Jump to content

13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்


Recommended Posts

13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
 

 

செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 247/7 என்று முடிய, வங்கதேசம் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் கெய்ல் தனது அனாயாச மட்டைச் சுழற்றலில் இறங்கினார். ஆனால் கர்க் எட்வர்ட்ஸ் அல் அமின் ஹுசைன் பந்தில் ஸ்டம்ப்களை இழந்தார்.

டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 88 ரன்களைச் சேர்த்தனர். கிறிஸ் கெய்ல் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் நேற்று அரைசதம் எடுத்தார். கிறிஸ் கெய்ல். தனது வழக்கமான பாணியில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 58 ரன்களை விளாசினார்.

முதலில் வேகப்பந்து வீச்சாளர் மஷ்ரபே மோர்டசா பந்தை நேராக சிக்சருக்குத் தூக்கினார். அதன் பிறகு புல்டாஸ், ஷாட் பிட்ச் என்று அவருக்கு உண்மையில் சில பந்துகளைப் போட்டுக் கொடுத்தனர்.

 

கிறிஸ் கெய்லுக்குப் பிறகு வங்கதேச ஸ்பின்னர்கள் முழுக்கட்டுப்பாட்டுடன் வீசினர். இதனால் ராம்தின், டிவைன் பிராவோ, பொலார்ட் ஆகியோர் துவக்கம் கண்டாலும் பெரிய அளவுக்கு பந்துகளை விரட்டியடிக்க முடியவில்லை. டேரன் பிராவோ 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரசாக் விக்கெட் எடுக்காவிட்டாலும் சரியான முறையில் வீசி வெஸ்ட் இண்டீஸைக் கட்டுப்படுத்தினார்.

பொலார்ட் 20 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து மோர்டசாவின் பந்தில் ஆட்டமிழந்தபோது வெஸ்ட் இண்டீஸ் 46.4 ஓவர்களில் 222 ரன்களையே எடுத்திருந்தது. அதன் பிறகு 247 வரைதான் வர முடிந்தது.

 

மோர்டசா கெய்லிடம் சற்றே வாங்கினாலும் கடைசியில் 10 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் தமீம் இக்பால் மட்டும் அதிகபட்சம் 37 ரன்களை எடுத்தார். அதற்குப் பிறகு வந்த வீரர்களின் ஸ்கோர் இவ்வாறாக அமைந்தது: 7,1,4,6,0,6,2,2,0,0.

 

57/3 என்ற நிலையிலிருந்து மடமடவென விக்கெட்டுகள் சரிந்தது. பெவிலியனில் அடுத்த வீரர் கால்காப்பு கட்டக்கூட நேரமில்லாத கதியில் விக்கெட்டுகள் சரிந்தது. அடுத்த 13 ரன்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து வங்கதேசம் பரிதாபமாக 70 ரன்களுக்குச் சுருண்டது.

57/3 என்று இருந்த போது புதிர் ஸ்பின்னர் சுனில் நரைன், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மற்றும் ஆல்ரவுண்டர் மஹமுதுல்லா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி சரிவைத்தொடங்கி வைத்தார். 6வது விக்கெட்டாக தமீம் இக்பால் அவுட் ஆனார்.

சுனில் நரைன் 7 ஓவர்கள் வீசி 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கிமார் ரோச் 6 ஓவர்கள் வீசி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

 

http://tamil.thehindu.com/sports/13-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article6344993.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.