Jump to content

பிரிட்டன் புதிய நிலைப்பாடு வெற்றி பெறுமா..?


Recommended Posts

21ம் நூற்றாண்டுக்கான உலகத்தின் புதிய அச்சு உருவாக ஆரம்பித்துவிட்டது.


ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் பேசிய உரைக்கு அவருடைய கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பேரம் பேசல்களை ஆரம்பித்து, எதிர்வரும் 2015 ற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதா இல்லையா என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தலாம் என்று கமரோன் நேற்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.

 

ஆனால் அதற்கு பதிலுரைத்த லிபரல் டெமக்கிரட்டி கட்சித் தலைவர் பிரிட்டன் மக்கள் பிரதமர் கருதுவது போல ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்கேற்பது குறித்து யாதொரு ஆர்வமும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனினுடன் வர்த்தகம் செய்யும் பல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவை அல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் பிரிட்டன் அந்த நாடுகளின் வர்த்தகத்தை இழக்க நேரிடும், மேலும் பிரிட்டனின் வேலைச் சந்தையிலும் கிழக்கு ஐரோப்பிய நாட்டு பணியாளரால் பெரும் சிக்கல் ஏற்படும்.

 

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தால் பிரிட்டனுக்கு நஷ்டமே அல்லாது இலாபம் ஏற்படப் போவதில்லை, என்பதால் பிரிட்டன் மக்களின் ஆர்வம் இதன்பால் தூண்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மறுபுறம் இன்று வெளியான கருத்துக் கணிப்பில் சுமார் 40 வீதமான பிரிட்டன் மக்கள் இதற்கான வாக்களிப்பு நடந்தால் நிச்சயம் எதிராகவே வாக்களிப்பர் என்றும் தெரிவிக்கிறது, மேலும் 37 வீதமானவர்கள் மட்டுமே இதை ஆதரிப்பதாகவும், 18 வீதமானவர் அடியோடு நிராகரிப்பதாகவும் கூறுகிறது.

 

ஆகவே பிரிட்டனில் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் டேவிட் கமரோனின் கனவு பலிக்கும் என்று கூற முடியாது.

 

ஆனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டிய காலம் வந்துள்ள இரகசியத்தை டேவிட் கமரோன் வெளிப்படையாக பேச முடியாத அவலமே இன்றைய யதார்த்தமாகும்.

 

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான நாடான பிரான்ஸ் ஆபிரிக்க மாலிக்கு படை கொண்டு சென்று பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு தலைமை தாங்கிவிட்டது.

 

இந்த அணி மாற்றத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்கிவிட்டது, அமெரிக்கா ஈராக் போருக்கு சென்றபோது கேட்டுக் கேள்வியில்லாமல் கூடச் சென்ற பிரிட்டன் தனது இரண்டாவது இடத்தை அதன் மூலம் தக்க வைத்துக் கொண்டது.
இப்போது இரண்டாவது இடத்தையும் பிரிட்டன் இழந்தாகிவிட்டது, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி பெற்றுவரும் பலம் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளியிருக்கிறது.

 

அமெரிக்காவில் ஒரு காலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு காலுமாக இரண்டு தோணியில் பயணித்த பிரிட்டன் தனது தவறை சரியாக அடையாளம் கண்டு கொண்டு இப்போதுதான் விழித்திருக்கிறது.

 

அதை பிரிட்டன் மக்களுக்கு புரிய வைக்க முடியாமல் தவிக்கிறார் பிரதமர் என்பதே உண்மையாகும்.
இதே தவறை பிரிட்டன் முதலாம் உலகப் போர் காலத்திலும் இழைத்திருக்கிறது.

 

அப்போது ஜேர்மனி 36 சிறிய இராட்சியங்களாக பிரிந்திருந்தது, அவற்றை ஒன்றுபடுத்தி சக்தி மிக்க ஜேர்மனியை உருவாக்க இராஜதந்திரி வொன் பிஸ்மார்க் பாடுபட்டார். அத்தருணம் இன்று இருப்பதைப் போல பிரிட்டன் தலையிடா கொள்கையை பயன்படுத்தியது, அதைப் பயன்படுத்தி பிஸ்மார்க் ஜேர்மனியை ஒன்றாக்கியதும், பிரிட்டன் தனது முக்கியத்துவம் பறி போய்விட்டதைக் கண்டு கொண்டு அவசரமாகக் களமிறங்கியது.


அதன் விளைவுதான் இரு பெரும் உலகப் போர்களாகும், ஆகவே அன்றிருந்த அதே நிலைதான் இன்றும் ஏற்பட்டுள்ளதை ஒப்பிட்டு பார்த்தால் பிரிட்டனின் திடீர் அவசரத்தை உணர முடியும்.

 

தான் இதுவரை அடை காத்து வந்தது தனது முட்டையை அல்ல குயிலுடைய முட்டையையே என்று காகம் அறிந்து விழிப்படைவது போன்ற ஒரு பதட்டத்திற்குள் பிரிட்டன் வந்துள்ளது.

 

இதற்குள் ஜேர்மனி விழித்துக் கொண்டு தனக்கு சொந்தமான தற்போது பிரான்சிலும், நியூயோர்க்கிலும் வைக்கப்பட்டிருக்கும் 674 தொன் தங்கத்தை திருப்பி வழங்கும்படி கேட்டுள்ளது. இந்தத் தங்கத்தை விற்பனையில் விட்டு நாணய பெறுமதியை உறுதி செய்ய ஜேர்மனி விரும்புகிறது.

 

வீணான போர்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை சிதைத்து குட்டிச்சுவராக்கிய பிரிட்டனும், அமெரிக்காவும் கணக்கிடாத வகையில் ஜேர்மனி பொருளாதார உறுதியடைந்து இப்போது ஒட்டு மொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார சர்வாதிகாரியாக மாறியிருக்கிறது.

 

என்ன செய்யப் போகிறது பிரிட்டன்…?

 

மிக நெருக்கடியான கால கட்டத்திற்குள் மேகங்கள் கருக்கட்டுகின்றன..

 

இரண்டாவது உலகப் போரில் ரோம் – பேர்ளின் – டோக்கியோ அச்சு இருந்தது போல இப்போது 21ம் நூற்றாண்டு போர்களுக்கான புதிய அச்சு உருவாக ஆரம்பித்துவிட்டது. அந்த அச்சு ஓர் அச்சு அல்ல பல தளங்களில் வடிவமைக்கப்படுகிறது, மூவரும் மூவருக்கும் எதிரிகள் என்ற நிலையில் வாளை தூக்கிக் கொண்டு களமிறங்கினால் என்ன நடக்கும்… 21 ம் நூற்றாண்டு நகர்வு அப்படித்தான் உள்ளது.


வடகொரியாவும், ஈரானும் அணு குண்டு உருவாக்கத்தை எட்டித் தொட்டுவிட்ட நிகழ்வுடன் ஒப்பிட்டால் இப்போது அருவமாக உள்ள அச்சுக்களை மனத்திரையில் தெளிவாகக் காணலாம்.

 

 

அலைகளுக்காக கி.செ.துரை 24.01.2013

 

http://www.alaikal.com/news/?p=121125

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

கமரூனின் Conservative கட்சிக்குள் எதிர்ப்பலை எழும்பியதென்பதை  ஒத்துக் கொள்ள முடியவில்லை. பொதுவாக சிறு சலசலப்பு ஏற்படுவது சகஜம். இதே வாக்கெடுப்பை நடத்தும்படி 2011 இல் பிரித்தானிய நாடாளுமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பில் சுமார் 80 அதிகமான் Conservative எம்பிக்கள் கமரூனுக்கு எதிராகத் திரும்பியிருந்தார்கள். இன்று அந்த எதிர்ப்பாளர்கள் நிலைக்கே கமரூனும்  சென்றுள்ளார்.  

 

Liberal Democratic கட்சியினர் இதற்கு எதிர்ப்பென்றாலும் இன்று ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பவர்கள். அவர்கள் தங்கள் கொள்கைகளில் உறுதுணையாக நின்றதில்லை. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்காக கொள்கையை கைவிட்டவர்கள் என்ற கேட்ட பெயர் உண்டு. முக்கியமாக பல்கலைக் கழக அனுமதிக் கட்டணத்தில் மாணவர்களின் கெட்ட  பெயரை சம்பாத்தித்தவர்கள். இனி வரும் தேர்தல்களில் Liberal Democratic கட்சி, நாலாம் ஐந்தாம் இடத்தைப் பிடிக்கவே நிறையக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

 

எதிர்க் கட்சியாக உள்ள Labour கட்சியும் இந்தப் பொதுசன வாக்கெடுப்பொன்றை தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவிக்கக் கூடிய சாத்தியமே அதிகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.