Jump to content

மீண்டும் சூடேறும் ஜெனிவா களம்


Recommended Posts

மீண்டும் ஒருமுறை ஜெனிவாவை நோக்கி, பலரது கவனமும் திரும்பத் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர், இலங்கைக்கு சவால்மிக்கதாகவே இருக்கும் என்ற கருத்து, பல மாதங்களாகவே அடிபட்டு வந்தது தான். இப்போது, எதிர்பார்க்கப்பட்டதை விட இன்னமும் கடினமான – இறுக்கமான சூழல் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

19ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை மதித்து நடந்து கொண்டதா, அதை நிறைவேற்றியதா என்பதை விளக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை தான், இறுக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், இப்போது அதற்கும் மேலாக, இன்னொரு புதிய தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு, இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தைத் தாமே கொண்டு வரப் போவதாக அமெரிக்கா முன்கூட்டியே பகிரங்கமாக அறிவித்திருப்பது தான், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம்.

 

வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்ற பேச்சு சிலவாரங்களாகவே அரசியல், ஊடக வட்டாரங்களில் அடிபட்டபோதும், ஒபாமாவின் இரண்டாவது பதவிக்கால வெளியுறவுக் கொள்கை பற்றிய சந்தேகங்களால், அதற்கான சாத்தியங்கள் குறித்த கேள்வி பலரிடம் இருக்கவே செய்தது.


ஆனால், ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இரண்டாவது பதவிக்காலத்துக்காக ஒபாமா தெரிவுசெய்யப்பட்ட போதிலும், அமெரிக்க இராஜாங்கச் செயலராக ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து பதவி வகிக்கப் போவதில்லை. ஏற்கனவே ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகிவிட்ட போதிலும், இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனின் பதவிக்காலம் இன்னமும் முடிவடையவில்லை. அவர் வரும் வெள்ளிக்கிழமையுடன் தான், ஓய்வுபெறப் போகிறார்.


அவரையடுத்து ஜோன் கெரி புதிய இராஜாங்கச் செயலராகப் பதவியேற்கப் போகிறார். ஜோன் கெரியைப் பொறுத்தவரையில், இலங்கை தொடர்பான கொள்கையில் ஹிலாரியைப் பின்பற்றமாட்டார் என்றே இலங்கை அரசாங்கம் உறுதியாக நம்பியிருந்தது.

 

ஆனால், ஜோன் கெரி பதவியேற்க முன்னதாகவே, ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம், இலங்கை அரசுக்கு சோதனையாகத் தான் அமையப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையைக் கொடுத்துள்ளது இந்த அறிவிப்பு.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் பிரதி உதவிச்செயலர் நிலையில் உள்ள மூன்று அதிகாரிகள் இந்தவாரம் கொழும்பு வந்திருந்தனர். விக்ரம் சிங், ஜேம்ஸ் மூர், ஜேன் சிம்மர்சன் ஆகிய இந்த மூன்று பிரதி உதவிச்செயலர்களும், இலங்கைக்கு மேற்கொண்ட பயணம், இலங்கைக்கான எச்சரிக்கையை விடுப்பதற்கே என்பது உறுதியாகியுள்ளது. முன்னெப்போதும், இப்படி மூன்று பிரதி உதவிச்செயலர்கள் இலங்கைக்கு ஒரு சமயத்தில் வந்தது கிடையாது.

 

ஒரே இடத்தில் பணியாற்றும் ஒரே நிலை அதிகாரிகள்- அதுவும் ஒன்றாகவே பயணம் மேற்கொள்ளும்போது, அமெரிக்கா கூடிய அக்கறை செலுத்துகிறது என்றே அர்த்தம். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் மூவரினதும் பயணத்தை இலங்கை அரசாங்கம் அலட்சியமாகவே கருதியிருந்தது.


“கடந்த மாதம், நடந்த காலி கடல்சார் கருத்தரங்கில் பங்கேற்க வருவதாக அவர்கள் கூறியிருந்தார்கள். பின்னர் அந்தப் பயணத்தை பிற்போட்டனர். இப்போது வருகின்றனர்” என்று இவர்களின் வருகை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் கூறியிருந்தார் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ.

 

ஆனால், அரசாங்கத்துக்கு அமெரிக்க அதிகாரிகளின் பயண நோக்கம் முன்னரே தெரிந்திருந்தது.

ஏனென்றால், கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச்செயலர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருந்தார்.

 

ஆனால், இலங்கை அரசாங்கம் இத்தகையதொரு அபாய நிலையில் இருப்பதாக காட்டிக் கொள்வதைத் தவிர்த்தது.

ஆனால் அமெரிக்க உயர் மட்டக்குழு, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டது. இதனை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

 

ஏனென்றால், அமெரிக்க இராஜாங்கச் செயலராக ஜோன் கெரி இன்னமும் பதவியேற்காத நிலையில், இது பற்றிய தீர்மானம் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் நம்பியிருக்கவில்லை.

அடுத்து, அமெரிக்கா இப்படி முன்கூட்டியே தமது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய சூழலும் இருக்கவில்லை.

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது குறித்து, ஜெனிவா கூட்டத்துக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கோ அல்லது  மனிதஉரிமைகள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்துக்கான கீழ் நிலைச் செயலர் மரியா ஒரேரோவோ உறுதியாக கூறவில்லை.


பொதுப்படையாக - இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று தான் கூறியிருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கத்துக்கு அவர்கள் முன்னமே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

 

இதனால், ஜெனிவாவில் தீர்மானத்தை முன்வைக்கப்போவது அமெரிக்காவா அல்லது வேறு நாடா என்ற கேள்வி கடைசிநேரம் வரை இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் இம்முறை, நிலைமை அப்படியில்லை. தாமே தீர்மானத்தை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துவிட்டது அமெரிக்கா.


இது கடந்த ஆண்டில் இருந்த நிலையைவிட இறுக்கமான நிலையில் அமெரிக்கா உள்ளது என்பதற்கான ஆதாரம்.

அதுவும், கடந்தமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் பொதுப்படையாக வலியுறுத்தப்பட்டது. இம்முறை கொண்டு வரப்படும் தீர்மானம், போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை, தீர்மானத்தில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட சில விடயங்களை, இந்தியாவின் ஆலோசனையின் பேரில் நீக்குவதற்கு அமெரிக்கா இணங்கியிருந்தது. ஆனால் இந்தமுறை நேரடியாகவே போர்க்குற்ற விவகாரங்களை ஜெனிவாவில் முன்னிலைப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

இது, சர்வதேச அரங்கில் இலங்கைக்கு இன்னும் அதிக நெருக்கடியையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தக் கூடியது. எனினும், கடந்தமுறை ஜெனிவாவில் ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்குப் பக்கபலமாக இருந்தன. இம்முறை இந்த நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காதது இலங்கைக்குப் பெரும் இழப்பாகவே இருக்கும்.


ஜெனிவா களத்தில், இலங்கை அரசாங்கம் இம்முறை கூடுதல் அழுத்தங்களைச் சந்திக்கவுள்ளதற்கு தனியே போர்க்குற்றங்கள் மட்டும் காரணமல்ல. பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை அரசாங்கம் நீக்கியதும், அமெரிக்காவின் இந்த இறுக்கமான முடிவுக்கு மற்றொரு காரணம். இதனை அமெரிக்க உயர் மட்டக்குழு கொழும்பில் தெரிவித்துள்ளது.

 

இந்தவகையில் பார்க்கப்போனால் அரசாங்கம் தனது தலையில் தானே, மண்ணை அள்ளிப் போட்டுள்ளது என்று தான் அர்த்தம்.


ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்ட விவகாரத்திலும் சரி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விவகாரத்திலும் சரி – இலங்கை அரசாங்கம் தனக்கான குழியை தானே வெட்டிக் கொண்டுள்ளது.

 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 35 வீதமே நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதில் முக்கியமான பரிந்துரைகள் இடம்பெறவில்லை. இது போதுமானதல்ல – இன்னும் அதிகம் செய்தாக வேண்டும் என்கிறது அமெரிக்கா.


ஆனால், அரசாங்கமோ ஓரளவுக்கு மேல் பணிவதில்லை என்பதில் உறுதியாகவே இருக்கிறது. அதனால் தான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த கையுடன், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி விட்டிருந்தது. இந்த நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, ஜெனிவாவில் தனக்கான பாதுகாப்புக் கவசம் ஒன்றை உருவாக்க முற்பட்டது.

 

இந்தநிலையில் தான், ஜெனிவாவில் அடுத்த தீர்மானம் வரப்போவது உறுதியாகி விட்டது. அதை எதிர்கொள்ளத் தாமும் தயார் என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இந்தநிலையில் கடந்தமுறையை விட இம்முறை ஜெனிவா களம் சூடானதாகவே இருக்கப் போகிறது. அதேவேளை, இந்தியாவின் நிலை என்னவென்பது இன்னமும் கேள்விக்குரியதாகவே உள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/58050-2013-01-31-10-29-04.html

Link to comment
Share on other sites

 ஜெனிவா களத்தில், இலங்கை அரசாங்கம் இம்முறை கூடுதல் அழுத்தங்களைச் சந்திக்கவுள்ளதற்கு தனியே போர்க்குற்றங்கள் மட்டும் காரணமல்ல. பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை அரசாங்கம் நீக்கியதும், அமெரிக்காவின் இந்த இறுக்கமான முடிவுக்கு மற்றொரு காரணம். இதனை அமெரிக்க உயர் மட்டக்குழு கொழும்பில் தெரிவித்துள்ளது.


இந்தவகையில் பார்க்கப்போனால் அரசாங்கம் தனது தலையில் தானே, மண்ணை அள்ளிப் போட்டுள்ளது என்று தான் அர்த்தம்.

 

 

cartoon2(343).jpg

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகள் இலங்கையில் ஒரு  உண்மையான ஜனநாயக ஆட்சியை கொண்டு வர எத்தனிக்கின்றனவே தவிர தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வை தரவேண்டும் என எள்ளளவும் செயற்படவில்லை.

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகள் இலங்கையில் ஒரு  உண்மையான ஜனநாயக ஆட்சியை கொண்டு வர எத்தனிக்கின்றனவே தவிர தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வை தரவேண்டும் என எள்ளளவும் செயற்படவில்லை.

இருக்கலாம். ஆனால் அவர்கள் 'தமிழர்கள் மீது புரிந்த போர்குற்றத்தை' முன்னெடுக்கும்பொழுது, கூட்டமைப்பை முதலில் சந்தித்த பொழுது,....

 

நாமும் அதில் எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதே எமது இராசதந்திரமாக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகள் இலங்கையில் ஒரு  உண்மையான ஜனநாயக ஆட்சியை கொண்டு வர எத்தனிக்கின்றனவே தவிர தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வை தரவேண்டும் என எள்ளளவும் செயற்படவில்லை.

ஒரு நல்ல தீர்வு எப்படி இருக்கும்? சோல்பரியின் சிறுபான்மையினர் பாதுகாப்பு கவசம் ஒரு சில பத்தாண்டுகள் தடை போட்டு பார்த்தது. 13ம் திருத்தம் புத்தகத்திற்கு வெளியே வரவில்லை. அடுத்தது என்ன? :unsure:

Link to comment
Share on other sites

இருக்கலாம். ஆனால் அவர்கள் 'தமிழர்கள் மீது புரிந்த போர்குற்றத்தை' முன்னெடுக்கும்பொழுது, கூட்டமைப்பை முதலில் சந்தித்த பொழுது,....

 

நாமும் அதில் எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதே எமது இராசதந்திரமாக இருக்கவேண்டும்.

போரின் சூத்திரதாரி இந்தியா என்பது மேற்கு நாடுகளுக்கு தெரியும்.அவர்கள்  தமிழர்களை காப்பாற்றுவதிலும் பார்க்க இந்தியாவை காப்பாற்றவே செய்வர். ஒரு வேளை இலங்கை போர்க்குற்றவாளியாக  மாட்டுப்பட்டால் இந்தியாவை காட்டிக்கொடுக்கும்.அச்சூழ்நிலையை இந்தியா வரவிடாது.

Link to comment
Share on other sites

போரின் சூத்திரதாரி இந்தியா என்பது மேற்கு நாடுகளுக்கு தெரியும்.அவர்கள்  தமிழர்களை காப்பாற்றுவதிலும் பார்க்க இந்தியாவை காப்பாற்றவே செய்வர். ஒரு வேளை இலங்கை போர்க்குற்றவாளியாக  மாட்டுப்பட்டால் இந்தியாவை காட்டிக்கொடுக்கும்.

அச்சூழ்நிலையை இந்தியா வரவிடாது.

 

 இந்தியா " விடுதலைப்புலிகளையே அழிக்க உதவினேன் " என கூறிவிடும். சர்வதேச விதிகளை இந்தியா மீறியது என நிரூபிக்க  சிங்களம், மகிந்த கூட்டம்,  முனையாது.

 

எனவே இந்தியாவை காட்டிக்கொடுக்க சிங்களத்திடம் எந்த போர்க்குற்ற ஆதாரமும் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

இந்தியா அவர்களுடன் ஒத்துழைத்தால், எப்படி புலிகளின் அழிப்பை மூடிமறைக்க இலங்கை அரசுக்கு உதவினார்களோ அதே மாதிரி இந்தியா தனது குற்றத்தை மூடி மறைக்க உதவுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.