Jump to content

சைவ உணவு வகைகள்.


Recommended Posts

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :)

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :D

:(:lol:

தகவலுக்கு நன்றி சிறி அண்ணா :(

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

கோவைக்காய் பெரியல்...

கோவைக்காயை 4 5 துண்டுகளாக நீளம் நீளமாக வெட்டி விட்டு உப்பு போட்டு தூள் கொஞ்சமாக போட்டு ஊற 10 நிமிசம் வைத்து விட்டு பெரித்தால் நல்லா இருக்கும்.. பிட்டு சோறுடன் சாப்பிடலாம்...உங்களுக்கு விரும்பினால் தூள் போடுங்கள்... இல்லையென்றால் கூட ஒகே.... நான் தூள் போட்டுத்தான் பண்ணுவன்...

koovaikkaai/tindora masala

Ingredients

Kovakkai- 3 cups (cut lengthwise )

Onions- 1 large chopped finely

Green chilli-1 chopped finely

Ginger garlic paste- 2 tsp

Coriander powder- 2 tsp

Chilli powder – 1 tsp or acc to taste

Turmeric powder- ¼ tsp

Cloves- 3 or 4

Salt to taste

Oil- 4 to 5 tsp

Coriander leaves- 2 tsp chopped finely

For seasoning

Mustard seeds- ¼ tsp

Jeera- ¼ tsp

Curry leaves - few

Peanuts- 3 tsp

Method

Heat oil in a pan add the seasoning items. Add the chopped onion and green chilli and fry till the onions become transparent. Then add the ginger garlic paste and fry till the raw smell disappears. Now add the kovakkai pieces and fry for some time. Add the turmeric, coriander and chilli powders. Crush or powder the cloves and add it to the masala. Add little water , simmer the flame and close it with a lid. Cook till the vegetable becomes tender and oil seperates. Garnish with coriander leaves and serve hot with rice.

http://premascookbook.blogspot.com/2006/09/kovakkaitindora-masala.html

Link to comment
Share on other sites

வல்லாரை & கரட் சம்பல்

467868061_95XKP-500x500.jpgcarrot+ingre.jpg

தேவையானவை

வல்லாரை - 1 பிடி

கரட் - 3

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 3

தயிர் 1 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள்- தேவையான அளவு

கருவேப்பிலை- 10

தேசிக்காய்ப் புளி- தேவையான அளவு

செய்முறை

வல்லாரைக்கீரையை சுத்தம் செய்து மிக மெல்லிதாக வெட்டவும் .

கரட்டை துருவி எடுக்கவும் .

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை, கருவேப்பிலையை மிக்கச் சிறிதாக வெட்டவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 1மேசைக் கரண்டி தயிரையும், தேவைக்கு ஏற்ப உப்பு, தேசிக்காய்ப் புளி, மிளகு தூள் கலந்தது பரிமாறலாம்.

(விருப்பமானவகள் சிறிதளவு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருகிறேன்.உங்கள் மனைவி உங்களை பேய்காட்டிப்போட்டா :(

நானும்தான் சிறி அண்ணை முதலே சாப்பிட்டு இருக்கன் எங்கள் வீட்டில் அம்மா பண்ணுவார்கள்... :(

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:(:lol:

.

பிலாக்காய் உருளை கிழங்கு சொதி..

---------

---------

இது பிலாக்காய் பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு.. Unknown-8.gif

பிலாக்காய் சொதிக்கு நன்றி புரட்சி. :):D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிசமாகவே கோடி நன்றி குட்டி! நான் பல நாட்களாக தேடினேன் கிடைக்க வில்லை. :)

Link to comment
Share on other sites

பாகற்காய் சம்பல்?????

சிறிய பாகற்காய் - ஒன்று (வெள்ளை பாகற்காயில் கசப்பு குறைவு)

வெள்ளரிக்காய் (Cucumber) - 1/4 துண்டு

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 1

உள்ளி - 1 பல்

தயிர் - 1/2 கப்

தேசிக்காய் - 1

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

- உள்ளி, Cucumber, பாகற்காய் ஆகியவற்றை Gratter இல் அரைக்கவும்.

- பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்த கலவையுடன் தயிரை சேர்த்து, உங்கள் தேவைக்கேற்ப புளியை பிழிந்து விடவும்.

இதனை எப்படி கூறுவதென்று தெரியவில்லை. அதுதான் கேள்விகுறி அடயாளமிட்டுள்ளேன்.

இதில் உள்ள பொருட்களின் அளவுகளை உங்கள் ருசிக்கேற்ப மாற்றிகொள்ளலாம்.

*** நீரிழிவு நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பாவற்காய் உண்ண வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாவற்காய் சம்பல் செய்யும் முறை;

பாவற்காயை நடுவால் இரு துண்டுகளாக வெட்டி அளவான நீர் விட்டு அவிய விடவும்[அதிகளவு நீர் விட்டால் சத்து வீணாகிப் போய் விடும்]

அவிந்த பின் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிய பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு,தேசிக்காய் புளி விட்ட பின் சாப்பிடவும்...விரும்பினால் தக்காளி பழம் சேர்க்கவும்...தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:lol::(

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

Link to comment
Share on other sites

தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

உண்மை ரதி. பாவர்ற்காய் நீரிழிவு நோய்க்கு நல்லது. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. ஆனால் நீரிழிவு நோய்க்கு மருந்து எடுக்கும் போது மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது என இணையத்தில் வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

விசுகு,, உங்கடை உள் குத்து எல்லாம் விளங்குது........ :(

உங்களின் நகைச்சுவையான கருத்தை ரசித்தேன். :D:lol::D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய சட்னி..இது இட்லி தோசை பிரியர்களுக்கு... :):lol:

idly-3.jpg

Plantain%20Dosa2.jpg

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 3

காய்ந்த மிளகாய் - 15

தக்காளி - 2

புளி - சிறிதளவு

மஞ்சள் தூள் - ஸ்பூன்

பூண்டு- 1

சோம்பு - 1 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

எண்ணை - சிறிதளவு

கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளி பூண்டு(தோலுரித்தது) ஆகிய மூன்றையும் அரிந்து கொள்ளவும்.. புளி உப்பு காய்ந்த மிளகாய் சோம்பு ஆகிய நான்கையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.. பின்னர் அடுப்பில் வாணலை வைத்து எண்ணைய் விட்டு காய்ந்த வுடன் தாளிக்கும் சாமான்களை போட்டு தாளித்து..நறுக்கி வைத்துள்ளதை போட்டு வதக்கவும்.. பின்னர் சிறிது மஞ்சள் தூளையும் போடவும்.. பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. சுவையான வெங்காய சட்னி தயார்.. இது இட்லி ... தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்...

நன்றி.. செட்டிநாட்டு சமையல் குறிப்புகள் ஆசிரியர் ராஜேஸ்வரி

இது இட்லி தோசை பிரியர்களுக்கு...

s_grands-31%5B1%5D.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

உங்கள் வெங்காய சட்னி குறிப்பை, இன்று காலை தான் பார்த்தேன் புரட்சி. :lol:

நான் வெங்காய சட்னி பற்றி கேள்விப்பட்டுள்ளேன்..... ஆனால் செய்முறை தான் தெரியாமல் இருந்தது.cooking-emoticon.gif

சட்னிக்கு தேவையான பொருட்களில்..... சோம்பை தவிர மிச்சம் எல்லாம் வீட்டில் இருக்குது.

உங்கள் குறிப்புக்கு மிக நன்றி thumb_smiley-vault-signs-096.gif புரட்சி. அடுத்த முறை தோசை, அல்லது இட்டலி செய்யும் போது வெங்காய சட்னி தான். smiley_cooking.gif

.

Link to comment
Share on other sites

.

மிக மிக முக்கியமான திரி. எல்லாருக்கும் நன்றி. :lol:

புளிக்குழம்பு தூக்கலோ தூக்கல்.

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சாறு செய்தோம் மிக நன்றாக வந்தது. நன்றி! :lol:

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

சாப்பிட்டுள்ளேன். சுவையே தனிதான்.நன்றி ஈசன்.

Link to comment
Share on other sites

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

Vegetable Biriyani1 கிலோ அரிசி, ஒரு தேங்காய், 250 கிராம் வெங்காயம், 15 பச்சை மிளகாய், 200 கிராம் காலி பிளவர், 100 கிராம் பூண்டு, 1 கட்டு கொத்தமல்லி, 100 கிராம் உருளைக் கிழங்கு, இஞ்சி சிறுதுண்டு, தேவையான அளவு புதினா, 50 கிராம் கேரட், 50 கிராம் பீன்ஸ், 10 ஏலக்காய், 10 கிராம்பு, 100 கிராம் பட்டாணி, 100 கிராம் டால்டா, 1துண்டு இலவங்கம், 100 கிராம் நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி கேசரிப் பவுடர்

செய்முறை:

அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

http://www.lankasri.eu/ta/link.php?33y6M332HS

Link to comment
Share on other sites

.

.பலாப்பழ பாயாசம்

பலாப்பழச் சுளைகள் - 20, 30 (வருக்கை பலாப்பழம் சிறப்பு)

வெல்லம் - கால் கிலோ

நெய் அல்லது டால்டா தேவையான அளவு

ஏலக்காய் தேவையான அளவு

முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு வாணலில் நெய் விட்டு அது இளகியதும் நறுக்கிய பலாப்பழசுழைகளை இட்டு வதக்கவும்.

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேகவிட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்துவிடலாம்.

மீதம் வந்த பலாப்பழம் இருந்தால் இவ்வாறு செய்து காற்றுபுகாமல் அடைத்து வைத்திருந்து கொஞ்சமாக சாப்பிடலாம். இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

http://tamil2friends.com/tamil-samayal/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈசனின் பாகற்காய் சம்பல்.

சுஜியின் வெஜிடபிள் பிரியாணி,

நுணாவின் பிலாப்பழ பாயாசம் எல்லாவற்றுக்கும் நன்றி.xmas-7294.gif

.

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

நன்றி ஈசன்,பாவற்காய் சம்பல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாவற்காயை சிறிது துண்டுகளாக வெட்டி அதில் உப்பு கலந்து அரை மணிநேரம் வைத்தாலே அதில் உள்ள உவர்ப்புத் தன்மை குறைந்து விடுகிறது. அதன் பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி இலை இவற்றை கொஞ்ச எண்ணெயில் வதக்கி பின்பு தேசிக்காய் புளியும் விட்டு எடுத்தால் நன்றாக இருக்கும். பாவற்காய் சக்கரை வியாதிக்கு நல்ல ஒரு மருந்தாகவும் இருக்கிறது.

இணைப்பினை தொடர்ந்து இணைக்கும் உறவுகளுக்கும் நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்கறி சாம்பார்

sambar.jpg

தேவையான பொருட்கள்.

ஏதாவது ஒரு காய் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

துவரம் பருப்பு - 100 கிராம்

புளி - நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி(மிளகாய்தூள் + கொத்தமல்லி தூள் + மஞ்சள் தூள்) கலவை - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

காய்ந்த மிள்காய் - 2

பெருங்காயம் - 1 சிட்டிகை

கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

முதலில் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் .. காய். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி ஒரு டமளர் தண்ணீர் விட்டு பாத்திரத்தில் வேக விடவும்.. காய் வெந்தவுடன் உப்பு புளிகரைசல் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி மற்றும் பருப்பை போட்டு கொதிக்க விடவும் கடைசியாக 2 ஸ்பூன் எண்ணைவிட்டு கடுகு உளுந்து மிள்காய் சீரகம் வெந்தயம் பெருங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றையும் போட்டு தாளித்து கொட்டி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் ..கமகம சாம்பார் ரெடி.. சோற்றுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்..

எல்லா சாம்பாருமே இந்த முறையில் செய்ய வேண்டியதுதான் . வெண்டைக்காய் கத்திரிக்கு மட்டும் வேக வைக்கும் முன்பு சிறிது எண்ணை ஊற்றி ஒரு பாத்திரத்தில் நன்றாக வதங்கிய பின்பு மேற்சொன்ன முறையில் சாம்பார் செய்யவும்..

cooking-34.gif

நன்றி . ராஜெஸ்வரி பதிப்பகம்... சிவகாசி

Link to comment
Share on other sites

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

இது ஜிம் பாடி ஏற்றுவதற்கு பயனுள்ள குறிப்பு தோழரே குட்டி... அனைவரும் இவ்வாறுதான் காலையில் உண்டுவிட்டு உடற்பயிற்சி செய்கிறார்கள்.. :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌ண்டை காய் அவ‌ருக்கு அர‌சிய‌ல் எப்ப‌டி  செய்ய‌னும் என்று ந‌ங்கு தெரியும் திராவிட‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ல‌ குறுக்க‌ ம‌றுக்க‌ ப‌ல‌ கேள்விக‌ள் கேட்டாலும் ச‌ரியான‌ ப‌திலை சொல்ல‌க் கூடிய‌ ந‌ப‌ர் தான் சீமான்  உங்க‌ளால் அப்ப‌டி ப‌தில் முடியாது?    2009க்கு முத‌ல் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கும் உங்க‌ளுக்கும்  எந்த‌ வித தொட‌ர்வும் இல்லை என்று உங்க‌ள் எழுத்தே காட்டி கொடுக்கு...................2008க‌ளில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரையும் தூற்றின  ந‌ப‌வ‌ர்க‌ள் சில‌ர் இருந்த‌ன‌ர்  ...........................அவ‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ராய் இருக்க‌ கூடும் என்று நினைக்கிறேன் ............................இதுக்கு முத‌ல் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள் என்று கேட்டேன் ஆனால் நீங்க‌ள் மெள‌வுன‌த்தை க‌டை பிடித்த‌ போதே தெரிந்து விட்ட‌து நீங்க‌ள் ப‌ழைய‌ காய் என்று............................த‌மிழ் இன‌த்தின் ச‌பாக் கேடு ஒரு த‌மிழ‌ன் வ‌ள‌ந்து வ‌ந்தால் ம‌ற்ற‌ த‌மிழ‌னுக்கு பிடிக்காது................................ ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி இப்ப‌ யார் கூட‌ இருக்கிறார் க‌ந்தையா அண்ணா😏....................................................  
    • எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி  விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.  பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும்.  பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது  தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை.  அப்படியே அங்கு திறந்திருந்தாலும்  தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அனைவருக்கும் புரியும்.  தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான்.  அவை எல்லாம் ஆதாரங்கள் அல்ல.. 
    • இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த  வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய  பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில்.  கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்படுத்துவதற்காக கோட்டாபய அரசாங்கத்தில் மகிந்த பிரதமராகவும் பஸில் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்று மக்களை படுகுழிக்குள் தள்ளினர். கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில முடிவுகளை தட்டிக்கேட்க முடியாது மகிந்த விளங்கினார். ஏனென்றால் அவரது மகன் நாமலுக்கு கோட்டாபய விருப்பிமில்லாமலேயே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கினார். மறுபக்கம் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்கிய பஸில், மகிந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து அனைத்து அமைச்சுக்களையும் ஆட்டி வைத்தது போன்று செயற்பட ஆரம்பித்தார். இறுதியில் அனைவரையும் பதவியிறக்க அவர்களுக்கு வாக்களித்த மக்களே வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் மீண்டும் பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச கடும் போராட்டம் செய்து வருகின்றார். தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மண்விழுந்து விட்டதால் குறைந்தது பிரதமராகவாவது ஆக்கி விட வேண்டும் என்று முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அதற்காக கட்சியில் உயர் நிலை பதவியில் அவரை அமர்த்தி அழகு பார்க்க முடிவு செய்தார். அதன் படி கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். எனினும் அதற்கு ஆப்பு வைக்கும் முகமாக மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘நாமலுக்கு ஜனாதிபதியாவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது’ ஊடகங்களுக்கு கருதுத்து தெரிவித்து விட்டார். இது மகிந்தவுக்கும் நாமலுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரசன்னவின் கருத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். சுதந்திர கட்சியின் தலைவராக மகிந்த இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட பலர் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர். இடையில் அரசியலுக்கு வந்த நாமல் ராஜபக்சவை அடுத்த மகிந்தவாக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மிக முக்கியமாக பஸில் ராஜபக்சவே நாமலை எதிரியாகத்தான் பார்க்கின்றார்.  மகிந்த அரசியலில் இருக்கும் வரை தான் நாமலுக்கு மரியாதை. அவர் ஓய்வு பெற்று விட்டால் கட்சிய. பஸில் ஆக்ரமிப்பார் அல்லது கலைத்து விடுவார். எனவே தள்ளாட்டத்துடன் பாராளுமன்றில் வலம் வருகின்றார் மகிந்த. தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஊடகங்களுக்கு கூறி வருகின்றார்.  பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் நாமல் ராஜபக்ச தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டுள்ளார். தனது நடை உடை பாவனை மற்றும் தலை அலங்காரம் அனைத்திலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். எந்த உடை அணிந்தாலும் மறக்காமல் சிவப்பு சால்வையை கழுத்தில் போட்டுக்கொள்கின்றார்.  தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்துகின்றார். கம்பஹா மாவட்டம் பஸிலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரகலய போராட்டத்துக்குப்பின்னர் , மொட்டு கட்சியில் யார் சென்றாலும் மக்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அம்மாவட்டத்தில் மொட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் முழுமூச்சில் இறங்கியுள்ளார். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. முன்னாள் தேசிய அமைப்பாளர் பஸிலே இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடும். நாமலின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவு போடலாம். மகன் நாமலை அரசியலில் உச்ச இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மகிந்த எடுத்த இறுதி முயற்சியே தேசிய அமைப்பாளர் பதவி. ஆனால் மகிந்த தனது ஆட்சி காலத்தில் தனது புதல்வர்களின் சுகபோக வாழ்வு, ஆடம்பரம், வீண் செலவு போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்.  அந்த ஆடம்பர வாழ்க்கையின் வீடியோக்கள் படங்கள் இப்போது வலம் வந்து நாட்டு மக்களை எரிச்சலில் தள்ளியுள்ளன. எனவே அதற்கு நாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.  எல்லாவற்றையும் விட ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகும் ரணில் விக்ரமசிங்க இந்த நகர்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றார். எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மகிந்த தரப்பினரை எதிர்கால அரசியலில் ஊக்குவிக்க விரும்பாதவராகவே உள்ளார். தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள நாமலுக்கு இந்நாட்டின் தேசிய அந்தஸ்த்துள்ள ஒரு தலைவராக உருவெடுப்பது சவாலான காரியம் என்றே கூறத் தோன்றுகிறது.  https://www.virakesari.lk/article/180916  
    • தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.   உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான முதலாளித்துவ செயற்பாடுகளினால் தொழிலாளர் வர்க்கத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் பெரும் தத்துவ மேதையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாக பல தத்துவங்களை எடுத்துரைத்தார். அத்தத்துவங்ளையே இடதுசாரி கோட்பாடுகள் என்றும், அக்கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளை கம்யூனிச நாடுகள் என்றும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன. 'மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவையாகும். மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் - துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இந்த 'உழைப்பு' இன்று மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது.   உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதேநேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஒரு பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்' என்று உழைப்பாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ் குரல் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்துக்கு எதிராக பல கிளர்ச்சிகள் தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்காவில் பல்லாயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கிறங்கி போராடினர். இப்போரட்டத்தின் 3ஆம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதொரு கலவரத்துக்கு வித்திட்டது. இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். இதுவே 1989ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொழிலாளர் தினமாக உலக நாடுகளால் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் ஆரம்ப காலகட்டத்தில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்துக்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ஆம் ஆண்டில் தொழிற்சங்க தலைவரான குணசிங்க தலைமையில் இடம்பெற்றது.  அதன் பின்னரே 1956ஆம் ஆண்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கருதி அன்றைய தினத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பொது விடுமுறையாக அறிவித்தார். 1891ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.ஈ. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றிருந்ததுடன் இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாகவும் அறியப்படுகிறார். இவ்வாறு உலக வரலாற்றிலும், இலங்கையின் வரலாற்றிலும் தொழிலாளர்கள் தினம்  போற்றுதலுக்குரியதாக அமைந்தாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளமை வேதனைக்குரிய விடயமாகிறது. முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, அரசியல் நலன் சார்ந்த மே தினத்தில் கூட்டத்தை நோக்கி தேசிய அரசியல் கட்சிகள் அனைத்து போட்டி போட்டுக்கொண்டு தலைநகர் கொழும்பில் இடங்களை ஒதுக்கிக்கொள்ள போராடுகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம்  கொழும்பு - மருதானை சந்தியில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு கோரப்பட்ட இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இம்முறை மே தினத்துக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஆதரவாளர்களை கொழும்பு அழைத்து வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகையில் மே தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக உள்ள எப்.ஆர். சேனாநாயக்க வீதியை பெற்றுத்தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணி அந்த இடத்தில் மே தின கூட்டத்தை நடத்தியிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த கோரிக்கைக்கு ஆரம்பத்தில் எவ்விதமான எதிர்ப்புகளும் அதிகாரிகளிடமிருநது வெளியாக வில்லை. ஆனால் இம்முறையும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை தருமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கும் அனுமதி கோரியுள்ளது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை கோரியுள்ளமையினால் இருதரப்புக்குமே குறித்த வீதியை அனுமதிக்க முடியாது என்று அறிவித்து  கொழும்பு மாநகர ஆணையாளர், மாற்று இடங்களை பெயரிட்டு அனுப்புமாறு அறிவித்துள்ளார். இவ்வாறு தமது அரசியல் பலத்தை காண்பிப்பதற்காக அரசியல் கட்சிகள் போட்டிப்போடுகின்றதே தவிர, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அல்ல. மேலும், வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமக்குள் செல்வாக்கை வெளிப்படுத்தவும் இந்த அரசியல் கட்சிகள் மே தின மேடைகளை பயன்படுத்துகின்றன. எனவே, முற்றிலும் அரசியல்மயப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினம், மீண்டும் சுதந்திரத்துக்கான போராட்டமாக மாற்றமடைவது அவசியமாகும்.   https://www.virakesari.lk/article/181851
    • பணம் சேர்க்க  வந்து விடுவார்    கருத்துகள் மட்டும் சொல்ல கூடாது   ஏனெனில் இது அவருடைய பகுதி நேர வேலை   மற்றும் படி தமிழர்கள் எப்படி போனால் அவருக்கு என்ன ?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.