Jump to content

சைவ உணவு வகைகள்.


Recommended Posts

மாமிசம் சாப்பிடாதவர்கள் பிராமணர்கள் என்றில்லைத்தானே. இங்கே வெள்ளையர்கள் பலர் இப்போ சைவமாக மாறிக் கொண்டு வருவதை காணக்கூடியதாய் இருக்கு.

ஆசையிருந்தும் மனக்கட்டுபாட்டுடன் அதை விடுவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன?

(யாழ்களத்தின் சமையல்பகுதியிலேயே தெரிகிறதே)

அப்படி ஒருவேளை சைவமாக மாறினால் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

... :lol:

கறுப்பியின் (கடுப்பேத்தும் திரியில் கேட்டுக் கொண்டது போல) வேண்டுகோளுக்கு இணங்க, இந்தத்திரியில் சைவ உணவு வகைகளை மட்டும் தமிழில் தேடி எடுத்து இணைக்கக்கவும் அத்துடன் நேரம் கிடைப்பின் புதிய முறைகளையும் அறியத் தர முடிவு எடுத்துள்ளேன். தயவு செய்து அனைவரும் இணைத்து கொள்ளவும்- நன்றி :lol:

கறுப்பி இந்தாங்கோ, பிரவுன் பிரட் உப்புமா மைக்கிறோவேவில் செய்யும் முறைய இந்த ஆன்டி சொல்லி காட்டி இருக்கிறா. :lol:

பிரவுன் பிரட் உப்புமா

http://www.youtube.com/watch?v=aHokrVq1PW4

http://www.youtube.com/watch?v=vHuSxf3_6PY&NR=1

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

இடியாப்ப பிரியாணி

இரண்டு பேருக்கு அளவாக

தேவையான பொருட்கள்

இடியாப்பம் 12

உருளைக் கிழங்கு – 1

கரட் -1

லீக்ஸ் - 1

கோவா (ஊயடியபந)– ¼ துண்டு

வெங்காயம் - 1

கஜீ -10

பிளம்ஸ் சிறிதளவு

நெய் அல்லது பட்டர்- 4 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள், ஏலக்காய் தூள்- சிறிதளவு

உப்பு தேவைக்கு ஏற்ப

dinners.jpg

செய்முறை

கரட்டை துருவி வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கு, லீக்ஸ், கோவா, வெங்காயம் ஆகியவற்றை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

இடியாப்பத்தை உதிர்த்து வையுங்கள்.

பாத்திரத்தில் நெய் விட்டு கிழங்கு வதங்கிய பின், வெங்காயம் போட்டு அவிந்த நிறம் வரும் வரை வதக்குங்கள். கஜீ, பிளம்ஸ் போட்டு வறுத்து, கரட், லீக்ஸ், கோவா சேர்த்து 2 நிமிடங்கள் பிரட்டிக் கொள்ளுங்கள்.

மிளகு தூள் ஏலத்தூள் உப்புப் போட்டு உதிர்த்த இடியப்பம் போட்டுக் கிளறி எடுத்து சேவிங் பிளேட்டில் போட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

(இத்துடன் பட்டாணிக்கறி, சோயாக்கறி, கத்தரிக்காய்ப் பிரட்டல், கிழங்கு மசாலா, அச்சாறு, சலட், கட்லற் அல்லது வடை வைத்துப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

சாப்பாட்டுக்குப் பின் டெசேட்டும் பரிமாறுங்கள்.)

http://sinnutasty.blogspot.com/2008/08/blog-post_26.html

Link to comment
Share on other sites

தக்காளி சாதம்

தேவையானவை

* அரிசி - 150 கிராம்

* வெங்காயம் - 100 கிராம்

* தக்காளி - 250 கிராம்

* பூண்டு - 50 கிராம்

* பச்சை மிளகாய் - 3

* பச்சை பட்டாணி - 50 கிராம்

* இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

* பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1

* சோம்பு - 1/2 தேக்கரண்டி

* தேங்காய் - 2 தேக்கரண்டி

* காய்ந்த மிளகாய் - 3

* தயிர் - 3 தேக்கரண்டி

* எண்ணெய் / நெய் - 50 ml

* உப்பு - தேவையான அளவு

* புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

* தேங்காய், சோம்பு காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒன்றாக அரைக்கவும்.

* நெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை கருவேப்பில்லை போடவும்.

* பொரிந்ததும் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

* தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதிக்கி அரைத்த விழுது சேர்த்து மேலும் 5 நிமிடம் வரை வதக்கவும்.

* நறுக்கிய கொத்தமல்லி புதினா பச்சை பட்டாணி மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து 5 நிமிடம் வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.

* சுவையான தக்காளி சாதம் ரெடி.

http://www.arusuvai.com/tamil/node/15611

Link to comment
Share on other sites

புளிக்குளம்பு

pulikulampu.jpg

தேவையானப்பொருட்கள்:

புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு

தயிர் – 1 கப்

சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வெண்டைக்காய் – 4 அல்லது 5

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் – 5 முதல் 6 வரை

உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் – 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். (கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்). அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு: இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும்

http://barthee.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி

'கறுப்பி' யை பெண் என்று குட்டியில் இருந்து கனக்க பேர் நம்பிக்கொண்டு இருக்கினம் என்று மட்டும் விளங்குது.... :lol:

Link to comment
Share on other sites

சுஜி, நுணா, நிழலிக்கு நன்றிகள்.

...

'கறுப்பி' யை பெண் என்று குட்டியில் இருந்து கனக்க பேர் நம்பிக்கொண்டு இருக்கினம் என்று மட்டும் விளங்குது.... :lol:

நிழலி மன்னிக்கவும்!!

கறுப்பி அந்த முகம் தெரியாத உறவு 'கடுப்பேற்றுவது எப்படி' என்ற திரியில் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தி இருப்பதால், (அடிக்கடி சமையலறைப் பக்கம் போய் நானே எனது சாப்படுக்களை செய்வதால், எதோ கொஞ்சம் சமையல் பற்றி அறிந்து இருக்கிறேன். அறிய வேணும் என்ற ஆர்வமும் இருக்கிறது.) மற்றவருக்கு சாப்பாட்டை செய்தது குடுப்பதை விட, அதை எப்படி செய்யலாம் என்று செய்முறையச் சொன்னால் அவர்கள் செய்தது பார்த்து அந்த முறை பிடித்திருப்பின் அவர்கள் கடைப் பிடிப்பார்களே? எனக்குத் தெரிந்த ஒரு சில குறிப்புக்களை தேவையானவர்களுக்குப் பகிர்வது நல்லெண்ணம் என்றே நினைக்கிறன்.

(இதை விட்டு, கறுப்பி ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அதைத் தெரிந்து கொள்ள நான் முயற்சி எடுத்ததில்லை. எடுக்கப் போவதும் இல்லை- யாழில் ஒவ்வொருவரும் எழுதும் கருத்துக்களில் இருந்து ஓரளவுக்கு அவர்கள் யார் என்பதை விளங்கிக் கொள்ளும் தன்மை இருக்கு. கறுப்பி யார் என்று எனக்கு எப்போதோ தெரியும் :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நல்ல தலைப்பு குட்டி,

:lol:

விரதம் பிடிக்கின்ற நாட்களில் இந்தப் பக்கம் நிச்சயம் எட்டிப் பார்க்க வேணும்.

நாம் வீட்டில் செய்யும் சுகமான வாழைக்காய் தோல் சம்பல்.

best_green_bananas.jpg

வாழைக்காய் தோல் சம்பல்.

தேவையான பொருட்கள்;

மூன்று கறி வாழைக்காயின் தோல்.

சின்ன வெங்காயம் 3.

பச்சை மிளகாய் 3.

உப்பு சுவைக்கேற்ப.

தேசிக்காய் 1

செய்முறை;

வாழைக்காய் தோலை ஆவியில் (Steemer) அவிக்கவும்.

(அல்லது சிறிய பாத்திரத்தில் கொஞ்ச தண்ணீர் விட்டும் அவிக்கலாம்.)

அவிந்த வாழைத்தோலை சிறிய துண்டுகளாக வெட்டி.... ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதனுடன் சிறிதாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கிளறிய பின்......

உப்பு, புளி விட்டு...... சோத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளான் குருமா

MASHROOM.jpg

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கசகசா - 1/4 தேக்கரண்டி

தேங்காய் - 1/4 மூடி

மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பட்டை - 3

கிராம்பு - 3

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - 1 கொத்து

செய்முறை:

காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக சிறிது நேரம் அடுப்பை மெல்லிய தீயில் எரியவிட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லி தழை சேர்க்க வேண்டும்.

நன்றி கீற்று நளன்

இது தோழர் விஜிக்கு... Unknown-8.gif

Link to comment
Share on other sites

.

நல்ல தலைப்பு குட்டி,

:blink:

விரதம் பிடிக்கின்ற நாட்களில் இந்தப் பக்கம் நிச்சயம் எட்டிப் பார்க்க வேணும்.

நாம் வீட்டில் செய்யும் சுகமான வாழைக்காய் தோல் சம்பல்.

best_green_bananas.jpg

வாழைக்காய் தோல் சம்பல்.

...

உங்கள் கருத்துக்கு நன்றி சிறி அண்ண!

வாழைக்காய்ப் பொரியல் சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் தோலில் சம்பல் கேள்விப் பட்டதே இல்லை சிறி அண்ணா. அறியத் தந்தமைக்கு நன்றி :lol:

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி சிறி அண்ண!

வாழைக்காய்ப் பொரியல் சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் தோலில் சம்பல் கேள்விப் பட்டதே இல்லை சிறி அண்ணா. அறியத் தந்தமைக்கு நன்றி :lol:

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :blink:

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும்.

சிறி உங்கள் கவலை எனக்குப் புரியுது! இந்தத் தகவல் ரொம்ப முக்கியமானது! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அசைவத்தை விட சைவ உணவுகளே அதிகம் பிடிக்கும்.

இணைப்பிற்கு நன்றி குட்டி,சிறி அண்ணா.புரட்சி அண்ணா

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்காக இலகு முறையில் செய்யக் கூடிய அல்வா...கறுப்பி உங்கள் மனைவியிடம் செய்ய சொல்லி செய்து சாப்பிடவும்;

அன்னாசி அல்வா

இப்ப இங்கு அன்னாசி காலமாதலால் நான் அன்னாசியில் செய்து பார்த்தேன்...நீங்கள் விரும்பினால் மாம்பழத்திலும் செய்யலாம்.

செய்யத் தேவையான பொருட்கள்;

ஓரளவு நன்கு பழுத்த அன்னாசிப்பழம்

பால்

சீனி

ஏலக்காய்

வனிலா ஏதென்ஸ்

நெய் அல்லது பட்டர்

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் அன்னாசியை தோல் நீக்கி அளவான துண்டுகளாக வெட்டவும்.

அளவான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை சூடாக்கவும்[நீலக் கலர் பாலை பாவிக்கவும்.]

பாலை அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்...பால் கொஞ்சம் திரண்டு வரும் போது சீனிப் போட்டு கிளறவும்.

கொஞ்சம் பதத்திற்கு வந்ததும் அன்னாசியைப் போட்டு விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்[அன்னாசியின் நடுத்தண்டைப் பாவிக்க வேண்டாம்]

பின்னர் இறக்கும் தருவாயில் வனிலா எதென்ஸ்,அரைத்த ஏலக்காய்,நெய் விட்டு இறக்கவும்.

இறக்கும் முன் ஒரு டிரேயில் நெய் அல்லது பட்டர் தட‌வி வைக்கவும்.

விரும்பினால் கயூ,முந்திரி தூவலாம்.

அளவான துண்டுகளாக வெட்டி என்னை நினைத்துக் கொண்டே சாப்பிட‌வும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும்.

சிறி உங்கள் கவலை எனக்குப் புரியுது! இந்தத் தகவல் ரொம்ப முக்கியமானது! :blink:

சுவி, சும்மா எறியிற வாழைத்தோலிலை சம்பல் செய்ய வெளிக்கிட்டு...... புதுச்சட்டியை எறிய வேண்டி வரப்படாது எல்லோ...... :lol:

இந்த தகவலை சொல்லாமல்..... சம்பல் செய்யிற ஆக்களின்ரை சட்டியை எறிய வைப்பம் எண்டும்...... யோசிச்சனான். :D

யாழ் உறவுகளும் பாவம் எல்லோ.... என்று நினைத்து, மனதை மாற்றி விட்டேன். :D

எனக்கு அசைவத்தை விட சைவ உணவுகளே அதிகம் பிடிக்கும்.

இணைப்பிற்கு நன்றி குட்டி,சிறி அண்ணா.புரட்சி அண்ணா

வாத்தியார்

*********

வாத்தியார், உண்மையில் வெய்யில் காலங்களில்...... உறைப்பு குறைந்த மரக்கறி உணவுகளே ஆரோக்கியமானது.

அத்துடன் இந்தக் காலங்களில்..... பலவகையான மரக்கறி வகைகள், குளிர் காலத்தை விட அதிகமாக கிடைக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :blink:

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :lol:

சிறி இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருகிறேன்.உங்கள் மனைவி உங்களை பேய்காட்டிப்போட்டா :D

Link to comment
Share on other sites

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

நானும்தான் சிறி அண்ணை முதலே சாப்பிட்டு இருக்கன் எங்கள் வீட்டில் அம்மா பண்ணுவார்கள்... :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலாக்காய் உருளை கிழங்கு சொதி..

Jack_Fruit_1_B.JPG

potato(3).jpg

தேவையான பொருட்கள்

பிலாக்காய் சிறியது - 1

உருளைகிழங்கு - 2

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

முழு பூண்டு - 1

அரைப்பதற்கு

தேங்காய் - 1 மூடி

பச்சை மிளகாய் - 15

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகச- 1சிட்டிகை

பூண்டு- 5பல்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய்- 2 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

சோம்பு- 1 டீஸ்பூன்

பட்டை - 1

கருவேப்பிள்ளை- சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

பிலாக்காயை கையில் எண்ணைய் தடவி கொண்டு இரண்டாக நறுக்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போடவும். உருளை கிழங்கையும் அந்த அளவில் நறுக்கி கொள்ளவும். உப்பு போட்டு இரண்டையும் தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும்.. வெங்காயம் தக்காளி .கசகச, சோம்பு .பூண்டு பல், பச்சை மிளகாய்,உப்பு.ஆகியவற்றை நைசாக அரைக்கவும் அடுப்பில் வாணலை வைத்து 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம் .. தக்காளி ... பூண்டு போட்டு .1 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வதக்கவும் நன்கு வதங்கிய பின்பு வேகவைத்துள்ள பிலக்காயையும் உருளைகிழங்கையும் போட்டு.. அரைத்த விழுதையும் கூட சேர்த்து கொத்திக்கவிடவும் குருமா மாதிரி வந்த உடன் இறக்கவும் ... கெட்டியாக கொழ கொழப்பாக சேர்ந்தாற்போல் இருக்கவேண்டும்.

நன்றி:செட்டி நாட்டு சமையல் குறிப்புகள்...

ஆசிரியர்:ராஜஸ்வரி..

இது பிலாக்காய் பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு.. Unknown-8.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற ஞாயிறு லூர்து சர்ச்சுக்கு போனோம். மதியம் அங்குள்ள காட்டில் அடுப்பு மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டோம். சமைத்த பாத்திரங்களை தேய்த்துக் கழுவி முடியவில்லை. அதுதான் உங்கள் குறிப்பை பார்த்ததும் சிரிப்பு வந்தது. :lol:

அது சரி தோலில் சம்பல் வைத்தால் உள்ளே இருக்கும் காயை என்ன செய்வது என ஏன் யாரும் யோசிக்கவில்லை. :blink:

Link to comment
Share on other sites

கறுப்பிக்காக இலகு முறையில் செய்யக் கூடிய அல்வா

என்ன கறுப்பிக்கே அல்வாவா?? :blink::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் சாதம்..

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்

தேங்காய்த்துருவல் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 4

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 10

தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.ஒரு தட்டில் சாதத்தைக் கொட்டி, சிறிது தேங்காய் எண்ணையை அதன் மேல் விட்டு பரப்பி விடவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.

இது சகோதரிக்கு.. :blink:

நன்றி: சமையல் அறை.காம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாராவது அச்சாறு செய்முறை போட்டு விடவும். சைவம். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவு வகைகள் என்ற பகுதியை ஆரம்பித்த குட்டிக்கு கோடி நன்றிகள்.

Link to comment
Share on other sites

தயவு செய்து யாராவது அச்சாறு செய்முறை போட்டு விடவும். சைவம். :D

அச்சாறு

IMG_0211.JPG

தேவையானவை

* பச்சைமிளகாய் - 250 கிராம்

* வெங்காயம் - 250 கிராம்

* பப்பாசிக்காய் - 125 கிராம்

* போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்

* கேரட் - 125 கிராம்

* வினிகர் - 3 கப்

* செத்தல் மிளகாய் - 5

* கடுகு - ஒரு மேசைக்கரண்டி

* உள்ளி - 5 பல்

* இஞ்சி - 2 இன்ச் நீளத்துண்டு ஒன்று

* உப்புத்தூள் - தேவையான அளவிற்கு

* மிளகுத்தூள் - தேவையான அளவிற்கு

* பெருங்காயம் - ஒரு துண்டு

செய்முறை

* கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி வினிகர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.

* அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது போல அரைக்கவும்.

* வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3") துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒருபாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின் தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின் காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி வைக்கவும்.

* பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து அதில் அரை கப் வினிகரை ஊற்றி அதனுடன் விதை நீக்கிய பச்சை மிளகாயை போட்டு அவிய விடவும்.

* பச்சைமிளகாய் அவிந்து வினிகர் வற்றியதும் அதிலிருக்கும் பச்சைமிளகாயை வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* பின்பு அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி வெங்காயத்தை போட்டு அவித்து வினிகர்வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி கேரட்டை போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில் விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

* கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை போட்டு நன்றாக கலக்கவும்.

* பின்பு அவித்த கேரட்டை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.

* பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

* அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி அதை ஆற விடவும்.

* அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.

* அதன் பின்பு அச்சாறு தயராகிவிடும் அதை தேவையான நேரங்களில் எடுத்து பரிமாறலாம்.

http://www.arusuvai.com/tamil/node/11457

சைவ உணவு வகைகள் என்ற பகுதியை ஆரம்பித்த குட்டிக்கு கோடி நன்றிகள்.

இதுக்ககெல்லமா சின்னப் புள்ளத் தனமா கோடி நன்றிகள் சொல்லுறது? :) பிரயோசனப் பட்டால் சந்தோசம் கறுப்பி :lol:

Link to comment
Share on other sites

அது சரி தோலில் சம்பல் வைத்தால் உள்ளே இருக்கும் காயை என்ன செய்வது என ஏன் யாரும் யோசிக்கவில்லை. :)

வாழைக்காய் உள்ளே இருப்பதை உப்பு தூள் பிரட்டி பெரித்து சோறுடன் சாப்பிடால் றொம்ப நல்லா இருக்கும்... வட்டம் வட்டமாக கட் பண்ணி விட்டு பண்ணினால் பார்க்க வடிவாகவும் இருக்கும்... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.