Jump to content

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SLMC அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு TNAயை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? இணைப்பு 2

Tna%20meeting._CI.png

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இரத்தாகியுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் பம்பலப்பிடியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் காரியலயத்தில் நடைபெற ஏற்பாடகியிருந்தது.

இந்த பேச்சுவார்தைக்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இன்றைய கூட்டம் 7 மணியளிவல் ஆரம்பமாகவிருந்த நிலையில் 7 மணிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்திருந்தனர்.

எனினும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் சென்றிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா ஹசன் அலியுடன் தொடர்பு கொண்ட போது தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், தாங்களும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், தலைவர் வந்தவுடன் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் தொலைபேசிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தாமும் பேச்சுவார்த்தையை கைவிட்டு மீண்டும் தமது இல்லங்களுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லையாயின் அறிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கியஸ்த்தர்கள் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு தமிழ்க் கூட்டமைப்பை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? அல்லது தமிழ்க் கூட்டமைப்பை காத்திருக்க வைத்து கழுத்தறுத்ததா? அல்லது மகிந்த சகோதரர்களி ன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இருந்தார்களா? என விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக தான் மரியாதை வைத்திருக்கும் வயதிலும் அரசியலிலும் மூத்தவரான இரா சம்பந்தனை காத்திருக்க வைத்து அமைச்சர் ஹக்கீம் அவமதித்தாரா என்ற கேள்விகள் பலரிடையே எழுப்பப்பட்டுள்ளன.

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்தையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரசின் இறுதி முடிவு நாளைய தினம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வெளியிடப்படவுள்ளது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியும் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 15 ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ளது.

11 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் மொத்தமாக 15 ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.

இந்த நிலையில் 7 ஆசனங்களை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இரு தரப்புக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

எனினும் முதலமைச்சர் பதவி தமக்கு தேவை என்ற நிலைப்பாட்டுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தமது யோசனையை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று இலங்கை அரசதரப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் புதியதொரு ஆட்சியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அமையவுள்ள கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பொறுப்பொன்றும் மு.காவுக்கு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளிவராத நிiலியல் கூட்டமைப்பினருடனான முஸ்லிம் காங்கிரஸின் இந்த சந்திப்பானது வெறும் கண்துடைப்பு நாடகம் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82947/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

இன்றைய கூட்டம் 7 மணியளிவல் ஆரம்பமாகவிருந்த நிலையில் 7 மணிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்திருந்தனர்.

எனினும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் சென்றிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா ஹசன் அலியுடன் தொடர்பு கொண்ட போது தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், தாங்களும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், தலைவர் வந்தவுடன் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் தொலைபேசிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லையாயின் அறிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்கள் இரத்தத்தில் ஓடும் ஈனப் புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படிப்பட்டவர்களுக்கும் துதிபாட ஒருசில "தமிழர்" உள்ளனர்!

Link to comment
Share on other sites

முஸ்லீம் காங்கிரஸ்; கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய துரோகம் செய்துள்ளது, முஸ்லீம்; மக்களனினதும் தமிழ் மக்களினதும் ஒற்றுமையை உலகுக்கு காட்ட வேண்டிய காலத்தில் முஸ்லீம் காங்கிரஸ் தனது துரோகத்தனத்தை உலகுக்குக் காட்டியுள்ளது, கிழக்கு மாகாணத்தில் அரச எதிர்பு உச்ச நிலையில் இருப்பதை அறிந்து, தான் அரசுக்கு எதிரனவன் என நாடகமாடி, தமிழ் முஸலீம் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று வென்றபின் வேதாளக் கதைபோல் அரசில் இணைகிறார் இவர் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் வருவதை விரும்பாத ஒரு சுயநலவாதி. தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டுமென்று பேச்சு வந்தால் தனி அலகு கேட்பார். பின்னர் அரச தரப்புக்கு தாவி விடுவார். அமைதியாக இருப்பார். வேதாளத்துக்கும் முருங்கை மரத்துக்கும் என்ன தொடர்போ அதுபோல்தான் ; ரவூப் ஹக்கீமுக்கும் அரசாங்கத்துக்கும் உளன்ள தொடர்பு.

Link to comment
Share on other sites

முசிலிம் காங்கிரசு கிழக்கிலங்கை இசுலாமிய மக்களுக்கு இழைக்கும் துரோகம் அவர்களை கிழக்கில் இருந்தும் வெளியேற்றும்.

Link to comment
Share on other sites

[size=4]சம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை[/size]

பி.பி.சி

[size=3]கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்று தமக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தாங்கள் காத்திருந்தும் தமக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்று தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தனர். இந்தப் பின்னணியிலேயே இரண்டு தரப்பினருக்கும் இடையில் இன்று இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது. நேற்று சனிக்கிழமையும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்க் கூட்டமைப்பினர், தாம் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக அழைப்பு விடுத்தால் அதுபற்றி ஆராய்ந்து பார்க்கலாம் என்றும் கூட்டமைப்பு கூறியது. கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை கருத்தில்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தாங்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு இன்றைய சந்திப்பின்போது சுட்டிக்காட்டியதாக சம்பந்தன் பிபிசியிடம் கூறினார். தமது கருத்துக்களை மிக அவதானமாக ஆராய்ந்துவருவதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார். இன்னும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் முஸ்லிம் காங்கிரஸ் முடிவொன்றை எடுக்கும்வரை கால அவகாசம் வழங்குவதே பொருத்தமானது என்று தான் கருதுவதாகவும் சம்பந்தன் மேலும் கூறினார்.[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.