Jump to content

சர்ச்சை: ஆபாசமா?? இலக்கியமா???


Recommended Posts

ஆபாசமாக எழுதுகிறார் என்று கவிஞர் குட்டி ரேவதி மீது விமர்சனம் வைக்கப்படுவது புதிதல்ல. ஆனால் சமீபத்தில் நீட்சி இதழில் வெளியான இவரது “மாமத யோனி” என்ற கவிதை (!) மிக அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது.

kutti-revati-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.jpg

மாமத யோனி….

தன்னையே காவு கொள்ளும் மாமத யானையென

உடல் வெறித்திருக்கும் யோனி எனது

திசையெங்கும் எழுச்சியுற்று

காமம் கிளர்ந்திருக்கும் பேருயுயிரும் அது

தன் மதச்சாறு பொழிந்த காட்டை

சேற்று நிலத்தை துவம்சம் செய்து திரிகிறது

ஒரு காமக்கிழத்தியைப் போல

சேரிப்பரத்தையர் போல…..

விடலைகளின் புல்வெளிகளை அறுத்துச் சுவைக்கிறது

இந்த ஒற்றை யானையின் மதம் போதும்…

என் மாமத யோனியினுள்ளே

ஒரு யானையைக் கொண்டிருக்கிறேன்

தறிகெட்டோடும் அதன் இச்சைக்கு

இந்த இரவுகள் போதாது… “

-இப்படிப் போகிறது அந்தக் கவிதை.

இது போன்ற தனது கவிதை மீதான விமர்சனங்களுக்கு, “என் உடல், என் கவிதை, என் விருப்பம்” என்கிற ரீதியில் பதில் சொல்வார் குட்டி ரேவதி. அதே நேரத்தில் “அமைப்பு” ரீதியான சிலரிடம் இந்தக் கவிதை குறித்து கருத்து கேட்டு, விவகாரம் ஆக்க நாம் விரும்பவில்லை. சக பெண் கவிஞர்களில் ஒருவரான தமிழரசியிடம், “பெண் கவிஞர்கள் சிலர் மீது ஆபாசமாக எழுதுவதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே” என்று கேட்டோம்.

அவர், “ ஆண் கவிஞர்கள் எழுதுவதை யாரும் கண்டிப்பதில்லை. இதை கவிஞர்கள் என்பதை நீக்கிவிட்டும் சொல்லலாம். ஆண் என்பவன் முதன்மையானவன் என்ற கூற்றையும் முரடன் என்ற எண்ணமும் முதலில் வளர்வது வீட்டுக்குள் இருந்து தான். மணமானதும் பெண் “அவர் திட்டுவார், அவரை கேட்கனும்” என்பதில் தொடங்கி அவள் தாயான பின் “அப்பா திட்டுவார், அப்பாகிட்ட சொல்லாதம்மா,” இப்படி ஆரம்பிக்கிறது ஆணுக்கான முக்கியத்துவம் இதுவே சமூகத்துக்கும் பரவி ஆண் எதை செய்தாலும் சரியாக இருக்கும் ஆண் கோவிப்பான், திட்டுவான், அடிப்பான், மிரட்டுவான் என்ற எண்ணங்களின் தொடர்ச்சி தான்.

%E0%AE%95%E0%AE%B5_%E0%AE%9E%E0%AE%B0_-%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A_.jpg

இதற்கு முழுக்க காரணம் ஆண் அல்ல.தொன்மையான முறைகளும் அதன் தொடர்ச்சியும் தான்.பதவி வகையில் பேசப்படும் போது கலெக்டர், ஆசிரியர், ஓட்டுனர், முதல்வர் என்ற வார்த்தைகள் பொதுவாய் பதவியை குறிக்கும் ஆனால் இதை ஒரு ஆண் தான் வகிக்கும் என்பது மனதின் நிர்ணயம். அல்லாது போனால் பெண் கலெக்டர், பெண் ஆசிரியர் இப்படி பதவிக்கு முன் இனம் குறிப்பிட்டு பெண்ணை தனித்துவப்படுத்தியும் வருவதாலும் ஆண் எதை செய்தாலும் அனுமதிக்கபடுகிறான்.

அவனுக்கு எல்லாம் தெரியும், அவனால் மட்டும் எல்லாம் முடியும் என்ற கருத்தில் ஆழ்ந்து போய் விட்டதாலோ என்னமோ இங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு இணங்க ஆண் கவிஞர்கள் எழுதுவதை யாரும் கண்டிப்பதில்லை. கண்டிக்கலாம் இதை ஆண்கள் எதிர்க்க போவதில்லை., நாம் முன்வருவதில்லை. குறிப்பாக பெண் கவிஞர்கள் சிலர் உடல் சார்ந்து எழுதுவதையும், ஆண் பெண் உறவுகள் குறித்து எழுதுவதையும் கடுமையாக கண்டிக்கிறார்கள் பலர்.

பெண்களை ஒரு கட்டுக்குள் வைத்து வரையறுத்த நம் சமுதாய கட்டமைப்புக்குள் இருந்து இன்னும் பெரும்பாலான ஆண்கள் தங்களை வெளிக்கொணர தயாராக இல்லை .இது ஒரு பரம்பரை குணாதிசயம் போலவே ஆகிவிட்டது. எல்லா ஆண்களும் இந்த வரிசையில் இல்லை.எழுத்துக்களிலும் பாலினத்தை நுகரும் தன்மை இன்றைய காலகட்டதிலும் என்பது வியப்பாய் இருக்கிறது.

Modern-Art-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.jpg

ஆணாகிய நீங்கள் சொல்லும் போது விரசமாய் இல்லாத ஒன்று பெண் ஒருவர் எழுதும் போது அது ஏன் விமர்சனத்துக்கும் கண்டிப்புக்கு உட்படுகிறது?பெண் என்பவள் இப்படி தான் இருக்கவேண்டும் இந்த விதங்களில் செயல் பட்டால் மட்டுமே நீ அழகானவள், இலக்கணமானவள் என்ற எண்ணமும் அவளுக்கு என்று மனதளவில் ஒரு எல்லை வகுத்ததன் விளைவே இது.

இதையெல்லாம் எதிர்த்து துணிந்து பெண் என்பவள் எழுதினால் இந்த குறிப்பிட்ட ஆண்வர்க்கம் உடனே அந்த பெண்ணின் குணம், நடத்தை, என அவளை கீழ்தரமாய் விமர்ச்சிக்கவும் தொடங்கிவிடுகிறது, இங்கு எழுத்துக்கு தேவை என்ன? வாசிப்பவர்களுக்கு பயன்பாடு பொழுது போக்கு, க்ருத்துக்களை அளித்தல், இதில் தேவைக்கு ஏற்ப காதலையும் காமத்தையும் இணைப்பதில் தவறில்லை. உள்ளங்கை நெல்லிக்கனியாய் அல்லாது இலைமறைவு காய் மறைவாய் தருவதும் பெருவதும் தான் யாவர்க்கும் நலம்.

இன்றைய நாகரீக உலகிலும் ஆண் பெண் என்ற பிரிவினை பேத களத்தில் இருப்பது வருந்ததக்கதே.எல்லாவற்றையும் கடந்து விந்தையாய் வியப்பாய் இருப்பது ஆண் பெண் உறவு உடல் சார்ந்த தகவல்கள் எழுதி தான் அறியவேண்டும் என்ற காலகட்டத்தை நாம் என்றோ கடந்துவிட்டோம்.

இதை கண்டிப்பதாயின் முடிவே இருக்காது. அவரவர் உணரவேண்டும் தன் எல்லையை ஒருவர் செய்கிறார் என்று நாம் செய்வதில் இருக்கும் சமூக அக்கறை என்ன? இது ஏதும் அற்ற நிலையில் எல்லாம் அவசியமில்லாததே. ஆண் ஒருவர் எழுதுவாராயின் அது பத்தோடு பதினொன்றாகவும் பெண் எழுதினால் கடும் கண்டனம் விமர்ச்சனம் போராட்டம் ஏன்? அதில் நன்மை என்ன? இதில் தீமை என்ன? பெண்ணாய் அவரவர் தம் இயல்புக்கும் தேவைக்கும் கற்பனை செய்து கொண்டு இப்படி தான் இவ்வளவு தான் என்று எல்லையை வரையறுக்க எவருக்கும் உரிமையில்லை,

துணிந்து எழுதும் பெண் எழுத்தாளர்கள் அதற்குண்டான பாதிப்பை கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பது மறுப்பதற்கில்லை. ஒருவேளை இந்த குறிப்பிட்ட ஆண் வர்க்கம் எப்படி பெண்ணுக்கு ஒரு வரைமுறை வகுத்து அதற்கு மேல் எழுதினால் கண்டிப்பதும் குரல் எழுப்புவதுமாய் இருக்கிறதோ அப்படியே அத்தகைய எழுத்துக்களை ஆண் ஒருவர் எழுதும் போது நாமும் எதிர்த்தே ஆகவேண்டும்.

ஆண் அவன் என்னவேண்டுமானாலும் செய்வான், அவன் ஆம்பிளை நீ பொண்ணு தனியா வரும் போது ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னான்னு இப்படி பெண்ணுக்கு பெண்ணே கூட ஒடுக்கும் நடைமுறை இன்னும் இருக்கிறது.நாம் (ஆண் பெண்)எழுதி தான் பட்டவர்த்தனம் செய்து தான் ஆரோக்கியமற்ற ஒரு நிகழ்வு அறியபடும் என்பதில்லை.ஆண், பெண் என்ற பிரிவினை ஒதுக்கி இருபாலரும் நலிந்து வரும் வாழ்வியலின் அழகை ஆரோக்கியமாக்கலாமே..

இன்று நானும் பலராலும் அறியப்பட்டிருக்கிறேன் என்றால் என் நண்பர்களே காரணம். என்னை பெண் என்று அவர்களோ அவர்களை ஆண் என்று நானோ இனம் பிரிக்கவில்லை. நட்பால் இணைந்தோம், திருத்தம், வடிவமைப்பு, கற்பித்தல் என பல சொல்லி என்னை மேம்படுத்தியதும் அவர்களே..அன்பால் இணைவோம், தேவையிருப்பின் அறிவுறுத்துவோம், இருக்கும் இரு இனத்திற்கு பேதமைகள் தேவையற்றது” என்றார் கவிஞர் தமிழரசி.

வாசகர்களே… உங்கள் கருத்து என்ன.. எழுதுங்களேன்.

- தஞ்சை சுந்தரர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு அருமையான கவிதை, உணர்ச்சிகளை கொட்டி எழுதியுள்ளார், நன்றி மகாராஜா பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரேவதியின் கவிதை நன்றாக இருக்கிறது!

ஆனால், அதற்கும் காட்டையழிக்கும் மதம் கொண்ட ஆண்யானையே உவமையாகின்றது!

பெண் யான,மதம் கொள்வதில்லையா?

அந்த யோனி, ஆக்கத்திற்குப் பயன்படுமாயின், அது கவிதைக்கு வெற்றியே!

இணைப்புக்கு நன்றிகள்,மகாராஜா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரியல் எல்லாம் இப்படியான கவிஞர்களின் புகழீட்டலுக்காக ஆபாசமாகக் காட்டப்படும் விபரீதத்தைத் தவிர.. வேறெந்த ஆபாசமும் இதில் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு பெண்ணின் உணர்சிகளை இயல்பாக வடித்திருக்கும் ஒரு அழகான கவிதை.

ஆபாசம் என்பது பார்பவர்களின் மனசை பொறுத்தது.

சத்திர சிகிச்சையில் ஒரு பெண்ணின் நிர்வாண உடம்பை பார்த்து ஒரு நல்ல வைத்தியன் ஆபாசம் கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

ஒரு பெண்ணின் உணர்சிகளை இயல்பாக வடித்திருக்கும் ஒரு அழகான கவிதை.

ஆபாசம் என்பது பார்பவர்களின் மனசை பொறுத்தது.

சத்திர சிகிச்சையில் ஒரு பெண்ணின் நிர்வாண உடம்பை பார்த்து ஒரு நல்ல வைத்தியன் ஆபாசம் கொள்வதில்லை.

[size=5]இதை எழுதியது ஒரு பெண் என்பதைத்தான் ஜீரணிக்கக் கஸ்டப் படுகின்றார்கள் என்று நினைக்கின்றேன்...[/size]. [size=5]ஆணாதிக்கவாதிகள்[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.