Jump to content

"நாங்கள் இந்தியாவின் போரை நடத்தினோம்" மகிந்த ராஜபக்ச‌.


Recommended Posts

"நாங்கள் இந்தியாவின் போரை நடத்தினோம்"  மகிந்த ராஜபக்ச‌.

[ இந்தப் பதிவை முழுதாக வாசிக்கவும்.அப்போதுதான் விடயங்களைத் தெளிவாக, சரியாக விளங்கிக்கொள்ளமுடியும்.]


பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்துவதன் மூலம் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று செய்திகள் கூறுகின்றன.

 

டி.கே.ஏ.நாயரின் பதவி ‘மாற்றம்’ என்பது ஏற்றமா இறக்கமா என்ற மதிப்பீடுகளும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட செய்தியுடன் சேர்ந்தே வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம், முதன்மைச் செயலராக இருந்த இந்த நாயரின் ‘பங்கு’ ஈழத் தமிழர் பிரச்சனையில், அதாவது அவர்களை ஒழித்துக்கட்டிய இனப் படுகொலைப் போர் தொடங்கப்பட்டதில் தொடர்புடையதாகும்.

 

சமீபத்தில் ‘தி ஸ்டேட்ஸ்மென்’ என்ற பாரம்பரியமிக்க வட இந்திய ஆங்கில நாளிதழில், இந்திய அளவில் மதிக்கத்தக்க இதழாளராக இன்று வரை திகழும் சாம் ராஜப்பா ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த‌க் கட்டுரையில், சேனல் 4 வெளியிட்ட, உலகின் நெஞ்சை உலுக்கிய ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ என்கிற ஆவணப் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு மட்டும் இல்லாதிருந்திருக்குமானால், இப்படிப்பட்ட நெஞ்சை உலுக்கும் காட்சி ஆவணம் ஒன்று வருவதற்கு வாய்ப்பேயில்லாமல் போயிருக்கும் என்று எழுதியிருந்தார்.

 

இந்திய மத்திய ஆட்சியை அதிரச் செய்த சாம் ராஜப்பாவின் அந்த‌க் கட்டுரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு அமைதி முயற்சி தொடர்பான முழு விவரமும் வெளியிடப்பட்டிருந்தது. அதன் சாராம்சம் இதுதான்:

 

“சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான அந்த ஆவணப் படத்தில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத்திற்கு புது டெல்லியே காரணியாக இருந்த, இதுவரை சொல்லப்படாத கதை ஒன்று உள்ளது. 2005ஆம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ர‌ணில் விக்கிரமசிங்கேதான் வெற்றி பெற வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஏனென்றால், அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த நிருபமா ராவ், ர‌ணில் விக்கிரமசிங்கேயுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் தமிழருக்கு எதிரான வல்லூறாகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார். தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று த‌மிழ‌ர்க‌ள் தேர்தலை‌ப் புறக்கணித்தனர். அவர்கள் மட்டும் வாக்களித்திருந்தால், ர‌ணில்தான் மிகப் பெரிய வெற்றி பெற்று அதிபராகியிருப்பார்.

 

இலங்கையின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகத் திகழவேண்டுமெனில், தமிழருக்கு எதிரான வல்லூறு என்ற தனது உருவகத்தை மாற்றிக் கொள்ள முற்பட்டார் ராஜபக்ச, டெல்லியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தார், ஆனால் டெல்லி தொடர்ந்து அவரை புறக்கணித்தது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டின் ஆதரவைப் பெற்று இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இங்கு வாழும் சமூக ஆர்வலர்களின் உதவியை நாட ராஜபக்ச முற்பட்டார்.

 

டெல்லிக்கும், கொழும்புவிற்கும் இடையே பாலமாக செயல்பட தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவை உருவாக்க ராஜபக்சவின் தூதர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். கொழும்புவின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணியாளரும், ஜெயப்பிரகா‌‌ஷ‌் நாராயணன், அன்னைத் தெரசா ஆகியோருடன் நெருக்கமாக பழகியவருமான எம்.ஜி.தேவசகாயத்தை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட ஒரு குழு உருவானது. இதில் மற்றொரு ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், தமிழக உள்துறை செயலராக பணியாற்றிவருமான எஸ்.பி.ஆம்ப்ரோஸ், இலங்கை பிரச்சனையில் விவரமறிந்தவராகத் திகழந்த முன்னாள் இராணுவ அதிகாரி (கர்னல் ஹரிஹரன்), மூத்த இதழாளர் (ராம் ராஜப்பாதான்) ஆகியோர் கொண்ட அந்தக் குழு, 2007ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்குழு, அதிபர் ராஜபக்சவின் ஆலோசகர் சுனிமால் ஃபெர்ணான்டோ தலைமையிலான குழுவுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியது.

 

இலங்கைத் தமிழர் இனப் பிரச்சனைக்கு, அவர்களின் நீண்ட கால அரசியல் எதிர்பார்ப்பிற்குத் தீர்வு தராத எந்த ஒரு தரப்பின் இராணுவ வெற்றியும் நீடித்தத் தீர்வை உருவாக்க முடியாது என்பது இந்த சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதியன்று கொழும்புவில் இந்தக் குழு, அதிபர் ராஜபக்ச, அவருடைய செயலர் லலித் வீரதுங்கா, துணைச் செயலர் வருண சிறீதனபாலா, ஆலோசகர் சுனிமால் ஃபெர்னா‌ண்டோ ஆகியோரைச் சந்தித்து பேசியது. இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இந்திய அரசு என்ன கருதுகிறது என்பது பற்றியும், தனது அரசின் நடவடிக்கைகள் மீதான பன்னாட்டு விமர்சனங்களுமே தனக்குக் கவலைத் தருவதாக ராஜபக்ச கூறினார்.

 

தமிழர் இனப் பிரச்சனைக்கு இலங்கைக்குள்ளிருந்தான் தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதனை இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுக் கருத்துகளைக் கொண்டு முறைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவசகாயம் கூறிய கருத்தை ராஜபக்ச வெகுவாக ஆமோதித்தார். தமிழகக் குழுவுடன் நடத்திய இரண்டு சந்திப்பிற்குப் பிறகு, பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார்: “வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் நியாயமான குறைகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய பூமி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கதையை ரொம்பவும் நீட்டிக்காமல் குறைத்துக் கூறுகிறேன். அதன் பிறகு தமிழகக் குழுவுடன் ராஜபக்ச அரசில் அமைச்சர்களாக இருந்துவர்களும், அதிகாரிகளும், சென்னையிலும் கொழும்புவிலும் கூடி, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து பல முறை விவாதித்தனர். இந்தச் சந்திப்புகளில் இலங்கையின் அரசமைப்பு விவகாரங்கள் மற்றும் தேச ஒற்றுமை அமைச்சர் டிஈடபுள்யூ குணசேகரா, அரசு மொழி ஆணையத்தின் தலைவர் ராஜா கல்லூரே ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழகக் குழு மீண்டும் அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியது. தீர்வுக்காண திட்டம் வகுக்கப்பட்டது.

 

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை அரசும், தமிழகக் குழுவும் பேசி வருவதை கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரகம் எப்படியோ மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட்டது. தேவசகாயத்தை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதர் ஏ.மாணிக்கம் கேட்டார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவுமில்லை, சந்திக்கவுமில்லை. ஆனால், “அங்கீகாரம் இல்லாத பேர்வழிகளுடன் எதற்காக பேசுகின்றனர் என்று இலங்கை அதிபர் குழுவை இந்தியத் தூதரகம் ‘அதட்டியதாக’ செய்திகள் வந்தது.

 

இலங்கை இந்தியத் தூதரகத்திடமிருந்து சென்ற செய்தியை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் (மணி சங்கர் ஐயர்) சோனியாவின் காதில் போடுகிறார். அதுமட்டுமன்றி, தமிழர் பிரச்சனைக்கு பஞ்சாயத்து ராஜ் மூலம் தீ்ர்வு காணும் திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் (கிராமத்திற்கு அதிகாரம் அளிப்போம் என்று ராஜபக்ச பேசியதன் பின்னணி புரிகிறதா?) மணி கூறுகிறார்.

 

இதையெல்லாம் சற்றும் அறியாத தேவசகாயம், தன்னோடு ஒரு காலத்தில் பணியாற்றியவரும், அப்போது (இப்போதும்தான்) பிரதமரின் முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ.நாயருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக எழுதியனுப்பிய அறிக்கையில், “இலங்கை இனச் சிக்கலிற்கு இராணுவத் தீர்வு என்று ஏதுமில்லை.

 

இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு, அங்குள்ள சிறுபான்மை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவரின் குறைகளையும் தீர்க்கக்கூடிய அரசியல், அரசமைப்பு ரீதியான தீர்வு காண வேண்டும்” என்று கூறியிருந்தததைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட ஒரு தீர்வை உருவாக்கும் முயற்சியில் தாங்கள் உருவாக்கியுள்ளத் திட்டத்தை விளக்கினார். ஆனால் அமைதித் தீர்வு காண்பதற்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் இந்திய அரசு அளிப்பது ஏன் என்றும் தேவசகாயம் வினாக்களை எழுப்பியிருந்தார். தமிழகக் குழு முன்னெடுக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக தமிழகக் குழு உருவாக்கிய நிலையில்தான், இந்திய தனது பாதையை மாற்றிக்கொண்டது. அரசியல் தீர்வு காண வேண்டிய அவசியத்தை இலங்கை அரசிடம் வலியுறுத்தாமல், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் போருக்கு சமிக்ஞை காட்டியது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் தலைகளை சாய்த்திட வேண்டும் என்கிற தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள இலங்கை இராணுவத்திற்கு எல்லா உதவிகளையும் அளிக்க இந்திய மத்திய அரசு உறுதியளித்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

தேசத்தின் நலனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சோனியாவின் விருப்பத்தை நிறைவேற்ற, அன்றைக்கு பிரதமரின் அலுவலகத்தை கட்டுக்குள் வைத்திருந்த தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் (தற்போது தேச பாதுகாப்பு ஆலோசகர்) சி‌வ்சங்கர் மேனன் ஆகியோர் கொண்டக் குழு, இலங்கையில் தமிழினத்தை அழித்த அந்த காட்டுமிராண்டித்தனமான போருக்கு உதவியது. அதுவே இன்று சானல் 4 தொலைக்காட்சியில் வெளியாகி, இலங்கை அரசை மீள முடியாத புதைச் சேற்றில் தள்ளியுள்ளது. இலங்கையில் நடந்த இன அழித்தலிற்கு உதவியதால்தான், சானல் 4 ஒளிபரப்பிய ஆவணப் படத்தைக் கண்டு உலகே கோவத்தால் கொதித்துக் கொண்டிருக்க, இந்திய அரசு மட்டும் செவிட்டுத்தனமான மெளனம் காத்து வருகிறது.

 

தமிழின இன அழித்தலிற்காகவும், போர்க் குற்றத்திற்காகவும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சவும், அவருடைய கூட்டாளிகளும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, அங்கு நடந்து அரங்கேறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரத்தில் தாங்கள் ஆற்றிய பங்கில் இருந்து புது டெல்லி தப்ப முடியாது. அதற்கான மணியோசையே சானல் 4 ஒளிபரப்பு” என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார் (தி ஸ்டேட்ஸ்மென், ஜூலை 12, 2011).

 

இலங்கை இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் ஒரு திட்டத்தை, ராஜபக்சவுடன் பேசி தமிழகக் குழு நேர்த்தியுடனும், நேர்மையுடனும் உருவாக்கியது. அதனை டி.கே.ஏ.நாயரிடமும் அனுப்பியது. ஆனால், இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதி பேச்சின் மூலம் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீடித்த, நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலை என்று நாடாளுமன்றத்திலேயே கூறி தமிழர்களையும், இதர மக்களையும் ஏமாற்றி வந்த அரசு, இரகசியமாக தமிழின அழிப்பிற்கு, சோனியாவின் பழிவாங்கும் செயலுக்கு முற்றிலுமாகத் துணைபோய் உள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.

 

தமிழின அழிப்புப் போருக்கு வித்திட்டு, உதவி, ஆலோசனை வழங்கி, ஆயுதம் கொடுத்து, ராடார் வழங்கி காட்டிக்கொடுத்தது இந்திய மத்திய அரசு என்பது தெளிவாகிவிட்டது. இப்போது புரிகிறதா, போர் முடிந்தவுடன் இந்தியாவின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த மகிந்த ராஜபக்ச, “நான் இந்தியாவின் போரை நடத்தினேன்” என்று கூறியது ஏன் என்று?

 

சோனியாவின் பழிவாங்கலும், அதற்கு நாயர்களும், மேனன்களும், நம்பியார்களும் அளித்த உதவியும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு நாள் வெளிவரும். அன்று ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஏன், யாரால் பயங்கரவாதம் என்று முத்திரையிடப்பட்டது என்கிற உண்மையும் வெளிவரும்.

 

மூலம்: இணையத் தமிழ் - ஆடி 29, 2011
பிரசுரித்த நாள்: Jul 30, 2011 21:58:35 GMT

http://www.tamilcanadian.com/article/tamil/1188
http://www.sangam.org/2011/07/India_Killing_Fields.php?uid=4388

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.