Jump to content

சைவ உணவு வகைகள்.


Recommended Posts

இது ஜிம் பாடி ஏற்றுவதற்கு பயனுள்ள குறிப்பு தோழரே குட்டி... அனைவரும் இவ்வாறுதான் காலையில் உண்டுவிட்டு உடற்பயிற்சி செய்கிறார்கள்.. :lol::D

உண்மை தான், ஊரில் இருக்கும் போது பச்சைப் பயறை ஊறவைத்து அவித்து, தேங்காய்ப் பூ, சீனி/சர்க்கரை உப்பு சேர்த்து வாரத்தில் ஒருமுறையாவது சாபிட்ட ஞாபகம்...

உதைச் சாப்பிட்டுப் போட்டு, இருப்புக் கொள்ள ஏலாமல் வீட்டு பின் வளவு முழுக்க (அறுகம் புல்லும், நெரிஞ்சி முள்ளும் தான் அதுக்குள்ளே இருக்கிறது) அதை வெட்டி துப்பரவாக்கிறது தான் வேலை... :)

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுரக்காய் மோர்குழம்பு

april%202009%20020.JPG

தேவையானப் பொருட்கள்:

மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)

சுரக்காய் - 1

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

அரிசி - 1/2 டீஸ்பூன்

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுரக்காய் போட்டு அதில் உப்பு,மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும்.

காய் வெந்தப்பின் அரைத்த கலவையை அதில் சேர்க்கவும்.

பின் மோர் சேர்த்து 1 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய்,கறிவேப்பிலை தாளித்து அதை மோர்குழம்பில் கொட்டவும்.

சுவையான மோர் குழம்பு சூடான சாதத்திற்கு அப்பளம் வடகமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

april%202009%20019.JPG

http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t12270.html

Link to comment
Share on other sites

  • 1 year later...

பலாக்காய் என்பதுதான் சரியான சொல். அன்பருக்கு இது தெரியாமல் இருப்பது கவலை அளிக்கிறது. தமிழ் திரிபு பட அநுமதிக்க கூடாது. பிலாக்காயஎன்பது பேச்சு வழக்கில் உள்ள சொல். எழுத்தில் வருவது சரியல்ல.

Link to comment
Share on other sites

  • 3 years later...

A0667_10.jpg

குண்டுத் தோசை (கார பணியாரம்)

செய்முறை:

பச்சரிசி - அரை கப்

புழுங்கல் அரிசி - அரை கப்

வெந்தயம் - அரை மேசைக்கரண்டி

வெள்ளை உளுந்து - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

தேங்காய் துருவல் - அரை கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 2 கொத்து

கடுகு - அரை தேக்கரண்டி

பெருங்காயத் துண்டு - குண்டு மணி அளவு

கடலைப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி

 

பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதை போல வெந்தயம், உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும்.

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரிசி மற்றும் உளுந்து ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு லேசாக சிவக்க விடவும்.

எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்த பிறகு தாளித்தவற்றையும் மாவுடன் ஊற்றி கரண்டியால் கட்டி இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால் மாவை எடுத்து குழியில் முக்கால் அளவு ஊற்றவும்.

A0667_07.jpg

பிறகு ஒரு தட்டை வைத்து மூடி வைக்கவும். பணியாரத்தின் மேல் புறம் வேகுவதற்காக மூடியை போட்டு 2 நிமிடம் மூடி விடவும்.

A0667_08.jpg

2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் ஒரு நிமிடம் கழித்து எடுத்து விடவும். ஒரு குச்சியை வைத்து திருப்பினால் சுலபமாக திருப்ப வரும்.

A0667_09.jpg

இந்த பணியாரத்தை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.