Jump to content

பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்?: ஜெயமோகனின் கேள்வி


Recommended Posts

ரகு,

பாமா எனது துணைவரின் மச்சாள் ஆவார்

:rolleyes: :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 174
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் , நான் 81 இல் நாட்டைவிட்டு வெளிக்கிட்டு விட்டேன் .இன்னும் ஒரு வரி எழுதினால் யார் என்று பிடித்துவிடுவீர்கள் .கிளியன் இப்போ எங்கள் உடைந்து போன எனது அக்கா வீட்டில் தான் இருக்கின்றார் .2005 இல் இலங்கை போகும் போது அக்கா வீட்டை பார்க்க போக அவர் அங்கு இருந்தார் .

கசியஸ் கிளே என்று எழுதிய கதையில்? வாமாசுக்கு அருகில் இருந்த எமது தோட்டத்தை பற்றி எழுதியிருந்தேன் .

அர்ஜுன்,

உங்களைக் கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறேன்??,

உங்களை எனக்குத் தெரிய வாய்பில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் கோண்டாவிலில் வாழத் தொடங்கியது 1982 இலிருந்துதான். அதற்குமுதல் கொழும்பிலிருந்தோம்.

சிலவேளை நீங்கள் வசித்த வீடு எனக்குத் தெரிந்திருக்கலாம், உங்கள் அப்பாவைக் கூட நான் கண்டிருப்பேன்.

சைக்கிள் கடைக் கிளியன் லதா தியேட்டருக்கு அருகிலிருந்த சிங்கப்பூர் பென்ஷனியர் பப்பாவின் வீட்டு வளவினுள் ஒரு மூலையில் சிறு கொட்டில் கட்டி வசித்து வந்தார். இது நடந்தது 1988 இற்குப்பிறகு, அப்போதுதான் அவர் திருமணம் முடித்து மனைவியையும் அழைத்து வந்திருந்தார். நானும் 1988 உடன் மட்டக்களப்பிற்குச் சென்றுவிட்டேன், அதன் பின் அவர் எங்கு வாழ்ந்தார் என்று தெரியவில்லை.

நீங்களும் கோண்டாவில் என்பதில் மகிழ்ச்சியே !!

1987 இல் நடந்த அநியாயங்கள் னக்கு நேற்று நடந்தவைபோல இன்னும் தெரிகின்றன. அதனால்த்தான் இந்திய இராணுவம் செய்ததை சரியென்று யாரும் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரகு,

பாமா எனது துணைவரின் மச்சாள் ஆவார்

நன்றி வல்வை சகாறா,

எனக்கு பாமாவின் குடும்பத்தையும் அவர்களது பேரன் பேத்திகள், மாமாமார் மட்டுமே தெரியும். மற்றையவர்களைக் கண்டிருப்பேன், பழகியது கிடையாது. உங்கள் தகவலுக்கு நன்றி !

நன்றி ரகு..

உங்களுக்கும் ஆட்களைத் தெரிந்திருக்கிறதே, தாங்களும் கோண்டாவிலோ??? :D

Link to comment
Share on other sites

அயோக்கியத்தின் உச்சம் ஜெயமோகன்

IPKF4.jpg

88ன் தொடக்கம். அப்போதுதான் நாங்கள் வீடுகளுக்குத் திரும்பியிருந்தோம். எங்களுடைய வீடோவெனில் பேய்ப்படங்களில் வரும் மர்மவீடு போலிருந்தது. மரங்களும் செடிகொடிகளும் தான்தோன்றித்தனமாக வளர்ந்து வீட்டை மூடிவிட்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நாங்கள் வீட்டில் இருக்கவில்லை. இரண்டு மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்ற இந்திய

இராணுவத்தின் கெடுபிடியில் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடியிருந்தோம். ஆடு, கோழி உட்பட வீட்டில் அனேகமானவை காணாமல் போயிருந்தன.

வீட்டிற்கு திரும்பிய எமக்கு புதிய பிரச்சனை காத்திருந்தது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் நேரங்கெட்ட நேரங்களிலெல்லாம் இந்திய இராணுவத்தினர் ஊருக்குள் வர ஆரம்பித்திருந்தனர். பற்றைகளுக்குள் ஒளிந்திருந்து விடிகாலை வேளையில் சத்தமில்லாமல் முற்றத்தில் வெளிப்பட்ட அவர்களை எதிர்கொள்வது பயங்கரமானதாக இருந்தது.

<a href="

http://1.bp.blogspot.com/-G081fUgPz8Q/T7Qu7wfzspI/AAAAAAAAAaw/niyxfu2Q2pI/s1600/IPKF6.jpg" imageanchor="1" style="clear: left; margin-right: 1em; margin-bottom: 1em; float: left;">IPKF6.jpg

இந்திய இராணுவம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாக அரசல்புரசலான செய்திகள் பரவியிருந்தன. சனங்களுக்கோ அவற்றை நம்புவது கடினமானதாக இருந்தது. ஏனெனில் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் கால் வைத்தபோது குப்தா வாழ்க! பூரி வாழ்க! என வானளவாக கோசமெழுப்பி வரவேற்றிருந்தனர்.

அவங்கள் வந்தால் நீங்கள் ஒருவரும் வீட்டிற்குள் இருக்கக் கூடாது, உடனடியாக வெளியே வந்து விடவேணும் என்று அம்மா எங்களுக்கு கண்டிப்பான உத்தரவிட்டிருந்தா. அவர்கள் வரும்போதெல்லாம்

முற்றத்தில் அம்மாவைச் சுற்றி நின்று கொண்டோம்.

அண்ணனுடன் இதைப் பற்றி கதைத்தபோது வங்கத்தில் நடந்ததை நினைவுபடுத்தினார். "இன மொழி மத வேறுபாடுகள் இருந்தாலும் எல்லா இராணுவமும் ஒரே குணாம்சம் கொண்டதுதான்" என்றார். அடிமனதைப் பயம் கவ்விக் கொண்டது. அப்ப நாங்கள் என்னதான் செய்கிறது! அண்ணனிடம் கேட்டேன். கடைசிவரைக்கும் அதைத் தடுக்க முயற்சி செய், இல்லையெனில் அதனை ஒரு விபத்தாக கருதிக்கொள் என்றார். இப்போது உண்மையில் பயம் அதிகமானது. ஊருக்குள் இராணுவம் நுழைந்த போதெல்லாம் ஊர்ச்சனங்கள் ஊரின் மத்தியிலுள்ள கோவிலுக்கு ஓடினார்கள். அம்மாவும் தனது

பாதுகாப்பு வலயத்தில் நம்பிக்கை இழந்திருக்க வேணும். எங்களையும் கோவிலுக்கு போகும்படி அம்மா வற்புறுத்தத் தொடங்கினா.

ஒருநாள் ஊருக்குள் வழமையை விட பதட்டமும் சனங்களின் கூக்குரலும் அதிகமானதாக இருந்தது. ஏதோ அவலம் நிகழ்ந்து விட்டதென ஊகிப்பதற்குள் வீட்டில ஒருவரும் இருக்க வேண்டாம், எல்லோரும் கோவிலுக்கு ஓடுங்கோ. அவங்கள்......................................... அக்காவைக் கெடுத்துப்

போட்டாங்கள். பொம்பிளப் பிள்ளயள் ஒருத்தரும் வீட்டில இருக்க வேண்டாம், என சனங்கள் கத்தியவாறே ஓடிக்கொண்டிருந்தார்கள். அம்மாவின் திட்டலையும் கேட்டுக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னால் .............. அக்காவின் கணவர் பெருங்குரலெடுத்து அழுதவாறே ஓடிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒரு கைகுழந்தை இருந்தது. அவரையும்

துரத்திவிட்டு அவர்களின் குழந்தையையும் வாழைத்தோட்டத்திற்குள் போட்டுவிட்டு அக்காவை பாலியல் வல்லுறவு புரிந்த அவலத்திற்கு என்ர ஊர்ச் சனங்களே சாட்சி.

இதை விடவும் நாங்கள் ஊருக்குத் திரும்பி வந்தபோது கடைகளுமில்லை. பொருட்களுமில்லை. இராணுவமே நிவாரணம் என்ற பெயரில் அரிசி பருப்பு வழங்கினார்கள். நிவாரணம் வாங்கப் போன எனது அக்கா அழுது கொண்டு வந்தாள்.. இப்படியொரு அவமானம் நாங்கள் படவேணுமோ__ அவங்கள் சோதனை செய்யிறதெண்டு எங்கையெல்லாம் கை வைக்கிறாங்கள் தெரியுமே.

இதுவொரு சின்ன உதாரணம் மட்டுமே. அவமானத்தால் நிகழ்ந்த தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் எத்தனை என்று ஜெயமோகன் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்..

ஜெயமோகனுக்கு துணிவிருக்குமேயானால் என்னுடைய சொந்தச் செலவில் அழைத்துச் செல்கிறேன்.

இந்தப் புலுடாக் கதையைச் சொல்லிக்கொண்டு எங்கள் மண்ணுக்கு ஜெய மோகன் வருவாரேயானால் எங்கள் பெண்களே சந்னதம் ஆடுவார்கள். காரியம் நடத்துக்கூட எலும்புத்துண்டும் எஞ்சாது மகனே. என்னவெல்லாமோ எழுதவேண்டும்போல் இருக்கிறது.... வேண்டாம்.

http://www.piraththiyaal.com/2012/05/blog-post_16.html?spref=fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பைத்தியத்தின் கருத்தை தமிழ்நாட்டு மக்களின் கருத்தாக யாரும் எடுத்துகொள்ளவேண்டாம். இவருக்கு ஈழத்தில் சிதைக்கபட்டவர்கள் தன்னுடைய தாயும் சகோதரிகளும் என்ற விஷயத்தை மறந்து விட்டார் .ஒருவேளை தன்னுடைய தாயும் சகோதரிகளுக்கும் இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தால் அவர்கள் இவரை நம்ப வைக்க இன்னொரு முறை கற்பழித்தவனை கொண்டு வந்து செமுறை விளக்கம் கொடுக்க வேண்டி இருக்குமோ தெரிய வில்லை. தங்களுக்கு நடந்த கொடுமையையும் அதற்கு காரணமானவர்களையும் குறையொன்றும் கூற கூடாத உன்னத நிலையை தமிழன் அடைந்துவிட்டான் என்று பெருமை பட்டுகொள்ளுங்கள். தமிழ் பைத்தியம் அவர்களே தங்களுக்கு மேலும் மேலும் இது சமந்தமாக சாட்சிகள் தேவை பட்டால் என்னுடன் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள். பாவம் ஈழ தமிழ் உறவுகளை விட்டுவிடுங்கள் அவர்களை நீங்களும் ...........................ஆயியம் ஆயிரமாக கொல்லப்படும்போது தமிழக தமிழன் மானாட மயிலாட பார்த்துகொண்டு இருந்து இருந்தாலும் இன்னமும் தங்களுடைய ஒரே மனோபலமாக நம்பிக்கொண்டு இருபது எங்களை போன்ற தமிழக தமிழனைத்தான். அந்த ஒரு நம்பிக்கையாவது விட்டு வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...........................ஆயியம் ஆயிரமாக கொல்லப்படும்போது தமிழக தமிழன் மானாட மயிலாட பார்த்துகொண்டு இருந்து இருந்தாலும், இன்னமும் தங்களுடைய ஒரே மனோபலமாக நம்பிக்கொண்டு இருபது எங்களை போன்ற தமிழக தமிழனைத்தான். அந்த ஒரு நம்பிக்கையாவது விட்டு வையுங்கள்.

நன்றி கண்ணீர்.

தமிழக தமிழர்களின் மனநிலை நிலையில்லாவிடினும், தார்மீக ஆதரவை ஓரளவாவது இன்னமும் எம்மிடம் நம்பிகொண்டிருப்பவர்களின் ரணத்தை சீண்டி, அதைரியப்படுத்தும் செயல்கள், உகந்ததல்ல.

இதை ஒரு தமிழக உறவே செய்திருப்பது, வருந்தத்தக்கது.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைத்தியத்தின் கருத்தை தமிழ்நாட்டு மக்களின் கருத்தாக யாரும் எடுத்துகொள்ளவேண்டாம். இவருக்கு ஈழத்தில் சிதைக்கபட்டவர்கள் தன்னுடைய தாயும் சகோதரிகளும் என்ற விஷயத்தை மறந்து விட்டார் .ஒருவேளை தன்னுடைய தாயும் சகோதரிகளுக்கும் இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தால் அவர்கள் இவரை நம்ப வைக்க இன்னொரு முறை கற்பழித்தவனை கொண்டு வந்து செமுறை விளக்கம் கொடுக்க வேண்டி இருக்குமோ தெரிய வில்லை. தங்களுக்கு நடந்த கொடுமையையும் அதற்கு காரணமானவர்களையும் குறையொன்றும் கூற கூடாத உன்னத நிலையை தமிழன் அடைந்துவிட்டான் என்று பெருமை பட்டுகொள்ளுங்கள். தமிழ் பைத்தியம் அவர்களே தங்களுக்கு மேலும் மேலும் இது சமந்தமாக சாட்சிகள் தேவை பட்டால் என்னுடன் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள். பாவம் ஈழ தமிழ் உறவுகளை விட்டுவிடுங்கள் அவர்களை நீங்களும் ...........................ஆயியம் ஆயிரமாக கொல்லப்படும்போது தமிழக தமிழன் மானாட மயிலாட பார்த்துகொண்டு இருந்து இருந்தாலும் இன்னமும் தங்களுடைய ஒரே மனோபலமாக நம்பிக்கொண்டு இருபது எங்களை போன்ற தமிழக தமிழனைத்தான். அந்த ஒரு நம்பிக்கையாவது விட்டு வையுங்கள்.

நன்றி கண்ணீர், நன்றி வன்னியன் !!

நன்றி, நன்றி !!!

நன்றி கண்ணீர்.

தமிழக தமிழர்களின் மனநிலை நிலையில்லாவிடினும், தார்மீக ஆதரவை ஓரளவாவது இன்னமும் எம்மிடம் நம்பிகொண்டிருப்பவர்களின் ரணத்தை சீண்டி, அதைரியப்படுத்தும் செயல்கள், உகந்ததல்ல.

இதை ஒரு தமிழக உறவே செய்திருப்பது, வருந்தத்தக்கது.

.

Link to comment
Share on other sites

வணக்கம் இன்னுமொருவன்,

ஜெயமோகனின் நுல்களை ஏன் உங்களால் புறக்கணிப்பு செய்யமுடியவில்லை என்பதை விரிவாகக்கூற முடியுமா?

வணக்கம் கலைஞன்,

உங்கள் கேள்விக்கு நன்றி.

ஒற்றை வரியில் சொல்வதானால் புறக்கணிக்க முடியவில்லை என்பதல்ல, புறக்கணிக்கத்தேவையில்லை.

1. எனது பார்வையில் என்னை ஆத்திரப்படுத்தியவர்களின் பிரசுரங்களை வாசிக்கமாட்டேன் என்பது தீக்கோளித்தனமானது.

2. புறக்கணிப்பு என்பது எம்மீது நாமாக இட்டுக்கொள்ளும் ஒரு சுதந்திர மறுப்பு. நான் என்னத்தை எப்போது வாசிப்பேன் என்பதை பிறிதொரு மனிதன் நிர்ணயிக்க அனுமதிப்பதைப் பலவீனமாகக் கருதுகிறேன்.

3. அலெக்சாண்டர் பிளெமிங் ஒரு அயோக்கியன் என்றும் அதை எனது பூட்டன் அன்றே அறிந்திருந்தார் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளின், பிளெமிங் அயோக்கியன் என்று தெரிந்தும் எனது பூட்டன் 1940ம் ஆண்டில் பெனிசிலின் பாவித்தமை அபத்தம் என்று கூறுவதிலோ அல்லது பெனிசிலினையோ அல்லது அக்கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக இற்றைவரை உருவாக்கப்பட்டுவிட்ட மருந்துகளையேர் நான் பாவிக்கமாட்டேன் என்று கூறுவதிலோ, நான் மேற்படி மருந்துகளைப் பாவிப்பது மேற்படி அயோக்கியங்களிற்கு வருமானத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுக்கும் என்று கூறுவதிலோ எனக்கு உடன்பாடில்லை.

4. அறிவிக்கப்பட்ட புறக்கணிப்புக்களும் பொருளாதாரத் தடைகளும் கள்ளச் சந்தைகளை உருவாக்குவதோடு தடைசெய்யப்பட்ட பொருட்களிற்கான சக்திவாய்ந்த விளம்பரங்களுமாக எதிர்மறை விளைவுகளை உருவாக்குவது தவிர்க்கமுடியாதது.

5. எதிரி ஒற்றைக் குழல் ஏவகணையினைக் கண்டுபிடித்துப் பாவிக்கிறான், அவனது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எனது அறிவைச் சேர்த்து என்னால் பல்குழல் ஏவுகணை உற்பத்தி செய்து பாவிக்கமுடியும் என்றால், கோவக்காறனின் கண்டுபிடிப்பில் இருந்து என்னண்டு நான் என்ர கண்டுபிடிப்பை வளர்ப்பது என்று சிந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நானறிந்தவரை, உலகின் வெற்றிபெற்ற சக்திகள் எவையும் அவ்வாறு சிந்தித்துமில்லை.

இப்பிடிச் சொல்லிக்கொண்டே போகலாம்....

எனது பார்வையில், குறித்த ஒரு விடயத்தை வெளிப்படையாகப் புகழாதிருப்பது என்பது வினைத்திறன் மிக்க அங்கீகார மறுப்பு. உலகின் வெற்றிபெற்ற சக்திகள் நாளாந்தம் கடைப்பிடிக்கும் சர்வசாதாரணமான அரசியல்.

உலகின் கணிசமான யுத்தங்கள் மனவெளிகளிலேயே நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

Link to comment
Share on other sites

உங்களுக்கும் ஆட்களைத் தெரிந்திருக்கிறதே, தாங்களும் கோண்டாவிலோ??? :D

நான் கோண்டாவில் அல்ல.. :D

தங்கராசா மாஸ்ரரை இங்கே சந்தித்திருக்கிறேன்..! இன்னொரு திரியில் இரு சகோதரிகள் கொலை பற்றி எழுதியிருந்தேன்.. அதில் ஒருவர்தான் பாமா.. மற்றையது அவரது நண்பி என நேற்று கேள்விப்பட்டேன்.. இந்திய ராணுவத்தின் தாக்குதலில் தப்பி ஓடியபோது இவர்மட்டும் நண்பியின் வீட்டிற்குச் சென்றுவிட்டதால் இருவரும் இறக்கவேண்டி வந்துவிட்டது..

கனடாவில் இருக்கும் சகோதரியைக் காப்பாற்றிவிட்டது ஒரு தமிழகத்து இராணுவ வீரர் என்றும் கேள்விப்பட்டேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோண்டாவில் அல்ல.. :D

தங்கராசா மாஸ்ரரை இங்கே சந்தித்திருக்கிறேன்..! இன்னொரு திரியில் இரு சகோதரிகள் கொலை பற்றி எழுதியிருந்தேன்.. அதில் ஒருவர்தான் பாமா.. மற்றையது அவரது நண்பி என நேற்று கேள்விப்பட்டேன்.. இந்திய ராணுவத்தின் தாக்குதலில் தப்பி ஓடியபோது இவர்மட்டும் நண்பியின் வீட்டிற்குச் சென்றுவிட்டதால் இருவரும் இறக்கவேண்டி வந்துவிட்டது..

கனடாவில் இருக்கும் சகோதரியைக் காப்பாற்றிவிட்டது ஒரு தமிழகத்து இராணுவ வீரர் என்றும் கேள்விப்பட்டேன்..

உண்மைதான். பாமாவுடன் சேர்ந்து கொல்லப்பட்ட மற்றைய பெண்ணின் பெயர் பேபி. பேபிகுடும்பத்தில், அவர், அவரது மூன்று அண்ணன்கள், தகப்பன் உற்பட ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். அத்டுடன் பாமாவுடன், அவர்து மாமன் குலமும் அன்றிரவு கொல்லப்பட்டார். மற்றையவர்கள் அயலில் வசித்தவர்கள்.

Link to comment
Share on other sites

ரகுநாதன் ,

தங்கராசா மாஸ்டர் எனதுவீட்டிற்கு முன்பாக தான் தினமும் பாடசாலை செல்வார் .எனது அக்கா இருந்தது லதா தியேட்டர் தாண்டி இன்னமும் உள்ளுக்குள்ள வர முன்னால் அசோகா மரங்கள் நின்றவீடு .அந்த வீட்டிற்கு முன்னால் முன்னாள் இலங்கை சீ.ஐ .டி யும் மனைவியும் இந்தியன் ஆமியால் சுடப்பட்டு இறந்தார்கள் ,இவர்களின் மகன் செல்வன் பின்னர் புலிகளில் சேர்ந்தார் .

சரவணபவன் மரக்காலை வைத்திருந்தது அப்பாவின் தம்பியாரின் காணி ,அதை இப்போ கனடாவில் இருக்கும் ஒரு நகைக்கடை முதலாளி(அவரும் கோண்டாவில்தான்) வாங்கி தனது இந்தியாவில் படித்து டாக்டர்களான பிள்ளைகளுக்காக பெரிய நேர்சிம்கோம் கட்டப்பபோவதாக அறிந்தேன் .

இராசரத்தினம் குடும்பம் அனைவரையும் எனக்கு தெரியும் ,சிலர் கனடாவிலும் இருக்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

இந்திய போர்க்குற்றத்தை வெளிக்கொண்டுவர வெளிக்கிட்ட திரி

இறுதியில் எம்மை யார் யார் என விலாசம் கேட்டு வெளிக்கொண்டு வருவதில் வந்து நிற்கிறது.

இதுவும் அவர்களின் வெற்றியோ? :( :( :(

Link to comment
Share on other sites

1987 - 1990 காலப்பகுதியில் இந்தியப்படை பொதுமக்களை திட்டமிட்டு இலக்கு வைத்தே தாக்குதல் நடாத்தியது. குறிப்பாக, த.வி.புவுடன் ஏற்பட்ட மோதல்களில் தமக்கு ஏற்பட்ட இழப்புகளிற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தியப்படைகள் பொதுமக்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளிலும் கொலைகளிலும் ஈடுபட்டன.

இந்தியப்படைகளிற்கு இழப்பு அதிகளவு ஏற்பட்ட இடங்களில் பாலியல் வன்புணர்வு அதிகளவு நடைபெற்றுள்ளது. 

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகடிநத்திய போர்க் குற்றங்கள் இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு: அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன்னரே முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைச் சுற்றி வளைத்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு முகாமை வெடி வைத்துத் தகர்த்தனர்.

10.10.87

ipkf-vel-300x228.jpgஇன்று அதிகாலை 5 மணியளவில் யாடிந

நகருக்குள் உள்ள ஈழ முரசு, முரசொலி ஆகிய 2

தினசரித் தமிடிநப் பத்திரிகை அலுவலகங்களுக்கு

புகுந்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு

வேலை செடீநுது கொண்டிருந்த ஊழியர்களை ஆயுத

முனையில் கைது செடீநுததுடன் அலுவலகங்களை

யும், அச்சு இயந்திரங்களையும் வெடிகுண்டுகள்

வைத்துத் தகர்த்தனர்.

அதே தினத்தில் கொக்குவில் என்னும் இடத்தில்

இருந்த விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி

சேவையான ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி நிலையத்

துக்குள் புகுந்து அங்கிருந்த தொலைக்காட்சி

ஒளிபரப்பு உபகரணங்களை அபகரித்துச் சென்றனர்.

(விடுதலைப் புலிகள் திருட்டுத்தனமாக வைத்

திருந்த ரேடியோ சாதனங்களைத் தாம் கைப்பற்றி

யதாகவும், இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத்

தூண்டிப் பிரசுரங்களை வெளியிட்டு வந்த

அச்சகங்களைத் தாம் முடக்கி வைத்திருப்பதாகவும்

இந்திய அமைதி காக்கும் படையினர் தம்

நடவடிக்கைகள் குறித்து சமாதானம் கூறினர்.)

1. விடுதலைப் புலிகள் தங்களது ரேடியோ,

தொலைக்காட்சி சேவைகளைப் பல

ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். விடுதலைப்

புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி

சேவையில் ஒளிபரப்பப்பட்ட பல நிகடிநச்சிகளை

இந்திய அரசு அதிகாரிகள் வேண்டிப் பெற்று

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பி

யிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று

எந்தவித தகவலும் கொடுக்காமல் தொலைக்

காட்சி நிலையத்தினுள் புகுந்து அங்குள்ள

சாதனங்களை அத்துமீறித் தூக்கிச் சென்றதானது

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக

எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையேயாகும்.

2. இலங்கை அரசினால் செடீநுதிப் பத்திரிகைகளாகப்

பதிவு செடீநுயப்பட்டு, பல ஆண்டுகளாக வெளி

வந்து கொண்டிருந்த ஈழ முரசு, முரசொலி ஆகிய

பத்திரிகை அலுவலகங்களை இந்திய அமைதி

காக்கும் படையினர் தாக்கித் தகர்த்ததாவது, தமது

ஜனநாயக உரிமைகளை நசுக்கிய செயலாகவே

ஈழத் தமிடிந மக்கள் கருதுகின்றனர்.

மதியம் 2.15 மணியளவில் இந்திய அமைதி

காக்கும் படையினர் கோட்டைப் பக்கமாகவும்,

கோப்பாடீநு பக்கமாகவும், முத்திரைச் சந்திப்

பக்கமாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செடீநுதபடி

முன்னேறியதைத் தொடர்ந்து, மக்களையும்,

தங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் விடுதலைப்

புலிகள் தற்காப்பு யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய

கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். யாடிந குடா நாடு

முழுவதிலும் இந்திய இலங்கை இராணுவம்

கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தியதில் 100-க்கும்

மேற்பட்ட பொது மக்கள் கைது செடீநுயப்பட்டனர்.

வடமராட்சிப் பகுதியில் தேடுதல் வேட்டை

நடத்திய இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு

பத்துப்பொது மக்களைச் சுட்டுக் கொன்றனர்.

11.10.87

இன்று காலையில், இந்திய அமைதி காக்கும்

படையினரால் ஏவப்பட்ட செல் கைலாசப்

பிள்ளையார் கோவில் மீது விழுந்து வெடித்ததில் 12

பொது மக்கள் கொல்லப்பட்டனர். 20 பேர்

காயமுற்றனர்.

பனையில் விடுதலைப் புலிகளின் வேன் ஒன்றை

விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமற் போகவே

ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும் படையினர்

திரும்பிச் செல்லும் வழியில், எதிர்ப்பட்ட

மக்களையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

இதில் இரு குழந்தைகள் உட்பட 13 பேர் இறந்தனர்.

இரவு யாடிநப்பாணத்தைக் கைப்பற்றும்

முயற்சியில் இந்திய அமைதி காக்கும் படையினர்

முழு மூச்சாக இறங்கினர். இரவு 1 மணியளவில்

யாடிநப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடப்

பகுதியில் ஏராளமான இந்திய அமைதி காக்கும்

படையினர் கெலிகாப்டர்கள் மூலம் வந்திறங்கினர்.

அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில்

8 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற கடும்

சண்டையில் 40க்கும் மேற்பட்ட இந்திய அமைதி

காக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 20 எ°.எம்.ஜி., 6

எ°.எல்.ஆர்., 3 எல்.எம்.ஜீ., 2 ஜி.பி.எம்.ஜீ., ஒரு

ராக்கட், லோஞ்சர் உட்பட ஏராளமான ஆயுதங்

களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

அதனால் ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும்

படையினர் பொது மக்களைத் தாக்கினர். அதில் 30

பொது மக்கள் கொல்லப்பட்டனர். 250 பேர்

காயமுற்றனர்.

12.10.87

இன்று நடைபெற்ற சண்டையிலும் ஏராளமான

இந்திய அமைதி காக்கும் படையினர் கொல்லப்

பட்டனர். இந்திய அமைதி காக்கும் படையினர்

மேற்கொண்ட மோட்டார் பீரங்கித் தாக்குதல்களின்

போது பல பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்திய அமைதி காக்கும் படையினர் பொது

மக்களை வீதியில் நிறுத்தி மிகக் கொடூரமான

முறையில் அவர்கள் மீது கவச வாகனங்களையும், ஜீப்

வண்டிகளையும் ஏற்றி நசுக்கிக் கொன்றனர். சுமார் 40

பொது மக்களின் சடலங்கள் உருத் தெரியாதவாறு

சிதைந்து அப்புறப்படுத்த முடியாத நிலையில்

காணப்பட்டன.

யாடிந பல்கலைக்கழகத்தினுள் விடுதலைப் புலி

களிடம் சிக்கியவர்களை மீட்க என பாராசூட்டின்

மூலம் இறக்கப்பட்ட இந்திய அதிரடிப் படையினர்

படுமோசமான செயல்களில் இறங்கினர். அவர்கள்

திரும்பிச் செல்லும்போது 12 சடலங்களை மட்டுமே

எடுத்துச் சென்றனர்.

விடுதலைப் புலிகள் தங்களிடம் சிக்கிய இந்தியப்

படையினரின் 29 சடலங்களை செஞ்சிலுவைச்

சங்கத்தின் மூலம் இந்தியத் தரப்பினரிடம் கொடுக்கும்

ஒழுங்குகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த 29

பேரின் சடலங்கயையும் அப்போது இருந்த

சூடிநநிலையில் தாங்கள் பொறுப்பெடுத்துச் செல்வது

சாத்தியமில்லை என்று இந்திய இராணுவப்

பொறுப்பதிகாரி யாடிந மாவட்ட அரசாங்க அதிபர்

மூலம் விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்ததைத்

தொடர்ந்து 29 சடலங்களும் அங்கேயே தகனம்

செடீநுயப்பட்டன.

பாராசூட் மூலம் இறங்கிய இந்திய அதிரடிப்

படையினர் படுதோல்வியுடன் திரும்பி ஓடினர்.

உரும்பராயில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில்

இந்தியப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய

தாக்குதலின்போது அப்பாவிப் பொது மக்கள் பலர்

(இரு மூதாட்டிகள், இரு குழந்தைகள் உட்பட)

கொல்லப்பட்டனர்.

12 ஆம் தேதி மாத்திரம் 104 பொது மக்கள்

செல்காயங்களினால் பாதிக்கப்பட்டு யாடிந

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியப்

படையினர் பெண்களைக் கொடூரமான முறையில்

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் கொலை

செடீநுதுள்ளனர். பெற்றோருக்கு முன்பாகவே

அவர்களது பிள்ளைகள் பயங்கரமான முறையில்

கொலை செடீநுயப்பட்டனர். உடம்பின் பல பகுதிகள்

கெட்டுப் போன நிலையில் இவர்கள் இறந்து கிடக்கக்

காணப்பட்டனர்.

சுதுமலை, உரும்பராடீநு, கொக்குவில் ஆகிய பகுதி

களில் ஏராளமான பெண்கள் இந்தியப் படையின

ரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக்

கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய 13 பெண்கள்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் பொத்துவிலில் பேச்சு

வார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளின்

அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரை ஒரு

கோயிலுக்கு அழைத்த இந்திய அமைதி காக்கும்

படையினர் அவரைக் கைது செடீநுது கொண்டு

சென்று விட்டனர்.

13.10.87

இன்று யாடிந கோட்டை இராணுவ முகாமி

லிருந்து ஏவப்பட்ட மோட்டார் செல்கள் விழுந்து

வெடித்ததனால் யாடிந போதனா வைத்திய சாலையில்

3 இடங்கள் பெரும் சேதமுற்றன. கூரைகள் உடைந்து

மருந்துப் பொருட்களும் பெருமளவில் சேதமுற்றன.

மருத்துவமனை வீதியிலுள்ள மாதா கோயில் வளவில்

பாதிரியார் தங்கும் விடுதியும் செல் விழுந்து சேத

முற்றது. யாடிந நகரில் பரவலாகப் பல இடங்களிலும்

செல் விழுந்து வெடித்ததனால் ஏராளமான பொது

மக்கள் கொல்லப்பட்டனர். வீதிகளில் மக்கள்

நடமாட்டம் இல்லை.

அதிகாலையிலேயே தேடுதல் வேட்டை என்ற

பெயரில் வீடுவீடாகச் சென்ற இந்திய அமைதி

காக்கும் படையினர் குழந்தை, சிறுவர், முதியோர்,

பெண்கள் என்று பாராமல் 60 அப்பாவிப் பொது

மக்களைக் கொன்று குவித்தனர். வீடுகள், வீதிகள்

எனக் காணும் இடமெங்கும் பிணங்களே

தென்பட்டன. வீதிகளில் கிடந்த பிணங்கள்

அனேகமாக எல்லாமே இராணுவ வாகனங்களினால்

நசுக்கப்பட்டுச் சிதைவுற்றுக் காணப்பட்டன.

14.10.87

இன்று திருகோணமலை மாவட்டம் சாம்பல்

தீவுப் பாலத்துக்கு அண்மையில் வைத்து விடுதலைப்

புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 15

இந்திய அமைதி காக்கும் படையினர் பலியாயினர்.

உடுவிலில் 15 பெண்கள் இந்திய அமைதி காக்கும்

படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி

கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்களின்

அங்கங்கள் கடித்துக் குதறப்பட்டிருந்ததாகவும்,

உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் இருந்ததாகவும்

பின்னர் இவர்களது உடல்கள் செயின் பொருத்திய

கவச வாகனங்களில் கீடிந போடப்பட்டு நசுக்கப்

பட்டதனால் உடல்கள் ரொட்டி போலச் சிதைந்து

விட்டதாக இவற்றை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இந்த வெறிச் செயலைச் செடீநுத இந்திய அமைதி

காக்கும் படையினர் திரும்பிச் செல்கையில்

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்

தாக்குதலில் அவர்கள் சென்ற கவச வாகனம் முற்றாக

வெடித்துச் சிதறியது. அதில் சென்ற அனைவரும்

கொல்லப்பட்டனர்.

வடமராட்சியிலுள்ள தொண்டமானாறு

முகாமிலிருந்து யாக்கரைக்கு வந்த இந்திய அமைதி

காக்கும் படையினரின் டிரக் வண்டி ஒன்றுக்கு,

இராணுவ முகாமிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள

யாக்கரைப் பிள்ளையார் கோயிலுக்கருகில் வைத்து

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்

தாக்குதலில் வண்டியில் வந்த 8 இந்திய அமைதி

காக்கும் படையினரும் கொல்லப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான்

எனுமிடத்தில் வைத்து இந்திய அமைதி காக்கும்

படையினரை இடை மறித்து விடுதலைப் புலிகள்

நடத்திய தாக்குதலில் 3 இந்திய படையினர்

கொல்லப்பட்டனர். நால்வர் காயமடந்தனர்.

இந்திய இராணுவத்துக்கு உதவியாக குண்டுவீச்சு

விமானங்களும் கெலிகாப்டர்களும் டாங்குகளும்

வந்தன. ஏராளமான இந்தியப் படை வீரர்கள் யாடிந

முற்றுகைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு

வருகின்றனர். 14.10.87 அன்று மட்டும் நகரை நோக்கி

70 மோட்டார் செல்கள் இந்தியப் படையினரால்

ஏவப்பட்டன. குண்டு வீச்சு விமானங்களிலிருந்தும்

கெலிகாப்டர்களில் இருந்தும் 90 கலிபர், 50 கலிபர்

கனரக இயந்திரத் துப்பாக்கிகளினால் தாக்குதல்

மேற்கொள்ளப்பட்டன. விமானத்திலிருந்து குண்டு

களும் போடப்பட்டன.

14 ஆம் தேதி வரை 21 இந்திய அமைதி காக்கும்

படையினர் விடுதலைப் புலிகளால் கைது

செடீநுயப்பட்டனர். 40 எ°.எல்.ஆர். 20க்கும்

மேற்பட்ட எ°.எம்.ஜி, 2 ராக்கட் சோலஞ்சர், ஒரு

மோட்டார், 3 கவச வாகனங்கள் என்பவற்றையும்

இந்தியப் படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள்

கைப்பற்றின.

http://www.periyarthalam.com/2011/10/08/rajiv-gandhis-war-crime-in-eelam/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கலைஞன்,

உங்கள் கேள்விக்கு நன்றி.

ஒற்றை வரியில் சொல்வதானால் புறக்கணிக்க முடியவில்லை என்பதல்ல, புறக்கணிக்கத்தேவையில்லை.

1. எனது பார்வையில் என்னை ஆத்திரப்படுத்தியவர்களின் பிரசுரங்களை வாசிக்கமாட்டேன் என்பது தீக்கோளித்தனமானது.

2. புறக்கணிப்பு என்பது எம்மீது நாமாக இட்டுக்கொள்ளும் ஒரு சுதந்திர மறுப்பு. நான் என்னத்தை எப்போது வாசிப்பேன் என்பதை பிறிதொரு மனிதன் நிர்ணயிக்க அனுமதிப்பதைப் பலவீனமாகக் கருதுகிறேன்.

3. அலெக்சாண்டர் பிளெமிங் ஒரு அயோக்கியன் என்றும் அதை எனது பூட்டன் அன்றே அறிந்திருந்தார் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளின், பிளெமிங் அயோக்கியன் என்று தெரிந்தும் எனது பூட்டன் 1940ம் ஆண்டில் பெனிசிலின் பாவித்தமை அபத்தம் என்று கூறுவதிலோ அல்லது பெனிசிலினையோ அல்லது அக்கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக இற்றைவரை உருவாக்கப்பட்டுவிட்ட மருந்துகளையேர் நான் பாவிக்கமாட்டேன் என்று கூறுவதிலோ, நான் மேற்படி மருந்துகளைப் பாவிப்பது மேற்படி அயோக்கியங்களிற்கு வருமானத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுக்கும் என்று கூறுவதிலோ எனக்கு உடன்பாடில்லை.

4. அறிவிக்கப்பட்ட புறக்கணிப்புக்களும் பொருளாதாரத் தடைகளும் கள்ளச் சந்தைகளை உருவாக்குவதோடு தடைசெய்யப்பட்ட பொருட்களிற்கான சக்திவாய்ந்த விளம்பரங்களுமாக எதிர்மறை விளைவுகளை உருவாக்குவது தவிர்க்கமுடியாதது.

5. எதிரி ஒற்றைக் குழல் ஏவகணையினைக் கண்டுபிடித்துப் பாவிக்கிறான், அவனது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எனது அறிவைச் சேர்த்து என்னால் பல்குழல் ஏவுகணை உற்பத்தி செய்து பாவிக்கமுடியும் என்றால், கோவக்காறனின் கண்டுபிடிப்பில் இருந்து என்னண்டு நான் என்ர கண்டுபிடிப்பை வளர்ப்பது என்று சிந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நானறிந்தவரை, உலகின் வெற்றிபெற்ற சக்திகள் எவையும் அவ்வாறு சிந்தித்துமில்லை.

இப்பிடிச் சொல்லிக்கொண்டே போகலாம்....

எனது பார்வையில், குறித்த ஒரு விடயத்தை வெளிப்படையாகப் புகழாதிருப்பது என்பது வினைத்திறன் மிக்க அங்கீகார மறுப்பு. உலகின் வெற்றிபெற்ற சக்திகள் நாளாந்தம் கடைப்பிடிக்கும் சர்வசாதாரணமான அரசியல்.

உலகின் கணிசமான யுத்தங்கள் மனவெளிகளிலேயே நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இன்னுமொருவன் உங்கள் முதலாவது கருத்திற்கு பச்சை குத்தியதில் நானும் ஒருவர் அதற்கு காரணம் தமிழ் பைத்தியத்தை பற்றி எழுதியதிற்கு ஆனால் புறக்கணிப்பை பற்றிய உங்கள் கருத்தை என்னால் ஏற்க முடியாது உள்ளது...இலங்கைப் பொருட்களை வாங்கிப் பாவியுங்கள் ஆனால் வெளிப்படையாக அதைப் பற்றி கதைக்க வேண்டாம் என சொல்வது போல் உள்ளது...ஒருவர் எதை செய்ய வேண்டும்,என்ன வாசிக்க வேண்டும் என்பதே அவர‌வரே தீர்மானிக்க வேண்டும் ஆனால் ஜெயமோகன் போன்ற எழுத்தாளார்கள் எவ்வளவு கேவலாமாய் எழுதியும்,வர‌லாற்றை பிழையாக எழுதினாலும் தொட‌ர்ந்து அவருடைய நூல்களை நாங்கள் காசு கொடுத்து வேண்டினால் அவருக்கு என்ன நட்டம்?...அவர் தான் செய்வதைத் தான் தொட‌ர்ந்து செய்வர்...அவருடைய எழுத்தை நாம் புகழ்வதற்கோ/இகழ்வதற்கோ அவரை விட‌ நாம் சிறந்த எழுத்த‌ளார‌க இருக்க வேண்டும்...அவர்கள் வியாபாரிகள் அவர்களை பொறுத்த வரை அவர்களது எத்தனை புத்தகங்கள் விற்பனையாகின்றது என்பதைத் தான் அவர்கள் கணக்கிலெடுப்பார்கள்..எங்கள் விமர்சனத்தை வைத்து தான் அவர் சிறந்த நூல் படைக்க வேண்டியதில்லை அதை எல்லாம் தாண்டி அவர் மேலே சென்று விட்டார்...அவருடைய நூலை நாம் விமர்சிக்கா விட்டாலும் அதனால் அவருக்கு ஏதும் பாதகமில்லை என்பது என் கருத்து.

எழுத்துப் பிழை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் ,

தங்கராசா மாஸ்டர் எனதுவீட்டிற்கு முன்பாக தான் தினமும் பாடசாலை செல்வார் .எனது அக்கா இருந்தது லதா தியேட்டர் தாண்டி இன்னமும் உள்ளுக்குள்ள வர முன்னால் அசோகா மரங்கள் நின்றவீடு .அந்த வீட்டிற்கு முன்னால் முன்னாள் இலங்கை சீ.ஐ .டி யும் மனைவியும் இந்தியன் ஆமியால் சுடப்பட்டு இறந்தார்கள் ,இவர்களின் மகன் செல்வன் பின்னர் புலிகளில் சேர்ந்தார் .

சரவணபவன் மரக்காலை வைத்திருந்தது அப்பாவின் தம்பியாரின் காணி ,அதை இப்போ கனடாவில் இருக்கும் ஒரு நகைக்கடை முதலாளி(அவரும் கோண்டாவில்தான்) வாங்கி தனது இந்தியாவில் படித்து டாக்டர்களான பிள்ளைகளுக்காக பெரிய நேர்சிம்கோம் கட்டப்பபோவதாக அறிந்தேன் .

இராசரத்தினம் குடும்பம் அனைவரையும் எனக்கு தெரியும் ,சிலர் கனடாவிலும் இருக்கின்றார்கள் .

நன்றி அர்ஜுன்,

இத்துடன் கோண்டாவில் தகவல்களை நிப்பாட்டுவோம். திரி தனது பாதையில் செல்லட்டும். :)

Link to comment
Share on other sites

எனது மாமா ஒருத்தர் கொழும்பிலிருந்து யாழுக்கு வந்து வீட்டின் அறையில் உடை மாற்றிக்கொண்டிருக்கும்போது ஜன்னலூடாக சுட்டுக்கொல்லப்பட்டார்.. காரணம் இந்திய ராணுவம் விரட்டிக்கொண்டு வந்த புலி தப்பிவிட்டது.. கண்ணில் பட்ட இவரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள்..!

அவரவர் தங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.. தமிழ்ப்பைத்தியத்திற்கு ஓரளவு புரிய வைக்கலாம்..

இசை, உங்கள் மாமா பருத்தித்துறையா? எனது அப்பாவின் ஒரு மாமாவும் இதே மாதிரி, கொழும்பிலிருந்து மனைவியுடன் வந்தவர். மனைவி குளிக்க கிணற்றடி போய்விட்டா. ஒரு போராளியை இந்திய இராணுவம் அப்போது அவர்களின் ஒழுங்கயூடாக திரத்திக் கொண்டு வந்திருக்கிறது. இதைக் கண்டுவிட்டு குளித்துக் கொண்டிருந்த தனது மனைவியை வீட்டினுள் போகுமாறு சொல்லி விட்டு வந்திருக்கிறார். புலி ஓடித் தப்ப அவரை சுட்டுக் கொண்டு விட்டார்கள். இந்திய இராணுவமாக வந்த சனியன்கள் செய்த அக்கிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. எனக்கு அப்போது மூண்டு வயது தான். அத்துடன் கொழும்பில் சீவித்துக் கொண்டிருந்ததால் சொந்த அனுபவம் இல்லை. ஆனால் எனது அப்பா எத்தனையோ முறை மயிரிழையில் உயிர் தப்பி வீடு வந்திருக்கிறார். எனது அப்பப்பாவின் செத்த வீட்டிற்கு நாங்கள் கொழும்பிலிருந்து வந்து சேர முடியாமல் போனதும் இந்த அட்டூழியப் படையால் தான். இந்தியப் படையில் இருந்த பலருடன் பேசக் கூட முடியாது எண்டு அப்பா சொல்லுவார். மனிதத் தனத்தை தொலைத்த காட்டு மிராண்டி நாய்கள். இயக்கம் இவர்களுக்கு செமையாக குடுத்து அனுப்பியதற்கு நான் இப்பவும் தலை வணங்குகிறேன். பெடி பெட்டயள் மீது ஒரு துளியும் இரக்கம் காட்டாத பேடிக்கூட்டம். உண்மையான புலியுடன் சண்டை செய்ய வக்கில்லை அப்பாவி இளசுகளை நாசம் செய்து வீரத்தைக் காட்ட மட்டும் தெரியும். இவர்களிலே எனக்கு பிடிக்காதது சீக்கிய சிங்குகளை தான்.இண்டைக்கும் இங்கு ஒரு பஞ்சாபியை காணும் போது மனம் எரிவதை மறைக்க முடியவில்லை. ஒண்டுமட்டும் சொல்லுவேன், இந்தியா நாசமாப் போக.

Link to comment
Share on other sites

தும்ஸ்.. நீங்கள் குறிப்பிட்டவரும், நான் குறிப்பிட்டவரும் ஒருவரே என நினைக்கிறேன்.. எனது அப்பாவின் நல்ல நண்பர்.. சொந்தமல்ல.. ஆனால் மாமா என்றே கூப்பிடுவோம்..

Link to comment
Share on other sites

தும்ஸ்.. நீங்கள் குறிப்பிட்டவரும், நான் குறிப்பிட்டவரும் ஒருவரே என நினைக்கிறேன்.. எனது அப்பாவின் நல்ல நண்பர்.. சொந்தமல்ல.. ஆனால் மாமா என்றே கூப்பிடுவோம்..

ஜெயம் மாமா என அப்பா குறிப்பிடுவார். அவரா? எங்களது வீட்டிற்கு மிக அருகில் தான் அவரது வீடும் இருந்தது

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி என்கின்ற இந்தியத்தலைவர் கொல்லப்பட்டபோது ஆடிப்போன உலக மனிதாபிமானம் (?) இந்திய அழிவுப்படைகளினால் படுகொலை செய்யப்பட்ட, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை திரும்பிப்பார்க்காதது மிகவும் கவலைக்குரியவிடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மைலாய் படுகொலை!

IPKF4.jpg

தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி புலிகளிடம் இருந்து

ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா

விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர்.

ஒரு நாளில் யாழ்ப்பாணத்தினைக் கைப்பற்றுவோம் என சொன்ன இந்திய அமைதிப்படையினர் யாழ்பாணத்தினைக் கைப்பற்ற 1 மாதம் எடுத்தது. யாழ்ப்பாணத்தினை கைப்பற்றிய பின்பு ஏனையபகுதிகளையும் கைப்பற்றிய இந்தியப் படைகள் 200 மீட்டருக்கு ஓன்று என்று ரீதியில் முகாம்களை அமைத்தது.புலிகளும் தமது பிரதான முகாம், தலைமை என்பனவற்றை வன்னிக்கு மாற்றிவிட்டு மற்றைய பகுதிகளில்

தமது குறிப்பிட்டளவு போராளிகளை நிறுத்தியிருந்தனர். தினமும் எதாவது ஒரு பகுதியில் போராளிகளைத்தேடும் இந்திய இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்ற வண்ணமே இருக்கும்.

indianarmy.jpg

இப்படி தான் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி

இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்டனர் இந்தியப் படையினர். இந்த இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ன

மேனன் ,கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட ஆயுதம் தாங்கியபுலிகளை அழிக்க திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே ,அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று

பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

  • 63 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி.
  • 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
  • 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
  • 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
  • வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
  • 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

எங்கும் சடலங்கள்,அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள்,காயமடைந்த ,கொல்லப்பட்ட உறவினர்களின்

அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் இரண வடுவாகஅச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர். வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச் செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய

பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை. வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள்,பாலியல் கொடுமைகள்

,சித்திரவதைகள், வீடழிப்பு ,சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.!

லண்டனில் இருந்து வெளிவரும் the sunday telegraph நாளிதழ் வெளியிட்ட ஆசிரிய தலையங்கம் இதுதான்.என்னால் இதுக்கு சுட்டி கொடுக்க முடியவில்லை

.editorial The sunday telegraph 13.08.89

over 50 tamil civilians, including women and children appear to have been murdered in raid on a village by indiantroops who were originally sent to sri lanka to restore peace.so india joins the melancholy list powers which,though democratic and based on the rule of law, have not always prevented a breakdown of moral restraint among their armed forces serving abroad.it is indias My Lai or perhaps it is hear amritsar

from Nehru onwards india's leaders have lectured the world about how to behave but,if anything this massacre is worse than My Lai . then American troopas simply ran amok in the Sri Lankan village, the Indians seem to have been more systematic;the victims being forced to lie down, and then shot in the back. yet India would long have

had us believe that such horrors are largely perpetrated by western powers with imperialist antecedents.

such horrors accur when troops are cooped up in a situation ahich looks likely to have no solution or end, and have themselves been the victim of terrorist atrocities. post colonial indians, then, are no different from the rest of humanity.the massacre does not mean that India's policical system is any less democratic and legally-based than did My Laiof America's . but we await the naming by New Delhi of the Indian version of Lieutenant gallery, the American officer in command at My Lai,and his punishment

My Lai என்பது என்ன ?

1968 ம் ஆண்டு மார்ச் மாதம் 16 ந் திகதி வியட்நாமில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளின் ஒருபிரிவு வியட்நாமின் குவாங்கை மாகாணத்தில் இருக்கும் மைலாய் கிராமத்தினுள் லெப். வில்லியம் கெலிஎன்னும் அதிகாரியின் கீழ் புகுந்து அப்பாவி வியட்நாமிய மக்கள் பல நூறு பேரை கொன்று குவித்ததுடன் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன.ஆடு மாடுகள் போல மக்களை ஓட்டி சென்று வயல்வெளிகளில் வைத்து சுட்டுக் கொன்றனர். 4 மணித்தியாலங்களாக நடந்த இந்த வெறியாட்டம் உயர் இராணுவஅதிகாரிகளால் அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.இராணுவ அறிக்கை ஒன்று மைலாயில்நன்கு திட்டமிட்ட ஒரு இராணுவ நடவடிக்கை மூலம் பலநூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறியது.இதைப் பற்றி அறிந்த ஒரு இராணுவவீரன் உயர் அதிகாரிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கு விசாரணை வேண்டி எழுதினான், ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.பின்னர் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் 03ம் திகதி"லைவ்" பத்திரிகை மேற்படி இராணுவவீரனால் எடுக்கப்பட்ட படங்களை பிரசுரித்த பின்னரே இச் சம்பவம்பற்றி அமெரிக்க மக்களுக்கும் வெளி உலகுக்கும் தெரிய வந்தது. இருந்தும் தமது வீரர்கள் இவ்வாறு

காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி பல அமெரிக்கர்கள் இதனை நம்ப மறுத்தனர்.

மேலதிக விபரம் தேவைப்படுவோருக்காக.-

யாழ்ப்பாணத்தில் என் பணி - லெப். ஜெனரல் எஸ்.சி பாண்டே

MASSEACRE AT VALVETTITURAI INDIA'S MY LAI - GEORGE FERNANDEZ

வல்வை படுகொலைகள் தொடர்பாக யாழ்பாணத்தில் இருந்து

வெளிவரும் உதயன் பத்திரிகை 02-08-2004 ல் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதற்கு

சுட்டி கொடுக்க முடியவில்லை. ஈழநாதனுடைய வலைப்பதிவில்அக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.அங்கு சென்று பார்க்கலாம்.

http://karikaalan.blogspot.com/2004/08/blog-post_05.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

கர்னல் ஜெயமோகனும் இந்திய அமைதிப்படையும்!

எழுத்து எவ்வளவு வலிமையானது என்பதை நான் உணர்ந்துகொண்ட தருணம் அது! வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு. என்போலவே பலரும் அன்று முழுவதும் மன உளைச்சலுடன்,தூக்கம் தொலைந்து அவதிப்பட்டிருக்கலாம். இந்திய அமைதிப்படை குறித்த ஜெயமோகனின் கட்டுரை அது!

இந்திய அமைதிப்படை தமிழ்ப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது என்ற திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் தமிழ் நாட்டில் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. அதுவே பின்னர் தமிழர்களுக்கு உண்மையிலேயே பேரழிவு வந்தபோது வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொள்ளக் காரணமாக அமைந்தது - என்பதே அதன் சாராம்சம்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் எதையும் கேட்டேயறியாத, யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய, ஒன்றுமே தெரியாத ஒரு நல்ல அதிகாரி இதுபற்றி ஜெயமோகனிடம் கேட்கிறார். எண்பது வயதுப் பாட்டியையும் தங்கள் சகாக்கள் விட்டு வைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் செய்த விசாரணை பற்றிக் கூறி, அப்படியெதுவுமே நடக்கவில்லை என உறுதிப்படுத்துகிறார் இன்னொரு அதிகாரி. அதுவரை சங்கடத்துடன் நான்கு மாதங்கள் வெளியிடாமல் வைத்திருந்த இந்தக் கடிதங்களை சரியாக மே-16 ஆம் திகதி வெளியிட்டிருந்தார் ஜெயமோகன்.

மேலும் இந்திய அமைதிப்படை குண்டுதேடும் சாக்கில் பெண்களை மரியாதையில்லாமல் சோதனை செய்கிறார்கள், முன்னறிவிப்பில்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனயிடுகிறார்கள் - என்று அக்கால கட்டத்தில் எழுதப்பட்டிருந்த கட்டுரையைக் கூட ஜெமோ இப்போது மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் எழுதப்பட்ட கட்டுரை என நினைக்கிறாராம்.

"உலகிலுள்ள எல்லா இராணுவமும் ஒரே மாதிரியானதே" எனும் ஜெமோ, மனிதனின் கும்பல் மனநிலை பற்றிக்கூறி, இராணுவம் என்பது ஆயுதமேந்திய ஒரு கும்பலே எனத் தெளிவாகச் சொல்கிறார். ஆனாலும் இந்திய ராணுவம் மட்டும் அந்தக் கும்பல் மனநிலையை விட்டு காந்தீய வழியில் நடந்துகொண்டிருக்கும் என நம்பியது வேடிக்கையானதே!

இராணுவ நடவடிக்கையின்போது, ஒரு பிரதேசத்தை தாக்குதல் படையணி போரிட்டு, முன்னகர்ந்து கைப்பற்றும். புதிதாக ஒரு பிரதேசத்துக்குள் நுழையும் தாக்குதல் படையணியிடம் இருக்கும் மனிதநேயம், மூர்க்கம், ஆவேசம் எல்லாவற்றையும் அவர்கள் போரின்போது சந்தித்திருக்கும் எதிர்ப்புக்கள், இழப்புக்களே தீர்மானிக்கும்.கைப்பற்றிய இடத்தைத் தக்கவைக்க, கண்காணிப்பு, ரோந்து என்பவற்றிற்கு இன்னொரு படையணி. இந்த அணி அப்பிரதேச மக்களுடன் சுமுகமாக, நல்லுறவுகளைப் பேணும் வகையில் நடந்துகொள்ளும். அப்படியே அறிவுறுத்தப்படும் - ஆனால் திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் இது மாறுபடலாம்!

யாழ்ப்பாணத்து மக்களைப் பொறுத்தவரை இலங்கை இராணுவத்தை விட மிக மோசமான அனுபவங்களைப் பெற்றது இந்திய ராணுவத்திடமிருந்தே. இதை இரண்டு சூழ்நிலைகளிலும் வாழ்ந்த யாரைக் கேட்டாலும் யோசிக்காமலே கூறிவிடுவார்கள். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை படைகள் கைப்பற்றும்வரை அங்கிருந்த பெரும்பான்மையான மக்கள், ஒரு குறிப்பிட்ட இளைய தலைமுறையினர் சிங்கள இராணுவத்தினரை நேரில் பார்க்காதவர்களாகவே இருந்தனர். அதுவரை சந்தித்த உயிர் இழப்புகள், அவலங்கள் எல்லாமே விமானக் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்களாகவே இருந்தன.

இலங்கை இராணுவம் செய்த ஒரு படுகொலையை நேரில் பார்த்தவர்கள் மிகக் குறைவு! ஆனால் இந்திய இராணுவம் பற்றிச் சொல்வதற்கு அந்தக் காலப்பகுதியில் என்போலவே குழந்தைப் பருவத்திலிருந்தவர்களுக்கும், இளைஞர்கள், முதியவர்கள் என எல்லோரிடமும் ஒரு பயங்கரமான அனுபவம் இருந்தது.

சிங்கள இராணுவம் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரி. யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றினால், என்னவெல்லாம் நிகழுமோ என்ற மிதமிஞ்சிய அச்சஉணர்வு எல்லோரிடமும் இருந்தது. ஏற்கனவே இந்திய அமைதிப்படையிடம் பெற்ற அனுபவமும் இதை அதிகப்படுத்தியது! ஆனால் மக்கள் இராணுவத்தைச் சந்தித்தபோது அவர்கள் நடந்துகொண்டமுறையில், இராணுவம் குறித்த பயம் குறைந்து, படிப்படியாக அற்றுப்போனது. இதை நானும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.

இந்திய அமைதிப்படை (IPKF - Indian Peace Keeping Force) தமிழர்களின் நண்பனாக, பாதுகாவலனாக வந்தது. அது ஒரு மதிய நேரம். வானில் தொடர்ச்சியாக இடி உறுமுவது போல ஒரு வித்தியாசமான அதுவரை கேட்டிராத ஒலி! யன்னல் கதவுகளின் கண்ணாடிகள் அதிர்ந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் தெரிந்தது இலங்கை வான் பிராந்தியத்தில் நுழைந்து, இந்திய விமானங்கள் உணவுப் பொதிகளை போட்டுச் சென்றது (ஒப்பரேசன் பூமாலை)

எங்கும் இதே பேச்சு. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி. எந்த ஆதரவுமின்றித் தவித்துப் போயிருந்த மக்களுக்கு புத்துணர்ச்சி கொண்டார்கள் எங்களுக்கு இந்தியா இருக்கு! யாரும் எதுவும் செய்ய முடியாதென்ற நம்பிக்கை. முதன்முதல் IPKF யாழ்ப்பாணம் வந்தபோது கொடுத்த வரவேற்பு அடைந்த ஆரவாரம் அப்படியிருந்தது. ஆனால் சில மாதங்களில் IPKF - Innocent People Killing Force ஆக மாறிப்போனது!

திடீரென ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. எல்லோரும் வீடுகளை விட்டு பக்கத்திலுள்ள கோவிலுக்குப் போய்த்தங்கிக் கொள்ள வேண்டும். அந்த வீட்டிற்கு வருகிறது இந்திய ராணுவம். அன்றுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த மகனை நோக்கிச் சென்ற ஒரு இராணுவ வீரன் தன் கத்தியை அவன் நெச்சில் சொருகி அடிவயிறு வரை இழுக்கிறான். தாய், தந்தை, அண்ணன்கள், தங்கைகள் கதற அவர்கள் கண்முன்னால் துடித்து இறந்து போகிறான். உடலைக் கொண்டுசெல்லவோ, வீட்டில் வைக்கவோ அனுமதிக்கப்படவில்லை. வீட்டு முற்றத்திலேயே எரித்துவிட்டுக் கண்ணீருடன் சென்றது அந்தக்குடும்பம். சம்பவம் இடம்பெற்றபோது அயல் வீட்டிலிருந்தவர் இருபது வருடங்களுக்கு முன்னர் விவரித்தபோது அவர் குரலிலிருந்த துயரம் , நடுக்கம் இப்போதும் நினைவில்.

இதுபோல ஏராளம்! கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் தன் சிறுவயதில் உறவினரோடு பலரை ஒன்றாகச் சேர்த்துப் புதைத்ததை விவரித்த நண்பன். பிரம்படி, நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்ற படுகொலைகள். வீதியில் வரிசையாகப் பலரைப் படுக்கவைத்து யுத்த டாங்கியினால் ஏற்றிக் கொல்லப்பட்டவர்களில் தந்தையை இழந்தவன் எனப் பலர். இப்படி எல்லோரிடமும் ஏதோவொரு அனுபவமாவது இருந்தது.

இதை நேரடியாக அனுபவித்தவர்கள் கூறும்போது, அந்த வலி, உணர்வு கலந்தே இருக்கும். இதுகூட ஜெமோவிற்கு மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டாகத் தோன்றியிருக்கலாம்! இதற்குப் பின்னணியில் அரசியல் இருந்ததும், அதற்கு பெருமளவு இந்திய ராணுவம் பலிகொடுக்கப்பட்டதும் உண்மை! ஆனால் ராணுவம் செய்த கொடுமைகளை ஒரேயடியாக மறுதலித்து, அவையெல்லாம் பொய்ப்பிரச்சாரம் என்று திரித்ததில்தான் தெரிகிறது ஒரு எழுத்தாளனின் தேசபக்தி!

இந்திய அமைதிப்படையும் உலகிலுள்ள ஏனைய இராணுவங்கள் அந்நிய நாட்டில் எப்படி நடந்துகொள்ளுமோ அப்படியேதான் நடந்துகொண்டது! இவையெல்லாம் நடக்கவேயில்லை என்று கூறிய ஜெமோ இப்போது "நான் அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் ஆக்கிரமிக்கும் மண்ணில் மட்டுமல்ல சொந்த மண்ணிலேயே கொடுமைகளைச் செய்யும் என்றே நான் நினைக்கிறேன்" என்று சப்பைக்கட்டு கட்டி இறுதியில்...

தான் எழுதிய கட்டுரைக்கு ஈழத்தமிழர்கள் இந்தியாவை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுபோல் ஒரு முடிவைக் கூறிவிட்டார் "எழுத்தாளனின் குரல் எங்கும் அறத்தின் குரலாகவே இருக்கும்" - எனக் கூறிக்கொள்ளும் ஜெயமோகன்!

இதையெல்லாம் விடப் பெரிய கவலை சிலருக்கு! யார் சொல்வதைக்கேட்டு ஜெமோ தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஜெமோவின் கட்டுரையை விட இதுதான் சகித்துக் கொள்ள முடியாத பெரிய கவலையாக இருக்கிறது அவர்களுக்கு!

ஷோபாசக்தி! - ஒரு புலி எதிர்ப்பாளர். புலி எதிர்ப்பாளர்கள் யாரும் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்களாக இருக்க முடியாது என்பது நம்மவரின் ஆழ்ந்த நம்பிக்கை. மாற்றுக்கருத்துச் சொல்பவர் - இவர்கள் தேசத்துரோகிகளாகவே இருப்பது வழமை! தேசத்துரோகிகள் கூறுவதெல்லாம் பொய்தான். இதை நிறுவுவதற்குக் காரணங்களைத் தேடும்போது, மாற்று அரசியல் என்பதைப் புலி எதிர்ப்பு அரசியலாகவே செய்துவரும் ஷோபாசக்தி அசட்டையாக சில தகவல் பிழைகளை எழுத்தில் செய்வார். யாழ் கோட்டைச் சமரில் புலிகள் ஆட்டிலறி அடித்ததுபோல! புலிகளிடம் அட்டிலறி இல்லாத காலத்தில் அவர்கள் அட்டிலறி அடித்ததாகப் பொய் கூறியிருக்கிறார். ஆகவே ஷோபாசக்தி கூறுவதெல்லாம் பொய்!

'முறிந்த பனை' (Broken Palmyrah) என்ற நடுநிலைமையான (இதற்கு புலிகளிடம் தன் உயிரைக்கொடுத்து நிரூபித்திருந்தார் ரஜனி திரணகம)ஆவணத்தை ஷோபாசக்தி முன்வைத்ததை கண்டுகொள்ளாமல்,ஷோபாசக்தியின் கருத்தை கேட்டு ஜெமோ தன் கருத்தை மாற்றியதாக நம்மவர்கள் வருத்தம் கொள்வதில் எந்த ஆச்சரியமுமில்லை!

தமிழர்கள் கொண்டாடும் எந்த ஆளுமைகள் குறித்தும் எதிராகவும், கட்டுடைத்தும் தொடர்ந்து எழுதிவரும் ஜெமோ அவ்வப்போது மலையாளிகளின் மேன்மையான பண்புகள் (இதுகுறித்து மத்திய கிழக்கில் பணிபுரியும் நண்பர்கள் நன்கறிவர்) கண்டு அடிக்கடி நெகிழ்ந்து, கண்ணீர்விட்டு, தொடர்ந்து போற்றிப் புகழ்வது வழக்கம்.

உலகின் எந்தவொரு பிரச்சினைக்கும் சளைக்காமல் கருத்து சொல்வதும், முல்லைப்பெரியாறு அணை பற்றிய கேள்விக்கு மட்டும் அதுபற்றி நிபுணர்கள்தான் கூறவேண்டும், எழுத்தாளன் என்பவன் எல்லாப்பிரச்சினை பற்றியும் பேச வேண்டியதில்லை என நாசூக்காகத் தவிர்த்துவிடுவதும் தெரிந்ததே!

ஆனால் ஒரு பெருந்துயரை, அதற்குச் சாட்சியாக லட்சக்கணக்கானோர் உலகெங்கும் இருக்க, அதுகுறித்த நியாயமான குறைந்தபட்ச தேடலின்றி, அப்படியெதுவும் நடக்கவில்லை எனக் கூறிவிடும் அளவிற்கு உலகில் எந்த மூலையிலும் தமிழர்களின் சுரணையுணர்வு ஒரேயளவானது என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.

தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர் என்று ஷோபாசக்தியைப் புறக்கணிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகள், ஒட்டுமொத்த தமிழ்த்தேசியத்துக்குமே எதிராக தொடர்ந்து தன்தளத்தில் எழுதிவரும் ஜெமோவை அழைத்து, விருது கொடுத்து மகிழ்வதும், அவரோ இவர்கள் சொல்லும் கருத்துக்களை வெறும் ஒற்றைப்படையான கசப்புடன் கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் என்றே எடுத்துக் கொள்வதும் இனியும் தொடரும்!

தவிர, ஜெமோ இப்போது சிங்களவர்களின் தரப்பு நியாயம்(?!) குறித்துக் கவலைப்படுவதாகத் தெரிகிறது. "சிங்களவர்களின் தரப்பே பேசப்படாமல் இங்கே ஒலிக்கும் ஆவேசங்கள் நியாயமானவைதானா என்ற ஐயம் உண்மையிலேயே எனக்குள்ளது" - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜெமோ இல்லாதது பிரிட்டிஷ் காரர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு! இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்த அவர்களின் தரப்பு நியாயம் பற்றி பேச ஒரு அறம் சார்ந்த எழுத்தாளன் அவர்களுக்கு கிடைக்காதது துரதிருஷ்டமே!

ஆக விரைவில் இப்படியொரு கேள்வி பதில் ஜெமோ தளத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அன்புள்ள ஜெ!

நான் முள்ளி வாய்க்காலில் இறுதிப்போரில் பங்குபற்றியவன். அங்கு திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. நான் அப்படி ஒரு சம்பவத்தையும் பார்க்கவில்லை. இதுபற்றி கோத்தாபாய ராஜபக்சேவிடம் கேட்டபோது அவரும் இதையே தெரிவித்தார். நான் இந்த பிரச்சினையில் நீங்கள் தலையிடவேண்டும்(?!) என்று சொல்லவில்லை. எனக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்று கேட்கிறேன்.

- டென்சில் கொப்பேகடுவ

இந்த கோரிக்கையின் உண்மையை(?!) நான் ஏற்கிறேன். முள்ளிவாய்க்கால் குறித்து எனக்கும் பல குழப்பங்கள்! நான் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் அதுபற்றிக் கூறும்போது மிகவும் கசப்பான, ஒற்றைப்படையான #@%$%#...

http://umajee.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் அந்த மோகன் இந்த மோகன் சோப சக்தி பிரபஞ்ச சக்தி .. என்னத்தை எழுதுறாங்க.. இவுங்க எழுதுவதை எல்லாம் படித்தால் தூக்கம் தான் வருது.. எந்த பீலிங்கும் வாரது இல்லை எழுத்துல ஏதோ வசியம் வச்சிட்டு திரிகிறார்கள்..

டிஸ்கி:

போகட்டும் தலைப்பை பார்த்தால் மெழுகுவத்தி செய்பவனிடம் விளக்கு பிடித்தாயா? என்று கேட்பதை போல கிடக்கு...

Link to comment
Share on other sites

[size="3"]Memorial for IPKF – Indian Peace Keeping Force)[/size]

[size=3] [/size]

[size=4]Memorial for IPKF - Innocent People Killing Force[/size]

[size=3]By Dr. T. Somasekaram[/size]

[size=2](Source: Sooriyan - March 21, 2004)[/size]

[size=2]I was shocked, saddened and angered when I read the news item on 17 March 2004 in Sri Lanka Media, that a memorial is to be erected in Colombo for the Indian Peace Keeping Force - IPKF soldiers who died in Sri Lanka between 1987 and 2000. The simple fact of the matter is that a foreign country, with designs of becoming a regional superpower, maneuvered to send its Army here as Peace Keepers but massacred thousands of innocent Tamil civilians, raped the women and plundered valuables.If memorials are to be erected, then it should be for innocent civilians massacred by the IPKF.[/size][size=2] Let me provide a FEW samples from my personal knowledge. These represent but the tip of an iceberg. I write as an authentic son of Jaffna, born and bred there, educated at Jaffna Hindu College and the only house my wife and I own is in Jaffna.[/size]

[size=2]Civilians Massacred by IPKF[/size][size=2] [/size]

[size=2]Jaffna Hospital :-[/size][size=2] Doctors, Nurses and Patients inside the Jaffna Teaching Hospital, numbering 68 in all. .Their names are:- Dr A. Sivapathasuntheram, Dr M.K. Ganesharatnam, Dr Parimelalahar, Mrs Vadivelu, Matron, Mrs Leelawathie, Nurse, Mrs Sivapakiam, Nurse, Mrs Ramanathan, Nurse, Mr Shanmugalingam, Ambulance Driver, Mr Kanagalingam, Telephone Operator, Mr Krishnarajah, Works Supervisor, Mr Selvarajah, Works Supervisor, Eleven (11) Minor employees and forty six (46) patients[/size]

[size=2]Duraiswamy brothers :-[/size][size=2] Two sons of late Sir Waithialingam Duraiswamy, Speaker of the State Council, residing in their ancestral home next to the Jaffna Clock Tower. One was R. Duraiswamy (SLAS) Retd. Secretary. Ministry of Local Government and M. Duraiwswamy Retd. Staff Officer Bank of Ceylon. [/size]

[size=2]Retd Director of Irrigation Mr. S. Sivasubramaniam, retired Director of Irrigation, Mrs. Sivasubramaniam, his retired teacher wife and their only son, a brilliant boy who had studied at St. John’s College, Jaffna, scored 4A’s in the GCE(Al) and was in the second year of Medical College. [/size]

[size=2]Other Civilians Killed in Jaffna:-[/size][size=2] Prof. P. Chandrasekeram, University of Jaffna, Dr R.W. Crossette Thambiah, Dr Selvaratnam Former DMO Maskeliya, Dr S. Pararajasingham J.M.O, L.F.M. Samuel Rtd. Teacher (St. Thomas College, Mt. Lavinia & Royal College), K.J. Sambanthar Retd. DLO & Asst. Land Commissioner, Jaffna, Mrs S. Sivanandaraja (mother), Mohanraj (son) Technical Officer, Irrigation .Dept, Mrs Kishnam, Mrs M. Sebastiampillai, Mrs N.R. Thuriappa, Mrs V. Ruthiralingam, C.S. Aaron .[/size]

[size=2]Urumpirai:-[/size][size=2] A. Subramanium Attorney at Law, Mr & Mrs Pancharatnam, Rtd. Teachers, K. Navaratnam Rtd. Divisional Supdt. of Post Offices, S. Nadarajah, Formerly SLBC, Tamil Service, P. Arooran , M. Nadaraja, S. Rasanayagam Rtd. Credit Controller CCC Ltd. [/size]

[size=2]Anaikoddai :-[/size][size=2] Mrs M. Weerasegaram Pillai, (Mother), Pillai Yasotha Weerasegaram (Daughter), Mrs S. Thanapalasingham (Mother) Miss N. Thanapalasingham (Daughter) S. Kulasegerampillai, Retd. Station Master, Mrs M. Arumugam .Mrs R. Gnanamuttu , A. Candappu Rtd. State Officer, S. Selvaranee [/size]

[size=2]Pirampadi, Kokuvil etc:-[/size][size=2] A large number of civilians were killed in Pirampadi and Kokuvil and buried in mass graves. The whole matter requires a book to do full justice. [/size]

[size=2]Ariyalai (my village)[/size][size=2] [/size]

[size=2]Ariyalai is at the eastern end of Jaffna town and the A9 highway passes through it. This was one of the four routes the Indian Army took to enter and capture Jaffna. From Oct 10, 1987, we, living in Dehiwala, lost all contact with our relatives who lived in Ariyalai, among them my wife’s 71 year old mother, her sisters and their children, my close friends from my boyhood days in Jaffna. For twenty one (21) days, there was a continuous curfew imposed by the IPKF with half an hours notice. The local and foreign media were completely cut off from the scene of operations and terrible things – yes, I use words carefully, TERRIBLE THINGS, were done to the Tamils in Jaffna. Rumours were rife. The militants said 30,000 civilians were killed. But I searched for reliable evidence, and these started trickling in, from late October 1987.[/size]

[size=2]One reliable class of evidence is the number of persons known to me personally, quite a number are blood relatives, who were killed. Among those killed were a 45 year old cousin brother, S. Shanmugasuntharam, Electrician, Jaffna Municipal Council, married, with two children, shot while going to his paddy field in East Ariyalai. No one could reach the body; jackals and dogs ate the flesh and his brother Sinnathurai told me that the limbs and other parts were in different part of the paddy field and he gathered them and buried them in the paddy field. Sinnathurai had wept tears of a different sort in 1981 when he told me what he found on the day following the burning of the Jaffna Library, where he worked as an Assistant Librarian. But let us remain focussed on the IPKF in this article.[/size]

[size=2]An 84 year old uncle, S. Thambiah, father of the well known Journalist T. Sabaratnam, was killed inside his home by an Indian artillery shell. His daughter Pathma and grandchildren had taken refuge inside Ariyalai Sri Sithivinayagar temple and were unaware of what had happened. One of my childhood classmates, Poologasingam, who lived nearby and had also not gone to the temple as a refugee, discovered what had happened, cut a pit in the garden, put my uncle in a sack and buried him there. No last rites; no cremation. Poologasingam went near the temple and shouted, "Pillai Pathma, Appah Vaikundam poddar; naan thevai yathanich seythu poddan” (Child Pathma, your father has gone to heaven; I have done what was necessary). [/size]

[size=2]My cousin Sabaratnam’s loss did not stop with his father. His mother in law, 80 year old Mrs. Thambimuttu was a refugee inside the temple. But an old lady cannot easily adjust to conditions inside a tightly packed temple – and Hindu temples do not have toilet facilities, as devotees are expected to come in a ‘clean’ state. So she went to her home within 250 metres of the temple for her morning ablutions. She was walking back feebly, with the aid of a walking stick and holding a flickering lamp, and was within 50 metres of the temple when she was shot dead by the Indian soldiers, from Sri Parwathi Vidyasalai which they were occupying. They discovered who they had killed and set fire to the body where it lay, using a tyre. She and my late mother Mrs. Saraswathy Thamotharam had been classmates in Chundikuli Girls’s College, Jaffna. She had been a source of comfort to my mother when we lost our father when mother was 28 years old and had to face the grim prospect of feeding, clothing and educating my brother (7 yrs) and myself (2 yrs), with not even a pension as father had served for less than 10 years. I felt so deeply about her loss that I ventured into blank verse. [/size]

[size=2] [/size]

The Gentle Old Aachi

[size=2] [/size]

[size=2]The gentle old aachi,[/size]

[size=2]Weak and wobbly with age,[/size]

[size=2]Walking with her pollu,[/size]

[size=2]Slowly to the temple.[/size]

[size=2]Husband gone long before, [/size]

[size=2]Children retired or about to, [/size]

[size=2]Grandchildren in their prime, [/size]

[size=2]Great grandchildren by the dozen.[/size]

[size=2]Weak of eye, weak of limb, [/size]

[size=2]Fond memories of yester year,[/size]

[size=2]Longing to meet her God, [/size]

[size=2]Slowly walking to his abode.[/size]

[size=2]Om Ganesha!, What hit me?[/size]

[size=2]What burning pain, [/size]

[size=2]What great thirst, [/size]

[size=2]She writhed briefly on the road, [/size]

[size=2]And then lay still, [/size]

[size=2]White saree bathed in blood.[/size]

[size=2]The gentle old aachi, [/size]

[size=2]Felled by an alien bullet, [/size]

[size=2]Fired by an alien hand, [/size]

[size=2]In this our free land, [/size]

[size=2]The gentle old aachi, [/size]

[size=2]Shot like a dog and burnt at the spot.[/size]

[size=2]More than our relatives, we mourn the death of the elder son of the chief priest of our temple, Subramaniya Kurukkal. Young Kannan Iyer, 24 years old, very fair, very handsome, well versed in Hindu neethi and also a fully qualified Accountant, was managing his own Accounting firm in Jaffna and assisting his father in carrying out the temple duties. He told his father on Deepavali Day in Oct 1987, when the father was getting ready to go to the temple to open the inner sanctum and light the lamps inside, to stay at home and that he would go by bicycle by a circuitous route to the temple to light the lamps. The inner sanctum had not been opened or lit after the influx of refugees. Only Brahmin priests can enter the inner sanctum. Instead of going to the temple, he went to heaven. [/size]

[size=2]If anyone is interested, I shall take him or her to speak to Kannan Iyer’s mother. His father, the chief priest of our temple, performed the ancient Hindu marriage ceremony for me and my wife in 1962. He repeated it for our elder daughter and son-in-law in 1982. He is a learned and pious man and he has the spiritual resources to withstand the loss of his elder son. But tears flowed down the cheeks of his wife for the entire 45 minutes we spent with them in March 1988, five months after the joy of their life was snuffed out by the Indian army. To me, this is the worst crime of the IPKF assault on Jaffna. The life of a young and brilliant Brahmin priest, who would have risen to great heights promoting Saivaism, was snuffed out wantonly – and this on Deepavali day when he set out to open the sanctum sanctorum and light a lamp inside the temple. [/size]

[size=2]Twenty six persons lost their lives in my village alone, during the Indian army’s campaign to gain control of Jaffna Peninsula in October-November 1987. [/size]

[size=2]Rape[/size][size=2] [/size]

[size=2]The IPKF Operation in Jaffna did not stop with massacres of civilians. A large number of women were raped. The following quotation is taken from Prof Daya Somasundaram’s book Scarred Minds – The Psychological Impact of War on Sri Lankan Tamils. Prof Daya Somasundaram is the Professor of Psychiatry in the University of Jaffna and concurrently Consultant Psychiatrist, General (Teaching Hospital) Jaffna. He was one of the four authors of the book, Broken Palmyrah, which was critical of the LTTE, a co-author of Mental Health in Cambodia, where he served as a Consultant Psychiatrist and Manavadu in Tamil [/size]

[size=2]Rape by Indian Soldiers[/size][size=2] [/size]

[size=2]“From time immemorial, plunder and rape have been considered the spoils of war. A form of ‘psychopathic liberation’ resulting in looting, rape and heavy drinking is reported to follow major stressful events (Kinston and Rosser, 1974). Although the total number of rapes during the Indian army operations are not known, it seemed to reach epidemic proportions. It has been verified that quite a large number, ranging from young girls who had just attained puberty to old women well past the menopause stage, were brutally raped.[/size]

[size=2]What is said about violence in general is applicable to sexual violence. However, aggressive sexual assault has its own unique characteristics and consequences. Thus,[/size]

[size=2]Rape is a violent crime in which sexuality is used to express power, anger and aggression, with a core meaning of devaluation, humiliation, sheer terror and most intimate violation of the self for the victim. What is translated to the victim is the life-threatening nature of assault, her helplessness, her loss of control and her experience of herself as an object of the assailants’ rage (Mezy, 1985).[/size]

[size=2]Rape became common in the context of total war as it obtained in the months of October to December (1987), when all the customary discipline and restraint operative in the army disappeared. As discussed earlier, there appears to have been a policy decision to apply terror in the face of early losses and frustration over the prolongation of the conflict. The public was seen as being too sympathetic to the Tigers, harbouring and helping them against the Indian army. Thus terror became an instrument of control, a punishment for the lack of support and a lesson to the public. The army hierarchical structure worked to allow the jawans to carry out the acts on their behalf, although at times lower-rank officers also vented their pent up frustration in this way. But rape was much more gruesome as it was aimed specifically at women. It was carried out with considerable brutality and impersonality, where the victims were publicly defeminised and destroyed.[/size][size=2] [/size]

[size=2]Rape can be seen as a loss-event for the victim where she loses her trust in others, self-respect, sense of security, chastity and virginity, social identity and becomes liable to secondary victimization due to social norms and values. The psychological reactions to rape have been described as a three-stage phenomena with an initial state of ‘shock and disbelief’ with disruption of normal behaviour. This may be followed by feelings of guilt, self-blame, and physical complaints. If the resolution to the psychological trauma is incomplete, long-term consequences include depression (40 per cent of victims), psychosomatic problems, sexual dysfunction, specific rape-related phobias, impaired task performance, social maladjustment and risk of suicide attempts (Mezey, 1985).[/size]

[size=2]In our cultural setting, sexual violence takes on a more serious significance and has a severe psychologically traumatizing effect on the victim and her close relations, including her husband. Chastity is traditionally considered one of the supreme virtues of women, to be safeguarded with the same diligence as their life. The screams and pleading of a young, attractive girl, whom three soldiers were trying to rape at gun point, still echoes in my ears. She fell at their feet and begged, ‘Please, brother, shoot me, but don’t do this…’ Fortunately for her, her pleading got through to an officer who took pity and let her go, after slapping her. A young rape victim in Tinnavelly immediately attempted to commit suicide by jumping into a well.[/size]

[size=2]Loss of virginity in a young girl even if against her will, meant that she could not aspire to marriage in our society and if already married, there is a good chance that she will be abandoned. All rape victims are socially ostracized and this usually extends to the family also. It is not surprising that rape victims were not forthcoming to report such incidents and usually swallowed the suffering and injury silently.[/size]

[size=2]These incidents of rape, the lack of protection for women and the rumours that spread, created great fear among the women of Jaffna. The threat to womanhood was very real in the months of October and November. Most women experienced sexual anxiety and felt exposed and vulnerable. Many fled to areas they felt were safe, a large exodus reaching Colombo in December, when transport became available. Those left behind started acting with circumspection by following the well-meant advice of sympathetic, Tamil-speaking jawans of ‘wearing saris, putting poddus and staying indoors’.[/size]

[size=2]At the beginning, there was lack of action by the commanders, probably because they had to maintain troop morale in a difficult situation during the first two months and rape itself became part of army action. Later, disciplinary action was taken with identification parades and punishment, usually in the form of public thrashing and transfer to another unit. After December the jawans were more discreet and circumspect. By 1988, the higher authorities showed much sensitivity to the issue of rape, probably due to the wide publicity outside Jaffna. They even brought in female police and paramilitary to ally the fears of local women.[/size]

[size=2]The public outcry and wide publicity of this aspect of the Indians’ occupation that gained momentum from December reflected the deep-rooted feeling of insecurity and the cultural significance of this threat to our women.” [/size]

[size=2]This ends the quotation from Prof Daya Somasundaram’s book. But there was other evidence as well. [/size]

[size=2]Inside Ariyalai Temple[/size][size=2] Inside our village temple, Ariyalai Sri Sithi Vinayagar Kovil, where people had gathered as refugees, young village girls were molested by the Indian soldiers inside the temple. Dr. W. Paramanathan, great grandson of Proctor V. Casipillai who had rebuilt the temple in 1900, after its destruction during the Portugese occupation, was an eye witness. “My blood boiled; but I was helpless” he told me. In fact, being a young man, he was taken out twice to be shot as a Tiger and only the strong pleadings of his aunt Miss K. Charavanamuttu, retired Principal of Vadamarachchy Hindu Ladies College saved his life. Dr. Paramanathan has migrated to the United States and is living there. [/size]

[size=2]Plunder[/size]

[size=2]The 21 day curfew proved to be a golden opportunity - in a real golden sense – to the Indian soldiers. They broke into every house, broke open every almyrah and stole the valuables inside. As everyone knows, all Jaffna Tamil Hindu women wear a lot of gold jewellery. When they had to flee at half an hour’s notice, they could not remove all their valuables. When the families returned, they found their gold jewellery, imported watches and Parker pens missing. In 1987, India was still a closed economy and these imported items were not available in India. Not merely the soldiers, even the officers helped themselves. This is what the Island of 22 Feb 1988 reported.[/size]

[size=2]IPKF Major Returning to India Apprehended - Alleged Contraband Jewellery: [/size]

[size=2]A Major of the IPKF who is said to have returned to India from Jaffna on a month’s holiday is alleged to have been apprehended at Chandigarh airport with having carried jewellery believed to be contraband.[/size]

[size=2]A news report appearing in the 'Rani Weekly' of January 31, 1988 published in Tamil Nadu state that this Major serving in Jaffna had flown to Madras by plane and then to Chandigarh in Punjab on a month’s holiday. The Police there had searched him like any other passenger and found in his possession “100 sovreigns of jewellery consisting of bangles, broken chains, necklaces etc[/size]

[size=2]The story states "The Police suspect that he might have snatched them from Sri Lankan Tamils. But he says they were bought by him. The magazine asks, If they were bought by him, could the jewellery be broken in pieces?[/size]

[size=2]The behaviour of the Indian Army in Jaffna was so atrocious that even Sinhalese politicians were moved to protest. After all, we share this island home. Prime Minister R. Premadasa, Minister of National Security Lalith Athulathmudali, Minister of Rehabilitation Lionel Jayatilleke and Opposition Leader Anura Bandaranaike condemned the atrocities in strong language in Parliament on 21 Jan 1988. Please see Hansard Vol 47, Section 14, Hansard Vol 50, Section 2 . In fact, the Prime Minister spoke of a 79 year old woman having been raped. [/size]

[size=2]To summarise, the Indian Army came here, massacred innocent Tamil civilians, raped our women and plundered our valuables. The acronym IPKF[/size][size=2] will always stand for Indian People Killing Force[/size][size=2] where we are concerned. I was collecting this material to submit to the International Criminal Court, when it was about to be set up. Unfortunately, the crimes of the IPKF are time barred; the Court considers only cases after it was set up in July 2002. If not for this time bar, there is enough evidence against the Indian Generals and others higher up to indict them before the Court. Instead of facing the Court, they and former High Commissioner Dixit are writing books and making money out of the tragedy. [/size]

[size=2]Please go ahead and erect the memorial. Every passing Tamil will think in his heart that the memorial stands for Indian People Killing Force. We will one day erect a memorial in the heart of Jaffna town, in the centre of Hospital Road, in memory of all the innocent civilians – ranging in age from the very old past 80 to young children massacred by the IPKF and to the women who were raped. [/size]

[size=2]Dr. T. Somasekaram,[/size]

[size=2]Retd. Surveyor General[/size]

Link to comment
Share on other sites

புதிதாக தரையிறக்கப்படும் படை அணிகளுக்கு இலங்கையின் பிரதேசங்கள் தரை அமைப்பு பற்றியும் புலிகள் பற்றியும் அவர்களது போர் நுனுக்கங்கள் நடவடிக்கைகள் பற்றியும் இந்த யுத்தக் கல்லூரிகளில் போதிக்கப்பட்டன. கன்னிவெடிகளை எதிர்கொள்ளுவது எப்படி புலிகள் எப்படியெப்படியெல்லாம் தாக்குதல் நடாத்துவார்கள் எப்படியெப்படியெல்லாம் செயற்படுவார்கள் என்ற நடைமுறை விளக்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதுபோன்ற பயிற்சிகளின் பின்னரே புதிதாக இலங்கை வரும் இந்தியப் படையினர் களம் இறக்கப்படவேண்டும் என்பது இந்தியத் தலைமையின் உத்தரவாக இருந்தது.

அவசரஅவசரமாக இலங்கை வந்திறங்கும் புதிய இந்தியப் படை அணிகள் அடிதடியாக முன்னேறி புலிகளிடம் தொடர்ந்து வாங்கிக்கட்டிக்கொண்டிருந்ததால் இந்தியப் படைத்துறைத் தலைமை இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

புதிய பிரதேசம் ஒன்றினுள் யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்று கல்லூரி அமைத்துப் பாடம் நடாத்தத் தெரிந்த இந்தியத் தலைமைக்கு அந்தப் பிரதேசத்தினுள் காணப்படும் அப்பாவிச் சனங்களை இம்சிக்கக்கூடாது என்ற பாடத்தை தமது ஜவான்களுக்கு போதிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அப்பாவித் தமிழ் மக்களை இம்சிக்கக்கூடாது என்றும் அவர்கள் அமைத்த அந்த யுத்தக் கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கவில்லை.

அதேவேளை படையினர் தமது உணர்வுகளுக்கு தாமே வடிகால்களைத் தேடிக்கொள்வது பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என்றும் இந்தியப் படைத்துறைத் தலைமை நினைத்திருந்தது. ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் போது ஆக்கிரமிப்புப் படைகள் கொலைகள் புரிவதும் கொள்ளை அடிப்பதும் பாலியல் வல்லுறவு புரிவது சகஜம் என்றே இந்தியப் படைத்துறைத் தலைமை நினைத்திருந்தது.

அதனால் இதுபோன்ற தீய செயல்களைச் செய்யக்கூடாது என்று தமது ஜவான்களுக்குப் போதிக்க அவர்கள் நினைக்கவில்லை. அவ்வாறு ஆலோசனை வழங்கி தமது ஜவான்களின் உற்சாகத்திற்கு கடிவாளம் போட அவர்கள் விரும்பவும் இல்லை.

ஈழ மண்ணில் புதிதாக வந்திறங்கிய இந்தியப் படை ஜவான்கள் யுத்தக் கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சியை முடித்துவிட்டு ~~ஜெய்-ஹிந்|| என்ற கோஷத்துடன் உற்சாகமாப் புறப்பட்டார்கள் - பாரிய மனித வேட்டைக்கு.

Link to comment
Share on other sites

காஷ்மீரில் பல வருடங்ககளுக்கு (2000 ல்) இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்ட கொலையை இப்போது தான் விசாரிக்கவே இராணுவ தலைமையகம் அனுமதித்திருக்கிறது...அது போல யாரவது தங்களது நெருங்கிய கொல்லபட்ட சொந்தகாரர்களுக்காக உச்ச நீதிமன்றை நாடினால்...

உடனடியாக இல்லாவிட்டாலும் ..எப்போதாவது ஒரு முடிவு கிட்டும் (அல்லது என்ன நடந்தது என்றாவது எழுத்தில் இருக்கும்).

இந்த விடயம் ஒரு இலகுவான விடயம் அல்ல...கல்லில் நார் உரிப்பது போல் தான்,,ஆனால் இது தன்னும் பாதிக்கபட்டவர்களுக்கு நியாயம் கிடப்பதற்கான முதற்படியாக இருக்கும் (என்பது எனது எண்ணம்)

http://www.sikhsiyasat.net/2012/06/30/indian-army-decide-to-court-martial-pathribal-killers-victims-of-chittisinghpura-massacre-still-await-justice/http://www.sikhsiyasat.net/2012/06/30/indian-army-decide-to-court-martial-pathribal-killers-victims-of-chittisinghpura-massacre-still-await-justice/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.