Jump to content

இயற்கை விவசாய ஆர்வலர் நம்மாழ்வார் காலமானார்


Recommended Posts

முதுபெரும் இயற்கை விவசாய ஆர்வலர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்கோட்டை கிராமத்தில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு 75 வயது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றினார்.

ஆனால் அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுற்று வெளியேறி, பின்னர் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

மாதிரிப் பண்ணை

'இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இப்போதைய தேவை. கம்பு, எள், கேழ்வரகு (குரக்கன்), கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமை உணவுக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்' என்றும் அவர் வலியுறுத்திவந்தார்.

கரூரை அடுத்த வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி வெற்றிகரமாக அதனை அவர் நடத்திவந்தார்.

அங்கிருந்த வறண்ட பாறை நிலப்பரப்பை அவர் மூன்றே ஆண்டுகளில் இயற்கை வேளாண் முறைகளைப் பயன்படுத்தி பல்லுயிர் வாழும் கானகமாக மாற்றியதாக ஆர்வலர்கள் கருதுகின்றனர்

அவரது மறைவிற்கு பல்வேறு ஆர்வலர் அமைப்புக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றன.

 

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/12/131230_nammazhwardead.shtml

 
 

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

ஆட்டோகிராஃப் கேட்பவர்களிடம் 'அன்பே வெல்லும்’ என்றெழுதிக் கையெழுத்திடுவார் நம்மாழ்வார். 'ரொம்ப அசல் வார்த்தைங்க!’ என்பார்.

மாடு மேய்ப்பதில் அவ்வளவு விருப்பம். ''அது வயிறாரச் சாப்பிட்டது அதோட முகத்துலயே தெரியும். வயிறு நிறைஞ்சிட்டா என் முதுகை நக்கிக் கொடுக்கும். இப்ப என் வீட்டுப் பசு மாடு கன்னு போட்டது. அந்தக் குட்டி கீழே விழுந்ததும் எங்கெங்கோ தவிச்சுப்போய் சரியா பால் காம்புகளைப் பிடிச்சுக்கிட்டு... அப்புறம் அது உலகத்தையே மறந்துருச்சு!''


''என் மனைவி சாவித்திரி எனக்கு நல்ல நண்பர். துளி அதிகாரம் கிடையாது. என்னை நல்லாத் திருத்தும். ஒருநாள் 'எதுக்கு எதிரே இருக்கிறவங்க நேரம் தெரியாமப் பேசுற?’னு கேட்டுச்சு. அன்னைக்குப் பேச்சைக் குறைச்சது தான். 'ஏன் அரசு போடுகிற திட்டத்தை எல்லாம் குறை சொல்லுற?’னு கேட்டுச்சு. அதைப் பரிசீலனை பண்ணினேன். அது முடியாது. சரியா இல்லைன்னா எதிர்த்துத்தான் பேசணும்!''


''வாதம் பண்ணலாம். விவாதம் பண்றது பிடிக்காது. கவனிச்சுப் பார்த்தீங்கன்னா, விவாதம் பண்றப்போ ஜெயிப் போம். ஆனா, நல்ல மனுஷங்களை இழந்துடுறோம்!''


சமீபத்தில் பார்த்த படம் சே குவேரா. 'பார்க்கப் பார்க்க சிலிர்த்துப்போச்சுங்க. 'விடுதலை’ங்கிற உணர்ச்சிக்கு அவர் எவ்வளவு மரியாதை கொடுக்கிறார், அர்ப்பணிக்கிறார்னு எல்லாம் படிச்சதுதான். ஆனா, படமாப் பார்க்கும் போது ஆச்சர்யமா இருந்துச்சு. கியூபா விடுதலைக்குப் பிறகும் அடுத்தடுத்து பல நாடுகளோட விடுதலைக்குக் கிளம்பிப்போற வேகம் அபாரம். படம் ரொம்ப நாள் மனசுல நிற்கும்!''

சமீபத்தில் படித்த புத்தகம் - ரகசியம் (sமீநீக்ஷீமீt). ''பிரபஞ்சத்துக்கும் நமக்கும் நேரடி உறவு இருக்குனு சொல்றாங்க. ஆங்கிலத்தில் வெளியானப்ப பலத்த விவாதம் கிளப்பின புத்தகம். 'நம்ப முடியாத விஷயம்... சும்மா விக்கிறதுக்காகப் பரபரப்பு பண்றாங்க’னு சொன்னாங்க. ஆனா, அதைத் தாண்டியும் என்னவோ அதில் இருக்கு. என்னை ரொம்பப் பாதிச்ச புத்தகம்!''

சமீபத்தில் நடந்த சர்வ மத நல்லிணக்க விழாவுக்கு வந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணியுடன் ஏற்பட்ட அறிமுகம், இப்போது அற்புதமான நட்பாகிவிட்டது!
'சொந்த ஊர் இளங்காடு. ரொம்ப நாள் கழிச்சு என் பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்கிற நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்தேன்!''

''அமெரிக்கா, சீனா, ரஷ்யானு முரட்டு நாடுகள் பக்கம் போனது இல்லை. ஐரோப்பிய கண்டத்தில் கொஞ்சம் சுத்தியிருக்கேன். இங்கிலாந்து, பிரான்ஸு, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவீடன், டென்மார்க், இத்தாலி, ஜெர்மனி, கிழக்கே மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா... இப்படிப் போயிருக்கேன். ஆயுசுக்கும் நாடோடியாத் திரிஞ்சவன் இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா உக்காந்துருக்கேன்!''

முன்னெல்லாம் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டிதான் ஆடை. ஆனால், இப்போது காவி வேட்டி, பச்சைத் துண்டுதான் அடையாளம். ''மனசு அந்த அளவுக்குப் பக்குவம் ஆயிருச்சு!''
''நம்ம தமிழ்நாட்டு உணவு அமைச்சர் ஒரு விழாவில் 'பருவ மழை அளவு 28 விழுக்காடு குறைஞ்சதுக்குக் கலங்க வேண்டியது இல்லை’னு பேசியிருக்கார். அவரோட 'அக்கறை’யை நினைச்சுத்தான் கலங்க வேண்டியிருக்கு!''

''இப்ப குற்றாலத்துக்குப் போயிருந்தேன். சிவசைலம்கிறவர் இயற்கை விவசாயம் பண்றாரு. அருவியில் பொன்னாங்கண்ணித் தைலத்தைத் தடவிட்டுக் குளிச்சேன். அப்படி ஒரு சுகம். என்ன புண்ணியம்? பார்த்துக்கிட்டேவந்தா மழையே காணோம். மரங்கள் எல்லாம் காயுது. குளிச்ச சந்தோஷம் வடிஞ்சிருச்சு!''


கடவுளைப் பற்றி யோசிப்பதே இல்லை. நாத்தி கனும் இல்லை. சிற்பக் கலையை ரசிக்கக் கோயிலுக்குப் போவது உண்டு!
பங்குனி 24 இவருடைய பிறந்த நாள். அன்றைய தினம் எப்படியும் ஏதோ ஓர் இயற்கை விவசாயப் பண்ணை யில் இருக்குமாறு பார்த்துக்கொள்வார். தோழர்களுடன் இயற்கை உணவுகளைச் சமைத்து அளவளாவிக் கொண்டாடுவார்!

''மனிதர்கள் 50, 60 வயசு ஆச்சுன்னா அவ்வளவுதான் வாழ்க்கைனு முடிவுக்கு வர்றாங்க. மனிதர்கள் 140 வயசு வரை வாழ வழி இருக்கு. வாழும் முறைகள், நெறிகள் இருக்கு. வாழ முடியாத, வசதி இல்லாதவர்களுக்கு 'உயிர்ச்சூழல் வாழ்வு மையம்’னு ஆசிரமம் மாதிரி ஆரம்பிக்கணும். அதை நிறைவேத்தணும்கிறதுதான் பெரிய கனவு!''

 

 

fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17nam3.jpgNammazhvaar.jpg

 

ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரின், தொடர் கட்டுரை ஒன்றை... தமிழக பிரபல பத்திரிகை ஒன்றில் வாசித்தேன்.

அன்னாரின்... ஆத்ம சாந்திக்கு, இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்த ஊர். 

அண்ணாமலை, பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., அக்ரி பட்டப்படிப்பு படித்தவர். 

கோவில்பட்டி மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஆறு ஆண்டுகள் பணி செய்த இவர், இயற்கை வழி விவசாயத்திற்காக பணியைத் துறந்தார்

. பிறகு நோபல் பரிசு பெற்ற dominique pyre என்பவரின் நிறுவனத்தில் (களக்காடு) பணியில் சேர்ந்தார்.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிலைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர். 

இதுவரை Leisa, kudumbam உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உறுவாக்கியவர். 

எழுபது நாலு வயதை எட்டி இன்று மறைந்த நம்மாழ்வர் என்றும் நம்ம நெஞ்சில் நீங்காது இருப்பார் .

நம்மாழ்வார் : 1987_ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ‘‘இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று’’ சொன்னார். இதை அவர் 1987_ல் சொன்னார்.ஏன் என்று நான் கேட்டதற்கு, ‘‘உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள ‘டீ’ தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது.

 

அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை’’ என்று சொன்னார் அவர்

நம்மாழ்வார் : இதில் உங்களுடைய வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும். இங்கு அறிவே வெளிப்படவில்லை.

 

அதற்குப் பதிலாக இவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில், நாம் எதைப் பேசினால் மக்களுடைய ஆதரவு எனக்கு கொஞ்சம் கூட வரும். என்னுடைய பெட்டியில் இன்னும் கொஞ்சம் ஓட்டு விழும். அதை மட்டும்தான் யோசித்துப் பேசுகிறார்களே ஒழிய வேறு எதையும் யோசித்துப் பேசவே இல்லை. மக்களுக்கு நலமென்றால் அது எதில் இருக்க முடியுமென்றால் குறிஞ்சி, குறிஞ்சியாக இருக்க வேண்டும். முல்லை, முல்லையாக இருக்க வேண்டும். மருதம், மருதமாக இருக்க வேண்டும். நெய்தல், நெய்தலாக இருக்க வேண்டும். இதை இளங்கோவடிகள் அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கிறார். தொல்காப்பியத்தில் சொல்லி இருக்கிறது. திருவள்ளுவருக்கு 133 அடிக்கு சிலை வைத்திருக்கிறோம். திருவள்ளுவர் என்ன சொன்னார் என்பது பற்றி யோசிக்கவே இல்லை. 

‘‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’’ என்று சொல்லி இருக்கிறார். நம்முடைய பாதுகாப்பு என்றால், அது காடும் சேர்ந்ததுதான். காடு இருந்தால்தான் தண்ணீர் வரும். தண்ணீர் இருந்தால்தான் மக்களுக்கு வாழ்க்கை இருக்கும். ஆக, மக்களுக்கு அறிவில்லை. ரோடு போட்டு முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் என்று ஒருவர் பேசினால் இதைவிட முட்டாள் தனம் ஒன்று இருக்கவே முடியாது. நம்முடைய மடமைக்கு அளவே இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பெரும்பாலான மக்களுக்கு இந்த அறிவைக் கொண்டு போய் சேர்த்து இதனால் நமக்கு அழிவு வரும் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, பிறகு நாம் எல்லோரும் சேர்ந்து வரப்போகும் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வைத்தான். அந்த வேலையை மட்டும் தான் இப்போதைக்கு நம்மால் செய்ய முடியும்.நாம் இவ்வளவு பேசுகிறோம் இல்லையா?

 

இவையெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரியாதென்று நாம் சொல்ல முடியாது. எல்லோரும் மனு கொடுத்திருக்கிறார்கள். எல்லோரிடமும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளில் செய்தி வெளி வந்திருக்கிறது. இவையெல்லாம் அறிந்து கொண்ட பிறகும், இவர்கள் செய்யும் தவறுகளைக் குறைத்துக் கொள்ளவே இல்லை. ஒவ்வொரு தடவையும் கூட்டவே செய்கிறார்கள். உதாரணத்திற்கு: எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையெல்லாம் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையில் இருக்கின்ற தொழிற்சாலைகள் என்ன செய்கின்றன? ஆற்றிலிருக்கின்ற நீரை தொழிற்சாலையின் உள்ளே இழுத்துக் கொள்கிறது. மறுபடியும் தன்னுடைய கழிவு நீரையெல்லாம் ஆற்றினுள் விடுகிறது. இந்தக் கொடுமை எந்த மந்திரிக்குத் தெரியாது சொல்லுங்கள்? எதிர்க் கட்சியாக இருக்கும் போது மந்திரிக்குத் தெரிகிறது. ஆளுங்கட்சியான பின்பு தெரியமாட்டேன் என்கிறது. ஆக, அவர்களின் நடத்தையில், பண்பிலுள்ள குறைபாட்டை நாம் பார்க்கிறோம். அதைத் தடுத்து நிறுத்தவே முடியாது. குற்றவாளிகளை நீங்கள் குற்றவாளி என்று சொன்னால், அவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் ஒரு குடியாட்சி நாட்டில் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. மக்கள் இதைப் புரிந்து கொண்டார்கள் என்றால், மக்களே இதைத் தடுத்து நிறுத்துவார்கள். நம்முடைய வேலை அங்குதான் இருக்கிற

 

fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நம்மாழ்வார் : இதில் உங்களுடைய வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும். இங்கு அறிவே வெளிப்படவில்லை.

 

வேத வாக்கு!

 

மானிடம் வாழ வழி வகுத்துத் தந்ததே, தமிழனின் மதம்!

 

அந்த வழியில் நம்மாழ்வார் ஒரு சித்தர்!

 

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மாழ்வார் நினைவாக 'மணி வர்மா' வரைந்த ஓவியமும், கவிதையும் !

 

1491431_10203113227377880_622258604_o.jpபசுமை புரட்சி பெயரால்

ஏகபோகம் செய்த
இயற்கை படுகொலையை
எங்கள் எளிய தமிழால்
கிண்டி காட்டியவர்

எண்டோ சல்பான் தெளிப்பா
கூடங்குள அணு உலை திணிப்பா
மீத்தேன் குழாய் புதைப்பா
ஆற்று மணல் கொள்ளையடிப்பா
பிடி கத்தரிக்காய் விளைவிப்பா
வால்மார்ட்க்கு வரவேற்பா
எங்கும் எதிர்ப்பார் நம்மாழ்வர்
இயற்கையை கொள்வோரின்
எதிர்ப்பில் அங்கும் இருப்பார்
என்றும் வாழ்வார்
நம்மாழ்வார்..

நெளியும் மண்புழுவில்
உருண்டோடும் ஆற்றுநீரில்
பறக்கும் சிட்டுக்குருவியில்
எருவாகும் தழைச்சத்தில்
என்றும் வாழ்வார்
நம்மாழ்வார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//''அமெரிக்கா, சீனா, ரஷ்யானு முரட்டு நாடுகள் பக்கம் போனது இல்லை. ஐரோப்பிய கண்டத்தில் கொஞ்சம் சுத்தியிருக்கேன்.

இங்கிலாந்து, பிரான்ஸு, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவீடன், டென்மார்க், இத்தாலி, ஜெர்மனி, கிழக்கே மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா... இப்படிப் போயிருக்கேன். ஆயுசுக்கும் நாடோடியாத் திரிஞ்சவன் இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா உக்காந்துருக்கேன்!''//

 

-நம்மாழ்வார்-

 


 

Link to comment
Share on other sites

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு! தமிழக விவசாயிகளுக்கு ஈடு செய்யவே முடியாத இழப்பாகும் - வைகோ இரங்கல்

 

1526837_625493957510554_1724596967_n.jpg

நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களால் ஒரு நம்மாழ்வார் பெரும் புகழ் பெற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம் போற்றுதலுக்குரிய நம்மாழ்வார், வேளாண்மைக்கும் விவசாய நிலங்களுக்கும் அழிவைத் தர முற்றுகையிடும் மரபணு விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தையும் எதிர்த்து, வேளாண் நிலமும் பயிர்களும் நச்சுத்தன்மைக்கு ஆளாகி விடாமல், பாதுகாக்க உண்மையான அறவழிப் வேளாண்மை புரட்சியை தலைமையேற்று நடத்தி, காலத்தால் அழியாத புகழ் படைத்தார்.

வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்று, கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக பணிபுரியும் காலத்திலேயே, நஞ்சாகி வரும் வேளாண்மை முறையை எதிர்த்துப் போராட அரசு பணியைத் தூக்கி எறிந்துவிட்டு, இயற்கை வேளாண்மையை நிலைநாட்டும் போராளியானார்.

மீத்தேன் எரிவாயு திட்டத்தால் சோழ மண்டலமே பாழாகிவிடும் ஆபத்தை எதிர்த்துப் போராடினார். உடல்நலம் குன்றிய நிலையிலும் அந்த அறப்போரை மேற்கொள்ளச் சென்ற சூழலில் உயிர் நீத்தார்.

2005 ஆம் ஆண்டு வேடசந்தூரில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயிகள் மாநாட்டில், அவர் ஒரு மணி நேரம் ஆற்றிய உரையையும், வழிகாட்டுதலையும் மறக்கவே முடியாது. மதுரையில் நடைபெற்ற அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் அவரோடு பங்கேற்ற நிகழ்வில், அவரது உன்னதப் பண்புகளைக் கண்டு வியந்தேன்.

அவர் உயிர் இழந்து உடலால் மறைந்தாலும் விவசாயிகளையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க அவர் தந்த அறிவுரைகளாலும், தொலைநோக்குத் திட்டங்களாலும் நம்மோடு வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார் நமது மனங்களை ஆளும் நம்மாழ்வார். அவர் ஏந்திய வேளாண்மை இலட்சியக் கொடியை உயர்த்தி அவரது கனவுகளை நனவாக்க உறுதிகொள்வோம்!

அவரை இழந்து துயரத்தில் துடிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
31.12.2013 மறுமலர்ச்சி தி.மு.க

 

(facebook)

Link to comment
Share on other sites

1526619_687479931291619_228019043_n.jpg

 

1512551_687482781291334_1638303187_n.jpg

 

1525732_589085651156787_697879266_n.jpg

 

1525640_687638637942415_1901317778_n.jpg

 

என்ன கொடுமையடா இது..
ஊரை அடித்து உலையில் போட்டவன்
தொண்ணூறைத் தாண்டியும்
இன்னும் எக்காளமிட்டு வாழ்கிறான்...

ஊருக்காக உழைத்தவன்
காடு மேடாய்ச் சுற்றியவன்...
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அற்புதமாய்க் கொண்டுவந்த
உழவான்மை தத்துவத்தை
அயராமல் மீட்டெடுத்தவன்
மீத்தேன் என்னும் சாத்தானை
எதிர்த்து தாய்த்தமிழரோடு
களம் கண்டவன்.....
நாம் தமிழர்க்கு இயற்கை
உழவான்மையைப் பயிற்றுவித்தவன்
வாழ்வாங்கு வாழவேண்டியவனை
வலிதாய் அழைத்த மரணமே....
துர்மரணமே....
நீ மரணித்துபோகக் கடவாய்........

 

(facebook)

Link to comment
Share on other sites

நம்மாழ்வார் நினைவாக 'மணி வர்மா' வரைந்த ஓவியமும், கவிதையும் !

1491431_10203113227377880_622258604_o.jpபசுமை புரட்சி பெயரால்

ஏகபோகம் செய்த

இயற்கை படுகொலையை

எங்கள் எளிய தமிழால்

கிண்டி காட்டியவர்

எண்டோ சல்பான் தெளிப்பா

கூடங்குள அணு உலை திணிப்பா

மீத்தேன் குழாய் புதைப்பா

ஆற்று மணல் கொள்ளையடிப்பா

பிடி கத்தரிக்காய் விளைவிப்பா

வால்மார்ட்க்கு வரவேற்பா

எங்கும் எதிர்ப்பார் நம்மாழ்வர்

இயற்கையை கொள்வோரின்

எதிர்ப்பில் அங்கும் இருப்பார்

என்றும் வாழ்வார்

நம்மாழ்வார்..

நெளியும் மண்புழுவில்

உருண்டோடும் ஆற்றுநீரில்

பறக்கும் சிட்டுக்குருவியில்

எருவாகும் தழைச்சத்தில்

என்றும் வாழ்வார்

நம்மாழ்வார்..

எனது குரு போய்விட்டார். உலக இயற்கை விவசாயிகளுக்கும், இயற்கைக்கும் பெரிய இழப்பு.

நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை விவசாய யுக்திகள் எங்கள் கனடிய இயற்கை தோட்டத்தில் எப்போதும் இருக்கும்.

அபராஜிதன், இணைப்புகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

ஒரு நல்ல மனிதனை தங்களது விளம்பரத்துக்கு எல்லாம் பயன் படுத்துகிறார்கள்...

 

தமிழ்நாட்டுக்கு பிடித்த கேடு இவரை மாதிரி மனிதரெல்லாம் புறக்கணிக்கப்படுவது (பெரும்பான்மை மக்களால்)

Link to comment
Share on other sites

ஒரு நல்ல மனிதனை தங்களது விளம்பரத்துக்கு எல்லாம் பயன் படுத்துகிறார்கள்...

 

விளம்பரம் அல்ல. இவர் தமக்கு  வழிகாட்டியாக பல நேரங்களில் தம்முடன் போராட்டங்கள் பொதுக்கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறார். அந்த நாட்களை மறக்க முடியாது என நினைவுகூர்கிறார்கள்.

பிழை பிடிக்க நினைப்பவர்களுக்கு எதுவும் பிழையாக தான் தெரியும். <_<

 

Link to comment
Share on other sites

இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி தமிழ் கூறும் நல்லுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்ச் சமூகம் இந்த நூற்றாண்டின் மற்றுமொரு தலைசிறந்த அறிவரை இழந்துள்ளது. இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அன்னாருக்கு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளது.

 

இராச்குமார் பழனிசாமி

(facebook)

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சிலரின் இழப்புகள் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்லும். தனியார்மயம் உலகமயம் இரண்டும் இணைந்து தமிழ்ச்சமூகத்தின் நிலத்தினை, வாழ்வை சூரையாடும் காலத்தில் இச்சமூகத்திற்கு விடிவெள்ளியாய் திசை காட்டிய உத்தம ஆன்மா அய்யா. நம்மாழ்வார் அவர்கள். நிலச் சட்டமும், விதைச் சட்டமும், மீத்தேனும், எரிவாயு குழாயும், அணுக் கதிர்வீச்சும் நம்மை தின்ன காத்திருக்கும் வேளையில் அய்யாவின் பிரிவு மிக மிக துயரமானது. நேர்மையாக சமரசமின்றி போராட்டத்தினை நடத்திச் செல்லும் முதன்மை ஏர் இல்லாமல் தமிழ்ச் சமூகம் துயருருகிறது. இவர் இடத்தை இட்டு நிரப்ப எவரும் இல்லை எனும் பொழுது நெஞ்சு பிளக்கிறது. ஒரு லட்சம் பேரை திரட்டி வரும் ஜனவரியில் மீத்தேனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த களமாடிக் கொண்டிருந்தவர் மறைந்தது நமக்கு பெரும் பின்னடைவு.

சாதிக்காய், கட்சிக்காய் லட்சம் பேரை திரட்டும் சமூகத்தில் மக்களுக்காய், மண்ணுக்காய் திரட்ட நினைத்த உயர்ந்த போராளி. மீத்தேண் திட்டத்திணை தடுத்து நிறுத்தும் வலிமையை மக்களுக்கு கொடுக்கக் கூடிய மாமனிதராய் இவரை நான் கண்டேன். காவிரி வறண்ட பொழுது சாதிக்காரனை திரட்டி போராடாத வரட்டு வீரம் பேசும் சமூகத்தில் இந்த வேறுபாடுகளை வென்று மக்களை ஒன்றினைக்கும் ஆற்றல் வாய்ந்தவரை இழந்து நிற்கிறோம். அய்யாவிற்கு வீரவணக்கம் செலுத்துவோம். தன் உடல் நலம், பொருளாதார நலம், முதுமை என எதையும் பாராமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காய் போராடிய மாமனிதருக்கு நாம் மரியாதை செலுத்துவது என்பது மீத்தேன் எதிர்ப்பு ஊர்வலதிலும், போராட்டத்திலும் பெரும் திரளாய் பங்கேற்பதுதான். இதைச் செய்யுமா தமிழினம்? இவருக்கான மரியாதையை இதன் மூலம் செலுத்துமா?

 

Thirumurugan Gandhi

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ,ஐயாவின் ஆத்மா சந்தியடையட்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1526994_10151873913523857_1289363213_n.j

 

(facebook)

ஆழ்ந்த இரங்கல்கள் ,ஐயாவின் ஆத்மா சந்தியடையட்டும் !

Link to comment
Share on other sites

எனது கண்ணீர்  அஞ்சலி. மண்ணை நேசித்த மனிதனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

எனது கதாநாயகன். ஐயாவின் மறைவு, உழவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஆரோக்கிய வாழ்விற்கும் ஒரு பேரிழப்பு. மறைந்து போன இயற்கை விவசாயத்‌திற்கு புத்துயிர் அளித்துள்ளார். இவர் மறைந்தாலும், ஐயா விதைத்துச் சென்றுள்ள 'இயற்கை விவசாய முறை' செழித்து வளரும்.

Link to comment
Share on other sites

1526994_10151873913523857_1289363213_n.j

(facebook)

நம்மாழ்வார் ஐயா, ஒரு இயற்கை மண் வள உரை நடத்திகொண்டிருந்தார்.

ஒரு செயற்கை விவசாயி இயற்கை விவசாயம் எந்த நாட்டிலாவது உத்தியோகபோகமாக வருமா என்று கேட்டிருந்தார்.

இந்த கேள்வி அவரை உரையின் போதும் யோசிக்க வைத்தது.

திடீரென்று உரையை நிறுத்திவிட்டு சொன்னார்,

"தமிழீழம் கிடைத்தால் நடக்கும். என்னை விட இயற்கையை நேசிப்பவர் அவர்கள் தலைவர் தான்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்..... http://tamil.oneindia.in/news/tamilnadu/organic-farming-scientist-nammalvar-dead-190524.html

Link to comment
Share on other sites

ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டு விட்டது புலவர் அண்ணா. :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134067&page=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார்: - 
 

gsiwb-150-seithykal.jpg

 

திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் 

திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் !

இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை ! 

இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு !

பூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் ! 

பூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு ! 

  

இயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும்

செயற்கை உரம் வேண்டவே வேண்டாம் என்றார் !

உலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் !

உலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் !

விவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி 

வேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் !

.

விவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் !

விபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் ! 

தீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் ! 

தேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் !

விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை !

வீ ணாக்கும் என்றார் பலரும் கேட்க வில்லை ! 

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ! 

நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார் ! 

மண்ணை நேசித்த மனிததருள் மாணிக்கம் அவர் ! 

மரத்தையும் நேசித்த மட்டற்ற மாமனிதர் அவர் !

இறுதி மூச்சு உள்ளவரை இறுதி வரும் வரை ! 

இயற்கையைக் காக்கப் போராடினார் ! 

இறுதியாக இருக்கும் இயற்கையிலும் ! 

உறுதியாக இருக்கும் அவர் முகம் ! 

அவருடைய உடலுக்குத்தான் மறைவு வந்தது !

அவருடைய உள்ளத்திற்கு மறைவு வரவில்லை !

இயற்கையை நேசிப்போம் நம்மாழ்வரை நினைப்போம் !

செயற்கையைக் குறைப்போம் நம்மாழ்வரை மதிப்போம் !

 

கவிஞர் இரா இரவி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.