Jump to content

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா? - யதீந்திரா

இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையை அரசாங்கம் எதிர்ப்பதில் ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை. ஆனால் குறித்த பிரேரணையை, தமிழ் தரப்பினரில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதுதான் ஆச்சரியமானது. அமெரிக்க பிரேரணையை ஒரு தேவையற்ற தலையீடாக அரசாங்கம் கருதுகிறது. இதனை ஒருவர் விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறாயின் குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினரும் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏன் எதிர்க்கின்றனர். பதில் மிகவும் இலகுவானது. தாங்கள் விரும்பிய விடயங்கள் குறித்த பிரேரணையில் இல்லை என்பதாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், கூட்டமைப்பில் உள்ள சில புதிய அரசியல்வாதிகள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை கோரினால் உடனடியாக அமெரிக்க தனது பிரேரணையை திருத்தியமைத்துவிடும் என்றவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டது. ஆனால் உண்மை என்ன?

முதல் அர்த்தத்தில், முன்னர் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளும் சரி, தற்போது வாக்கெடுப்பை எதிர்பார்த்திருக்கின்ற பிரேரணையும் சரி, கூட்டமைப்பின் வேண்டுகோளினாலோ, அல்லது தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறையினாலோ கொண்டுவரப்பட்டதல்ல. இதனை முதலில் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சாதாரண மக்களுக்கு இவ்வாறான விடயங்களை விளங்கிக்கொள்வதில் சிரமமிருந்தாலும், அரசியல்வாதிகளுக்காவது இதில் தெளிவிருக்க வேண்டும். உண்மையில் அமெரிக்க பிரேரணைகள் என்பது, இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்ல, மாறாக இலங்கை தொடர்பான பிரேரணை. இதனை திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது, இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கை வரைபில் செல்வாக்குச் செலுத்திவரும், மிக முக்கிய அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார். எங்களது பிரேரணை உண்மையில் இலங்கைக்கு எதிரானதல்ல மாறாக, இலங்கையின் மீதானதாகும் என்றார். அவர் மேலும், இது தொடர்பில் தவறானதொரு பார்வை நிலவுகிறது. நாங்கள் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. இலங்கை எங்களுடைய நட்பு நாடு என்னும் வகையில், எங்களுடைய நாட்டில் இருப்பது போன்ற சில விடயங்கள் இங்கும் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அவற்றை நோக்கி இலங்கை முன்னேறும் வகையில், சில செயற்பாடுகளை நிறைவேற்றுமாறு கோருகிறோம். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உள்ளக ஏற்பாடுகளைத்தான் அவர் குறிப்பிடுகின்றார்.

அவர் இவ்வாறு குறிப்பிட்டாலும், அதன் மறைபொருள், இலங்கையை ஒரு வழிக்குகொண்டு வருவதற்கான கருவியாகவே மேற்படி பிரேரணைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே உண்மை. இந்த அடிப்படையில் நோக்கினால், எந்த பிரேணையில் எதனை உள்ளடக்க வேண்டும், எதனை உள்ளடக்கினால் இலங்கையை நீண்டகால நோக்கில் கையாள முடியுமென்று தீர்மானிப்பது அமெரிக்காவேயன்றி, வேறு எவருமல்ல. இங்கு கூட்டமைப்பு என்பது ஒரு விடயமே அல்ல. அமெரிக்காவின் ராஜதந்திர அணுகுமுறை உடனடி இலக்கை கொண்டதல்ல. அது நீண்டகால நோக்கை அடிப்படையாகக் கொண்டது. அது முதலில் சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்டது, பின்னர் மெது மெதுவாக இறுக்கும் உபாயம் கொண்டது. இது அரசாங்கமும் அறியாத ஒன்றல்ல. அமெரிக்காவின் ராஜதந்திர அணுகுமுறைகளை மிகத் துல்லியமாக ஆராயும் ஆற்றல் கொண்டவர்கள் அரசாங்கத்தில் இருக்கின்றனர். எனவே அரசாங்கத்தின் சமீபகால அணுகுமுறைகள் எதுவும் அறியாமல் நிகழவில்லை. அறிந்தே அனைத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஒரு விடயத்தில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது. அதாவது, அமெரிக்க பிரேரணைகளின் முதல் இலக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல, மாறாக அமெரிக்காவின் நீண்டகால மூலோபாய நலன்கள் ஆகும். அமெரிக்கா திடீரென்று இலங்கையின் மீது ஏன் அழுத்தங்களை கூட்டி வருகின்றது? இலங்கையின் மீது என்றுமே காண்பிக்காதவொரு ஈடுபாட்டை இப்போது ஏன் காண்பிக்க முற்படுகிறது? இதன் பின்னாலுள்ள புவிசார் அரசியல் இலக்கு என்ன?

அமெரிக்காவின் ஆசிய மையவாத கொள்கைக்கும் (Asia Pivot) இலங்கை தொடர்பான அமெரிக்க ஈடுபாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இவ்வாறானதொரு கேள்விக்கு இல்லையென்று ஒருவர் பதிலிறுக்க முடியுமா? சமீப காலமாக, இலங்கை புவிசார் அரசியலில் கூடுதல் முக்கியத்துவம் உள்ள நாடாக கணிக்கப்படுகிறது. அமெரிக்கா மட்டுமன்றி, அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளிகளான யப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் இலங்கை விடயத்தில் கூடுதல் அக்கறையை காண்பித்து வருகின்றன. இலங்கையின் இனத்துவ அரசியலானது, ஓர் உள்நாட்டு யுத்தமாக மாறிய வரலாற்றை உற்று நோக்கினால், ஒரு விடயம் வெள்ளிடை மலையாகும். காலனித்துவத்திற்கு பிற்பட்ட இலங்கையின் மீதான முதலாவது அன்னிய தலையீடானது, இன அரசியலை அடிப்படையாக் கொண்டே நிகழ்ந்தது. ஆனால் உண்மையில் அன்றைய இந்திய தலையீடு என்பது, அன்றைய உலக ஒழுங்கின் கீழான, ஒரு புவிசார் அரசியல் பிரச்சனையாகும்.

உலகம் சோவியத் முகாமாகவும், அமெரிக்க முகாமாகவும் பிளவுற்றுக் கிடந்த அன்றைய சூழலில்தான், சோவியத் முகாமுடன் கைகோர்த்திருந்த இந்தியா, அமெரிக்க முகாமின் நீட்சியாக இலங்கை கையாளப்படுவதற்கான ஆபத்துக்கள் இருப்பதை உணர்ந்தே, இலங்கையின் உள்நாட்டு இனத்துவ அரசியலில் தலையீடு செய்தது. அவ்வாறு தலையீடு செய்ததன் மூலம் இந்தியா இரண்டு செய்திகளை சொல்ல முற்பட்டிருந்தது. ஒன்று, இந்தியாவின் பிராந்திய நலன்களில் குறுக்கிடும் அன்னிய சக்திகள் இலங்கைக்குள் வேர்கொள்வதை இந்தியா எதிர்க்கும். இரண்டு, தெற்காசியாவின் சக்தி என்னும் வகையில், இலங்கையின் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கடப்பாடு இந்தியாவிற்கு உண்டு. ஆனால் இந்தியா எதிர்பாராத விடயங்கள் பல நடந்துவிட்டது வேறு விடயம். அது பற்றி இப்பத்தி விவாதிக்கவில்லை. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அன்றைய இந்திய தலையீடு என்பது முற்றிலும், அன்றைய உலக ஒழுங்கின் விளைவான புவிசார் அரசியல் முரண்பாட்டின் விளைவு என்பதே! இந்த பின்புலத்தை கருத்தில் கொண்டு, தற்போதைய சூழலை உற்று நோக்கினால், இன்றைய உலக ஒழுங்கில் வெளித்தெரியும் புவிசார் அரசியல் முரண்பாடுகளின் விளைவுதான், இன்று இலங்கை அமெரிக்காவினால் இலக்கு வைக்கப்படுவதற்கான காரணமாகும்.

ஆரம்பத்தில், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை நிறுத்தி, ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதில் மேற்குலகு அக்கறையை காண்பித்து. ஆனால் அதில் அவர்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடுதலைப் புலிகள் அமைப்பு நடந்து கொள்ளவில்லை. அதன் விளைவு 2006ல் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு முழுமையான ஆதரவை மேற்குலகு வழங்கியிருந்தது. அமெரிக்க மதிப்பீட்டில் உலக தீவிரவாதத்தின் வகைமாதிரியாக கருதப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் பூண்டோடு அழிக்கப்படுவதற்கு சகல தரப்பினரும் பல்வேறு வழிகளில் உதவியிருந்தனர். ஆனால் யுத்தம் முடிவுற்ற பின்னர் நடைபெற்ற விடயங்களில் மேற்குலகால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. இதுதான் தற்போதைய அழுத்தங்களின் அடிப்படை. இங்கும் முன்னர் இந்தியாவிற்கு ஏற்பட்டதொரு அனுபவம், மேற்குலகிற்கு ஏற்பட்டதா? அல்லது இது இந்தியாவிற்கும் மேற்குலகிற்குமான ஏமாற்றமா? அவ்வாறனதொரு ஏமாற்றத்தின் விளைவாகத்தான், மேற்படி அமெரிக்க அழுத்தங்கள் தொடருகின்றனவா? மேற்குலகு என்பது, அமெரிக்க மூலோபாய நலன்களின் கூட்டு என்பதை இங்கு அழுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்க ஏமாற்றத்திற்கு காரணமாக இருக்கக் கூடியது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு. அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு என்பது, ஆசியாவில் சீனாவை எவரெல்லாம் போட்டியாக கருதுகின்றரோ, அவர்கள் அனைவரது கரிசனையாகவும் மாறியிருக்கின்றது. இந்த பின்புலத்தில், சீனாவின் செல்வாக்கு இலங்கைக்குள் அதிகரித்துச் செல்வது அல்லது இலங்கை சீனாவின் பக்கமாக சாய்ந்து செல்வதானது, அமெரிக்காவிற்கான கவலை மட்டுமல்ல. அது இந்தியாவின் கவலையாகவும் யப்பானின் கவலையாகவும் இருக்கிறது. சீனா ஆசியாவின் சக்தியாக எழுவதை தடுக்கும் வகையில், அனைவரது பார்வையும் இந்தியாவின் பக்கமாக திரும்பியிருக்கிறது. ஒட்டு மொத்தமாக நோக்கினால், அமெரிக்காவின் ஆசியா நோக்கிய மூலோபாய நகர்வுகளின் ஒன்றே, இலங்கையின் மீதான அண்மைக்கால அழுத்தங்கள் ஆகும். இதில் அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பு முக்கியமானது.

இந்த பின்புலத்தில்தான் அமெரிக்க பிரேரணைகளை இந்தியா ஆதரித்து வருகின்றது. ஆனால் அதனை சீர்செய்தே ஆதரிக்கிறது. சீர் செய்யும் அதிகாரத்தையும் இந்தியா விட்டுக் கொடுக்காது. அதுவும் கூட இலங்கையின் மீதான இந்திய பிடியை இறுக்குவதற்கான கருவிதான். இவை அனைத்தையும் விளங்கிக் கொள்ளாமல், அமெரிக்க பிரேரணைகளை வெறுமனே இலங்கையின் பிரச்சனையாகவோ அல்லது தமிழர்களுக்கான வாய்ப்பாகவோ மட்டும் விளங்கிக் கொள்ள முற்பட்டால், அது ஒரு தவறாகவே அமையும். அமெரிக்க பிரேரணை சிங்களவர்களையும் இலக்கு வைக்கவில்லை, தமிழர்களையும் இலக்கு வைக்கவில்லை. அது அமெரிக்காவின் நீண்டகால முலோபாய நலன்களை இலக்கு வைத்திருக்கிறது. முன்னர் இந்திய தலையீட்டின் போது, சில நன்மைகளை தமிழர்கள் எட்டிப்பிடிக்க வாய்ப்புக் கிடைத்தது போன்று, தற்போதைய அழுத்தங்களின் விளைவாகவும் சில நன்மைகளை எட்டிப்பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆனால் தமிழர்களால் முன்னர் கிடைத்த வாய்ப்பை எட்டிப் பிடிக்காமல் வேறு எங்கோ அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தது போன்றுதான் இருப்பார்களா?

***

(இக்கட்டுரை ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு முன் எழுதப்பட்டது- ஆசிரியர்)

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=def57b79-c949-4596-817b-38bc92946494

Link to comment
Share on other sites

இந்தியா பிரேரணையை சீர்செய்ய வாய்ப்பு வழங்காமலே நிறைவேற்றிவிட்டார்களே.. இதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிக்கிறாரா யதீந்திரா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.