Jump to content

2014 மக்களவைத் தேர்தலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை


Recommended Posts

தமிழீழ விடுதலையையும், தமிழகத்தின் வாழ்வுரிமையையும் மக்கள் மன்றத்தில் முன்னெடுப்போம்!

 

தேசிய இனங்களின் மீதான வன்முறையும், அடக்குமுறையும், சுரண்டலும் மிக அதிகமாக ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இந்திய பாராளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இச்சமயத்தில் எவற்றினை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை விவாதிப்பது மாற்று அரசியல் இயக்கங்களின் மிக முக்கியமான மற்றும் அவசியமான அரசியல் கடமையாகிறது.

தேர்தல் காலங்களில், மக்களிடம் எழும் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், எழுப்பபடாமல் இருக்கும் கேள்விகளை முன்வைப்பதும் அத்தகைய கடமைகளில் ஒன்றாகிறது.

eelam_tamils_339.jpg2009க்குப் பின்பான தமிழகத்தின் அரசியல் சூழல் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியே எழுந்து வருகிறது. தமிழ்த் தேசிய கேள்விகளும், முன்னெடுப்புகளும், விவாதங்களும் நிரம்பிய களத்தில் நாம் இன்று நிற்கிறோம். இந்திய ஏகாதிபத்தியத்திற்கும், தமிழ்த் தேசிய பட்டாளி மக்களுக்கும் இடையே நிகழும் அரசியல் விவாதம், போலி இந்திய தேசியத்தின் மீதான அவநம்பிக்கை, எதிர்ப்பு அரசியல் என அனைத்தினையும் தொகுத்தும், அதனை விவாதத்திற்கு எழுப்பவும் செய்வோம்.

சுரண்டலை முன்வைக்கும் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து தேசிய இனங்களின் மீதான உரிமை மறுப்பு ஆகியவை கடந்த 20 ஆண்டுகளில் துவங்கி இன்று உச்சநிலையை அடைந்திருக்கிறது. உலகமயமாக்கலும், உயர்சாதி, பணக்கார அரசியல் குழுவும் இணைந்து நின்று தேசிய இனங்களை வேட்டையாடும் அரசியலை, மக்களிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயமாகப் பார்க்கிறோம்.

இவற்றினைத் தொகுத்து மூன்று பெரும் பிரிவுகளாக காண்கிறோம்.

தமிழீழ விடுதலை

தமிழகத்தின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல், சுரண்டல், அழித்தல்

தமிழ்த்தேசிய பண்பாட்டின் மீதான வன்முறை

இந்த மூன்று வகைகளை தமிழ்ச் சமூகம் கடந்த காலத்தில் எதிர்கொண்டு எதிர்வினையாற்றி இருக்கிறது. இன்று இத்தகைய அடிப்படை கேள்விகளை முன்வைக்காமல் தேர்தல் களம் கட்டப்பட்டுகிறது. இது பெரும்பான்மையான பிரதிநிதிகளை வைத்திருக்கும் வலிமை வாய்ந்த கட்சிகளால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் எந்த வித பதிலையும் அளிக்காமலும், கொள்கை ரீதியில் முடிவுகளை மக்கள் சார்ந்து எடுக்காமலும், அரசியல் பிரச்சாரக் களத்தில் விவாதப் பொருளாக மாற்றாமலும் கடந்து செல்ல விரும்புகிறார்கள். இந்திய அளவில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இத்தகைய மக்கள் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் இருக்கும் இவர்கள், மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளை இவ்வாறே கடந்து செல்ல அனுமதிப்பது தமீழிழ விடுதலைக்கும், தமிழகத்தின் வாழ்வுரிமைக்கும், பண்பாட்டிற்கும் பெருத்த பின்னடைவினை தரும் அரசியலையே உருவாக்கும்.

கடந்த வருடம் இடிந்தகரையில் தேர்தலைப் பற்றிய மாற்று இயக்கங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள், கடமைகள் பற்றிய விவாத அரங்கில், மே17 இயக்கம் முன்வைத்த அதே நிலைப்பாடுகளை இன்றும் முன்வைக்க விரும்புகிறோம். அனைத்து இயக்கங்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட காத்திருக்கும் மக்கள் விரோத மசோதாக்களை அம்பலபடுத்தவும், தடுத்து நிறுத்தவும், இணைந்து அரசியல் செயல்பாட்டினை முன்வைக்க வேண்டும் என்று அன்று கோரிக்கை முன்வைத்திருந்தோம். இதனடிப்படையில் தேர்தல் கூட்டணியை உருவாக்குவது என்றும், தேர்தல் கட்சிகள் முன்வராமல் போகும் பட்சத்தில் இயக்கங்கள் தோழமை இணைந்து களத்தினை உருவாக்குவது என்கிற கோரிக்கையையும் முன்வைத்தோம். அத்தகைய முயற்சிகள் கைகூடாத நிலையில் தமிழ்ச் சமூகத்தில் இந்த விவாதத்தினை எவ்வாறு முன்னெடுப்பது என்கிற கவலை நிரம்பியே இந்த அறிக்கையை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

வருகின்ற பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட காத்திருக்கும் மக்கள் விரோத மசோதாக்கள் பற்றிய விவரங்களையும், இந்த அரசியல் கட்சிகளிடத்தில் மக்கள் அறியவேண்டிய செயல்பாடுகளையும் முன்னிலைப்படுத்த இக்களத்தினை பயன்படுத்தமுடியும் என்று நம்புகிறோம்.

இச்சமயத்தில் இத்தேர்தலில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய கோரிக்கைகளும், முடிவுகளாகவும், பின்வருவனவற்றினை மிகச்சுருக்கமாக தோழர்களின் கவனத்திற்கு முன்வைக்கிறோம். இதில் விடுபட்டவற்றினை இணைத்து வலிமைப்படுத்த வேண்டுகிறோம்.

சர்வதேச அரசியல் செயல்பாட்டு வலிமை:

தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச சுதந்திரமான விசாரணை இலங்கை நாட்டின் மீதும் (அரசின் மீது மட்டுமல்ல) ஜெர்மன் தீர்ப்பாயத்தின் முடிவின் படி இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்காவின் மீதும் கொண்டு வருவதற்கான அரசியல் முடிவு.

வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைப்பதில் எல்லையோர மாநிலங்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும்.

தமிழக மீனவர்கள், தமிழீழ மீனவர்கள், சிங்கள மீனவர்கள் எனும் மீன்பிடிச்சமூகம் பாரம்பரியமாக மீன்பிடித்தலை செய்ததைப் போன்ற பாரம்பரிய மீன்பிடி உரிமைக்கான ஒப்பந்தங்களை வடிவமைப்பது.

கச்சத்தீவு மீட்டெடுப்பு என்பது தமிழகத்தின் வாழ்வுரிமை மீட்பு என்பதாக மட்டுமல்லாமல் அந்த தீவு என்பது கடலுக்கடியில் இருக்கும் வளத்தினையும் கொண்டிருப்பது என்பது தமிழ்த் தேசிய உரிமையாகும். மேலும் கச்சத்தீவு என்பது தமிழீழ நாட்டிற்கும், தமிழகத்திற்கு இடையேயான உறவுகளின் நலன்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யமுடியும்.

தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசுகள், ஏகாதிபத்திய அரசுகள் இந்தியப் பெருங்கடலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயலும் அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ளும் திடமும், பார்வையும் கொண்ட தமிழினப் பாதுகாப்புத் தன்மையை கொள்கைத் திட்டங்களில் கொண்டுவர செய்வது.

தமிழகத்தின் வாழ்வுரிமை

உலகமயமாக்கல், உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தங்கள் அடிப்படையிலான இந்திய தேசிய அரசின் மசோதாக்கள் தமிழகத்தின் வாழ்வுரிமைக்கு பெரும் ஆபத்தினை விளைவிக்கின்றன. இதன் சில மசோதாக்களை கணக்கில் எடுப்பது அவசியம். (பின்வருவனவற்றில் விடுபட்டுள்ள பிற மசோதாக்களையும், கொள்கை திட்டங்களையும் இணைக்க உதவுமாறு வேண்டுகிறோம். )

கூடன்குளம், கல்பாக்கம், வடபழஞ்சி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட இருக்கும் அணு உலைப் பூங்காக்கள், அணுக்கழிவு பரிசோதனை உள்ளிட்ட திட்டங்கள் மீதான எதிர்ப்பும், அணு உலை விபத்து நட்ட ஈட்டு மசோதா ஆகியவை பற்றி பாராளுமன்றத்தில் இக்கட்சிகளின் நிலைப்பாடுகளும் அம்பலப்படுத்தப் படவேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தினையும், அதன்மூலமாக பாதிக்கப்பட இருக்கும் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட வனப்பகுதிகளும் பற்றிய இந்திய தேசிய அரசின் முடிவுகள்,

முல்லைப் பெரியாறு உரிமை, காவிரி ஆற்று உரிமை, பவானி ஆற்று உரிமை, பாலாறு மீதான அணைத்தடுப்பு எதிர்ப்பு, பரம்பிக்குளம்-ஆழியாறு அணையில் இருந்து கேரளா கேட்கும் அதிகப்படியான நீர் பகிர்மானம், தாமிரபரணியில் இருந்தும், பேச்சிப்பாறையில் இருந்தும் கூடன்குளத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர், தமிழகத்தின் பெரும்பகுதிகளில் (குறிப்பாக வடதமிழகத்தில்-செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை) மூடப்படும் தண்ணீர் ஆதாரங்கள் தொடர்பான அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள்.

தண்ணீரை தனியார்மயப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதற்காக காத்திருக்கிறது. இதன்படி அனைத்து நீர் ஆதாரங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு தண்ணீர் என்பது வணிகப்பொருளாக மாற்றப்படும். இதன்பின்னர் தண்ணீர் பயன்பாடு என்பது சந்தைவிலையிலேயே மக்களுக்கு கிடைக்கும். உலகவர்த்தக கழகம் கடந்த 5 ஆண்டுகளில் இதை நிறைவேற்ற கடும் நெருக்கடியை அளித்தது. இதை நிறைவேற்றக் கோரி உலக வர்த்தக கழகத்தின் முந்தைய தலைவர் பாஸ்கல் லெமி வெளிப்படையாக தில்லிக்கு வந்து நெருக்கடி கொடுத்தார். இதன் அடிப்படையில், வணிகமயமாக்கலுக்கு ஆதரவினை அளித்து பத்திரிக்கைகளும் தொடர் கட்டுரைகளை வெளியிட்டன‌. இச்சமயத்தில் இந்த மசோதா குறித்தான கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிய உருவாக்கப்பட்ட குழுவிற்கு எதிர்ப்புகளை பதிவு செய்ய பல்வேறு கட்சிகளை மே17 இயக்கம் தொடர்பெடுத்து பேசியது. இதனடிப்படையில் சில கட்சிகள் (மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி) தமது எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள். (இதில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இசுலாமிய இயக்கங்களிடத்தில் உடனடியாக தொடர்புகள் கிடைக்காத காரணத்தினால் அவர்களால் குறித்த நேரத்தில் எதிர்ப்புகளை பதிவு செய்ய இயலவில்லை) இந்த மசோதா புதிய பாராளுமன்றக் குழுவில் நிறைவேற்றப்படுவதற்காக காத்திருக்கிறது. இதைப் பற்றிய கள்ளமெளனமே பெரும் கட்சிகளிடம் இருந்து தமிழக மக்களுக்குக் கிடைக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தினை சிதைக்கும் மீத்தேன் திட்டம் விவாதத்திற்குட்படுத்தபட வேண்டும். இதைப் பற்றிய கள்ள மெளனம் காத்த திமுகவினரின் பங்களிப்பினை அம்பலப்படுத்த மே17 இயக்கத் தோழர்கள் டி.ஆர் பாலுவின் இணையதளத்தில் இருந்த செய்திக்குறிப்பினை முகநூலில் வெளியிட்டார்கள். இதனை மறுத்து உடனடியாக செய்திக்குறிப்பினை தனது இணையப்பக்கங்களில் இருந்து நீக்கிய டி.ஆர்.பாலுவிற்கு பதிலடிக்கும் படியாக அவரது இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு, ஆவணப் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த தரவுகளில் இருந்து மீத்தேன் திட்டத்தின் மீதான டி.ஆர்.பாலு, திமுகவின் நேரடி பங்களிப்பினை தோழர்கள் வெளியிட்டார்கள். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்காக பெரும்கட்சிகளிடத்தில் இருக்கும் உள்ளார்ந்த விருப்பத்தினை அம்பலப்படுத்த வேண்டியதாகிறது.

தமிழகத்தில் வர இருக்கும் 40க்கும் மேற்பட்ட அனல்மின்நிலையங்கள், வடதமிழகம்-செய்யூரில் வர இருக்கின்ற பெரும் மின் உற்பத்தி திட்டம் சுற்றுப்புறச்சூழலையும், வாழ்வாதாரத்தினையும் அழிக்க காத்திருக்கிறது. இதற்கான விழிப்புணர்வையும், விவாதத்தினையும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லவேண்டியுள்ளது.

கெயில் குழாய்த் திட்டம் ஒரு ஆபத்தான முன்மாதிரியினை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட இருக்கும் விவசாயிகள் உள்ளிட்ட குடிமக்களின் வாழ்வாதாரத்தினைப் பற்றி அக்கறை கொள்ளாமல், கவனமாக தவிர்க்கும் பெரும் கட்சிகளின் நிலைப்பாடுகள் விவாதத்திற்குள்ளாக்கப்பட வேண்டும்.

மின்சார உற்பத்தியினை 1990களில் தனியார்மயப்படுத்திய அன்றைய காங்கிரஸ் அரசு, மெளனம் காத்த மற்ற கட்சிகளின் காரணமாகவும், 2000க்குப் பின்பு வந்த மின்சாரச் சட்டத்தின் மூலமாக தமிழகத்தில் பெருமளவில் தனியார் கொள்முதலுக்கு விடப்பட்ட மின் உற்பத்தியின் காரணமாக மின்சார விலையேற்றமும், மின்வாரியத்தின் நட்டமும் ஏற்பட்டது. மின் உற்பத்தி தனியார் நிறுவனங்கள், ஆளும் கட்சியினர் சார்ந்து இருந்த காரணத்தினாலும், அவர்களது சொத்தாகவும் இருந்த காரணத்தினாலும், மக்கள் பணம் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக செயற்கை மின் தட்டுப்பாடு கடந்த 4-5 வருடங்களில் உருவாக்கப்பட்டு, இன்று அதிக அளவில் வாழ்வாதாரத்தினை அழித்திருக்கிறது. உதாரணமாக நெசவாளிகள், விவசாயிகள், சிறு-குறுதொழில் முனைவோர்கள், சிறுவர்த்தகக் கடைகள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் பெரும் பாதிப்படைந்தனர். இதை நிவர்த்தி செய்ய இதுவரை இக்கட்சிகள் முயற்சி எடுக்க மறுக்கின்றன. இந்த நிலையில் தில்லி, மும்பை போன்ற நகரங்களில் இருப்பதைப் போன்று சென்னையிலும் மின்சார விநியோகம் தனியார்மயமாக்கப்படுகின்றது. இதனால் மேற்கூறிய நகரங்களில் இருப்பதைப் போன்று மின்விலையேற்றமும், மின் விநியோக முறைகேடுகளும் அதிக அளவில் நிகழ இருக்கின்றன. இதில் தமிழக மக்களின் சொத்துக்களாக இருக்கும் மின் விநியோக சொத்துக்கள் வட இந்திய மார்வாடிகளிடமும், பெரும் முதலாளிகளிடமும் இலவசமாக கையளிக்கபடுகிறது. இதன்பின்னர், சராசரி ஏழை, நடுத்தரவர்க்க மக்களுக்கு, மின்சாரம் கைக்கெட்டாத நிலைக்கு உருவாக்கப்படும். இந்த நிலையை இதுவரை மக்களிடத்தின் கவனத்தில் இருந்து மறைத்துப் பேசும் கட்சிகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவது அவசியம். இந்த விலையேற்றத்தினை தடுக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் மே17 இயக்கம், 2012இல் எதிர்ப்பினை பதிவு செய்தது. தொடர்ச்சியான கூட்டங்களை சென்னையிலும் பிறபகுதிகளிலும் வலிமை சார்ந்து செய்தது. சுவரொட்டி, துண்டறிக்கைகள், நேரடி பங்கேற்புகள் மூலமாக செய்தது. இன்று அனைவரும் கைகோர்த்து இதை விவாதப்பொருளாக மாற்றவேண்டும்.

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகள் தொடர்ச்சியாக சிறைப்படுத்தப்பட்டிருப்பது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். அபுதாகிர், தென்தமிழன் உள்ளிட்ட சிறைவாசிகள் உடனடியாக விடுதலை செய்யப்படுதல் அவசியம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் சிறைவாசிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் இச்சமூகத்தில் அமைதியான வாழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மறுக்கும் கட்சிகளை விவாதத்திற்குள்ளாக்க வேண்டும். சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தடுக்கப்படுவதும், அந்த உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் அவசியம்.

இசுலாமியர் உரிமை தொடர்பான சச்சார் கமிட்டி பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் மற்றும் தொடர்ச்சியாக திருச்சி சிறையிலும் இது நீட்டிக்கப்படுவது ஆகியவை மூடப்படுவதற்காக தொடர்போராட்டங்களை மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை இதன் மீது எந்தவித நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. தமிழீழ விடுதலைக்காக வெளியுறவுக்கொள்கை மாற்றத்தினை கொண்டுவருவதாகப் பேசும் அதிமுக அரசு தனது அதிகாரத்தின் கீழ்வரும் சிறப்பு முகாமின் கொடுமைகளைக்கூட தடுக்க முன்வராதது அதன் இரட்டைத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் மரண வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட எழுவரையும் விடுதலை செய்வதும், மரணதண்டனையை ஒழிப்பதற்கான விவாதத்தினையும் ஏற்படுத்த தேர்தல் களம் வலியுறுத்த வேண்டும்.

பெண்களின் உரிமைகள் தொடர்பான வர்மா கமிசனின் அனைத்து பரிந்துரைகளையும் சட்டமாக்குவதற்கும், பெண்களை போகப் பொருட்களாக சித்தரிக்கும் நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கும் வலியுறுத்துவோம்.

சமூக நீதியினை மறுக்கும் நோக்கில் இடஒதுக்கீட்டினைப் புறம் தள்ளும் முடிவினை எதிர்த்தும், சமூக நீதியினை நிலைநாட்டவும் தொடர்ந்து எடுத்துரைப்போம்.

சாதிமறுப்புத் திருமணம் புரிந்த தம்பதியரில் ஒருவருக்கு அரசு உடனடியாக வேலை வழங்கவும், இணையரின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் வேண்டும். சாதிமறுப்புத் திருமணம் புரிந்த இணையர்க்கும், அதை செய்து வைப்போருக்கும் உரிய பாதுகாப்பு அளித்தல். அவர்களை அச்சுறுத்தும் சாதி, மத வெறியர்களைத் தண்டிக்க கடுமையான சட்டம் இயற்றக் கோருதல்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாகவும், இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் மாற்ற வேண்டும்.

மருத்துவத் துறை தனியார்மயப்படுவதை தடுக்கப்படவேண்டும். செவிலியர் பிரச்சனைகளில் தீர்வு காண வேண்டும்.

ஊகவர்த்தகத்தினை தடுத்து நிறுத்துவதன் மூலமாக அடிப்படை உணவுப் பொருட்கள் விலையேற்றத்தினை தடுக்க வேண்டும்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, அந்நியப் பொருட்கள் இறக்குமதி, உலக வர்த்தக மையத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல் ஆகியவை விவாதப் பொருளாகவும், முடிவாகவும் மாற்றப்பட வேண்டும். இவை வலியுறுத்தல் செய்யப்பட வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விமுறையும், கல்வி தனியார்மயப்படுத்தும் திட்டமும் முடக்கப்படவேண்டும். தமிழ்வழி அரசுப் பள்ளிகள், சிறப்பான கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட வேண்டும்.

கடலோர மணல் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை ஆகியவை தடுக்கப்படுதல் சட்டமாக்கப்பட வேண்டும்.

கடற்கரை மேலாண்மை ஒழுங்கு சட்டம், விதைச்சட்டம், மரபணுமாற்று முயற்சிகள்-வணிகமயாக்கப்படுதல், காடு பாதுகாப்புச் சட்டம் ஆகியவை மீனவர்கள், விவசாயிகள், மலைவாழ்மக்கள்-பழங்குடிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தினை அழிக்கின்றன. இவற்றினை தடுத்து நிறுத்துதல் பற்றிய நிலைப்பாடுகள் கேள்வியாக்கப்பட வேண்டும்.

நிலம் கையப்படுத்தும் மசோதாவினை தடுத்து பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியப் பெருநிறுவனங்கள் நிலத்தினை அபகரிப்பதை தடுக்கும் வகையில் மாநிலம்தோறும் காசுமீரத்தினைப் போல 370 விதிமுறைப்படி நிலத்தினைப் பாதுகாக்கும் சட்டத்தினை கொண்டு வர வேண்டும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கி வரும் பன்னாட்டு மற்றும் இந்திய தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைத்தல் உள்ளிட்ட‌ தொழிலாளர் நல அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுகின்றன, வளர்ச்சி பற்றிப் பேசும் கட்சிகள் இது குறித்து இது வரை பேசியதில்லை

தடையில்லா மின்சாரம், வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறும் நிறுவனங்கள் ஊழல், மோசடிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் போது அவற்றை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை எந்த கட்சியும் பேசவில்லை. சமீபத்திய உதாரணம் நோக்கியா நிறுவனத்தின் வரி மோசடியும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் சூழ்நிலை உருவாகி இருப்பதும்.

ரேசன்கடைகளை அடுத்து வரும் 4 வருடங்களுக்குள் முடக்குவதும் அல்லது வணிக நோக்குடன் நடத்தப்படவேண்டுமென்கிற மாற்றத்தினையும் உலக வர்த்தகக் கழகம் முன்வைத்துள்ளது. இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் உணவு ஆதாரப்பொருட்கள் அம்மக்களுக்கு சென்று சேராமல் தடுக்கப்படுகிறது. இதனை இதுவரை எந்த ஒரு பெரிய கட்சியும் தனது வலிமைமூலம் முடக்க மறுக்கிறது, விவாதிக்கவும் மறுக்கிறது.

விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு தாராளமயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த மசோதாக் கொள்கை விவசாயிகளின் விளைபொருட்கள் சந்தைகளில் வணிகப்படுத்தப்பட முடியாமல் போவதற்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அந்நிய இறக்குமதி காரணமாகவும், மானியம் அளிக்கப்பட்டிருக்கும் விவசாய அடிப்படைப்பொருட்கள் ஒவ்வொன்றாக நிறுத்தபடுவதன் மூலமாகவும், விவசாயிகள் மீது கடுமையான போரினை இக்கட்சிகள் தொடுத்திருக்கின்றன. இதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது அரசியல் கட்சிகளின் நிலையை அம்பலப்படுத்தும். இது இன்றைய தேவையாகும்.

மேற்கூறிய அனைத்திற்கும் காரணமாக இருக்கும் தனியார்மயம், உலகவர்த்தக மையத்தில் ஒப்பந்தம், இந்து மதவெறி பயங்கரவாதம், சாதியம் ஆகியவற்றினை எதிர்ப்பது மையமான அரசியல் நடவடிக்கையாகிறது. இந்தியாவினை உலகவர்த்தக மைய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றவேண்டும். (மேற்கூறியவை முழுமையான பட்டியலாக இருக்க இயலாது. ஏனெனில் பல்வேறு சமூக-அரசியல் மசோதாக்கள் நிறைவேற்றப்படக் காத்திருக்கின்றன. அனைத்தினையும் குறைந்த கால அளவில் தொகுக்க இயலவில்லை, மேலும் தமிழகம் சார்ந்த பிரதான பிரச்சனைகளை மையப்படுத்தி இருக்கிறோம். இதில் விடுபட்டவற்றினையும் இணைக்க உதவுமாறு வேண்டுகோள் வைக்கிறோம்)

இதனடிப்படையில் காங்கிரஸ், பாஜக ஆகியவை முற்றும் முழுதுமாக தமிழகத்தின் அரசியல் களத்தில் இருந்து நீக்கப்படவேண்டும். இவைகள் குறைந்தபட்ச வாக்குகளைக் கூட பெற இயலாத நிலையை உருவாக்குதல் அவசியம். மேற்கூறிய வாழ்வுரிமை தளத்தில், மக்கள் விரோத நிலைப்பாடுகளை எடுத்து செயல்படும் கட்சிகள்-வேட்பாளர்களை வீழ்த்துவது அரசியல் செயல்பாடாகிறது. இங்கு எந்த ஒரு அரசியல் கூட்டணியும் பிறவற்றிற்கு மாற்றாக வரையறை செய்ய இயலாத நிலையில் இருக்கும் பொழுது இப்பிரச்சனைகளை மக்களிடத்தில் விவாதப் பொருளாக்குவது அவசியம் என நினைக்கிறோம். இந்த நிலைப்பாடுகளுக்கு இக்கட்சிகள் பதிலளிப்பது என்கிற நெருக்கடியை ஏற்படுத்துவது முக்கியமாகும்.

2009இல் ஈழவிடுதலைக் கோரிக்கையை அரசியல் விவாதமாக்க முடியாது என்று பேசிய பெரும் கட்சிகளின் நிலையை உடைத்து, இன்று ஈழவிடுதலையை மையமாக வைத்தே தேர்தல் அரசியலை எதிர்கொள்ளும் நிலை பெரும் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையை மறுத்து தமிழ்ச் சமூகத்தில் எதேச்சதிகார போக்குடன் பேசும் பாஜக கட்சியின் தலைமையையும், அக்கட்சியின் வேட்பாளர்களையும் வீழ்த்துவது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தில் இருக்கும் மூன்று பெரிய அணிகளும் உள்ளளவில் பாஜக கூட்டணியாகவே செயல்படுகின்றன. நேரடியான கூட்டணி மூலம் தமது வாக்குவங்கி பலத்தினை அதிகரிப்பதுவும், கிடைக்கக்கூடிய வெற்றியை தமது கூட்டணிக்காக பயன்படுத்திக் கொள்வதுவும் இதன் திட்டமாகிறது. இதைவிட மோசமான பின்னணி அரசியலாக திமுக, அதிமுக அணிகளில், பெரும் எண்ணிக்கையைப் பெறும் கட்சியுடன் தேர்தலுக்குப் பின்பான கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் செயல்பட்டு தமது பார்ப்பனிய செயலுக்தியை காட்டுகிறது. இதன்மூலம் பெரும் பலனை அனுபவிக்கத் திட்டமிடுதலை எதிர்கொள்ளும் நெருக்கடி நம்மிடத்தே இருக்கிறது. மதவாதமாக நேரடியாகவும், மதவாதம் அற்றதாக திமுகவின் ஊடாக மறைமுகமாகவும், விமர்சனமற்று காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற நிலையின் ஊடாக அதிமுகவின் வழியாகவும் பாஜக செயல்படுவதை நாம் காண்கிறோம்.

எந்தக் கட்சியை முதல் எதிரியாக அறிவிப்பதும், அதன் தோல்வியை உறுதி செய்வது என்பதுவும் அந்ததந்தத் தொகுதி சார்ந்ததும், அப்பகுதியின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனை சார்ந்தும் அமைகிறது. அடிப்படையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தோல்வியை உறுதி செய்வது முதன்மைக் கடமையாகவும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகள் அடிப்படையில் அம்பலப்படுத்தல், தனிமைப்படுத்தல் என்பதையும் முன்வைத்து செயல் திட்டத்தினை நீங்கள் உங்கள் பகுதி சார்ந்த தோழர்களுடனும், தோழமைஇயக்கங்களுடனும் இணைந்து முன்வைத்து செயலாற்ற இயலும். உதாரணமாக,

தஞ்சாவூரில் பாஜக முதன்மை எதிரியாக வீழ்த்தப்பட வேண்டிய அதே நேரத்தில் மீத்தேன் எரிவாயு திட்டத்தினைக் கொண்டு வந்த திரு.டி.ஆர்.பாலு அவர்களைத் தோற்கடிக்க வேண்டியது நமது அரசியல் கடமை. இது வலிமையான தாக்கத்தினை அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்படுத்தும்.

திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தோற்கடிக்கப்படுவது அக்கட்சி முன்வைத்துள்ள தமிழீழ விரோத, தமிழர் விரோத அரசியலுக்கு விடப்படும் எச்சரிக்கையாக உணரப்படும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் போராடிய மக்களை காவல்துறையைக் கொண்டு கடுமையாகத் தாக்கி ஒடுக்கிய அதிமுகவினை தோற்கடிக்க, முல்லைப் பெரியாறுக்காக தீக்குளித்து தியாகம் செய்த ஜெயப்பிரகாசு என்கிற தோழரையும் நினைவில் ஏந்தி போராடுவது அக்கட்சிக்கு ஒரு முக்கிய எதிர்வினையாகும்.

புதுச்சேரியில் திரு.நாராயணசாமி அவர்கள் தோற்கடிக்கப்படுவது மிகமிக அவசியம். தொடர்ச்சியாக தமிழர் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டினை எவ்விதத் தயக்கமுமின்றி முன்வைக்கும் இவரைப் போன்ற அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்படுவது கட்டாயமாகும்.

ராமநாதபுரத்தில் பாஜக தோற்கடிக்கப்படுவதுவும், மீனவர்கள் கொலை செய்யப்பட்டபோது பாராளுமன்றத்தில் அமைதி காத்த திமுக தோற்கடிக்கப்படுவதும், பரமகுடி துப்பாக்கிச் சூட்டிற்காக அதிமுக தோற்கடிக்கப்படுவதும் பல செய்திகளை இந்தக் கட்சிகளுக்கு கொண்டு சேர்க்கும்.

இதுபோல பல்வேறு தொகுதிகளில் அங்குள்ள களநிலமைகளைச் சார்ந்தும், தோழமை அமைப்புகளின் கொள்கைகள் சார்ந்தும் செயல்திட்டங்களை வடிவமைத்து தேர்தலை எதிர்கொள்ள இயலும். தமிழர் நலனை முன்னிருத்தும் கூட்டணி இல்லாத சூழலில் தேர்தலை இடைமறித்து, மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டுவருவது ஓர் அரசியல் செயல்பாடாகவே பார்க்கிறோம். தேர்தலில் நம்பிக்கைகள் இல்லாத பொழுதிலும், இந்தப் பெரும் அரசியல் விழாவில் மக்கள் பங்கேற்கும் சூழலில், அரசியல் விழிப்புணர்ச்சிக்காக தேர்தல் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிற தோழமைகள் இப்பணியில் கைகோர்க்க அழைக்கிறோம்.

தோற்றாலும் கூட பேரம்பேச ஏதுவாக குறைந்த பட்ச அளவிலேனும் வாக்குவங்கியை உருவாக்க முனையும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தமது வைப்புத் தொகையினை இழக்கச் செய்யுமளவும், பிற இந்திய தேசியக் கட்சிகள் வலிமைபெறாமல் செய்யவும் பணியாற்றுவது அவசியம் என நம்புகிறோம்.

இந்த சூழலில் தமது பகுதி சார்ந்தும், சூழல் சார்ந்தும், கொள்கை சார்ந்தும், வாழ்வுரிமைப் பிரச்சனைகளை விவாதப்பொருளாக்க இத்தேர்தலை நாம் பயன்படுத்துவோம். தமிழீழ விடுதலையும், தமிழகத்தின் வாழ்வுரிமையும் இத்தேர்தலின் விவாதப் பொருட்கள், இதன் அடிப்படையிலேயே தமிழகம் இத்தேர்தலை சந்திக்கிறது என்கிற நிலையை உருவாக்க முயலுவோம் என்கிற கருத்தினை உங்களிடத்தில் முன்வைக்கிறோம். தவறவிடப்பட்ட மேலதிக விவரங்களையும் இதனுடன் இணைத்து இந்த செயல்திட்டத்தினை வலிமைப்படுத்த வேண்டுகிறோம்.

ஈழவிடுதலையை மறுக்கும் கொள்கையினை எதிர்த்தும், இனப்படுகொலைக் கட்சி காங்கிரஸினை திரும்பி எழாதவாறு முற்றும்முழுதாக துடைத்தெறியவும், மதப்பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்திய தேசிய அரசியலை மையப்படுத்தலை எதிர்த்தும், இந்திய அதிகார மையப்படுத்தலை எதிர்த்தும், உலகமயம்-தனியார்மய மசோதாக்களை எதிர்த்தும் மே 17 இயக்கம் களம் காணவிரும்புகிறது. இந்த மசோதாக்கள் பற்றிய புரிதல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்துவோம். மக்கள் பிரச்சனைகளுக்கு கொள்கைகளை வகுக்கும் பெரும் கட்சிகள் பதில் சொல்லட்டும். இதில் கைகோர்க்க தோழமைகளை அழைக்கிறோம்.

இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு பிரச்னை சார்ந்தும் தனிக் கட்டுரைகளை வெளியிடுகின்றோம். மேற்சொன்ன கோரிக்கைகளில் விடுபட்ட தகவல்களையும் சேர்த்துக்கொண்டு, உங்கள் பகுதிகளில் இருக்கும் சமூக மாற்றத்தை விரும்பும் தோழர்களோடும், இயக்கங்களோடும் இணைந்து, நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் களத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, மக்கள் விரோதக் கட்சிகளை, வேட்பாளர்களை வீழ்த்த களம் காண அழைக்கின்றோம். ஒவ்வொரு களத்தையும், மக்கள் விரோத நகர்வுகளை அம்பலப்படுத்தவும், மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் பயன்படுத்துவோம்.

நாம் வெல்வோம்.

- மே பதினேழு இயக்கம்.

 

குறிப்பு : இக்கட்டுரையில் விடுபட்டுள்ளதாக இருக்கும் கருத்துக்களை இணைத்து, செழுமைப்படுத்தி அனைவருக்கும் பொதுவான கருத்தியலாக மாற்றி உங்களது இயக்கப் பெயரிலோ, கூட்டமைப்பு பெயரிலோ பயன்படுத்த வேண்டுகிறோம்.

 

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26271-2014-04-09-03-25-35

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.