Jump to content

புதிய உறுப்பினர்களை உடனடியாக உள்ளே அனுமதித்தல்: பரீட்சார்த்த முயற்சி


Recommended Posts

வணக்கம்,

 

அண்மைக் காலமாக யாழ் களத்தில் புதிதாக இணையும்  உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு இணையும் உறுப்பினர்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்வதற்காக, இணைந்தவுடன் உடனடியாக பதில் எழுதும் உரிமையை வழங்க உத்தேசித்துள்ளோம். அதாவது புதிதாக இணைந்து கொண்டவர்கள் அரிச்சுவடியில் தம் ஆரம்பப் பதிவுகளை இட்டு பின் அதனை நிர்வாகப் பிரிவினர் பார்த்து அனுமதிக்கும் முறையில் மாற்றத்தினைக் கொண்டுவந்து, இணைந்தவுடன் அவர்களை எல்லாப் பகுதிகளிலும் பதில் எழுத அனுமதிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.

 

இதன்படி புதிதாக இணைந்து கொண்டவர்கள், உடனடியாக திரிகளுக்கு பதில் எழுத முடியும். ஆனால் கள பொறுப்பாளர்களில் ஒருவர் அனுமதிக்கும் வரை புதிதாக திரிகளை திறக்க முடியாது.

 

யாழ்களத்தினை மேலும் வளர்த்தெடுக்கவும் புதிய உறுப்பினர்களை உள்வாங்கிக் கொள்ளவும் இம் முறையினை பரீட்சார்த்தமாக முயன்று பார்க்கின்றோம். இம் முயற்சியின் பெறுபேறுகளின் அடிப்படையில் இதனை தொடர்வதா இல்லையா என்பதை எதிர்காலத்தில் முடிவு செய்வோம்.

 

நன்றி

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.