Jump to content

ஐ.நா தீர்மானங்கள் ஏன் இலங்கை அரசைத் தண்டிக்கவில்லை?:சபா நாவலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா தீர்மானங்கள் ஏன் இலங்கை அரசைத் தண்டிக்கவில்லை?:சபா நாவலன்

War-Crimes-in-Sri-Lanka.jpg

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டவர்களும், நடத்தி முடித்தவர்களும் இன்னும் இந்த உலகின் மதிப்பிற்குரிய மனிதர்களாக எந்த அச்சமுமின்றி உலாவருகின்றனர். இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைத் திருவிழா நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு தான் ராஜபக்சவைத் தண்டிக்கப் போகிறார்கள் என்றும் அதனை நிறைவேற்றுவதற்காகவே தாம் இதுவரை போராடி வருவதாக புலம் பெயர் தமிழ்த் தலைமைகளும் இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குக் கேட்கும் கட்சிகளும் கூறிவந்தன. ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமெரிக்க அரச தலைமையிலான உலகம் போன்றவற்றின் குறைந்தபட்சப் புரிதல்களுமின்றி ஐந்து வருடங்கள் மக்களை மாயைக்குள் மந்தைகளாக வைத்திருந்த தலைமைகள் பிழைப்பிற்காக புதிய திட்டங்களை ஆராய்ந்துகொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட அனைத்து நாடுகளும் இணைந்து இலங்கையில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய போதே அதன் பின்னணியிலுள்ள அரசியலையும் புதிய அரசியல் இயக்கத்தின் தேவையையும் மக்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக மக்களை மந்தைகளாக்கிய இக் கூட்டத்திற்கு நீண்டகால கறைபடிந்த வரலாறுண்டு. இவர்கள் அனைவரும் அழிக்கப்படும் மக்களின் கண்ணீரைத் தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்தியவர்கள். சமூக உணர்வும் மக்கள் பற்றும் மிக்க ஆயிரக்கணக்கனவர்களை விரக்திக்கு உள்ளாக்கியவர்கள்.

இலங்கை அரச பாசிசம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது திட்டமிட்ட இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விடுகிறது என்றால் இந்தப் பிழைபுவாதத் தலைமைகள் அதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்கள்.

அமெரிக்க அரசு கடந்த பத்தாண்டுகளில் மத்திய கிழக்கை இரத்தக் காடாக மாற்றியிருக்கின்றது. ஆபிரிக்க நாடுகளை சத்தமில்லாமல் அழித்துத் துவம்சம் செய்திருக்கின்றது. இந்த நிலையில் ஆசியாவை மையப்படுத்தி தமது அழிப்பைத் தொடரவேண்டும் என்ற நோக்கில் தோற்றுவிக்கப்பட்டதே ஆசிய மையம்(Asia Pivot) என்ற அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் புதிய சேர்க்கையாகும். . இதனை அடிப்படையாகக்கொண்ட முதலாவது மிகப்பெரும் தலையீடே இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையும் அதன் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க அரச அணியுமாகும்.

அமெரிக்காவின் இலங்கை தொடர்பான கொள்கை

mcdonalds.jpg

அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை என்பது பொன் முட்டையிடும் வாத்து. தெற்காசியாவில் எந்தவித மக்கள் எதிர்ப்புமின்றி தனது நேரடிக் காலனி போன்றே அமெரிக்கா இலங்கையைப் பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது . ஒரு புறத்தில் மகிந்த ராஜபக்ச அரசும் மறுபுறத்தில் அதன் எதிரிகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வடகிழக்குத் தமிழர் தலைமைகளும் அமெரிக்க அரசின் நேரடியான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே இயங்குகின்றன.

அமெரிக்க அரச தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் மொத்த அமெரிக்க கம்பனிகளின் முதலீட்டின் அளவு 150 மில்லியன் டொலர்கள். இலங்கையில் முதலிட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களில் பிரதானமானவை: Energizer Battery, Mast Industries, Smart Shirts (a subsidiary of Kellwood Industries), Chevron, Citibank, 3M, Coca-Cola, Pepsi Co, Fitch Ratings, AES Corporation, AIG/Chartis Insurance, American Liquid Packaging Systems USA, Virtusa, Avery Denison, North Sails, Motorola Solutions, Amsafe Bridport, RR Donnelly, and Revlon (through its Indian subsidiary). Several Sri Lankan-Americans have started IT and BPO companies in Sri Lanka serving the U.S. market. In addition, IBM, AT&T, Procter & Gamble, Microsoft, Intel, Oracle, DuPont, Bates Strategic Alliance, McCann-Erickson, Pricewaterhouse Coopers, Ernst and Young, and KPMG all have branches, affiliated offices, or local distributors/ representatives. Kentucky Fried Chicken, Pizza Hut, Federal Express, UPS, தவிர மக்டொனால்ட் உட்பட பல நிறுவனங்கள் உள்ளூர் முகவர்களூடாக நடத்தப்படுகின்றது.

அமெரிக்க நிறுவனங்கள் அல்லாதவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை: Unilever, Nestle, British American Tobacco Company, Mitsui, Pacific Dunlop/Ansell, Prima, FDK, Telekom Malaysia Bhd, S.P. Tao, HSBC, AIA Group, the Indian Oil Corporation, Bharathi Airtel and Cairn India. In 2011, Shangri La Hotels.

அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் உலக நாணய நிதியம் இலங்கையை நோக்கி மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்தது. கல்வியைத் தனியார் மயப்படுத்தவேண்டும், மருத்துவச் சேவையைத் தனியார் மயப்படுத்த வேண்டும், அன்னிய நாடுகளின் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அந்த மூன்று முக்கிய கோரிக்கைகள். நேரடி முதலீட்டுக்கான தொகை 2 பில்லியன்களாக 2012 ஆம் ஆண்டிற்கு முன்பதாக எட்டியிருக்க வேண்டும் என்று உலக நாணய நிதியத்தின் குறி அமைந்திருந்த போதிலும் அது 1 பில்லியனையே எட்டியிருக்கிறது. இத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் எனினும் IMF இற்கு திருப்தியளித்திருக்கிறது என அந்த நிறுவனம் கூறுகிறது.

கல்வியைத் தனியார் மயப்படுத்தும் கோரிக்கைக்கு இலங்கை அரசு பொதுவாக மக்கள் எதிர்ப்பு எதுவுமின்றி அடிபணிந்தது. “University of Central Lancashire” (UCLAN), UK and Raffles Education Corporation, Singapore ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் தமது முதலீட்டைச் சந்தடியில்லாமல் மேற்கொண்டு விட்டன. முன்னர் பலதடவைகள் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் திட்டத்தை உலக வங்கியும், நாணய நிதியமும் திட்டமிட்ட போதும் மக்கள் எதிர்ப்பால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.

இலங்கையின் முதலாவது ஏற்றுமதி நாடாக அமெரிக்காவே திகழ்கிறது.

உலக வங்கி மூலதன வியாபாரம் நடத்தும் 185 நாடுகளில் இலங்கை 81 வது இடத்தை வகிக்கிறது.

அரசையும் அரசிற்கு எதிரானவர்கள் எனக் கருதப்படுபவர்களையும் தனது கட்டுப்பாட்டினுள்ளேயே வைத்திருக்கும் அமெரிக்க அரசின் தந்திரோபாயம் ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை பிரதான முறைமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இலங்கையில் அமெரிக்காவின் இந்தக் கோட்பாடு மிகப்பெரும் வெற்றியை வழங்கியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால், மோடியின் அரசிற்கு அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் இழுத்துவருவது இலகுவானது. அதே வேளை மோடிக்கு எதிரானவர்கள் போலத் தோற்றமளிக்கும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளையும் அமெரிக்கா தனது எல்லைக்குள் வைத்திருக்கும். ஆக, மக்கள் எதிர்ப்பையும் ஏகாதிபத்தியங்களின் கைகளுக்குள்ளேயே வைத்திருக்கும் இலங்கை போன்றதொரு நிலைமை உருவாக வாய்புக்கள் உண்டு.

இலங்கையில் ராஜபக்ச அரசை நேரடியாகவே ஆதரிக்கும் அமெரிக்க அரச அணி மறுபுறத்தில் அதன் எதிர்ப்பாளர்களையும் தனது காலடியில் வைத்திருக்கிறது.

இதனால் எவ்வகையான குறிப்பான எதிர்ப்பும் இன்றியே அமெரிக்கா தனது அரசியல் பொருளாதார இராணுவ நலன்களை நிறைவேற்றிக்கொள்கிறது. இதனைத் தொடர்வதற்காகவே ஜெனிவா தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்றுவதும், சில அறிக்கைகளை வெளியிடுவதும் போன்ற நாடகத்தை அமெரிக்க அரசு நடைமுறைப்படுத்துகிறது.

அமெரிக்காவின் ஆசிய மையம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்குக் கிடைத்திருக்கும் மிக நேர்த்தியான நாடு இலங்கை. இலங்கையின் எதிர் எதிரானதாகத் தோன்றும் அரசியல் சக்திகளில் ஏதாவது ஒரு பக்கம் அமெரிக்க அரசின் கைகளிலிருந்து நழுவுமானால் அதன் திட்டத்திற்குப் பாரிய பின்னடைவு ஏற்படும்.

தவிர,மேலும் சில நிகழ்வுத் தொடர்கள் அமெரிக்காவிற்கு அச்சம் தருவனவை. தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்கள் மத்தியில் போராட்ட இயக்கங்கள் தோன்றும் வாய்ப்புக்கள் உருவாகும். சிங்கள மக்கள் மத்தியில் அரசிற்கு எதிரான போராட்டங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் வலுவடையும். அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் அணியின் ஆதரவு வலிமைபெறும். ஆக, இரண்டு பக்கத்திலும் இனவாத ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளைப் பேணுவதே அமெரிக்காவின் நீண்டகாலத் தந்திரோபாயம்.

இலங்கையின் குறிப்பான சூழல்

JVP-suspect.jpg

காலனியத்திற்குப் பின்னைய காலம் முழுவதும் இலங்கையின் வரலாறு புரட்சிகளதும் போராட்டங்களதும் வரலாறே. குறிப்பாக 60 களின் பின்னர் இலங்கையில் ஆயுதம் தாங்கிய எழுசிகள் உட்பட பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தது. யாழ்ப்பாணம் சார்ந்த பகுதிகளைத் தவிர இலங்கையின் ஏனைய பகுதிகள் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சிந்தனையிலிருந்து மாற்றமடையும் நிகழ்ச்சிப் போக்கிலிருந்தன. 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி பல்வேறு மாற்றங்களை இலங்கையில் ஏற்படுத்திற்று. தொலைக் கிராமங்கள் ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பு நோக்கும் போது கல்வி வாய்ப்பை அணுக்கக்கூடிய சூழல் காணப்பட்டது.

இதனால் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. இலங்கை முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தோன்றின. போராட்டங்கள் உருவாகும் போதெல்லாம் தேசிய இன முரண்பாடு தூண்டிவிடப்பட்டது. அமைப்பு மயப்படுத்தப்பட்ட போராட்டங்களாக சண்முகதாசன் தலைமைதாங்கிய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்கள், இரண்டுதடவை ஜே.வி.பி இன் ஆயுத எழுச்சிகள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சிகள் என்ற தொடர்ச்சியான போராட்டச் சூழலையே முள்ளிவாய்க்கால் அழிவுக்காலம் வரை இலங்கை சந்திருக்கின்றது.

இவற்றை அவதானித்த அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியங்கள் உலகில் முதல் தன்னார்வ நிறுவனத்தை இலங்கையிலேயே தோற்றுவித்தன. கொழும்பு பிளான் என்று அழைக்கப்பட்ட அரசுகளின் கூட்டு நிறுவனமான சேவை அமைப்பு இலங்கையில் உருவானது. அமெரிக்க அரசின் நிதி உதவியின் கீழ் மார்கா என்ற ஆய்வு நிறுவனம் 1960 களின் இறுதியில் தோற்றுவிக்கப்பட்டது. 1958 ஆம் ஆண்டு சர்வோதையா என்ற தன்னார்வ நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

இளைஞர்களின் அரசிற்கு எதிரான கோபம் இலங்கையில் அதிகமாகக் காணப்படுவதால் மேலதிக நிதியை தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என அமெரிக்க அரசு 70களில் பரிந்துரைத்தது.

இலங்கையில் போராட்டங்களுக்கான புற்ச்சூழல் காணப்படுகின்றது என்பதும் அவற்றை அழிப்பதற்கு அமெரிக்க பிரித்தானிய அரசுகள் மிக நீண்டகாலமாகவே முனைத்துவருகின்றன என்பதும் வெளிப்படையாகத் தெரியும் உண்மைகள்.

அமெரிக்காவின் எதிரணி நாடுகள்.

venezuala.jpg

சீனா மற்றும் ரஷ்யா போன்ற முதலாளித்துவ சர்வாதிகார நாடுகளைச் சார்ந்த ஒரு சில நாடுகள் அமெரிக்க அணி என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த நாடுகளிடையே பல்தேசிய வர்த்தக உறவுகளில் உடன்பாடுகளும், அமெரிக்க தலைமைக்குள் உட்படுத்தப்படாமையினால் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்த இரண்டு நாடுகளிலும் ஒருவகையான முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சியே நடபெறுகின்றது. ஏனைய ஏகாதிபத்திய நாடுகளோடு போட்டிபோட்டுக்கொண்டு அழிக்கவல்ல நாடுகள் இவை.

இவை தவிர, வெனிசூலா, கியூபா, எக்குவாடோர் உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகள் தேசியவாத நாடுகளாக அடையாளப்படுத்தப்படலாம். இந்த நாடுகளில் தேசிய மூலதனம் கணிசமான செல்வாக்குச் செலுத்துகின்றது, இந்த எல்லா நாடுகளதும் ஒரே நோக்கம் இலங்கையில் அமெரிக்கத் தலையீட்டைப் பலமிழக்கச் செய்வது என்பதாகும். இதனால் இனவழிப்புப் போன்ற உள்நாட்டு அரசியலைக் கண்டுகொள்ளாத இந்த அரசுகள் உலகில் ஏகாதிபத்தியத் தலையீடுகளை எதிர்பது என்பதைத் தமது அடிப்படை அரசியலாக முன்வைக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக மையம், உலக வங்கி, உலக நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் இரண்டாம் உலகயுத்ததின் பின்னான அமெரிக்கா தலைமையில் உருவான பொகுளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டவை. ஆதிக்கம் செலுத்தும் மேற்கு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் ஏகாதிபத்திய நட்பு அரசுகளைத் தோற்றுவித்துப் பேணுவதே இந்த அமைப்புக்களின் கடமை. அடிப்படையில் தேசியப் பொருளாதாரத்திற்கும் தேசியத்திற்கும் அடிப்படை விரோதிகளே இவை.

neoliberals.jpg

தேசியத்தைத் திறந்த பொருளாதாரம் எனப்படும் ஏகாதிபத்திய நலன்கள் சார்ந்த பொருளாதாரத்திற்கு அடகுவைப்பவர்கள் தேசிய வாதிகள் அல்ல. இவர்களையே விதேசிகள் என்கிறோம். தமிழ்த் தலைமைகளின் பொதுவான போக்கு தேசியத்திற்கு விரோதமானதாகும். அவர்களிடம் தேசியப் பொருளாதாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் குறைந்தபட்ச வேலைத்திட்டங்கள் காணப்படுமானால், தேசியத் தன்மைகளக்கொண்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளின் ஆதரவை எதிர்பார்க வாய்ப்புக்கள் உண்டு.

அவ்வாறான வேலைத்திட்டமோ கோட்பாடுகளோ அற்ற நிலையில், இலங்கையில் அமெரிக்கத் தலையீட்டிற்கு எதிராக இந்த நாடுகள் ஐ.நாவில் வாக்களிப்பது தவிர்க்கமுடியாதது மட்டுமன்றி, அவர்கள் அளவில் அது நியாயமானதும் கூட.

இவ்வாறான உலகச் சூழலில் வாழும் பெரும்பான்மையால் வெறுக்கப்படும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைச் சிதைப்பதில் தமிழ் அரசியல் தலைமகளுக்கு வரலாற்றுரீதியான பங்குண்டு. வன்னிப் படுகொலைகளின் பின்னர் பிற்போக்கு இனவாதிகளான தமிழ்த் தலைமைகளை முழுமையாகக் கையகப்படுத்துவது ஏகாதிபத்தியங்களுக்குக் கடினமான பணியாகவிருக்கவில்லை. எந்தவகையான குறிப்பான வேலைத்திட்டமும் அற்ற ஏகாதிபத்திய நாடுகளையும் அவற்றின் கூறான ஐ,நா வையும் மட்டுமே நம்பியிருக்கும் இத் தலைமைஅக்ள் தேசியத்திற்கு எதிரான ஏகாதிபத்திய அடியாட்படைகள். கோட்பாட்டுரீதியி, ஏகாதிபத்தியங்களையும் நடைமுறையில் அவற்றின் நிகழ்ச்ச் நிரலையும் உள்வாங்க்கி மக்களை ஏமாற்றும் இவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அமெரிக்கா தலமைதாங்கும் ஏகபோக நாடுகளுக்கு எதிராகப் போராடும் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இலங்கை முழுவதும் வாழும் மனிதாபிமானிகளையும் இணைத்துக்கொள்ளும் ஐக்கிய முன்னணியை இலங்கையில் வாழும் முன்னேறிய மக்கள் பிரிவினர் முன்வைக்கவேண்டும். இதுவே சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் ஆணிவேர். தமிழ்நாட்டில் கோமாளித்தனமான அரசியல் நடத்தும் இனவாதப் பாசிஸ்டுக்களின் தயவில் ஈழம் பெறுவோம் என்றும் ஏகாதிபத்தியங்களின் தயவால் ஈழம் பிடிப்போம் என்று சொல்வதையும் விடுத்து மக்கள் மத்தியில் புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும்.. போராடும் அரசியல் தலைமை தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு தோன்ற வேண்டும்.

http://inioru.com/?p=39857

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.