Jump to content

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு... இந்த உணவுகள் கை கொடுக்கும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

30-1409369548-1ere12.jpg

 

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு... இந்த உணவுகள் கை கொடுக்கும்!

 

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும்.

 

சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது. இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது.

 

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

 

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை சிகிச்சையில் நம் கவனத்தை செலுத்தியுள்ள நாம் கீழ் கூறியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். ஆண்மை குறைவை நிவர்த்தி செய்யும் உணவுகள், ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிச்சைகள், விறைப்பு செயல் பிழற்சியை குணப்படுத்தும் உணவுகள் மற்றும் விறைப்பு செயல் பிழற்சிக்கான இயற்கை சிகிச்சைகள்.

 

சரி இப்போது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதோ அதற்கான  வழிகள்...

 

உள்ளி.

பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த ஓட்டத்தை சீராக்கி அழுத்தத்தை அதிகரிக்க பூண்டு உதவும். இதனால் பாலியல் உறுப்பு தூண்டப்படும். மேலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பூண்டில் பல கனிமங்கள் வளமையாக உள்ளது.

 

மாதுளம் பழம்.

மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்தி வாய்ந்த உணவாக விளங்குகிறது. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்கள் வளமையாக உள்ள இந்த பழம் இயற்கையான முறையில் ஆண்மை குறைவை நீக்கும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்கும்.

 

டார்க் சாக்லெட்.

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டு பிரச்சனையை பொறுத்த வரை, அதற்கு தீர்வை அளிக்கும் அதிசயத்தை தருகிறது டார்க் சாக்லெட். டார்க் சாக்லெட்டில் இரத்த சுற்றோட்டத்தை மேம்படுத்தும் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. மேலும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இது உதவுகிறது.

 

வாழைப்பழம்.

தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால போதும், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற முக்கிய என்ஸைம் உள்ளது. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போக வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை ஊக்குவித்து, பாலியல் மனநிலையை தூண்டி விடும்.

வால்நட்.(Wall-nut)

இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் முக்கியமான பொருளான அர்கனைன் வால்நட்களில் உள்ளது. விந்தணு உற்பத்தியில் விரைக்கு உதவிடும் அர்கனைன். திடமான விறைப்பிற்கும் கூட வால்நட் உதவுகிறது. இது போக, வால்நட்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், ஆண்களின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிடும்.

 
கீரை மற்றும் பச்சை காய்கறிகள்.

ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ள கீரை மற்றும் பச்சை காய்கறிகள் உங்கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை சிறப்பாக குணப்படுத்தும்.

 
பாதாம் பருப்பு.

வால்நட்களை போல் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை இயற்கையான வழியில் குணப்படுத்தும் ஆச்சரியமளிக்கும் மற்றொரு உணவு தான் பாதாம்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை நிறுத்த என்ன வழி என்று எழுதவில்லையே?

அதை நிறுத்தி வைக்கத்தான் வழி சொல்லியிருக்கு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை நிறுத்த என்ன வழி என்று எழுதவில்லையே? 

 

arecanut-cutter-1-192x300.jpg

 

அதை நிறுத்துவது.... வெரி சிம்பிள்.

பாக்கு வெட்டியால்... சின்ன ஒரு ஆபரேசன் செய்து, சுண்ணாம்பு தடவி விட்டால், போச்சு.

Link to comment
Share on other sites

arecanut-cutter-1-192x300.jpg

அதை நிறுத்துவது.... வெரி சிம்பிள்.

பாக்கு வெட்டியால்... சின்ன ஒரு ஆபரேசன் செய்து, சுண்ணாம்பு தடவி விட்டால், போச்சு.

என்னமா சிந்திக்கிறாங்க பாருங்க. அப்பபாடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமா சிந்திக்கிறாங்க பாருங்க. அப்பபாடா

 

இறைக்கின்ற கிணறே ஊறும்  என்பது சிறியின் தியறி.. :lol:

 

அதன்படி ஒன்றைப்பற்றி  அடிக்கடி 

அதிகமாக சிந்திப்பவனுக்கே 

இந்தமாதிரி சிந்தனைகளும்  அதிகம் வரும்... :icon_mrgreen:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வித்தியாசமாய் சொல்லுவாங்கள் என்று பார்த்தால் வழமையாய் சாப்பிடுகிறதைத்தான் சொல்லியிருக்கிறார்!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வித்தியாசமாய் சொல்லுவாங்கள் என்று பார்த்தால் வழமையாய் சாப்பிடுகிறதைத்தான் சொல்லியிருக்கிறார்!!!!!!!

 

நீங்கள்  இதுக்கும் மேலாக ஏதாவது தேடுகின்றீர்களோ....

தனிமடலில் (சிறியை) தொடர்பு கொள்ளவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வித்தியாசமாய் சொல்லுவாங்கள் என்று பார்த்தால் வழமையாய் சாப்பிடுகிறதைத்தான் சொல்லியிருக்கிறார்!!!!!!!

 

நீங்கள்  இதுக்கும் மேலாக ஏதாவது தேடுகின்றீர்களோ....

தனிமடலில் (சிறியை) தொடர்பு கொள்ளவும்

 

23169d1327692170t-super-duper-tips-3212-

 

முருங்கக்காய் குழம்பு, வைத்து, சாப்பிட்டுப் பார்த்தீர்களா?

அதற்கும் பலன் இல்லையென்றால்.... எம்முடன் தொடர்பு கொள்ளவும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23169d1327692170t-super-duper-tips-3212-

 

முருங்கக்காய் குழம்பு, வைத்து, சாப்பிட்டுப் பார்த்தீர்களா?

அதற்கும் பலன் இல்லையென்றால்.... எம்முடன் தொடர்பு கொள்ளவும். :D

இந்தாய்யா தமிழ் சிறி நானும் கொஞ்சநாளா பார்த்துகிட்டு வாரன் ஆள்களை உசுப்பிற வேலையா பார்த்து கிட்டு இருக்கிறீர்

 

இங்க லேகியம் இருக்கு எழுப்பி  ஒரு முறி முறித்துவிடும் :D

Link to comment
Share on other sites

ம்.. கெதீல பிறசர்ல போற பிளான்!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500.JPGமுற்றிலும் இயற்கையானது .... இதனுடன் amino acid ம் ஒரு குளிசை எடுத்தால். 22 வயது திரும்பி வந்ததுபோல் இருக்கும். நுட்ரிசன் வைடமின் விற்கும் இடங்களில் பெற்றுகொள்ளலாம்.

மனைவிமார் குட்டி போட்ட பூனை போல  சுற்றி சுற்றி வருவார்கள் ...... இந்தாள் என்ன 20 வயதுக்கு திரும்பிவிட்டது என்று ஒரே ஆராய்ச்சியகத்தான் இருக்கும் இரவு பகலாக . என்ன ஒரு வில்லங்கம் கட்டில் பழையது என்றால் ஒன்று புதிதாக வேண்ட வேண்டி வரும். 
 
ஒரு பக்கவிளைவு ..... ஆண்களுக்கு சுரக்கும் testosterone சுரப்பிகள் இவற்றிற்கு அடிமையாகி விடும். பின்பு தானாக சுரக்கும் திறனை அவைகள் கொஞ்சம் இழந்துவிடும். 
ஏற்கனவே டேச்டோச்டேரோன் சுரப்பி குறைவடைவதல்தான் ... மற்ற சிக்கல்கள் வரும். அதலால் அதுபற்றி கவலை பட தேவை இல்லை.
 
இது ஜிம்மிற்கு போகிறவர்கள்தான் பாவிப்பார்கள் தசைகளை மிகவும் வன்மையாக்கும். கொஞ்சம் எக்ஷ்செர்சைசும் செய்தால் .............புது மாப்பிளைதான்.
இந்தாளை  இப்படியே விட்டால்  ஒரு 20 வயது பெட்டையை எனக்கு தங்கை ஆக்கிவிடும் போல இருக்கு என்று ... ஒரே கவனிப்பகத்தான் இருக்கும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக எழுச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய உணவு வகைகைளையும் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சளை கரைத்து காலையும் மாலையும் ஒரு கிளாஸ் குடிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.