Jump to content

நீதித்துறையின் பிரச்சினை தீர்ந்துவிட்டதா...?


Recommended Posts

உயர் நீதிமன்றத்தினால் பிழையானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டு பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்க நீதித் துறையினருக்கு சட்டம் இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது என்று நாம் கடந்த வாரம் கூறினோம். ஆனால் அவ்வாறு கேள்வி எதையும் எழுப்பாமலே சட்டத்துறை, புதிய பிரதம நீதியரசராக  மொஹான் பீரிஸை ஏற்றுக்கொண்டது.

 

 

புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாக்க பதவி நீக்கம் செய்யப்படுமுன் சட்டத்தரணிகள் பலரும் நீதிபதிகளும் கூறி வந்தனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் அது சரி தான். ஆனால் புதிய பிரதம நீதியரசர் ஒருவரை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது  எந்தளவு நடைமுறைச் சாத்தியமக்கும் என நாம்; அப்போது கேள்வி எழுப்பினோம்;.


இப்போது ஜனாதிபதி புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை நியமித்திருக்கிறார். நாம் ஊகித்ததைப் போலவே சட்டத்துறையில் எவரும் அவரை நிராகரிக்கப் போவதாக தெரியவில்லை. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அப்போதே புதிய நீதியரசரை வரவேற்பதற்கான சம்பிரதாயபூர்வ வைபவத்தை மட்டும் பகிஷ்;கரிப்பதாக கூறியது. முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்படு முன்னராவது அச்சங்கம் புதிய பிரதம நீதியரசரை பகிஷ்கரிப்பதாக கூறவில்லை.

 

நாம் கடந்த வாரம் கூறியதைப் போல் சட்டம் எதைக் கூறினாலும் யாப்பு எதைக் கூறினாலும் ஆட்சியாளர்களின் விருப்பப் படியே காரியங்கள் நடைபெறுகின்றன. அவர்களின் விருப்மே சட்டமாகிறது. முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்றோ பொய்யானவை என்றோ எம்மால் கூற முடியாது. ஆனால் அவர் முறையாக பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பதே இப்போதுள்ள பிரச்சினையாகும்.


அதேவேளை நாடாளுமன்றத்தில் ஒரு சட்சிக்கு இருக்கும் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் நீதியரசர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்களாயின் நீதியரசர்கள் ஆ;சியாளர்களுக்குப் பயந்து நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

அதுதான் இங்குள்ள பிரச்சினை. ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு பதிலாக மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராகியது அல்ல பிரச்சினை. நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படக் கூடிய ஒரு முறை நாட்டில் இல்லாமையே பிரச்சினையாகும்.


அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்த போதிலும் அரசாங்கத்தின் சில தலைவர்களினது மனச்சாட்சியும் தற்போதைய முறை தவறானது என்று அவர்களுக்கு குத்திக் காட்டுகிறது போலும். ஷிராணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையை மேலும்; ஆராய்வதற்காக தாம் சுயாதீனமானதோர் குழுவை நியமிக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனால் தான் கூறியிருக்க வேண்டும்.

 

நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் முறையை பின்னர் மாற்றியமைக்கலாம் என்றும் ஆனால் இப்போதைக்கு தற்போதுள்ள முறைப்படி ஷிராணிக்க எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்றும் குற்றப் பிரேரணைப் பற்றிய சர்ச்சை உச்சக் கட்டத்தில் இருக்கும் போது ஷிராணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியிருந்தார்.


நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்றும் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடி அந்த அவசியத்தையே வலியுறுத்துகிறது என்றும் ஷிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் கூறியிருந்தார். இவை அனைத்தும் அரசாங்கத்தின் தலைவர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடே.

 

ஆனால் மனச்சாட்சி அவர்களை குறை கூறினாலும் அகம்பாவமும் பதவி ஆசையும் அவர்களுக்கு இந்த நிலையை மாற்ற இடமளிக்குமா என்பது சந்தேகமே. இலங்கையில் தற்போது அமுலில் உள்ள நீதியரசர்களுக்க எதிரான குற்றப் பிரேரணை முறை ஆட்சியாளர்களுக்கு சாதகமானதாகும். இந்த முறையின் கீழ் நாடாளுமன்றத்தில்

 

பெரும்பான்மை பலம் இருந்தால் ஜனாதிபதி ஒருவருக்கு எந்த ஒரு நீதியரசரையும் பதவியில் இருந்து நீக்க முடியும்.


சுருக்கமாக கூறுவதாயின் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் ஜனாதிபதியும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் ஜனாதிபதியின் விருப்பப்படி எந்தவொரு நீதியரசரையும் பதவி நீக்கலாம். குற்றப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் அதனை நிறைவேற்றல் ஆகிய அனைத்தும் அப்போது வெறும் சம்பிரதாயங்களே.

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் ஜனாதிபதியும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இல்லாத போது மட்டும் ஜனாதிபதியால் அவ்வாறு தமது விருப்பப்படி நீதியரசர்களை பதவி நீக்கம் செய்ய முடியாமல் போய் விடலாம். தாம் நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பதாகவே எந்தவொரு ஜனாதிபதியும் கூறுவார். ஆனால் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்த ஜனாதிபதி தான் விரும்ப மாட்டார்?


தற்போது அமுலில் உள்ள நீதியரசர்களுக்க எதிரான குற்றப் பிரேரணை முறையிலுள்ள சர்ச்சைக்குறிய நாடாளுமன்ற தேரிவுக் குழுவினால் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் முறையை 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவே அறிமுகப் படுத்தினார். ஆதில் உள்ள அநீதியான அம்சங்கள் அப்போதிருந்தே எல்லோருக்கும் தெரியும்.

 

ஆனால் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதால் ஆளும் கட்சிகள் அந்த முறையை மாற்றியமைக்க முன் வருவதில்லை. எப்போதும் எதிர்க்கட்சிகளே இந்த முறையை மாற்றியமைக்க வேண்டும் என்கின்றன. அக்கட்சிகளும் ஆளும் கட்சியாக வந்த போது அவையும் இந்த முறையை தமது அரசியலுக்காக பாவிக்கின்றன. எனவே தான் இந்த அநீதியான முறை இன்னமும் நிலைத்திருக்கிறது.

 

2000ஆவது ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க செய்ததைப் போல் வேறுகாரணங்களை முதன்மைப் படுத்தி அரசியலமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதோடு இந்த விடயத்தையும் அதில் உள்ளடக்கினால் சிலவேளைகளில் இந்த முறை மாறும்.


ஏனெனில் அவ்வாறான நிலைமைகளின் கீழ் சிலவேளை நீதித்துறையை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களின் மனங்களில் இருந்து தளர்ந்து இருக்கலாம். 2000ஆவது ஆண்டில் அது தான் நடந்தது. அவ்வாறின்றி சந்திரிகா மட்டும் நீதித்துறையை காலில போட்டு மிதிக்க விரும்பாதவரல்ல.

 

http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/57436-2013-01-22-06-34-02.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.