Jump to content

யாழ்ப்பாண நினைவுகள் நூல் வெளியீடு


Recommended Posts

tabeenran%205455565.jpg

 
தினக்குரல்' வாரமலரில் வேதநாயகம் தபேந்திரனினால் 'யாழ்ப்பாண நினைவுகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதப்பட்ட முதல் முப்பது கட்டுரைகளை கைதடி 'சிவகாமி பதிப்பகம்' தொகுத்து நூலாக வெளியிடுகின்றது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் நீராவியடி, கல்லூரி வீதியில் உள்ள இலங்கை வேந்தன் கல்லூரியில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
 
இந்த நிகழ்வில் வரவேற்புரையை பண்டாரவளை கல்வி வலய தமிழ் பிரிவு கல்விப் பணிப்பாளர் சி.மதியழகனும் வாழ்த்துரைகளை 'ஞாயிறு தினக்குரலின்' பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம், வட மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களப் பணிப்பாளர் நா.இராசநாயம், வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ், கரைச்சி பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் ஆகியோரும் வழங்கவுள்ளனர். நூலை கிளிநொச்சி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) சு.சிறீக்குமரன் வெளியிட முதல் பிரதியை கோ.வேல்நாதன் பெறவுள்ளார். நூலின் மதிப்பீட்டு உரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் ச.லலீசன் ஆற்றவுள்ளார். ஏற்புரையை நூலாசிரியர் வே. தபேந்திரனும், நன்றியுரையை கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ந.கிருபாகரனும் வழங்கவுள்ளனர்.
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.