Jump to content

குற்றங்கள் தயார்


Recommended Posts

மார்ச் மாதத்தை நோக்கிய எதிர்பார்ப்புக்கள் ஆரம்பித்திருக்கின்றன. ஐ.நாவில் தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வலுவாக மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புகளும்,கோரிக்கைகளும் பல தளங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையும் அதனைக் கருத்தில் கொண்டு ராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது.

 

 

முதற்கட்டமாக இந்தியா இலக்குவைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வார இறுதிப் பகுதியில் இந்தியா சென்ற இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  இந்தியா அமைதியாக இருந்து கொண்டால் மட்டும் போதும் என்று கூறிவந்திருக்கின்றார். சர்வதேசத்தை கவனிக்கத் தங்களுக்குத் தெரியும் எனவும் சொல்லியிருக்கின்றார்.


இந்த நிலையில் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டது போல இம்முறை இலங்கைக்கு சர்வதேச சமூகத்தால் கொடுக்கப்பட இருக்கும் அழுத்தம் இலகுவானதாக இருக்குமா? அந்த அழுத்ததை அவர் குறிப்பிடுவதுபோல் இலகுவாக சமாளிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஏனெனில் இலங்கை இந்த முறை சமாளிக்க வேண்டிய நிலையில் பல பிரச்சினைகளின் பட்டியலை வைத்திருக்கின்றது.

 

 

பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நாவின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட எந்தத் தீர்மானத்தையும் இலங்கை கருத்திலெடுத்து நடைமுறைப்படுத்தவில்லை.

 

அமெரிக்காவின் பணிப்பில் இலங்கை அரசே ஆராய்ந்து முன்மொழிந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையையாவது நடைமுறைப்படுத்தும்படி அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள் கேட்டிருந்தன. அதற்கு அப்போது தலையாட்டிய அரசு இதுவரை நல்லிணக்கத்துக்கான எந்த சமிக்ஞையையும் காட்டவில்லை.


மாறாக இலங்கையில் வாழும் இனங்களிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் முகமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. இது தொடர்பில் உன்னிப்பான கவனிப்பை சர்வதேச சமூகம் கடந்த ஆண்டிலிருந்தேசெலுத்தி வந்திருந்தது.

 

 

காட்டாட்சி களைகட்டியது

பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து இலங்கைக்கு அமைதி கிடைத்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படாத ஆட்சி முறையொன்று நிலவி வருவதை பலரும் அவதானித்திருக்கின்றனர். அறிக்கை விடுத்திருக்கின்றனர். எச்சரித்திருக்கின்றனர். ஆயினும் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஊடக அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. வடக்கில் எந்த ஊடகமும் அரசின் கவனிப்பைத் தவறி இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. தெற்கில் கூட அரசை விமர்சிக்கும் ஊடகங்களும், அதன் பணியாளர்களும் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. உதயன், சண்டே லீடர் ஆசிரியர்கள் மிரட்டப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள். பத்திரிகைகள் எரியூட்டப்பட்டன.

 

 

 

ஜனநாயகம் மரணித்துக் கொண்டிருக்கின்றது

வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் ஜனநாயக வழிமுறைகளில் போராடக் கூட முடியாத காட்டாட்சி அனுபவத்தை மிக அண்மைக்காலமாக அனுபவித்து வருகின்றனர். நில அபகரிப்புக்கு எதிராகவும், கடத்தல் காணாமல் போதல்களுக்கு எதிராகவும் போராடத் தொடங்கிய சந்தர்ப்பங்களில் எல்லாம் தாக்குதலுக்குள்ளானார்கள்.

 

ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டனர்.

அது மட்டுமன்றி போராட்டங்களில் ஈடுபட்டவர்களும், அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைத்தவர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.


தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிறீதரன் உள்ளிட்டவர்களும் மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண.இராயப்பு ஜோசப், மன்னார் மாவட்ட நீதிபதி உள்ளிட்டோர் இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவர்களில் சிலர்.

 

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடிவில்லை

கடந்த வருடத்தில் மாவீரர் தினத்தோடு கைதாகிய யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரச்சினையும் சர்வதேசமயப்படுத்தப்பட்ட ஒன்று. இலங்கையைக் கவனித்து வரும் பெரும்பாலான நாடுகள் அதற்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தன.

 

கைது செய்யப்பட்டமைக்கான சரியான காரணத்தைக் கூறாத அரசும், படைகளும், இந்தக் கைது விடயத்தில் எந்த விதமான ஜனநாயக வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. அத்தோடு இலங்கையில் ஜனநாயகம் அற்ற ஆட்சி நிலவுகின்றது என்பதை பலரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அந்தப் போராட்டமும், அதன் பின்னரான இலங்கை அரசின் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.


கைதாகி இரண்டு மாதங்கள் நெருங்குகின்ற நிலையில் அவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் இருக்கின்றது. மாணவர் கைதுடன் வடக்கில் மேலும் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் நிலைகுறித்தும் ஒழுங்கான தீர்வுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

 

ஜனநாயகம் தின்றுவிட்ட நீதித்துறை

ஜனநாயகம் எல்லை மீறும் சந்தர்ப்பங்களில் அதனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நீதித்துறை இலங்கையில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆட்சியிலிருக்கும் அரசு முன்வைத்த கோரிக்கை ஒன்றை நீதிமன்ற தீர்ப்பொன்றினூடாக நிராகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதம நீதியரசரின் பதவியையே பறித்தது அரசு.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க பதவி விலக்கப்பட்ட முறை தவறானது என அமெரிக்கா கூட எச்சரித்திருந்தமை இந்தவிடயத்தில் குறிப்பிடத்தக்கது.    அவரின் பதவி பறிப்பைத் தொடர்ந்து அரசுக்குச் சார்பான ஒருவர் பிரதம நீதியரசராக்கப்பட்ட விடயமும், இலங்கையின் நீதித்துறை சரிந்து வரும் நிலையும் சர்வதேச கவனிப்பை பெற்றுவருகின்றன.

 

 

புது அமைப்பும், புது கோஷங்களும்

இவை அனைத்தையும் விட இலங்கையின் மூன்றாவது சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றது. அரசு சார்ந்த பௌத்த துறவிகளும், அமைச்சர்களும் வெளிப்படையாகவே சிறுபான்மையினத்தவரின் மனங்கள் புண்படக் கூடிய வகையில் செயற்படுகின்றனர். சிறுபான்மையினத்தவருக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும் நிலை தொடர்கின்றது.

 

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை தொடர்ந்து இப்போது பொது பல சேனா அமைப்பு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

 

இவ்வாறான இனவாத அமைப்புக்களின் ஆபத்து குறித்து தெரிந்திருந்தும் அரசு எந்த வித சட்ட நடவடிக்கைகளையும் குறித்த அமைப்பினர் மீது எடுக்கவில்லை. இவ்வாறு அரசு தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது இனவாத அமைப்புக்கள் அரசின் நெறிப்படுத்தலில் இயங்குகின்றவை என்ற சந்தேகத்தை பரவலாக ஏற்படுத்தியிருக்கின்றது.


 

முடியாத முடிவாக...

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் கூட்டத்தொடரை வெற்றிகரமாக எதிர்கொள்ள இவ்வளவு விடயங்களையும் சமாளிக்க வேண்டிய நிலையுள்ளது. மீதமாக இருக்கின்ற ஒரு மாத கால இடைவெளியில் விட்ட தவறுகள் அனைத்தையும் திருத்திக் கொள்ள முடியாது.


அதற்கு அரசு முயற்சிக்கவும் மாட்டாது. ஐ.நா. கேட்கப்போகும் அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணைகளின் தீர்ப்பு வெளிவந்திருக்கின்றது.

 

அதில் கூறப்பட்டவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அவகாசத்தைக் கோரக் கூடிய சாத்தியங்களே அதிகமாக தென்படுகின்றன. அதற்கு இந்தியாவின் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெற்றுவிட்டது என்றே  எண்ணத் தோன்றுகிறது.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4669045528531441

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.