Jump to content

புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் மீதான தடை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிற் பிரிவினைப்போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இலங்கையின்அரசாங்கங்கள் இலங்கையின் சனநாயக விழுமியங்களைச் சிதைக்கக் கூடிய சட்டங்களை இயற்றிக் காலப்போக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்டசனாதிபதி ஆட்சி முறையையும் கொண்டு வந்தன. இவற்றின் நோக்கம் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத அதிகாரத்தை பேணுவதாகும்.  ஆனால் இப்பொழுது  இலங்கையின் அரசியற்சூழ்நிலை குடும்ப அதிகாரமொன்றைப் பேணுவதற்கானதாகவும் மாறிவிட்டது.

 

2009 ஆண்டு யுத்தம் நிகழ்ந்த போது சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் இந்த அரசாங்கம் தடை செய்திருந்தது. இப்போது புலம் பெயர்தேசத்துத் தமிழர் அமைப்புக்களையும் தடை செய்திருக்கிறது.

இந்தத் தடையை  இலங்கை அரசு கொண்டு வந்தமைக்கு கீழ்வருவன நோக்கங்களாக  இருக்கலாம்.

 

·         புலம் பெயர் தமிழர்களின் அமைப்புகள் இவ்வரசாங்கத்திற்கெதிராகப் புலத்தில் இருந்து செய்யும் பிரச்சாரங்களைப் பலவீனப்படுத்தல்.

·         புலம் பெயர் தேசத்துத் தமிழ் அமைப்புகளைப் புலிப்பயங்கரவாதிகளாகவும்  எதிர்ப்பரசியற் குழுக்களாகவும்  சிங்கள மக்களுக்கு காட்டி வலியுறுத்தல்.

·         தெற்கில் சரிந்து வரும் தமது செல்வாக்கை மீளக்கட்டி எழுப்புவதற்கு சிங்கள மக்களுக்கு மீண்டும் பிரிவினை அச்சத்தை ஊட்டுதல்

 

மேற்குறித்த  நோக்கங்களினுள்  இலங்கையின் நலன்களை விடவும்  இராச பக்ஸ குடும்பத்தின் நலன்களே அதிகம் உள்ளன.

 

புலம் பெயர் தேசத்துத் தமிழ் அமைப்புகள்  இலங்கையில் நிகழ்ந்த இறுதிப்போரில்  இவ்வரசாங்கம் நிகழ்த்திய இனவழிப்பு மற்றும் போர் குற்றச்செயல்கள் தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தி -இராசபக்ஸ அரசாங்கத்தைக்  குறி வைத்துதொழிற்படுகின்றன  என்பது யாவருக்கும் தெரியும். ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மூலம் மேற்குலகம்  இக் குடும்ப அரசாங்கத்திற்கு எதிராக வழங்கும் அழுத்தத்திற்கு  இவ்வரசாங்கத்தின் சீனச் சார்பு நிலை/அல்லது மேற்குலக எதிர்ப்புக் காரணம். இலங்கையின் அரசினது  சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கக்குணாம்சமோ அரசாங்கங்களின் பேரினவாத ஒடுக்குமுறை அணுகுமுறையோ மேற்குலகிற்கு  ஒரு பிரச்சனையே அல்லஒரு நாடு மேற்குலகின் ஆதரவு நாடாக உள்ளவரை உள்நாட்டில் அது என்ன விதமான ஆட்சியைக் கொண்டிருக்கிறது என்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. புலம் பெயர்ந்த  நாடுகளின் தமிழர் அமைப்புகள் வழங்கும் அழுத்தங்களை மேற்கு நாடுகள் தமது நலன்களுக்காகப்பயன் படுத்துவதை மட்டுமே செய்கின்றன.

 

 

புலம் பெயர்  நாடுகளைச் சேர்ந்த தமிழர் அமைப்புகளால்  இலங்கையில் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கான அல்லது வன்முறையான போராட்டத்திற்கான விதைகளைத் தூவ முடியாதுபல்வேறு நாடுகளிலும் சிதறிக்கிடக்கிற தமிழ் மக்களைத் திரட்டி,இலங்கையில் நிகழ்கிற ஒடுக்குமுறைகளைச் சுட்டி  அவற்றை எதிர்க்கும்  ஒரு சனநாயக ரீதியான ஆர்ப்பாட்டத்தைச் செய்தல்  அழுத்த அல்லது லொபிக் குழுக்களாக தொழிற்படுதல் என்பதற்கு அப்பால் இலங்கை தொடர்பான இப்புலம் பெயர் அமைப்புகளின்  வெளிப்படையான அரசியற் செயற்பாடுகள் இருக்க முடியாதுபுலம் பெயர்ந்தவர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட  அரசியற் செயற்பாடுகள்  இனவழிப்பு அல்லது போர்குற்றங்களுக்காக  இந்த அரசாங்கத்தை தண்டிக்க வேண்டும் என்ற அளவுக்கு மேல்  போகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தையோ மேற்குலகத்தையோ இந்தியாவையோ இவ்வமைப்புகளால் இலங்கையில் உருப்படியான ஒரு அரசியற் தீர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்கும்படி கோரி அழுத்தங்களை வழங்க முடியவில்லை.

 

 

புலம் பெயர் தமிழர்களின் பல அமைப்புகள், தமிழர்கள் தாங்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்களது  கலாசார  மற்றும் சமூக அடையாளங்களை வெளிப்படுத்திப்பேணுவதற்கான அமைப்புக்களாகவும்  தொழிற்பட்டு வருகின்றன.  இவ்வகையில் இவற்றின்  முக்கியத்துவமும் இருப்பும் அர்த்தமுள்ளவை.

 

 

இங்கே இன்னும் சில விடையங்களையும்  நாங்கள் அவதானிக்க வேண்டும் இப்புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் தங்களுக்குள்  முறையான இடைத்தாக்கத்தையோ  உரையாடலையோ பொது வேலைத்திட்டத்திற்கான முனைப்பையோ கொண்டவை அல்ல. புலத்தில் இயங்கும் பெரும்பாலான அமைப்புகள் இலங்கையில் ஈழத்தை உருவாக்கப்போவதான ஒரு தோற்றத்தையே புலம் பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.பல புலம் பெயர் அமைப்புக்கள் ஒழுங்கு செய்யும்போராட்டங்களின் தன்மை அவற்றில் முன் வைக்கப்படும் கோசங்கள் போன்றவற்றை அவதானிக்கும் போது அவற்றின் அரசியல் முதிர்ச்சியின்மை தெரியும். மேலும் புலம் பெயர் அமைப்புகளின் பண பலத்தின் பெரும்பகுதி ஆடம்பரமான விழாக்களிலும் தேவையற்ற விடையங்களிலும் செலவழிக்கப்படுவதாகவும் மக்கள் நலத்தினை அடிப்படையாகக்கொண்டு இச் செலவீடுகள் அமைவதில்லை என்றும்  பலமான குற்றச்சாட்டு உள்ளது.

 

 

முன்பு நான் குறிப்பிட்டபடிக்கு புலம் பெயர் தமிழர்களின் முனைப்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பானதாகவே இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது தொடர்ச்சியான இன அழிப்பின் ஒரு ஒரு துளி மட்டுமே. சிலவேளை போர்க்குற்றங்களுக்காக இந்த அரசாங்கத்தின் தலைவர்களையும் சில இராணுவத்தலைவர்களயும் தண்டித்தல் சாத்தியமானாலும் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இனவாதமேலாதிக்கம் தொடரத்தான் போகிறது. மேலும் இனவழிப்பு என்பது மக்களை நேரிடையாகக் கொல்வது என்ற ஹிட்லர் காலப்பரிமாணத்தை மட்டுமே கொண்டதல்ல. இது சமூக கலாசார பொருளாதார அரசியல் தளங்களில்  எந்தச் சிறுபான்மை இனங்களின் மீதும் சிறுகச்சிறுக மேற்கொள்ளப்படலாம் . உலகில் உள்ள பழங்குடி மக்களில் தொடங்கி  உலகில் வாழும் அனேகமான சிறுபான்மை இனங்கள் இத்தகைய அழிவுக்கு உட்பட்டு வருகின்றன.

 

 

தமிழ் மக்களுக்கு கடந்த அறுபது வருடங்களாக இருந்து வருகிற முக்கியமான பிரச்சனை அவர்களின் சமூக பொருளாதர அரசியல் இருப்பும் அதன் எதிர்காலமும்தான்.

இந்நிலையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் முன்னுள்ள முக்கியமான பணிகளாக  கீழ் வருவனவற்றைக் கருத முடியும்

·        

 

இலங்கையில் தமிழர்களின் இருப்பையும் அரசியல் பொருளாதார  சமூக உரிமைகளையும் பெறுவதற்கான சர்வதேச அழுத்தங்களை வழங்கக்கூடிய அளவுக்கு அரசியல் முதிர்ச்சியையும் ஒற்றுமையையும் அடைதல்.

 

 

 

·         இலங்கைத்தமிழர்களுக்கு புலம்பெயர் சமூகத்தினால் வழங்கப்படக்கூடிய அரசியற் சகோதரத்துவத்தின் உள்ளடகத்தையும் வடிவத்தையும் திட்டமிடுதல்.

 

 

 

·         புலம் பெயர்ந்த தமிழ்ச் சமுகத்துள் சனநாயகச் சிந்தனையை வளர்த்தல்.

 

·         புலம் பெயர்ந்த தமிழர்களை மாயைகளில் இருந்து வெளிக்கொண்டு வருதல்.

 

 

·         புலம் பெயர்ந்த இரண்டாம் முன்றாம் தலைமுறைகளின் மொழி மற்றும் இனம் சார்ந்த ஈடுபாட்டைப் பேணுதல்

 

ஆனால் இவை தொடர்பில் பல புலம் பெயர் தேசத்துத் தமிழ் அமைப்புகள் தெளிவு கொண்டவையாகவோ தமது எல்லைகளைப்புரிந்து கொண்டு செயற்படுபவையாகவோ இல்லை.

 

 

இலங்கையைப்பொறுத்த வரை இவ்வமைப்புகளால் இலங்கைக்குள் தொழிற்படும் அரசியல் கட்சிகள் மீது நேரிடையாக அழுத்தங்களை வழங்க முடியாது. ஆனால் புலம்பெயர் அமைப்புக்களின் பணம்பலம் கவர்சிகரமானதொரு விடையம் எனவே இலங்கையில் உள்ள தமிழ்க்கட்சி ஒன்று  புலம்பெயர் அமைப்பொன்றை நிதித்தேவைகாரணமாக அணுகும் போது தனது திட்டங்களுக்கு  சார்பாக்க அக்கட்சியை இயங்குமாறு கேட்கமுடியும். . ஆனாலும் இலங்கையில் உள்ள எந்தச் சிறுபான்மைக்கட்சியும் இலங்கையின் அரசியலில் தீர்மானமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை அல்ல.  எனவே இந்த வகையான உறவினால் விளைவாகக் கூடிய உண்மையான அரசியற்பயன் என்று எதுவுமில்லை.

புலம் பெயர்ந்தவர்களினால் இலங்கைக்கு கிடைக்கும் முக்கியமான  பயன் அவர்கள் அனுப்புகிற பணம் அல்லது வழங்குகிற   மனிதாபிமான  உதவியாகும். இது இலங்கையின் வடக்கு கிழக்கின்  நுகர்வுப் பொருளாதாரத்திற்கு அவசியமானதென்றும் சொல்லலாம்.

புலம் பெயர்ந்தவர்களினால் செய்யப்படுகிற எந்த வகையான உதவியையும் தடைசெய்யப்பட்ட இந்த அமைப்புக்களுடன் தொடர்புபடுத்தித் தடுத்துவிடும் அபாயம் உள்ளதாக சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். அவ்வாறு நிகழ்ந்து மனிதாபிமான நடவடிக்கைகள்  தடைப்படும் போது அதனால் நன்மை அடைந்த சாதாரணமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்

 

 

இலங்கை அரசின் இத்தடை இலங்கையில் இந்த அமைப்புக்கள் நேரிடையாக அல்லது வெளிப்படையாகக் கொண்டிருக்கிற உறவுகளை அறுத்து விடும். தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில் வேலை செய்யும் மனிதர்களின் இலங்கையில் வாழும் உறவினர்களை அச்சுறுத்த அல்லது கைது செய்ய இந்தத்தடை இது வழி வகுக்கும். இதனாற் சில அல்லது பல உறுப்பினர்கள் புலத்தில் தங்களது ஈடுபாட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.

 

 

சனநாயக ரீதியாக இயங்கும் அமைப்புக்களைத்  தடைசெய்வது  ஒரு அரசாங்கத்தின் குணாம்சத்தை தெளிவுபடுத்துவது. உலகம் முழுவதும் அரசாங்கங்கள் எதோ ஒரு தருணத்தில் தங்களது அதிகாரத்தைப்பேணுவதற்கு எதனையாவது தடை செய்தபடிதான் இருக்கின்றன. இவற்றினால் பாதிக்கப்படுவது மக்களே. இந்தத் தடை சிங்கள மக்களை  மீண்டும் தம் பக்கம் திரும்ப வைக்கும் என இந்த அரசாங்கம் நினைக்கிறது. ஆனால்  மேற்குலகின் அழுத்தங்கள் இந்த அரசாங்கத்தை மக்களிடம் இருந்து தன்னை இன்னும் தள்ளி வைக்கச் செய்யும் முடிவுகளை எடுக்கும் படி உந்துகின்றன.  இன்றைக்கு  ஏற்கனவே அன்னியப்பட்டுப்  போயிருக்கிற தமிழ் மக்களை இன்னமும் இன்னமும் தம்மிடமிருந்து அந்நியப்படச் செய்யும் முடிவுகளை எடுக்கிற இவ்வரசாங்கம் காலப்போக்கில் இலங்கையின் எல்லா மக்களிடமும் இருந்து தம்மை அந்நியப்படச் செய்கிற முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படும்

மேற்குலகின் நோக்கமும் அதுதான். அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்.

 

 

தேவ அபிரா

04/2014

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105360/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.