Jump to content

தொடரை வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா


Recommended Posts

தொடரை வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு எதிராகக் களமிறங்குகிறது.

முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தாக, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறியது போல் “ஒருநாள் கிரிக்கெட் பாடம் எடுத்தது”.

இந்த நிலையில் நாளை 4வது ஒருநாள் போட்டியில் வென்று ஒருநாள் தொடரை இங்கிலாந்தில் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

இந்திய அணி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடியதோ அதேபோல் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நாம் மொயீன் அலி என்ற லாலி பாப் பவுலரிடம் திணறினோம், அவர்கள் சுரேஷ் ரெய்னாவின் நேர் நேர் தேமா பந்துகளில் கூட விக்கெட்டைப் பறிகொடுக்கின்றனர்.

அலிஸ்டர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ் இரண்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தாலும், கேப்டன் குக் தொடக்க வீரராகக் களமிறங்கக் கூடாது. கேரி பாலன்ஸை தொடக்கத்தில் களமிறக்க வேண்டும். அல்லது ஜோஸ் பட்லரைக் களமிறக்க வேண்டும்.

அணித் தேர்வில் தோனி தவறு செய்தது போலவே குக்கும் ஒருநாள் போட்டிகளில் தவறு செய்கிறார். ஸ்டோக்ஸ் என்பவரை எதற்காக அணியில் வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை. அதே போல் மொயீன் அலியை ஒருநாள் போட்டிகளில் களமிறக்கினால் அவருக்கு ஒரு கூடுதல் ஸ்பின் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் குக்கின் கேப்டன்சியும் கற்பனை வறட்சி கொண்டதாக உள்ளது. 3வது ஒரு நாள் போட்டியில் ராயுடு, ரெய்னா ஜோடி சேர்ந்த போது தாக்குதல் முறையை குக் கடைபிடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் மிகவும் வழக்கமாக, சாதாரணமாக இருவரையும் ஆடவிட்டு வேடிக்கைப் பார்த்தார்.

ஒருநாள் கிரிக்கெட் என்றாலே எட்டிக்காயாக கசக்கிறது இங்கிலாந்து அணிக்கு. மோர்கனிடம் கேப்டன்சி கொடுத்திருந்த போது சற்று பரவாயில்லை என்று அதன் அணுகுமுறை இருந்தது.

2013ஆம் ஆண்டு நியூசிலாந்தில் ஒருநாள் போட்டியில் வென்ற பிறகு முக்கியத்துவம் வாய்ந்த எந்த வெற்றியையும் அந்த அணி பெற்றுவிடவில்லை. மேலும் நியூசிலாந்து அதன் பிறகு இங்கிலாந்து வந்து பழி தீர்த்தது.

2014 தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸை வென்ற பிறகு, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளை வென்றது இங்கிலாந்து அவ்வளவே. அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடம் தோற்றது, இலங்கையிடம் தோற்றது.

இந்திய அணியின் வெற்றிகளுமே டெஸ்ட் தோல்விகளுக்குப் பிறகு ஆறுதல் அளித்தாலும் இந்திய அணியின் ஆட்டம் ஒன்றும் பெரிதாக முன்னேற்றம் கண்டுவிடவில்லை.

தொடக்க வீரர்கள் ஒரு நல்ல தொடக்கத்தை நியூசிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் சிறந்த பந்து வீச்சிற்கு எதிராக கொடுக்க முடியவில்லலை தோனியும் கோலியும் மிடில் ஆர்டரில் ஆடியதுதான்.

ரோகித் சர்மா காயமடைந்து வெளியேறியது ரஹானேயிற்கு வாய்ப்பைக் கொடுத்தாலும், ஷிகர் தவனின் விட்டேத்தியான, அலட்சிய பேட்டிங் உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தயார் படுத்திக் கொள்வதாகக் கூறிக்கொள்ளும் இந்திய அணிக்கு பெரிய தலைவலியே.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, தற்போது இங்கிலாந்தில் 3 ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவனின் ஸ்கோர் இதோ: 12, 0, 32, 12, 28, 9, 11, மற்றும் 16.

இப்போது பிரச்சினை என்னவெனில் உலகக் கோப்பைப் போட்டிகளுக்குள் ரோகித் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றால் அவரை மீண்டும் தொடக்கத்தில் களமிறக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் மட்டும்தான் காயத்திற்குப் பிறகு நேராக தேசிய அணியில் விளையாடும் விசித்திர நடைமுறை இருந்து வருகிறது. மற்ற நாடுகளில் அவர் மீண்டும் தனது பேட்டிங்கை நிரூபித்த பிறகே அணிக்குள் வர முடியும். மேலும் அவர் வந்தால் ரஹானே 4ஆம் நிலைக்குத் திரும்புவார்.

நன்றாக விளையாடி ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் அம்பாத்தி ராயுடு கதி அதோகதிதான். எப்படி நன்றாக ஆடியும் ராபின் உத்தப்பா தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறாரோ அதே போல் ராயுடு ஓரங்கட்டப்படுவார்.

ரோகித் காயமடைந்தால் அந்த இடத்தில் ராபின் உத்தப்பாவையே அழைத்திருக்க வேண்டும், ஆனால் முரளி விஜய்யை அழைத்ததன் பின்னணி என்னவென்று நாம் கேட்க வேண்டியுள்ளது.

முரளி விஜய்யின் ஒருநாள் கிரிக்கெட் திறமை என்னவென்று இதுவரை வெளிவரவில்லை. அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூர் போட்டிகளில் ஏதாவது குறிப்பிடத் தகுந்த சாதனை நிகழ்த்தியுள்ளாரா என்றால் அதுவும் இல்லை. ராபின் உத்தப்பாவை ஊறுகாய் போல வங்கதேசத் தொடருக்குப் பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறிந்தனர்.

எனவே இந்த 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால் அதனை வைத்து இந்தியா உலகக் கோப்பைக்குத் தயாராகிவிட்டது என்றெல்லாம் நாம் நப்பாசைக் கொள்ளலாகுமா என்பதே கேள்வி.

வேகப்பந்து வீச்சில் நிச்சயம் முன்னேற்றம் தேவை. அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் அதன் பிறகு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சோபிக்க முடியும். வெறும் ஸ்பின் ஜாலத்தை வைத்துக் கொண்டு அங்கு ஒன்றும் செய்ய முடியாது.

எனவே தோனி வேகப்பந்தை மேம்படுத்தும் முயற்சியை இந்தத் தொடரிலிருந்தே செய்தாக வேண்டும். அதனை விடுத்து இந்தத் தொடரில் பெற்ற வெற்றிகளின் மிதப்பில் வாளாயிருந்துவிடக் கூடாது.

http://tamil.thehindu.com/sports/தொடரை-வென்று-இங்கிலாந்துக்கு-பதிலடி-கொடுக்கும்-முனைப்பில்-இந்தியா/article6369772.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.