Jump to content

"நாங்கள் இந்தியாவின் போரை நடத்தினோம்" மகிந்த ராஜபக்ச‌.


Recommended Posts

"நாங்கள் இந்தியாவின் போரை நடத்தினோம்"  மகிந்த ராஜபக்ச‌.

[ இந்தப் பதிவை முழுதாக வாசிக்கவும்.அப்போதுதான் விடயங்களைத் தெளிவாக, சரியாக விளங்கிக்கொள்ளமுடியும்.]


பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்துவதன் மூலம் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று செய்திகள் கூறுகின்றன.

 

டி.கே.ஏ.நாயரின் பதவி ‘மாற்றம்’ என்பது ஏற்றமா இறக்கமா என்ற மதிப்பீடுகளும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட செய்தியுடன் சேர்ந்தே வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம், முதன்மைச் செயலராக இருந்த இந்த நாயரின் ‘பங்கு’ ஈழத் தமிழர் பிரச்சனையில், அதாவது அவர்களை ஒழித்துக்கட்டிய இனப் படுகொலைப் போர் தொடங்கப்பட்டதில் தொடர்புடையதாகும்.

 

சமீபத்தில் ‘தி ஸ்டேட்ஸ்மென்’ என்ற பாரம்பரியமிக்க வட இந்திய ஆங்கில நாளிதழில், இந்திய அளவில் மதிக்கத்தக்க இதழாளராக இன்று வரை திகழும் சாம் ராஜப்பா ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த‌க் கட்டுரையில், சேனல் 4 வெளியிட்ட, உலகின் நெஞ்சை உலுக்கிய ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ என்கிற ஆவணப் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு மட்டும் இல்லாதிருந்திருக்குமானால், இப்படிப்பட்ட நெஞ்சை உலுக்கும் காட்சி ஆவணம் ஒன்று வருவதற்கு வாய்ப்பேயில்லாமல் போயிருக்கும் என்று எழுதியிருந்தார்.

 

இந்திய மத்திய ஆட்சியை அதிரச் செய்த சாம் ராஜப்பாவின் அந்த‌க் கட்டுரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு அமைதி முயற்சி தொடர்பான முழு விவரமும் வெளியிடப்பட்டிருந்தது. அதன் சாராம்சம் இதுதான்:

 

“சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான அந்த ஆவணப் படத்தில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத்திற்கு புது டெல்லியே காரணியாக இருந்த, இதுவரை சொல்லப்படாத கதை ஒன்று உள்ளது. 2005ஆம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ர‌ணில் விக்கிரமசிங்கேதான் வெற்றி பெற வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஏனென்றால், அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த நிருபமா ராவ், ர‌ணில் விக்கிரமசிங்கேயுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் தமிழருக்கு எதிரான வல்லூறாகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார். தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று த‌மிழ‌ர்க‌ள் தேர்தலை‌ப் புறக்கணித்தனர். அவர்கள் மட்டும் வாக்களித்திருந்தால், ர‌ணில்தான் மிகப் பெரிய வெற்றி பெற்று அதிபராகியிருப்பார்.

 

இலங்கையின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகத் திகழவேண்டுமெனில், தமிழருக்கு எதிரான வல்லூறு என்ற தனது உருவகத்தை மாற்றிக் கொள்ள முற்பட்டார் ராஜபக்ச, டெல்லியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தார், ஆனால் டெல்லி தொடர்ந்து அவரை புறக்கணித்தது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டின் ஆதரவைப் பெற்று இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இங்கு வாழும் சமூக ஆர்வலர்களின் உதவியை நாட ராஜபக்ச முற்பட்டார்.

 

டெல்லிக்கும், கொழும்புவிற்கும் இடையே பாலமாக செயல்பட தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவை உருவாக்க ராஜபக்சவின் தூதர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். கொழும்புவின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணியாளரும், ஜெயப்பிரகா‌‌ஷ‌் நாராயணன், அன்னைத் தெரசா ஆகியோருடன் நெருக்கமாக பழகியவருமான எம்.ஜி.தேவசகாயத்தை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட ஒரு குழு உருவானது. இதில் மற்றொரு ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், தமிழக உள்துறை செயலராக பணியாற்றிவருமான எஸ்.பி.ஆம்ப்ரோஸ், இலங்கை பிரச்சனையில் விவரமறிந்தவராகத் திகழந்த முன்னாள் இராணுவ அதிகாரி (கர்னல் ஹரிஹரன்), மூத்த இதழாளர் (ராம் ராஜப்பாதான்) ஆகியோர் கொண்ட அந்தக் குழு, 2007ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்குழு, அதிபர் ராஜபக்சவின் ஆலோசகர் சுனிமால் ஃபெர்ணான்டோ தலைமையிலான குழுவுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியது.

 

இலங்கைத் தமிழர் இனப் பிரச்சனைக்கு, அவர்களின் நீண்ட கால அரசியல் எதிர்பார்ப்பிற்குத் தீர்வு தராத எந்த ஒரு தரப்பின் இராணுவ வெற்றியும் நீடித்தத் தீர்வை உருவாக்க முடியாது என்பது இந்த சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதியன்று கொழும்புவில் இந்தக் குழு, அதிபர் ராஜபக்ச, அவருடைய செயலர் லலித் வீரதுங்கா, துணைச் செயலர் வருண சிறீதனபாலா, ஆலோசகர் சுனிமால் ஃபெர்னா‌ண்டோ ஆகியோரைச் சந்தித்து பேசியது. இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இந்திய அரசு என்ன கருதுகிறது என்பது பற்றியும், தனது அரசின் நடவடிக்கைகள் மீதான பன்னாட்டு விமர்சனங்களுமே தனக்குக் கவலைத் தருவதாக ராஜபக்ச கூறினார்.

 

தமிழர் இனப் பிரச்சனைக்கு இலங்கைக்குள்ளிருந்தான் தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதனை இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுக் கருத்துகளைக் கொண்டு முறைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவசகாயம் கூறிய கருத்தை ராஜபக்ச வெகுவாக ஆமோதித்தார். தமிழகக் குழுவுடன் நடத்திய இரண்டு சந்திப்பிற்குப் பிறகு, பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார்: “வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் நியாயமான குறைகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய பூமி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கதையை ரொம்பவும் நீட்டிக்காமல் குறைத்துக் கூறுகிறேன். அதன் பிறகு தமிழகக் குழுவுடன் ராஜபக்ச அரசில் அமைச்சர்களாக இருந்துவர்களும், அதிகாரிகளும், சென்னையிலும் கொழும்புவிலும் கூடி, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து பல முறை விவாதித்தனர். இந்தச் சந்திப்புகளில் இலங்கையின் அரசமைப்பு விவகாரங்கள் மற்றும் தேச ஒற்றுமை அமைச்சர் டிஈடபுள்யூ குணசேகரா, அரசு மொழி ஆணையத்தின் தலைவர் ராஜா கல்லூரே ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழகக் குழு மீண்டும் அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியது. தீர்வுக்காண திட்டம் வகுக்கப்பட்டது.

 

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை அரசும், தமிழகக் குழுவும் பேசி வருவதை கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரகம் எப்படியோ மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட்டது. தேவசகாயத்தை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதர் ஏ.மாணிக்கம் கேட்டார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவுமில்லை, சந்திக்கவுமில்லை. ஆனால், “அங்கீகாரம் இல்லாத பேர்வழிகளுடன் எதற்காக பேசுகின்றனர் என்று இலங்கை அதிபர் குழுவை இந்தியத் தூதரகம் ‘அதட்டியதாக’ செய்திகள் வந்தது.

 

இலங்கை இந்தியத் தூதரகத்திடமிருந்து சென்ற செய்தியை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் (மணி சங்கர் ஐயர்) சோனியாவின் காதில் போடுகிறார். அதுமட்டுமன்றி, தமிழர் பிரச்சனைக்கு பஞ்சாயத்து ராஜ் மூலம் தீ்ர்வு காணும் திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் (கிராமத்திற்கு அதிகாரம் அளிப்போம் என்று ராஜபக்ச பேசியதன் பின்னணி புரிகிறதா?) மணி கூறுகிறார்.

 

இதையெல்லாம் சற்றும் அறியாத தேவசகாயம், தன்னோடு ஒரு காலத்தில் பணியாற்றியவரும், அப்போது (இப்போதும்தான்) பிரதமரின் முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ.நாயருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக எழுதியனுப்பிய அறிக்கையில், “இலங்கை இனச் சிக்கலிற்கு இராணுவத் தீர்வு என்று ஏதுமில்லை.

 

இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு, அங்குள்ள சிறுபான்மை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவரின் குறைகளையும் தீர்க்கக்கூடிய அரசியல், அரசமைப்பு ரீதியான தீர்வு காண வேண்டும்” என்று கூறியிருந்தததைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட ஒரு தீர்வை உருவாக்கும் முயற்சியில் தாங்கள் உருவாக்கியுள்ளத் திட்டத்தை விளக்கினார். ஆனால் அமைதித் தீர்வு காண்பதற்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் இந்திய அரசு அளிப்பது ஏன் என்றும் தேவசகாயம் வினாக்களை எழுப்பியிருந்தார். தமிழகக் குழு முன்னெடுக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக தமிழகக் குழு உருவாக்கிய நிலையில்தான், இந்திய தனது பாதையை மாற்றிக்கொண்டது. அரசியல் தீர்வு காண வேண்டிய அவசியத்தை இலங்கை அரசிடம் வலியுறுத்தாமல், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் போருக்கு சமிக்ஞை காட்டியது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் தலைகளை சாய்த்திட வேண்டும் என்கிற தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள இலங்கை இராணுவத்திற்கு எல்லா உதவிகளையும் அளிக்க இந்திய மத்திய அரசு உறுதியளித்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

தேசத்தின் நலனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சோனியாவின் விருப்பத்தை நிறைவேற்ற, அன்றைக்கு பிரதமரின் அலுவலகத்தை கட்டுக்குள் வைத்திருந்த தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் (தற்போது தேச பாதுகாப்பு ஆலோசகர்) சி‌வ்சங்கர் மேனன் ஆகியோர் கொண்டக் குழு, இலங்கையில் தமிழினத்தை அழித்த அந்த காட்டுமிராண்டித்தனமான போருக்கு உதவியது. அதுவே இன்று சானல் 4 தொலைக்காட்சியில் வெளியாகி, இலங்கை அரசை மீள முடியாத புதைச் சேற்றில் தள்ளியுள்ளது. இலங்கையில் நடந்த இன அழித்தலிற்கு உதவியதால்தான், சானல் 4 ஒளிபரப்பிய ஆவணப் படத்தைக் கண்டு உலகே கோவத்தால் கொதித்துக் கொண்டிருக்க, இந்திய அரசு மட்டும் செவிட்டுத்தனமான மெளனம் காத்து வருகிறது.

 

தமிழின இன அழித்தலிற்காகவும், போர்க் குற்றத்திற்காகவும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சவும், அவருடைய கூட்டாளிகளும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, அங்கு நடந்து அரங்கேறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரத்தில் தாங்கள் ஆற்றிய பங்கில் இருந்து புது டெல்லி தப்ப முடியாது. அதற்கான மணியோசையே சானல் 4 ஒளிபரப்பு” என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார் (தி ஸ்டேட்ஸ்மென், ஜூலை 12, 2011).

 

இலங்கை இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் ஒரு திட்டத்தை, ராஜபக்சவுடன் பேசி தமிழகக் குழு நேர்த்தியுடனும், நேர்மையுடனும் உருவாக்கியது. அதனை டி.கே.ஏ.நாயரிடமும் அனுப்பியது. ஆனால், இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதி பேச்சின் மூலம் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீடித்த, நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலை என்று நாடாளுமன்றத்திலேயே கூறி தமிழர்களையும், இதர மக்களையும் ஏமாற்றி வந்த அரசு, இரகசியமாக தமிழின அழிப்பிற்கு, சோனியாவின் பழிவாங்கும் செயலுக்கு முற்றிலுமாகத் துணைபோய் உள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.

 

தமிழின அழிப்புப் போருக்கு வித்திட்டு, உதவி, ஆலோசனை வழங்கி, ஆயுதம் கொடுத்து, ராடார் வழங்கி காட்டிக்கொடுத்தது இந்திய மத்திய அரசு என்பது தெளிவாகிவிட்டது. இப்போது புரிகிறதா, போர் முடிந்தவுடன் இந்தியாவின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த மகிந்த ராஜபக்ச, “நான் இந்தியாவின் போரை நடத்தினேன்” என்று கூறியது ஏன் என்று?

 

சோனியாவின் பழிவாங்கலும், அதற்கு நாயர்களும், மேனன்களும், நம்பியார்களும் அளித்த உதவியும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு நாள் வெளிவரும். அன்று ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஏன், யாரால் பயங்கரவாதம் என்று முத்திரையிடப்பட்டது என்கிற உண்மையும் வெளிவரும்.

 

மூலம்: இணையத் தமிழ் - ஆடி 29, 2011
பிரசுரித்த நாள்: Jul 30, 2011 21:58:35 GMT

http://www.tamilcanadian.com/article/tamil/1188
http://www.sangam.org/2011/07/India_Killing_Fields.php?uid=4388

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.