Jump to content

மரணங்களை நினைவு கூர்தல்


Recommended Posts

[size=4]அர்யுன்,[/size][size=1]

[size=4]இதில் ஒருவரை உடனடியாக தெரிகின்றது. மற்றையவர்கள் யார்? [/size][/size][size=1]

[size=4]இவர்கள் மூவர் மட்டுமா நினைவுகொள்ளப்பட உள்ளார்கள்? [/size][/size]

[size=1]

[size=4]நன்றி. [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]அர்யுன்,[/size][size=1]

[size=4]நேற்றோ இல்லை அதற்கு முதல் நாளோ சில நல்ல கருத்துக்கள் முன்வைத்திருந்த்தீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]அதாவது பழையனவற்றை விட்டு புதிய பாதையில் பயணிக்கவேண்டும் என. அதேவேளை சிலரை 'வியாபாரிகள்' எனவும் முத்திரை குத்தி அவர்கள் ஒதுக்கப்படல்வேண்டும் எனவும் கூறி இருந்தீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]எனவே இவர்களின் நினைவுகூறல் நிகழ்வானது மேலே உங்களால் கூறப்பட்ட கருத்துகளுடன் முரண்படுகின்றதே?[/size][/size]

Link to comment
Share on other sites

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .

ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

Link to comment
Share on other sites

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .

ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

[size=4]சரி இவர்களை நினைவு கூ[/size]ரு[size=4]வதற்கும் புதிய பாதையில் பயணிப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றே வைப்போம். [/size][size=1]

[size=4]இதை யார் ஒழுங்கு செய்வது? இவர்கள் வேறு என்ன ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை செய்துள்ளார்கள்? [/size]

[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:

Link to comment
Share on other sites

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்

[size=4]நீங்கள் எதை வைத்து 'அப்படி செய்யாதே' என எழுதியதாக புரிந்துகொண்டீர்கள்? :D[/size]

[size=4]பொதுவாக அர்யுன் அண்ணா ஒரு சில திரிகளில் 'நாம் பழைய நடைமுறைகள் மறந்து, பழைய ஏமாற்றுகாரர்கள் / வியாபாரிகளை விட்டு' புதிய சிந்தனையில் பயணிக்கவேண்டும் என புரட்சிகரமாக எழுதினார். ஆனால், இந்த திரியில் அதற்கு எதிராக செய்வது போன்று இருந்தது. அதனால் அவரின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன என அறிய சில கேள்விகளை கேட்கலாம் எனவும் அதன் மூலம் எல்லோரும் தெளிவுபடலாம் என்ற எண்ணமும் தான். [/size]

[size=1]

[size=4]மற்றும்படி மாற்றுக்கருத்துக்கள் எமது களத்தினதும் சமூகத்தினதும் பலமே ![/size][/size]

Link to comment
Share on other sites

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

இவருக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:

இவர் புளோட்டில் இருந்தவர்.தனது இயக்கத்தைப் பற்றி தானே விமர்சித்து எழுதின நூல் தான் புதிய பாதை[நுணா அதை இணைத்திருந்தார்].பிறகு இவர் அதிலிருந்து விலகி தீப்பொறி அமைப்பில் இருந்தார்.கிட்டுவுக்கு குண்டு எறிந்தது தீப்பொறி அமைப்பு அதில் இவருக்கும் சம்மந்தம் இருந்ததோ தெரியாது[குண்டு எறிந்ததில்].இவர் யாரால் கொல்லப்பட்டார் என மறந்து போய் விட்டது அநேகமாக அவர‌து இயக்கத்தாலே கொல்லப்பட்டு இருக்கலாம்...எது எப்படி இருந்தாலும் நல்லதொரு எழுத்தாளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

ஈழத்தமிழர் போராட்டவழியில் தமிழருக்கு ஏதுவாக எதைச்செய்திருந்தாலும் அவர்கள் நினைவு கூரப்படவேண்டியவர்களே.

அந்தவகையில் இதை நீங்கள் இணைக்கமுன்

இதுவரை அதை நீங்கள் இங்கு செய்திருக்கின்றீர்களா என்பதை சரி பார்த்திருப்பின் இக்கேள்விகள் இங்கு எழுந்திரா. :( :( :(

Link to comment
Share on other sites

இந்த மூவரின் எழுத்துக்களும் ஈழத் தமிழர்களுக்கு மிக முக்கியமான ஆவணங்கள். இவர்கள் என்றும் நினைவுகூரப்படுவார்கள்

Link to comment
Share on other sites

[size=5]இன்று பத்திரிகையாளர் நிமலராஜனின் மரணத்தை நினைவுகூருவோம்[/size]

[size=4]பி. பி. சி பத்திரிகையாளரின் குடும்பம், கொலை நடந்து [size=5]12 [/size]வருடமாகியும் ஸ்ரீ லங்கா காவல் துறையினரால் இன்னும் ஒருவரையும் கைது செய்யமுடியவில்லை.

மயில்வாகனம் நிமலராஜன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் [size=6]19, ஒக்டோபர், 2000 [/size]அன்று அவரது யாழ் வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார். [/size]

[size=4]மனித உரிமை ஆர்வலர்கள் இந்த படுகொலை ஸ்ரீ லங்காவுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நிமலராஜனின் தந்தை ஜி. மயில்வாகனம் கனடாவில் இருந்து, இன்னும் யாழில் குற்றவாளிகளின் ஆட்சியே கொலோச்சுக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

"இந்த படுகொலையை செய்தவர்கள் இப்போது அரசில் இருக்கிறார்கள். அதனால் அரசும் ஒருத்தரையும் கண்டுபிடிக்காது" என்று கூறினார்.

போரால் சீரழிந்த யாழில் இரண்டாயிரமாம் ஆண்டில் சுதந்திரமான பத்திரிகையாளராக இருந்தவர்களில் ஒருவர் நிமலராஜன். அவர் போர் சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி எழுதி பிரபலமானவர். [/size]

[size=4]இரண்டாயிரம் ஆண்டில் யாழில் பதட்ட நிலைமை நிலவினாலும் அவர் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் பற்றியும் அரசியல் குறைபாடுகள் பற்றியும் எழுதினார்.[/size]

Link to comment
Share on other sites

நேற்று இந்த மூவரினதும் நினைவு கூரல் நிகழ்விற்கு போயிருந்தேன் .அங்கு உரையாற்றிய மூவரும் (ஜேம்ஸ் ,சுபமங்களா,சுல்பிகா) நிறைய விடயங்களை சொன்னார்கள் .ஜேம்ஸ் ராஜனியின் வாழ்க்கையையும் அவர் மரணத்தையும் மிக விபரமாக பேசினார் .இவரும் யாழ் பல்கலை கழக மாணவர் ,பின்னர் பிரபல கணித ஆசிரியர் .தன்னிடம் பயின்ற தர்மேந்திராவும் இவர் கொலையில் உளவு பார்த்ததாக சொன்னார் .

சுபமங்களா இவர் பேராசிரியர் கைலாசபதியின் மகள் .இப்போ அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் அண்மையில் கவுன்சிலராக தெரிவுசெய்ய பட்டவர் .இவர் தான் ,செல்வி ,சிவரமணி ,ரஜனி எல்லோருமே யாழ் பல்கலை கழக பெண்கள் அமைப்பில் இருந்தது ,இலக்கியம் ,நாடகம் ,அரசியல் இவற்றில் இவர்களது பங்கு அதற்கு மேலாக மனித உரிமையில் இவர்கள் கொண்டிருந்த அக்கறை பற்றி மிக தெளிவாக பேசினார் .பூரணி பெண்கள் அமைப்பு அதன் செயற்பாடுகள் பற்றி எல்லாம் விபரமாக சொன்னார்.

கோவிந்தனின் புதியதோர் உலகத்தின் இலக்கிய தரத்தை பலரும் மெச்சி அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கவேண்டிய தேவையையும் கூறினார்கள்.

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .

நானும் சில குறிப்புகள் சொன்னேன் குறிப்பாக ரஜனி பற்றி .

நினைவு கூரலுக்கு போனதில் மிக திருப்தியாக வீடு திரும்பினேன் .

Link to comment
Share on other sites

[size=5]இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

c2(392).jpg

[size=4]இவர்களுக்கு யாரும் உதவுவார்களா? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

c2(392).jpg

[size=4]இவர்களுக்கு யாரும் உதவுவார்களா? [/size]

திருப்பி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

எங்களுக்கு கேள்வி கேட்கவும்

பிரசங்கம் நடாத்தவும் மட்டும்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

[size=4]எந்த இலக்கியவாதியும்; மனித உரிமை ஆர்வலரும்; இனப்பற்று உள்ளவனவும்; நிகழ்காலந்தை உணர்ந்து பழைய வரலாற்றை கற்று எதிர்கால திட்டங்களை போட்டு செயல்படுவதே சமுதாய தேவை.[/size]

[size=4]பழையதை மனத்திருப்திக்காக மட்டுமே அலசுவதில் எனதப்பயனும் இல்லை.[/size]

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

[size=4]நான் அந்த இணைப்பை இணைத்தமைக்கு உங்களின் இந்த கூற்றே காரணம்: [/size]

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .

[size=4]இன்று அதே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நாம் என்ன செய்தோம்?, என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவானது.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

யாழ் பல்கலை கழகத்தில் அன்று அதை புடிங்கினோம் எதை புடிங்கினோம் என்று எல்லோரும் ஒன்று கூடி பினாத்தினோம் என்று எழுதினீர்கள்.

இதுக்குள்ள மனித உரிமை பற்றியும் அக்கறையுடன் இருந்தார்களாம்,,,,,,,,,,,,,,

இப்போதைய யாழ் பல்கலை கழக நிலை இப்படி இருக்கிறது.

இதற்கு இந்த மனித உரிமை ஆவலர்களால் எதையாவது புடுங்க முடியாதா?

என்று கேட்டால்.............

ஆடு மாதிரி தெரிந்த அதே இடம்

மாடு மாதிரி தெரியுது...

இதில எது ஆடு எது மாடு?

மனித உரிமை என்ற போர்வைக்குள் ஒரு எருமை மாட்டு கூட்டம் படுத்திருப்பதாகவே பார்பவர்களுக்கு தெரிகிறது.

Link to comment
Share on other sites

அரசியல் என்பது ஸ்தாபன மயப்படித்தி ஒரு ஒழுங்குமுறையில் செய்யப் பட வேண்டிய ஒரு விடயம் ,அதில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் கூட தாம் என்ன செய்கின்றோம் என்று சந்தியில் வந்து கூவ மாட்டர்கள் .

எமது நாடும் அதன் அரசியல் பிரச்சனைகளும் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ,அதன் தீர்விற்காக பல வழிகளில் பல அமைப்புகள் எதோ தம்மால் ஆனதை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் .சில வெறும் படம் காட்டுபவர்கள் தவிர .

நாம் என்ன செய்தோம் ,செய்கின்றோம் என்று கேள்விகளை மற்றவர்களை பார்த்து கேட்பதை விட நாம் செய்யும் செயலில் உண்மையாக இருந்தால் அதுவே காணும்.

இன்று அங்கு நடக்கும் பல்கலை கழக மாணவர்கள் ஊர்வலத்திற்கு நாம் இங்கிருந்து என்ன செய்யலாம்.அவ்வப்போது அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது அதை அவர்கள் தான் முகம் கொடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .

எமக்கு தேவை இலங்கையில் இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு வர ஆன முயற்சிகளை எடுப்பதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது ஸ்தாபன மயப்படித்தி ஒரு ஒழுங்குமுறையில் செய்யப் பட வேண்டிய ஒரு விடயம் ,அதில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் கூட தாம் என்ன செய்கின்றோம் என்று சந்தியில் வந்து கூவ மாட்டர்கள் .

இது முன்பு நாங்கள் எழுதுறது உங்களுக்கு புரியவில்லை. தக்க தருணத்தில் உங்களுக்கு கொப்பியடிக்க ஆவது உதவி இருக்கிறது.

எமது நாடும் அதன் அரசியல் பிரச்சனைகளும் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ,அதன் தீர்விற்காக பல வழிகளில் பல அமைப்புகள் எதோ தம்மால் ஆனதை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

கருணாவும் டக்கிளசும் எமது நாடுக்காகத்தானாம் கஷ்ட படுகிறார்கள். என்று மேடைகளில் பேசுகிறார்கள்.

சில வெறும் படம் காட்டுபவர்கள் தவிர .

நாம் என்ன செய்தோம் ,செய்கின்றோம் என்று கேள்விகளை மற்றவர்களை பார்த்து கேட்பதை விட நாம் செய்யும் செயலில் உண்மையாக இருந்தால் அதுவே காணும்.

இந்த விடயத்தை நேற்று நினைவு கூற வந்தவர்களுக்கு எடுத்து சொன்னீர்களா?

இன்று அங்கு நடக்கும் பல்கலை கழக மாணவர்கள் ஊர்வலத்திற்கு நாம் இங்கிருந்து என்ன செய்யலாம்.

விட்டா உலக அரசியலில் நான்தான் பல மாற்றங்களை அவப்போது தேவைக்கு ஏற்றால்போல் செய்து வருகிறேன் என்று எழுதுவீர்கள்.

இது என்ன சின்ன பிள்ள தனமாக இருக்கு?

அரசபடைகளால் அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை

இங்கு உள்ள அரசியல் வாதிகள் ...... பலகலை கழக மாணவர்கள் ஆசிரியைர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மனித உரிமையில் அவர்கள் ஊறி வளந்தவர்களாமே? (நீங்கள் எழுதிதானே நாங்களே வாசிச்சோம்) மனித உரிமை அமைப்புக்களின் ஒரு நேரடி கண்காணிப்பை அங்கே நிலை நிறுத்த முயற்சிகள் செய்யலாம்.

அங்கே அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வியை இடை நிறுத்துகிறார்கள் அவர்களுக்கு நேரடியாக உதவலாம். (இறந்து போனவர்களை எமக்கு தெரியும் ஆதலால் எங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று செய்யும் விளம்பரத்திற்கு செலவிடுவதில் கொஞ்சத்தை அதற்கு பயன்படுத்தலாம்)

அவ்வப்போது அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது அதை அவர்கள் தான் முகம் கொடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .

ஆகா !

அற்புதம் பின்னிடிங்கள்!

பிரச்சனை வருபவர்களே அதை பார்த்துகொள்வார்கள்.

புலிகளால் பிரச்சனைகளை எதிர்கொண்ட அங்கிருக்கும் மக்களே அதை பார்ப்பார்கள் என்று புலிவாந்தி எடுக்கும் போது தெரியவில்லை. மக்களுக்காகவும் மானவர்களுக்காவும் கடந்த முப்பது வருடமாக புல்லு புடுங்குகிறோம் என்று ஒரு வாந்தியை எடுப்பீர்கள். இப்போ வயலை காட்டி அதில் இருக்கும் புல்லையும் காட்டி ஓரணு இரண்டை புடுங்கலாமே? என்றால் அதை அவர்களே செய்யவேண்டும் என்கிறீர்கள்.

எமக்கு தேவை இலங்கையில் இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு வர ஆன முயற்சிகளை எடுப்பதே .

இனி வாறமாதம் ஊர்மிளா அக்காவின் நினைவுநாள் வருது.

டொரோண்டோ ...

மொன்றியல்..

நியூ யோர்கிலும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்து. புலிகளால்தான் அவர் கொல்லபட்டார் என்று புளிச்சுப்போன அதே வாந்தியையும் எடுத்துவிட்டு அசத்திவிடுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.