Jump to content

நிலத்தடி நீரை நம்பி கோடையில் நெல் பயிரிட கூடாது!


Recommended Posts

கோடையில் நெல் பயிரிட கூடாது!

நிலத்தடி நீரையும், மண்ணின் வளத்தையும் பாதுகாக்க, கோடை நெல் நடவை தவிர்க்க வேண்டும் என்கிறார், விவசாய ஆராய்ச்சியாளர், வே.ரவி: நான், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், நீர் மற்றும் நில வள ஆராய்ச்சி மையத்தின், தலைவராக பணியாற்றுகிறேன். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், அதிலும் குறிப்பாக, காவிரி பாசனப் பகுதிகளில், கோடையில் நெல் சாகுபடி செய்வதை தவிர்ப்பது, மிகவும் நல்லது.ஏனெனில், கோடை நெல் சாகுபடி செய்யும் போது, அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்காக, நாம் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி எடுக்கும் போது, நிலத்தடி நீர்மட்டம், அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு.மேலும், இந்த ஆண்டு பருவ மழையும் தமிழகத்தை ஏமாற்றி விட்ட காரணத்தால், பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இப்போதுள்ள சூழலில், மேலும் நிலத்தடி நீரை உறிஞ்சினால், கடல் நீர் உட்புகுந்து, நிலத்தடி நீரையும், உப்புநீராக மாற்றும்.அதே போல், மண்ணின் தரமும் படிப்படியாக குறைந்து களர், உவர் நிலமாக மாறும். இவ்வாறு மண்வளம் பாதிக்கப்பட்டால், பின் எந்த பயிருமே பயிரிட முடியாது. மேலும், குறுவை, சம்பா, தாளடி, கோடை நடவு என, தொடர்ந்து, நெல் விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்தால், மண்ணானது அனைத்து சத்துக்களையும் இழந்துவிடும்.
அதனால், கோடை சாகுபடியாக நெல் விவசாயம் செய்யாமல், அதற்கு மாற்றாக கோடைப் பயிர்களை பயிரிடும் போது, மண்ணின் வளம் திரும்ப கிடைக்கும். அப்போது, அடுத்தடுத்த குறுவை, தாளடி போன்றவற்றில், நல்ல விளைச்சல் கிடைக்கும்.நெல் சாகுபடி செய்வதற்கு, 1,400 முதல் 1,600 மி.மீ., தண்ணீர் தேவை. ஆனால், உளுந்து, எள் போன்ற கோடைப்பயிர்களுக்கு, 200 முதல் 300 மி.மீ., தண்ணீர் இருந்தாலே போதும்.நிலத்தடி நீர்மட்டம் குறைவது தான், கோடை நெல்சாகுபடியின் போது ஏற்படும் முக்கியமான பிரச்னை. 2003ல் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்ட கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள, 385 பிளாக்குகளில், 8 பிளாக்குகளில் முழுவதுமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உப்பாக மாறியுள்ளது.மேலும், 138 பிளாக்குகள், அளவுக்கதிகமாக பாதிக்கப்படும் தன்மையுடன் உள்ளது. 37 பிளாக்குகள், அபாயகரமான நிலையில் உள்ளன. வெறும், 97 பிளாக்குகள் மட்டுமே, பாதுகாப்பான நிலையில் உள்ளன.கடந்த, 2003லேயே இந்த நிலை என்றால், இன்றுள்ள நிலையை கேட்கவே வேண்டாம். எனவே, கோடை காலத்தில் நெல் சாகுபடியைத் தவிர்த்து, மாற்று பயிர்களை பயிரிடுவது தான் புத்திசாலித்தனம். மேலும், தண்ணீர் வீணாவதை தடுக்க, சொட்டு நீர், தெளிப்பு நீர் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தலா
ம்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.