Jump to content

2011 உங்களுக்கு எப்பிடி?


Recommended Posts

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது? ஒரு நல்ல புதிய உறவு கிடைச்சது

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நட்பின் துரோகம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு TNA க்கு கிடைச்சது சந்தோசம்

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

கருணாநிதியின் தோல்வி எங்களுக்கு செய்த துரோகத்துக்கு கிடைச்ச தண்டனை எண்டு நினைச்சன்

ஒசாமா பின்லேடன் கடாபி போன்றோரின் மரணம் (சந்தோசம் துயரம் என்று இல்லாத இரண்டும் கெட்டான் நிலை)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

மாற்றம் இல்லை 2010 உடன் ஒப்பிடும் போது வீழ்ச்சி எண்டு தான் சொல்லணும்

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

பெரிய திட்டம் இல்லை எனது பாடத்துடன் சம்பந்த பட்ட SOFTWARE பற்றி படிக்கணும் எண்டு கடந்த இரு வருடமாக பிளான் பண்ணி இருந்தன் 2012 தான் படிக்கிற எண்டும் இருந்தன் BUT எதிபாராத விதமாக கட்டணம் ஏதும் இன்றி படிக்க முடிஞ்சுது

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஏதும் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

கோ,மயக்கம் என்ன , எங்கேயும் எப்போதும்,(alli &paul , rise of the planet of the apes ,A TEAM .)

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

பிறை தேடும் இரவிலே (ம.என்ன)

என்னவோ ஏதோ.(கோ)

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்..

உன் பேரே தெரியாது..

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

இன்னும் கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருக்கணும் எல்லாவற்றிலும்

சிலதுகளுக்கான முடிவுகளை நானே எடுக்கணும் மற்றவர்களின் தலையீடுகள் இல்லாமல்

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

என்னை உங்களுக்குப் பிரசவித்த இந்த யாழ் கருத்துக்களம் .

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

சொல்லமுடியாத பல உண்டு . துயரத்தையும் , சந்தோசத்தையும் ஒரே தராசில் பார்பதால் மனதைப் பாதிக்கவில்லை .

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

இந்தவருடத்து மாவீரர் தின நிகழ்வுகள் துயரத்தைத் தந்தது .

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

டாஸ்கப்பிற்றாவுக்கு ஒப்பான பசுமைப் புரட்சியை தந்த ஒப்பற்ற விடுதலைப் போராளி மொகமட் கடாபியின் சூழ்சியிலான மரணம் துயரம் .

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

மாற்றம் இல்லை 2010 உடன் ஒப்பிடும் 2 வீதத்தால் விற்பனை வரி அதிகரிப்பு .

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பிறகு அன்னிய தேசத்தவனாக பிறந்த மண்ணை மதித்தேன் . அதன் விளைவு நெருடிய நெருஞ்சி .

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

சுவாமி சுகபோதானந்தாவின் மனமே ரிலாக்ஸ் , அகமே ரிலாக்ஸ் .

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

எதுவும் இல்லை .

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

மன்னிக்கவும் , நான் கர்நாடக , ஹிந்துஸ்தானி இசைரசிகன் .

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

வேலீல போற ஓணாணை சேட்டுக்குள்ளை விடக்கூடாது .

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

அருமையான பிரையோசனமான பதிவுக்கு மிக்க நன்றிகள் வீணா . உங்கள் படிப்புக்கு இடையிலும் இப்படியான ஆக்கத்தை தந்ததிற்கு நாங்கள் குடுத்து வைத்தவர்களே :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

என் தம்பி நான் இருக்கும் நாட்டிற்கு வந்தது

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

அம்மாவின் மரணம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி

ஒன்றும் இல்லை

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பின்லாடன்,கடாபியின் மரணம் [சோகத்தை தந்தது]

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கொஞ்சம் முன்னேற்றம்[ஆனால் இனி மேல் தான் அட்டமத்து சனி பொறுத்திருந்து பார்ப்போம் :( ]

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

இல்லை

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஞாபகத்தில் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மைனா,அங்காடித் தெரு,ஆயிர‌த்தில் ஒருவன்

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

தாய் தின்ற நிலமே[ஆயிர‌த்தில் ஒருவன்]

நீ போகும் பாதை எங்கும் உன் முகமே தேடுகிறேன்[நான் சிவனாகிறேன்]

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை[அங்காடித் தெரு]

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

வாழ்க்கையில் ஒருத்தரையுமே உட‌னே நம்பி விட‌க் கூடாது என்ட‌ முடிவுக்கு வந்து உள்ளேன்

தற்போது செய்யும் வேலையை விட‌ இன்னும் நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்

இனி வரும் வருட‌த்திலாவது ஒரு இளிச்சவாயன் என்ட‌ கையில மாட்டோணும் :lol:

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

எல்லோர‌து நல் எண்ணங்களும்,முயற்சிகளும் எதிர் வரும் வருட‌த்தில் நிறைவேற எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

எனது ஒரே மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது!

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

எனது "வழிகாட்டி; ஒன்றின் மரணம்!

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

இந்தியாகாரனுக்கு, அவுஸ்திரேலிய அரசியல் கோமாளிகள், யுரேனியம் விக்க முடிவு செய்தது!

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

சனல் நான்கின் ' கொலைக்களம்' வெளியீடு! (துக்கம் கலந்த மகிழ்ச்சி)

ராதிகா கனேடிய பாராளுமன்றத்தில், நிகழ்த்திய கன்னிப் பேச்சு! (பெருமை)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கொஞ்சம் பறுவாயில்லை, என்று தான் சொல்ல வேணும்!

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

'தாய்நிலத்தை' நீண்ட நாட்களின் பின் பார்க்க முடிந்தது!

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

'HOLY COW' - அவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் இந்தியப் பயணம் பற்றியது!

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

'SLUM DOG'

'ஆடுகளம்'- ஜெயபாலனின் உருட்டுவிழிகளுக்காக!

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

'கொலை வெறி"???

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

'இனி மேல் ;ராசி பலன்; பார்ப்பதில்லை, என்று ஒரு திட்டம்!

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

'போர்க்குற்றவாளிகளை, இன்னும் வெளியே வைத்திருந்த ஆண்டு"

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

நன்றிகள் வீணா! உங்களைக் களத்தில் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி!!!

Link to comment
Share on other sites

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

>நான் கேள்விப்பட்டிராத ஒரு தொற்று நோய்க்குள்ளான என் மகள் முழுமையாக மருத்துவமையில் இருந்து திரும்பி வந்தமை

> இணையவனையும் விசுகுவையும் நேரடியாக சந்திக்க முடிந்தமை

>பல புதிய Projectsச் கிடைத்து கணிணி தொழில் சம்பந்தமான அறிவை பெருக்க உதவியமை

> அலுவலகத்தில் என் பணிகளை பார்த்து Star விருது கிடைத்தமை

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

>ஜப்பானிய பூமியதிர்ச்சி

>அத்தானின் அண்ணாவின் திடீர் மரணம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

எதுவும் இல்லை

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

>கருணாநிதியின் படுதோல்வி சந்தோசம்; ஜெயாவின் பெரு வெற்றி கடும் துயரம்

> இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதி ஒசாமாவின் மரணம் (சந்தோசம்)

>அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றம் (சந்தோசம்)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

படு மோசம்

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

எந்தவித நீண்டகாலத் திட்டமும் எனக்கு இல்லை.

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

>தேவதைகளின் தீட்டுத் துணி (யோ.கர்ணன்)

>தமிழக எழுத்தாளரான தமிழ்செல்வனின் சிறுகதைத் தொகுப்பு

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மயக்கம் என்ன (தமிழ்)

Sleeping beauty

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

>ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் (அவன் இவன்)

>காதல் என் காதல் (மயக்கம் என்ன)

>ஆரிரோ ஆராரிரோ (தெய்வத் திருமகன்)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

> உயர் பதவியை அடையவேண்டும்

>விஸ்கி/ பிரண்டியை மிக மிக குறைத்து வைன்னை மட்டும் அருந்த வேண்டும்

>ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு, பொருள்முதல்வாதம் சார்ந்த ஒன்றே ஒழிய கலாச்சாரம் சார்ந்தது அல்ல என்று மனைவியை நம்ப வைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

முதலில் இப்படி ஒரு எண்ண ஓட்டத்தை பதிவில் இட்டதற்கு வீணாக்கு பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும். :)

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

ஓசோன் படலத்தில் ஓட்டையின் அளவு குறைந்துள்ளது என்ற செய்தி. :)

(ஒரு மனிசன் செத்தா... இன்னொருத்தன் பிறந்து அந்த மனிதனை பிரதியீடு செய்துடுவான். ஆனால் இந்தப் பூமி அழிஞ்சிட்டா.. அதை எவராலும் பிரதியீடு செய்ய முடியாது. தற்போதுள்ள அறிவுக்கு எட்டியவரை.. அதனால் தான் இந்த செய்தி மகிழ்ச்சிக்குரியது.)

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

செவ்வாயின் சந்திரன் ஒன்றுக்கு போய் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு கொண்டு வர அனுப்பிய ரஷ்சிய விண்கலம்.. ஏவப்பட்ட முதல் கட்டத்திலேயே செயலிழந்து போய் இப்போ.. பூமியை நோக்கி விழ நொருங்கி வந்து கொண்டிருப்பது தான். :(

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

எந்த அரசியல்வாதி மேலையும் நம்பிக்கை இல்லை..! அதனால எதனையும் இப்ப சீரியஸா எடுக்கிறதில்ல. :lol:

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பாவம்.. தானும் தன்பாடுமா.. இளம் பெண்களின் கட்டி அணைப்பும்.. ஆட்சிக் கட்டுமா இருந்த இத்தாலிய தலைவரை.. யூரோ வலய நெருக்கடி தூக்கி எறிஞ்சது தான். (சந்தோசம் துயரம் கலந்தது.) :lol:

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

நம்ம பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும்.. ஒன்று தான். ஏறு இறங்கு முகத்தோட..! ஆனால் வங்கியிடமோ யாரிடமுமோ.. கடன் இல்லாத வாழ்க்கை. :)

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

நீண்ட கால திட்டமெல்லாம் நாங்கள் போடுறதில்ல. short term plan தான். அதுகள் நிறைவேறல்லைன்னா வாழ்க்கையை எப்படி வாழுறது.

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

முக நூல். :lol:

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

பிடிக்கக் கூடியதா விசேடமா இருந்த ஒரு படமும் பார்க்கல்ல. ஏழாம் அறிவு சில இன உணர்வுள்ள வசனங்கள் பிடிச்சிருந்திச்சு.

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

2. காதல் என் காதல் கண்ணீரில..! (பாவம் காதல் ரணங்களில் தவிக்கிற உள்ளங்களுக்கு ஜஸ்ட் ஒரு சூப் போல)

3. பப்பப்பா பப்பப்பா..! (பாடல் மொத்தமும் தமிழில் அமைந்து இசையும் ஒருங்காக இருப்பது தான்.)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆக வேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எதிர்பார்ப்பில்லா வாழ்க்கையே மட்டற்ற மகிழ்ச்சிக்கு சொந்தமானது என்பதால.. அப்படின்னு பெரிய திட்டங்கள் எல்லாம் நம்கிட்ட இல்ல.. ஆளை விடுங்கப்பா. :lol:

பெட்டிக்கு வெளில வந்து எழுதினா.. எல்லாருக்கும் எழுதக் கூடிய ஒன்றே ஒன்று தான் உள்ளது.. அது வந்து....

எல்லாருக்கும் இனிய மகிழ்ச்சி கர புத்தாண்டு அமைய வாழ்த்துகின்றேன்..! :)

Link to comment
Share on other sites

கருத்துகள் சொன்ன கோமகன் அண்ணா ,ரதி அக்கா புங்கையூரன்அண்ணா நிழலி அண்ணா நெடுக்ஸ் அண்ணா ஆகியோருக்கு நன்றிகள் நிறைய பேர் கருத்து எழுதவில்லை அவர்களுக்கு நேரம் இல்லையோ கடந்த

காலத்தை மீட்டி பார்க்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை .. குறிப்பாக நான் கடந்த சில காலம்களாக வருஷ முடிவின் போது எனது டைரி இனை புரட்டி பார்ப்பது வழக்கம் அந்த வருஷம்

எனக்கு எதை தந்து விட்டு

செல்கிறது எப்பிடியான சம்பவங்கள் என் வாழ்வில் நடைபெற்று இருக்கின்றன என்ன அனுபவங்களை அது தந்து இருக்கிறது அவற்றினை வைச்சு என் எதிர்கால திட்டம்களை எப்பிடி செழுமை படுத்தலாம் என்று யோசிப்பன்

கூடுதலாக இன்னொருமுறை அப்பிடியான ஒரு சந்தர்ப்பம் வரும் போது அதனை எப்பிடி கையாளனும் சில மனுசர்களிடம் முன் எச்சரிக்கையாக இருக்கணும் போன்ற பாடங்களையும் சில விசயங்களில் நல்ல முடிவினை எடுக்க கூடிய அனுபவங்களையும் எனக்கு தந்து இருக்கிறது.. இப்பதிவினை நான் எழுத காரணம் YARL உள்ளோர் அனைவரும் என்னிலும் விட வயது கூடினோர் அவர்கள் எந்த விடயம்களில் அதிகம்

அக்கறை பட்டு இருக்கிறார்கள் எங்கள்

சமூகத்தை எப்பிடியான விடயங்கள் அதிகம் தொட்டு செல்கின்றன எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிவதற்கே கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் தங்களின் 2011 பற்றி பகிர்ந்து கொள்ளுறார்கள் எண்டு..

Link to comment
Share on other sites

நிறைய பேர் கருத்து எழுதவில்லை அவர்களுக்கு நேரம் இல்லையோ கடந்த

காலத்தை மீட்டி பார்க்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை

நல்ல பதிவு.

எழுதக் கூடாது என்று அல்ல. பல கேள்விகளுக்கு மனதின் ஆழத்திலிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஏன் மொக்கையாகப் பதிலிடுவான் என்று விட்டுவிட்டேன். இப்பத்தான் விளங்குது எனக்கு இந்த வருடமே வெறும் மொக்கையாகத்தான் கழிந்திருக்கிறது என்று.

இப்பதிவினை நான் எழுத காரணம் YARL உள்ளோர் அனைவரும் என்னிலும் விட வயது கூடினோர் அவர்கள் எந்த விடயம்களில் அதிகம்

அக்கறை பட்டு இருக்கிறார்கள் எங்கள்

சமூகத்தை எப்பிடியான விடயங்கள் அதிகம் தொட்டு செல்கின்றன எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிவதற்கே கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் தங்களின் 2011 பற்றி பகிர்ந்து கொள்ளுறார்கள் எண்டு..

வன்மையாகக் கண்டிக்கிறேன் வீணா அண்ணா. :lol:

Link to comment
Share on other sites

1) 2011 இல் உங்களின் மனசில் நிற்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

கருணாஸ் தோல்வி :wub:

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

என்னுடன் வேலை செய்த பிரையன் கார் (40 வயது) என்பவரின் திடீர் மரணம்..! வீட்டின் பின் வளவில் ஆறடி ஏணியில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தவர் பிறகு தரையில் கிடக்கக் கண்டுள்ளார்கள்..! மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று ஒன்றும் பலமாக இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்..! வீட்டுக்கு வந்தவர் வாந்தி எடுத்து மீண்டும் மயங்கிவிட்டார்..! மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது மூளை செயலிழந்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள்..! இனிமேலும் உயிருடன் வைத்திருந்து பிரியோசனமில்லை என்று மனைவியின் சம்மதத்துடன் பிராணவாயுக் குழாயை நிறுத்திவிட்டார்கள்..! அவருக்கு இரு சிறு குழந்தைகள் உள்ளனர்..! :(

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

ராதிகாவின் வெற்றி. :rolleyes:

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி

ஈழம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிறு முன்னேற்றம். :unsure:

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கடன் அதிகரித்துவிட்டது..! :lol:

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

நீண்டகாலத் திட்டம் என்றால், ஒரு வடிவமைப்பு பொறியியலாளராக ஓரளவுக்காவது முழுமை பெறவேண்டும் என்கிற வெறியுடன் கூடிய திட்டம் எப்போதுமே உண்டு..! இந்த வருடம் அறிவுக்கண் சிறிது திறந்ததாகத் தோன்றுகிறது..! :lol:

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

வேலை சம்பந்தமான புத்தகங்களை மட்டுமே படிப்பது..

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

ஒன்றும் பார்க்கவில்லை..

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

ஒன்றுமில்லை..

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

கடனை அடைக்க வேண்டும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

ஒருவெளினாட்டுபயணம், சுப நிகழ்வுக்கான முன்னோட்டம்.வீடு மாற்றம்

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நம்பிக்கை துரோகம்.......

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பெணஉறுப்பினரின் பாராளுமன் பிரவேசம்

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

சனல் நான்கின் ' கொலைக்களம்' வெளியீடு! (துக்கம் கலந்த மகிழ்ச்சி)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

ஒரே மாதிரி

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

இல்லத்தின் சுப நிகழ்வு

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

எதுவமில்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

தமிழ்படங்களை பார்த்ததுண்டு

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

கொலை வெறி ..........தாள லயதுக்காக்

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எடை குறைக்கக் திட்டம் ......... கஷ்டமாய் இருக்கிறது

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2012 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

சாதகமான ஆண்டு ........உறவுகளுக்கு உதவி செய்வதில்லை .............வீண் மனஸ்தாபம் .......

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

இப்படியான திரியை தொடங்கி முன்னெடுத்து செல்ல கள உறவுகளுக்கு வழி காடடும் உங்களுக்கு நன்றி.வீணா ......... வித்தியாசமான் சிந்தனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பதில்கள் அதிகம் இல்லாதபடியால் இந்த ஆண்டினை மீட்பித்து பார்க்கமுடியவில்லை மன்னிக்கவும். :rolleyes:

என்ன இது துறவு மனப்பான்மைக்கு வந்துட்டமோ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011ம் ஆண்டு, யாழ் களமாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதைத் தவிர, குறிப்பிடும் படியாக ஒன்றும் நடக்கவில்லை வீணா. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்கொய்யாலை .. கஸ்டப்பட்டு எழுதினது எல்லாம் பதிய முதல் அழிஞ்சு போட்டுதே.. :(:o

(keine lust mehr) :(

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

மேலதிகாரிகளால் வேலை சார்பாக படிப்பதற்கு அனுமதி கிடைத்து ஆர்வத்தோடு பயின்று சித்தி அடைந்து, நிர்வாகத் தலைமையின் கையால் விருது வாங்கியது.

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நண்பர்களின் பிரிவு

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

மன்னிக்கவும்- அரசியல் நமக்கு ஒத்து வராது

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

சேமிப்பும், கடனும் குறைந்து விட்டது

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு செயல்படுத்தும் திறமை இல்லை. (சரிவராவிட்டால் அதனை ஒரு தாக்கமாகவே மனம் உணர்ந்து கொள்ளும், அந்த அளவுக்கு பாவம் எனது மனதை கஸ்டப்படுத்த விரும்புவதில்லை)

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

சொல்லும் படியாக எதுவும் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

தமிழ் படங்கள் பார்ப்பது குறைவு

(ஆங்கிலப் படம் SENNA- 2011, A few good men-1992 ல் வெளியானது, இந்த வருடம் தான் பார்த்தேன்)

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

திமு திமு தீம் தீம் தினம் அல்லாடும் மனம்...

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எந்த சூழ்நிலையிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

நட்பின் பிரிவால் மனதில் பெரிய தாக்கங்களை உணர்ந்தேன், கைதூக்கி விட்ட முகம் தெரியாத யாழ் கள உறவுகளுக்கு நன்றி!

புத்தாண்டு என்பது நாட்காட்டியில் ஒரு தினமாகவே தெரிகிறது... எப்போது நாம் எமது நிதானத்தோடு செயல் செயல்பட்டு வாழ்கையில் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமோ அப்போதெல்லாம் எம் மனம் அந்தத் தினத்தை புத்தாண்டாகக் கொண்டாடும். எனது பிரியமான யாழ் கள உறவுகளும் தினமும் புத்தாண்டு கொண்டாட வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

அடங்கொய்யாலை .. கஸ்டப்பட்டு எழுதினது எல்லாம் பதிய முதல் அழிஞ்சு போட்டுதே.. :(:o

(keine lust mehr) :(

அடங்கொண்ணீயா...... :unsure:

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

வேலையில் போனஸ் கிடைத்தது சந்தோசத்தை தந்தது.

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

அப்படி ஏதும் இல்லை.

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு TNA க்கு கிடைச்சது சந்தோசம்.அதே நேரம் விக்கிரமபாகு போன்றோரின் தோல்வி சிறு கவலையை தந்தது.

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு

கருணாநிதி,காங்கிரசின் படுதோல்வி சிறு சந்தோசத்தை தந்தது.ஜெயலலிதாவின் வெற்றி சந்தேகத்தை தந்து கொண்டே இருக்கிறது.(ஏதும் தமிழருக்கு செய்வார் என்று நம்பிக்கை இல்லை)

கனடாவின் அரசியல் வாதி ஜாக் லெய்ரனின்(jack layton) அபாரவெற்றி சந்தோசத்தை தந்த அதே நேரம் அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.இச்சம்பவம் கவலையை தந்தது.

சிறு மகிழ்ச்சியை தந்த சம்பவம் மகிந்தவை லண்டனில் இருந்து ஓட ஓட விரட்டியது.

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

வரவு எட்டணா செலவு பத்தணா. :) :)

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஏதும் இல்லை வேலை சம்பந்தமான புத்தகங்கள் தவிர.

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மயக்கம் என்ன , எங்கேயும் எப்போதும்,தெய்வத்திருமகள்

28 months later, dark shadows

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

சர சர சாரக்காற்று(வாகை சூடவா)

அஞ்சனா அஞ்சனா

கேட்கிறாய் அன்பே(ஒஸ்தி)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

படிப்புக்கு இடைவெளி விடாமல் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும்.உடற்பயிற்சி,உணவு,பணம் ஆகியவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்த வருடம் கண பேர் நட்பின் பிரிவாலும்,துரோகத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் போல கிடக்குது...அது சரி குட்டி உண்மையிலேயே நட்பின் பிரிவா அல்லது காதலியின் பிரிவா?[கோபிக்கிறதில்லை சரியா?

Link to comment
Share on other sites

யாழில் இந்த வருடம் கண பேர் நட்பின் பிரிவாலும்,துரோகத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் போல கிடக்குது...அது சரி குட்டி உண்மையிலேயே நட்பின் பிரிவா அல்லது காதலியின் பிரிவா?[கோபிக்கிறதில்லை சரியா?

பன்னிரண்டு வருடத்திற்கு முந்திய காதலின் பிரிவு இன்னும் பதனிடப்படாத காயமாக மனதில் ஒருபக்கமிருக்க, இந்த வருடம் நட்பின் பிரிவால் (இறப்பால்) மனம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

கருத்து பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்...

வீணா எப்போதுமே தங்கை (தங்கச்சி) தான் தப்பிலி அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.