Jump to content

15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

 

யாழ் களத்திற்கு இருக்கும்  பண்பும் சிறப்பும் நோக்கமும் போல 
விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும்

ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும்.

 

களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத்  தட்டிக் கொடுத்தும் 

தட்டிக் கேட்டும்  களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும்

உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர்.
 

மேலும் பல ஆயிரம்  பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன்
வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா 

 

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து கருத்தாடும் விசுகு  
மேலும் பல ஆயிரம்  பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புற விசுக்குவை வாழ்த்துகின்றேன். 
Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் விசுகு அண்ணா....! இன்னும் பல ஆயிரம் கருத்துக்களை எம்முடன் பகிர எமது வாழ்த்துக்கள்........!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா,

உண்மையில் எனக்கு பிரான்ஸ் நடைமுறை பெரிதாக தெரியாது. நான் இங்கு அதிகம் பலருடன் பழகுவதில்லை என்பதால் இந்த இரு வருடங்கள் சில மாதங்களில் பல விடையங்கள் உரிய உரிய நேரத்தில் செய்யாமல் தவற விட்டிருக்கிறேன். விசுகு அண்ணா பலதடவை யாழில் திண்ணையில் தகவல்கள் தந்து உதவியிருக்கிறார். அந்த அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி அண்ணா.

தொடர்ந்து பலவற்றை எழுத வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் விசுகு அண்ணா....
2009ம் ஆண்டு தான் விசுகு அண்ணாவின் நல்ல குண‌த்தை பார்த்து தெரிந்து கொண்டேன்..ஈழப் போராட்டம் என்றால் விசுகு அண்ணா போன்றவர்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்கலாம் ஆவத்து வராது....அடைய வேண்டிய இலக்கையும் அடையலாம் நம்பிக்கையுடன் :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

 

மேலும் பல்லாயிரம் பதிவுகள் உங்களிடமிருந்து  வரவேண்டும்! :D

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

 

மேலும் பல்லாயிரம் பதிவுகள் உங்களிடம் இருந்து  வரவேண்டும்.!

 

கொள்கைதான் ஒரு மனிதனின் வெற்றிக்கு முதல் ஆயுதம் கூட இது நிறையவே உங்களிடம் இருக்கு எழுதுங்கள் கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் :) :)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 எழுதுங்கள் கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் :) :)

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம் எனக் கூறிய அஞ்சரனுக்கு

ஒரு பச்சை போடலாம் என்றால் ஆங்கிலத்தில் எதோ றீச் என வருகின்றது :D.

 

இப்படி எல்லோரும் சிந்திப்பதுடன் நிறுத்தாமல் செயலிலும் காட்டினால் களம் சிறப்படையும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் விசுகர்!   :)
உங்கடை உந்த பதினையாயிரத்திலை கூட்டிக்கழிச்சு பார்த்தால் அர்ஜுனுக்கு மட்டும் ஐயாயிரம் தேறும். :D
Link to comment
Share on other sites

வாழ்த்துகள் விசுகர்!!


 

வாழ்த்துக்கள் விசுகர்!   :)
உங்கடை உந்த பதினையாயிரத்திலை கூட்டிக்கழிச்சு பார்த்தால் அர்ஜுனுக்கு மட்டும் ஐயாயிரம் தேறும். :D

 

 

அப்படியா நேரத்தை வீணாக்கினார்?!!!!!  :o  :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் விசுகு அண்ணா....! இன்னும் பல ஆயிரம் கருத்துக்களை எம்முடன் பகிர எமது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..!          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15000.png

 

congrats23.gif

வாழ்த்துக்கள்.... விசுகு.

தினமும் களத்துக்கு வந்து எழுதுபவர்களில்.... விசுகரும் ஒருவர்.

இப்போ தானா.... 15, 000 பதிவுகள். அதிகம் எழுதியுள்ளார் போல்.... உணர்வு ஏற்படுகின்றது.

இவரின் தாயகப் பற்றும், கொண்ட கொள்கையில் உறுதியும்.... இவரின் மேல், மிகுந்த மரியாதையை ஏற்படுத்தும்.

பாராட்டுக்கள்... விசுகு. :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150 நூறுகள் கருத்தை தாண்டும் விசுகு அண்ணாக்கு வாழ்த்துக்கள். எங்களோடு கருத்தால்.. முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும்.. விசுவாசத்தை வளர்த்துக் கொண்ட உறவுகளில்.. விசுகு அண்ணாவும் ஒருவர். நல்ல முன்மாதிரி. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நண்பரே....எனது கிறுக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து என்னை மீண்டும் கிறுக்க தூண்டுவது உங்களது வாழ்த்துக்கள்தான்....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
Bulandi-film-picture.jpg

யாழ் கள உத்தியோகப்பற்றற்ற நாட்டாமை, வாரி வழங்கும் லா சப்பல் வள்ளல் விசுகு ஐயா 15 000 பதிவுகளைத் தாண்டி வீறு நடை போடுகின்றார்! இன்னும் பல்லாயிரம் பதிவுகளைப் போட வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.