Jump to content

யாழ் கருத்துக்களத்தின் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களும் புதிய பகுதிகளும்: 2013


Recommended Posts

வணக்கம்,

 

காலத்துக்கு காலம் யாழின் வடிவங்களிலும், பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது போன்று இப்பொழுதும்  யாழில் உள்ள பகுதிகளில் (Sections / Categories)  சில மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளோம். சில புதிய பிரிவுகளை ஏற்படுத்துதல், சில புதிய உப பிரிவுகளை உருவாக்குதல், இருக்கும் பகுதிகள் சிலவற்றை ஒன்றாக்குதல் மற்றும் வேறாக்குதல் போன்ற மாற்றங்கள் இவற்றில் அடங்கும். இத்தகையக மாற்றங்கள் தொடர்பான பொது அறிவித்தலுக்காக இந்த திரி பயன்படுத்தப்படும்.

 

இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக கருத்துகளை வழங்க விரும்புகின்றவர்கள் மற்றும் சந்தேகங்களை கேட்க விரும்புகின்றவர்கள் நாற்சந்தியில் அதற்கான ஒரு பொதுவான திரி திறக்கலாம்.

 

எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைய முடியாமல் போய்விடின் எம்மால் எதிர்காலத்தில் திருத்தி அமைக்கப்படவோ அல்லது முற்றாக நீக்கப்படவோ முடியும் என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.

 

 

புதிய உப பிரிவுகள்:

 

பல உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப கதை கதையாம் பகுதி இரண்டாக பிரிக்கப்படுகின்றது.

 

1. முற்றத்து மல்லிகை:ள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் (கதைகள், அனுபவப்பதிவுகள், பயணக் கட்டுரைகள் என்பன இவற்றில் இடம்பெறும்.

 

2. தோட்டத்து மல்லிகை: ஏனைய தளங்களில் இருந்து பிரதி செய்யப்படும் பதிவுகள் (யாழ் உறுப்பினர்களாக இல்லாதவர்களின் சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள்)

 

கதை கதையாம் பகுதியில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள முன்னைய பதிவுகள் காலக்கிரமத்தில் இவ் பிரிவுகளுக்குள் நகர்த்தப்படும்.

 

இந்த மாற்றம் தற்போதைக்கு கதை கதையாம் பகுதியில் மாத்திரமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் கவிதைப் பகுதியிலும் இதே போன்ற மாற்றத்தினை செய்வது பற்றி தீர்மானிப்போம்.

 

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

தமிழக மாணவர்களின் எழுச்சி மிகு போராட்டங்களுக்கு யாழ் இணையம் தன் நன்றியையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழக மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பான அனைத்து செய்திகளையும், தகவல்களையும், காணொளிகளையும் இணைப்பதற்காக புதிய பகுதி ஒன்று

'சிறப்புக்களம் - தமிழக மாணவர் எழுச்சி'  என்ற பெயரில் உலக நடப்புகள் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது என்பதையும் கள உறவுகளுக்கு அறியத் தருகின்றோம்.

 

தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் இந்த சிறப்பு பகுதியில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

நன்றி,

யாழ் கள நிர்வாகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.