அதன் பின்னர் கவிஞர் சேரன் அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு Amnesty International கனடா பிரிவைச் சேர்ந்த John Argue அவர்கள் உரையாற்றினார். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் , கருத்து சுதந்திரம் தொடர்பாக அவர்கள் நீண்ட காலம் இணைந்து பணியாற்றியவர்கள். அவரைத் தொடர்ந்து ஸ்கை ரோஸ் என்னும் சமூக நீதிக்கான நிறுவனத்தினுடைய ரொறொன்ரோ பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் Jim Davis அவர்கள் கருத்துக்களையும் தன்னுடைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

 

Jim Davis மிக நீண்ட காலமாக அவருடன் பழகியவர் மட்டுமல்ல , இலங்கையில் தமிழ் மக்களுடைய போராட்டத்திற்காகவும் , பல்வேறுபட்ட சமூக நீதி பிரச்சினைகளுக்காகவும் அயராது உழைத்து வருபவர். Jim Davis அவர்களின் பேச்சினைத் தொடர்ந்து இலங்கையின் மிக முக்கிய பத்திரிக்கையாளர் Shama Ranawana , ஊடகங்களில் சுனிலா தொடர்பான பங்களிப்பினையும் , இலங்கையின் மனித உரிமைகள் வன்னியத்திற்கான இயக்கங்களுக்கான முன்னோடியாக அவர் விளங்கியதைப் பற்றியும் . அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை நிறுவனமான infok என்பதைப் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார்.

 

Shama Ranawana அவர்கள் ஊடக சுதந்திரத்திற்காக பாடுபட்டு உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. Shama Ranawana அவர்களைத் தொடர்ந்து, சிங்கள இசைத்துறையில் முன்னோடியாகவும் , ஒரு வரலாற்றுப் புகழ் மிக்கவராகவும் கருதப்படும் Premasiri khemadasa என்ற சிங்கள இசைக்கலைஞருடைய மகளான Anupa Khemadasa உரையாற்றினார். Anupa Khemadasa மிக முக்கியமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருகிறார். ஐரோப்பா , கனடா போன்ற பல நாடுகளிலும் அவருடைய இசைக்கச்சேரிகள் நடந்திருக்கின்றன. சுனிலாவின் மிக நெருங்கிய நண்பியான அனிதா அவர்கள் சுனிலா பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

 

அவரைத் தொடர்ந்து கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் உரையாற்றினார். டேவிட் பூபால பிள்ளையினுடைய குடும்ப நண்பராக சுனிலா விளங்கி வந்ததையும் அப்போது அவர் குறிப்பிட்டார். டேவிட் பூபாலபிள்ளை அவர்களைத் தொடர்ந்து மிகப் பிரபலமான சிங்கள நடிகரான Ajith Jinadasa அவர்கள் உரையாற்றினார். Ajith Jinadasa 26 க்கும் மேற்பட்ட சிங்களத் திரைப்படங்களில் நடித்தவர். புகழ் பெற்றவர்கள் இயக்கிய படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார். சுனிலாவுடன் நெருங்கிப் பழகியவர் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து சிங்களப் படங்களிலும் நடித்திருக்கிறார். அவரும் சுனிலாவைப் பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்,

 

அடுத்ததாக சட்டத்தரணியும், கனடியத் தமிழர் பேரவையினுடைய சட்ட ஆலோசகருமான கரி ஆனந்த சங்கரி அவர்கள் சுனிலாவுடன் தொடர்ச்சியாக ஜெனீவா மனித உரிமை அரங்குகளிலும், பிற மனித உரிமை ஆணைக் குழுக்களிலும் பணியாற்றி வந்தமை பற்றி நெகிழக் கூடிய வகையில் உரையாற்றினார். இறுதியாக கவிஞர் சேரன் சுனிலாவைப் பற்றிய தன்னுடைய கவிதையை ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்தார்.

 

இத்துடன் அஞ்சலிக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

 

செய்தி - நவஜீவன் அனந்தராஜ்-

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(1)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(2)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(3)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(4)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(8)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(6)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-(7)

 

 

Sunila-abeyasekara-260913-CTC-seithy-533

 

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93775&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.