Jump to content

நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தின் பெயர்ப் பலகையின் தமிழ் மொழியின் நிலை (படம்)


Recommended Posts

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

நன்றி :தமிழ்ச் செல்வன்

http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிற்கு எல்லாம் சிங்கள அரசும் அதன் படைகளும் மட்டும் காரணமல்ல.. சிங்கள அரசின் தயவில் இயங்கும் காட்டிக்கொடுப்பு.. தமிழ் மக்கள் அழிப்பு.. தமிழ் அழிப்பு.. தமிழ்.. முஸ்லீம் கும்பல்களும்.. ஆயுதக் குழுக்களும்.. உள்ளூராட்சி மன்றங்களையும்.. மாகாண சபைகளையும் கைப்பற்றுவதும் ஒரு காரணம். இதற்கு தமிழ் பேசும் மக்கள் எனியும் இடமளிக்கக் கூடாது. தமிழ் பிரதேசங்களில் தமிழ் பற்றுள்ள தேசப்பற்றுள்ள.. கல்வி அறிவுள்ள...தமிழ் பேசுபவர்களை மக்கள் பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்..! :(:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன ஆச்சரியம் அங்குள்ள மொழி மட்டுமல்ல மக்களின் நிலையும் இப்போது அப்படித்தானே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

நன்றி :தமிழ்ச் செல்வன்

http://thaaitamil.co...யில்-அமைந்துள்/

ஏன் :unsure: இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் :unsure: இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?

அவர்கள் போட்டிருப்பது [size=5] உனவு [/size] உணவு அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது

இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .

Link to comment
Share on other sites

அது மூன்று சுழி "ண" தான் - ஆனால் அதை எழுதி இருக்கும் முறை தான் பிழை போல் தெரிகிறது..

முழுதாக வட்டம் போடவில்லை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை தரவிறக்கம் செய்து அதை 10 மடங்கு பரிமாணத்திற்கு மாற்றி ஆராய்ந்து பார்த்தேன். பலகையில் ண-எழுத்தின் 3 சுழி வட்டங்களும் அருகருகே ஒன்றுடன் ஒன்று நெருங்கியிருப்பதால் பார்வைக்கு அதிலுள்ளது 2 சுழியுடன் ன-எழுத்துபோல் தெரிந்தாலும் அங்கு உணவு என்பது சரியாகத்தான் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் 100 விழுக்காடு தமிழர் பிரதேசத்திலுள்ள பெயர் பலகைகளிலும் சிங்களத்தை முதன்மைப்படுத்தி எழுதுவதுதான் எனக்கு உறுத்தலாக உள்ளது.

Link to comment
Share on other sites

அவங்களுக்கு தங்கட மொழியிலேயே ஒழுங்காய் எழுத்தத் தெரியுமோ தெரியாது, அதுக்கை நீங்கள் வேறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை இதில எழுத்துப்பிழை.. இருக்கோ இல்லையோ என்பதல்ல.. இவ்வாறான எழுத்துப் பிழைகள்.. பல இடங்களில் முன்னர் அவதானிக்கப்பட்டு உள்ளன தானே. அதேபோல் சிங்களப் பெயர்களும்.. இராணுவ பிரிவுப் பெயர்களும் ஊர்களுக்கும் தெருக்களுக்கும் நினைவிடங்களுக்கும் திணிக்கப்படுகின்றன.

கிட்டு பூங்கா இடிக்கப்பட்டு.. அங்கிருந்து இரும்புகள்.. உட்பட்ட பொருட்கள் டக்கிளஸ் தேவானந்த கும்பலால் காசுக்கு விற்கப்படுகின்றன.

இம்முறை நல்லூரில் திருவிழா அங்காடிகளை வெறும் 10,000 ரூபாக்கு ஒரு சிங்களவன் எடுத்திருக்கிறான்.

யாழ் மாநகர சபை.. மிகுந்த ஊழலும்.. குழறுபடியும் நடக்கும் இடமாக மாறியுள்ளது.

நல்லூர் உற்சவ கால வருமானம்.. டக்கிளசின் வங்கிக் கணக்கிற்கு போகிறது..! சில்லறை வியாபாரிகளின் பணம்.. மாநகர சபை ஈபிடிபி ஆட்களுக்குப் போகிறது. மாநகர சபைக்கோ.. அதன் அபிவிருத்திக்கோ அல்ல..! :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

unavu.jpg

:icon_mrgreen:

mgr%20-taklas.jpg

இந்த உனவு கலஞ்சியத்தை திரந்து வய்ததே ... மான்புமிகுவாம் ஈலத்து எம்.சி.ஆர் அத்தியடிக்குத்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.

அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும் ^_^

வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது

Link to comment
Share on other sites

41986173.jpg?ms=tsu&mv=m&mt=1343727602&cms_redirect=yes&redirect_counter=1

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உனவு(உணவு(க் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

41986173.jpg?ms=tsu&mv=m&mt=1343727602&cms_redirect=yes&redirect_counter=1

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உனவு(உணவு(க் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்"

ஓம் அதில் என்ன எழுத்துப் பிழை நெல்லையன்?...3 சுழி "ண்"ன்னா போட்டுத் தானே எழுதி இருக்குறார்கள்...நீங்கள் தந்த படத்தை பெரிதாக்கியும் பார்த்தேன் அதில் ஒரு பிழையும் தெரியவில்லை ஒரு வேளை என் கண்ணில் தான் கோளாறோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.

அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும் ^_^

வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது

இதில் எழுத்துப் பிழை பற்றியதாக தலைப்பு இல்லையே.

தமிழ் மொழி.. தமிழ் பிரதேசத்திலேயே அதன் முதன்மை இழந்து.. இரண்டாம் இடத்திற்கு நகர்ந்து போய் நிற்பது தான் சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன்..! அதுதான் தமிழின் நிலை அங்கு..!

தாங்கள்.. அதனை புரிந்து கொள்ளாது.. எழுதுறீங்க போல இருக்குது.

அதற்காக எழுத்துப் பிழைகள் நடக்கவே இல்லை என்றில்லை. தமிழர் பிரதேசங்களில்.. சிங்களத்தில்..ஊர்ப் பெயர் மாற்றங்களும்.. சிங்களப் படைத்துறை பெயர்களும்.. புத்த கோவில்களும் திணிக்கப்படுவது நடக்கின்றன என்பதையும் தான் குறிப்பிடுகிறார்கள்..! :icon_idea:

JaffnaLibrary.jpg

normal_JaffnaHinduCollege_2009_16.jpg

இந்த நிலை அங்கு இல்லை..!

Link to comment
Share on other sites

சிங்களமயமாக்கல் உண்மை, ஆனால்,

கமெரா பெட்டியில் அகப்படுவதையெல்லாம் ஊதிப்பெருத்து செய்தியாக்க வெளிக்கிட்டால் உருப்பட்ட மாதிரித்தான். சிறிது காலம் புதிய யாழ்ப்பாணம் (?) எனும் பெயரில் ஒரு இணையத்தளம் இங்கு குப்பை கொட்டியது. இப்போது உயர வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை போலும்.

மொக்கைச் செய்திகளுக்கு வியாக்கியானம் கூறுவது என்றால் கடந்த அறுபது ஆண்டுகள் மட்டும் அல்ல, அதற்கும் உள்ளாகச்சென்று இலங்கை தமிழ் அரசன் இராவணனில் இருந்து ஆதாரம் காட்டலாம். இங்கு விடயம் என்ன என்றால் இணையத்தளங்களில் செய்தியாக விடயங்களை பரப்புகின்றவர்களுக்கு எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பதை முதலில் பகுதிபடுத்தி prioritizeசெய்யத்தெரியவேண்டும். கமெராவில் ஒரு படம் சிக்கிவிட்டது என்பதற்காக தமது தளத்திற்கு வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்வகையில் பரபரப்பாக செய்தித்தலைப்புக்களையிட்டு பின்னர் சொதப்பும்வகையில் வியாக்கியானம் கொடுப்பதற்குப்பெயர் செய்தி இல்லை. அது மொக்கை.

முன்பு நாம் யாழ் ஊர்ப்புதினங்களில் செய்திகள் பதிந்தபோது, கருத்துக்களை தலைப்புச்செய்தியாகப்பதிந்தபோது ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள். இப்போது மொக்கைச்செய்திகள், அலட்டல்கள் தாராளமாக உள்ளன. கேட்பார் யாரும் இல்லை. செய்திகளைப்பதிகின்றவர்களும் இங்கு உள்ளவர்கள் உணர்வுகளைக்கிளறும்வகையில் எதைச்சொன்னாலும் தலையாட்டுவார்கள் எனும் எண்ணத்தில் பதிகின்றார்கள் போல் உள்ளது.

கொசுவைக்கொல்வதற்கு நாளும், பொழுதும் கோடாரியுடன் ஓடித்திரிந்து களைத்துவிட்டு பின்னர் பாம்புவரும்போது கடிவாங்குவதில் அர்த்தம் இல்லை. அழுத்திப்பிடிக்கவேண்டியவை எவை, விலத்தி நிற்கவேண்டியவை எவை என பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்குத்தெரியாவிட்டால் பொது விவாதத்தில் மூக்குடைபடுவதுதவிர வேறொன்றும் நடக்கப்போவது இல்லை. சர்வதேச ஊடகங்களில் சிங்களவ, தமிழர், உட்பட பல்வேறு பகுதியினரை இணைத்து செய்யப்படும் திறந்த/பொது விவாதங்களில் நம்மவர் அசடு வழிவதற்கு தர்க்கரீதியாக அடி கொடுக்கவேண்டி இடங்களில் கொடுக்காமல் கண்டதையும் முறைப்பாடு செய்து மொக்கைபோடுவது காரணம் என்பது நீண்டகாலமாக விவாதங்களை அவதானித்து வருபவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுண்டல்?உமக்கு தமிழே ஒழுங்காய் எழுதவராது.....அதுக்குள்ளை இரண்டுசுழிக்கும் மூண்டுசுழிக்கும் என்னெண்டு வித்தியாசம் தெரியும்? ஆஃ :lol:

Link to comment
Share on other sites

இதில் கரும்புடன் ஒத்து போவதுதான் சரிபோலத்தென்படுகிறது.

வணங்காமுடி சொலவதும் சரி. படத்தை தேவையான அளவு பெருப்பிக்கும் வரை "ண" ,"ன" பேதங்கள் தெரியவில்லை.

ஆனால் படத்தை எடுத்தவர் இந்த "ண" ,"ன" பேதங்களில் மாட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் பலகையை நேரே பார்த்திருக்கிறார்.

எனவேதான் கரும்பின் கருத்து முக்கியத்துவம் அடைகிறது.

ஆனால் தமிழின் பிழை "ண", "ன" பேதத்தில் அல்ல. நாம் ஈழத்தில் "தமிழிலும்", "ஈழத்திலும்" "ழ" கொண்டிருப்பவர்கள் என்பதால் "ழ" கூட விரும்புபவர்கள். கழஞ்சியத்தை "ழ" போட்டுத்தான் எழுதுவோம். http://www.yarl.com/...showtopic=20492

சில (மலேசியாவாக இருக்கலாம்) இணைத்தளங்கள் களஞ்சியமாக பாவிக்கின்றன. இது பிழை. தேடிய பொழுது "காமக் களஞ்சியம்" என்றும் ஒரு இணையம் அகப்பட்டது. அப்போதுமட்டும் தான் "களஞ்சியம்" என்ற பிழையான பாவனை பிரபலமாகியிருப்பதன் காரணத்தை ஊகித்தேன்.

அப்படி ஒரு பாவனையும் இருக்கும் போது "களஞ்சியத்தை" மட்டும் "பெரிதாக படம் பிடித்து இந்த அவசர நேரங்களில் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமா?" என்ற கரும்பின் கேள்வி பொருத்தமானதே.

Link to comment
Share on other sites

தம்பி சுண்டல்?உமக்கு தமிழே ஒழுங்காய் எழுதவராது.....அதுக்குள்ளை இரண்டுசுழிக்கும் மூண்டுசுழிக்கும் என்னெண்டு வித்தியாசம் தெரியும்? ஆஃ :lol:

:D முடியல்ல

Link to comment
Share on other sites

இதில் கரும்புடன் ஒத்து போவதுதான் சரிபோலத்தென்படுகிறது.

வணங்காமுடி சொலவதும் சரி. படத்தை தேவையான அளவு பெருப்பிக்கும் வரை "ண" ,"ன" பேதங்கள் தெரியவில்லை.

ஆனால் படத்தை எடுத்தவர் இந்த "ண" ,"ன" பேதங்களில் மாட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பெயர் பலகையை நேரே பார்த்திருக்கிறார்.

எனவேதான் கரும்பின் கருத்து முக்கியத்துவம் அடைகிறது.

ஆனால் தமிழின் பிழை "ண", "ன" பேதத்தில் அல்ல. நாம் ஈழத்தில் "தமிழிலும்", "ஈழத்திலும்" "ழ" கொண்டிருப்பவர்கள் என்பதால் "ழ" கூட விரும்புபவர்கள். கழஞ்சியத்தை "ழ" போட்டுத்தான் எழுதுவோம். http://www.yarl.com/...showtopic=20492

சில (மலேசியாவாக இருக்கலாம்) இணைத்தளங்கள் களஞ்சியமாக பாவிக்கின்றன. இது பிழை. தேடிய பொழுது "காமக் களஞ்சியம்" என்றும் ஒரு இணையம் அகப்பட்டது. அப்போதுமட்டும் தான் "களஞ்சியம்" என்ற பிழையான பாவனை பிரபலமாகியிருப்பதன் காரணத்தை ஊகித்தேன்.

அப்படி ஒரு பாவனையும் இருக்கும் போது "களஞ்சியத்தை" மட்டும் "பெரிதாக படம் பிடித்து இந்த அவசர நேரங்களில் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமா?" என்ற கரும்பின் கேள்வி பொருத்தமானதே.

அண்ணர் கரும்பு சொன்ன அதே மொக்கைக் கூட்டங்கள் தான். கையில கமெரா இருந்தால், கண்டதையும் படமெடுத்து போடுவாங்கள். இவங்கள் எல்லாம் ஒரு ஊடகம்? நாதாரிக் கூட்டங்கள்.

நான் இன்றுவரை களஞ்சியத்திற்கு "ள" பாவிக்கப் படுவதைத் தான் கண்டிருக்கிறேன். பாடப் புத்தகங்களிலும் "ள" தான் பயன்பட்டிருக்கு. ஈழத்தில் "ழ" இருப்பதால் "ழ" பாவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். அகராதியில் தேடிய போதும் களஞ்சியம் தான் சரி என வருகிறது. ஆனால் பல இணையத் தளங்கள் கழஞ்சியம் எனப் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன். களஞ்சியம் என்று ஏற்றகனவே பாவிக்கப் பட்டிருந்தால் அதை மறைக்க கழஞ்சியம் என அவர்கள் மாற்றி பயன்படுத்தி இருக்கலாம்.

Yarl1.jpg

Yarl2.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.