Jump to content

கருத்துக்களத்தில் தமிழில் எழுதல்


Recommended Posts

கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள்

அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர

Link to comment
Share on other sites

  • 4 months later...

நட்புக்குரிய யாழ் இணையக் கருத்துக்கள நண்பர்களுக்கு,

யூனிக்கோட் தமிழில் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான விளக்கம் இது.

யாழ் இணையமானது வலையூடகத்தின் புதிய நுட்பமான "யூனிக்கோட்" எழுத்துரு முறையினைப் பயன்படுத்துவது

யாவரும் அறிந்ததே. இதன் மூலம் உலகின் எந்தவொரு மூலையில் இருந்தும், எந்தவொரு கணணி மூலமும்,

எந்தவொரு புதிய எழுத்துருவினையும் தரவிறக்கம் செய்யாமல் யாழ் இணையத்தை தமிழில் பார்வையிட முடியும்.

இன்று இணையத்தில் தமிழ் இணையத்தளங்கள் பரந்து விரிந்திருக்கின்றன. அதேபோல் தமிழ் எழுத்துருக்களும்

வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு அமைந்துள்ளன. அதனால் பாவனையாளர்களும்/பயனாளர்களும்

ஒவ்வொருவிதமான எழுத்துரு முறையினைப் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியே பழக்கப்பட்டும் விட்டார்கள்.

அதனால் ஒரு குறுகியவட்டத்துக்குள்ளேயே தமது செயற்பாடுகளையும் குறுக்கிக் கொள்கிறார்கள். இது தமிழின்

வளர்ச்சிக்கும், தமிழரின் முன்னேற்றத்திற்கும் தடையாகவுள்ளது. இதன்பொருட்டு யாழ் இணையம், வெவ்வேறு

முறைகளைப் பயன்படுத்தி வருபவர்களை, அவர்கள் பயன்படுத்தும் எழுத்துரு முறையிலேயே இலகுவாக

"யூனிக்கோட்டில்" எழுத வழிவகைகள் செய்து அதனைக் கருத்துக்களம் மூலம் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம்

அனைத்துத் தரப்பினரும் தமது கருத்துக்களையும், தகவல்களையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள இலகுவாக

அமையும்.

எனவே, அதுபற்றிய விளக்கங்களை கீழே சுருக்கமாக எழுதுகிறேன்.

----------------------------------------------------------------------------------

1. யாழ் இணையக் கருத்துக்களத்தில் பதிந்த அங்கத்துவர்களாகிய நீங்கள், முதலில் உங்கள் பயனாளர் பெயரையும்

(Username), மறைவுச்சொல்லையும்(Password) பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும்.

2. கருத்துக்களத்தின் மேற் பகுதியில் யாழ் இணையத்தின் பிரிவுகளுக்கான தொடுப்புகள் இருக்கும்:

முற்றம் - கருத்துக்களம் - விம்பகம் - மடல் - தேடி - நாற்சந்தி

அதன் கீழ் கருத்துக்களத்திற்கான தொடுப்புகள் இருக்கும்:

Home - Search - Memberlist - Statistics - Album - Links - Calendar - Recent Topics -

Nickpage - Staff Site - Ranks - Usergroups - FAQ - Profile - You have no new

messages - Log out [ வலைஞன் ]

3. மேற்கண்ட கருத்துக்களத்திற்கான தொடுப்புகளில், "Profile" என்பதை அழுத்துங்கள்(click).

அதனை அழுத்தியதும் உங்களுக்கான, உங்களைப்பற்றிய தரவுகள் அடங்கிய பகுதி திறக்கப்படும். அதன்

மேற்பகுதியில் பின்வரும் பிரிவுகள் இருக்கும்:

Public - Home - Registering - Profile - Buddylist - Private Messaging

4. மேற்கண்ட பிரிவுகளில் "Profile" என்பதை அழுத்துங்கள்(click).

அதனை அழுத்தியதும் அதன் கீழே உபபிரிவுகளை உள்ளடக்கிய இன்னொரு பகுதி திறக்கும்.

Public : Preferences : Signature : Avatar : Admin

5. மேற்கண்ட உபபிரிவுகளில் "Preferences" என்பதை அழுத்துங்கள்(click).

அதனை அழுத்தியதும் பல தரவுகளுடன் கூடிய ஒரு பகுதி திறக்கும்.

6. அதன்படி, மேலிருந்து கீழாக 15 ஆவது தரவாக "Board Style" என்ற ஒன்று உள்ளது.

அதன் வலது புறத்தில் நீங்கள் உங்களுக்கு இலகுவான எழுத்துரு முறையில் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான

வடிவமைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

-வடிவமைப்புகள்:

*bamini2unicode: நீங்கள் "பாமினி" தட்டச்சு எழுத்துரு முறையில் எழுதிப் பழக்கப்பட்டவராக இருப்பின்,

அதேநேரம் சுரதா யாழ்வாணன் அவர்களின் பாமுனி செயலி(Keyman Software + bamuni.kmx)

இல்லாதவராக இருப்பின், அல்லது பயன்படுத்தாதவராக இருப்பின் இந்த முறையைத் தெரிவு செய்க.

இதன் மூலம், நீங்கள் கருத்துக்களத்தில் கருத்து எழுதும்போது (new topic, post reply)

மேலே ஒரு பெரிய பெட்டியும், கீழே ஒரு சின்னப் பெட்டியும் இருக்கும். கீழுள்ள சின்னப் பெட்டியில் நீங்கள்

பாமினி தட்டச்சு முறையில் எழுதினால் அது தானாக மேலுள்ள பெட்டியில் யூனிக்கோட் முறையில் மாற்றும்.

*converter: இதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் கருத்தெழுதும் பொழுது மேலும் கீழுமென இரண்டு

பெட்டிகள் இருக்கும். இவ்விரண்டிற்குமிடையே மாற்றத்திற்குரிய எழுத்துரு முறைகளின் பெயர்கள் இருக்கும். மேலே

உள்ள பெட்டியில் நீங்கள் எந்த முறையைப் பயன்படுத்தியும் எழுதிவிட்டு அதன் கீழே எந்த எழுத்துரு

முறையென்பதை அழுத்தினீர்களாயின், தானாக கீழே உள்ள பெட்டியில் நீங்கள் எழுதியதை யூனிக்கோட் முறையில்

காண்பிக்கும். இந்த வடிவமைப்பில் இன்னொரு சாத்தியம் என்னவென்றால், நீங்கள் வலையூடகத்தில் உள்ள எந்த

ஒரு தமிழ்ப் பக்கத்தில் இருந்தும் நல்ல தகவல்களை பிரதியெடுத்து, கருத்துக்களத்தில் யூனிக்கோட் முறையில்

உருமாற்றி இணைக்க முடியும்.

*english2unicode: நீங்கள் இதுவரை எந்தவொரு தமிழ் எழுத்துருமுறையும் பயன்படுத்தவில்லையா?

e-kalappai, Bamuni போன்ற செயலிகளின் மூலம் தமிழ் எழுதும் பழக்கம் இல்லையா? கவலை வேண்டாம்.

இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கருத்தெழுதும் பொழுது மேலே பெரிய பெட்டியும், கீழே சிறிய

பெட்டியும் இருக்கும். கீழே உள்ள சிறிய பெட்டியில் ஆங்கிலத்தில் தமிழை (உதாரணம்:ammaa) என்று

எழுதினால் மேலே உள்ள பெட்டியில் தானாகவே யூனிக்கோட் முறையில் மாறும்.

*fisubsilver : FI Subsilver Shadow : உங்களிடம் சுரதா யாழ்வாணன் அவர்களின் பாமுனி செயலி

(Keyman Software + bamuni.kmx) இருக்கிறதா. அப்படியென்றால் இந்த இரண்டு வடிவமைப்புகளில்

ஏதாவதொன்றைத் தெரிவு செய்வதன் மூலம், நேரடியாகவே பாமுனி செயலியின் மூலம் யூனிக்கோட் முறையில்

எழுத முடியும்.

*tscii2unicode: நீங்கள் இதுவரை tscii முறையில் எழுதிப் பழக்கப்பட்டவரா. பரவாயில்லை! இந்த

வடிவமைப்பத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் கருத்து எழுதும் மேலே பெரிய பெட்டியும், கீழே சிறிய பெட்டியும்

இருக்கும். கீழே உள்ள சிறிய பெட்டியில் tscii முறையில் நீங்கள் எழுதினால், மேலே உள்ள பெட்டியில் அது

தானாகவே யூனிக்கோட் முறைக்கு மாறிவிடும்.

நேரடியாக சுரதா யாழ்வாணனின் "பாமுனி" செயலி பயன்படுத்தி எழுதாதவர்கள், அல்லது "bamini2unicode, english2unicode, tscii2unicode, converter" ஆகிய வடிவமைப்புகளைப் பயன்படுத்தி எழுதுபவர்கள் பின்வரும் படத்தினைக் கவனிக்க.

***சாதாரணமாக நீங்கள் Post Reply என்பதை அழுத்திவிட்டு கருத்து எழுதுதல்.

reply.gif

***Quick Reply இல் உடனடியாகக் கருத்து எழுதுதல்.

quick_reply.gif

பி.கு.: மேலே குறிப்பிட்டுள்ளது போன்று, கீழே இருக்கும் சிறிய பெட்டியில் எழுதிவிட்டு, பின்பு பெரிய பெட்டிக்குள்

சென்று மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சிறிய பெட்டிக்குள் உங்கள் சுட்டியை அழுத்தினால் மீண்டும் பழைய

படியே வந்துவிடும். அதனால் கவனமாக இருக்கவும்!

-----------------------------------------------------------------------------------

நண்பர்களே,

மேலே எழுதப்பட்ட விளக்கம் கணணியில் திறமையுள்ளவர்கள், அதிகம் ஈடுபடாதவர்கள் என்று அனைத்துத்

தரப்பினர்க்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. சிலவேளைகளில் சிலருக்கு இது அளவுக்கதிகமான எழுத்தாகவும்,

சிலருக்கு விளக்கம் போதாததாகவும் இருக்கலாம். எனவே மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் இங்கெழுதுக,

இல்லையெனில் தனிப்பட்ட செய்திச்சேவையின் மூலம் தொடர்புகொள்க.

நன்றி

Link to comment
Share on other sites

  • 3 years later...

கள உறவுகளிற்கு வணக்கம்,

மேலே இணைக்கப்பட்டுள்ள தமிழில் எழுதுவதற்கான உதவி குறிப்புக்கள் பழைய களங்களுக்கு உரியவை. தற்போதைய புதிய களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகளை மோகன் அண்ணா தன்னுடைய யாழ் வலைப்பதிவில் (புளொக்) இணைத்துள்ளார். ஆனால் இன்னும் பல புதிய உறுப்பினர்கள் தமிழில் எழுத முடியாமையால் களத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதையும் காண கூடியதாக உள்ளது. அதனால் மோகன் அண்ணாவின் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் இங்கு மீள இணைத்துள்ளேன். இதனை வாசித்தறிந்து புதிய கள உறுப்பினர்கள் களத்தில் ஆங்கில மொழியினை தவிர்த்து தமிழில் எழுதுமாறு தயவுடன் கேட்டு கொள்கின்றேன். இந்த உதவிகுறிப்புக்களை படித்த பின்பு தமிழில் எழுதுவதில் உங்களுக்கு சிரமம் ஏதும் இருந்தால்/உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

இனிவரும் காலங்களில் மீண்டும் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதப்படும் கருத்துக்கள் நீக்கலாம் என எண்ணியுள்ளோம்.

கள உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

நட்புடன்

மதன்

களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள்

தமிழில் இலகுவாக எழுதுவதற்கு இங்கே இரண்டு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

converter.gif

பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் களத்தின் இறுதிப்பகுதியில் மேலே காண்பிக்கப்பட்டது போன்று மாற்றிக் கொள்வதற்கான வசதி உண்டு. அங்க நீங்கள் Bamini type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதிக் கொள்ளவே அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட விடயத்தினை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவோ முடியும்.

convert_bamini.gif

ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுபவர்கள் English type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் எழுதுவதை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக ammaa அல்லது ammA என்று எழுதும்போது "அம்மா" என்று மாறிக்கொள்ளும்.

convert_english.gif

இவற்றினைத் தவிர பல்வேறுவகையான சிறு programs வகைகளையும் தமிழில் எழுதுவதற்காகப் பாவித்துக் கொள்ள முடியும். உதாரணமாக சுரதாவின் பாமுனி: http://www.yarl.com/downloads/vanni.zip

மேலும் மேலே குறிப்பிட்ட வகை எழுத்துரு அமைப்பினைத் தவிர வேறு எழுத்துரு அமைப்புக்களில் இருந்து யுனிகோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள சுரதாவின் தளத்தில் உள்ள பொங்குதமிழ் எனும் convert இனைப் பாவிக்கலாம். http://www.suratha.com/reader.htm

Flash animation வடிவில்:

http://www.yarl.com/help/forum/changeing_s...eing_style.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.