Jump to content

பலவீனமான மகிந்த உருவாக்கிய பலமான இனவெறிக்கட்டமைப்பு


Recommended Posts

சிறிலங்காவின் சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்று 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வருதல் வேண்டுமென விடுத்த அழைப்பு மட்டுமே. இவ்அழைப்பு ஒன்றோ அன்றி இரண்டோ அதற்கு மேற்பட்ட தடவையோ அவரால் விடுக்கப்பட்டிருக்கலாம்.

இதேவேளை இவ் அழைப்புடன் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிபந்தனைகள் இணைக்கப்பட்டதொன்றாக வராதுவிடினும் பேச்சுவார்த்தை, தொடர்பான நிபந்தனைகளாக ஆசிய நாடொன்றிலேயே பேச்சுவார்த்தை, யுத்த நிறுத்த உடன்;பாட்டில் மாற்றங்களைச் செய்தல் என்ற நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அத்தோடு, நோர்வே மத்தியஸ்துவத்திற்கு மாறாக வேறு நாடு ஒன்றைத் தெரிவு செய்தல் குறித்த பேச்சுக்களும் அரச தரப்பிலிருந்து வெளிவந்த வண்ணமிருந்தது.

ஆனால், தோல்வியில் முடிந்த இந்திய விஜயத்தின் பின்னர் நோர்வே அரசை ஏற்பாட்டாளராக பணியாற்;றுமாறு சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பினும், நோர்வேக்கு எதிரான உணர்வுகள் ஆட்சியாளர் மட்டத்தில் நிலவுவதாகவேயுள்ளது. இதனை நோர்வேயும் நன்கு புரிந்து கொண்டுள்ளதன் வெளிப்பாடாகவே ஏற்பாட்டாளராகப் பணியாற்றுவதற்கு நோர்வே சில நிபந்தனை முன்வைத்துள்ளதோடு, இம்முயற்சியைத் தொடர்வதற்குக் கால அவகாசத்தையும் எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த வகையில் விடுதலைப் புலிகளைப் பேச்சிற்கு வருமாறு அழைப்பு, நோர்வேயை ஏற்பாட்டாளராக செயற்படுவதற்கான அழைப்பு இரண்டையும் தவிர மகிந்த ராஜபக்ஷ சமாதானத்தை முன்னெடுப்பதற்கு எதனையும் செய்யவில்லை. இவ்விரண்டு விடயங்களும் வெளிப்பார்வையில் பெரிய நகர்வுகள் போன்று இருப்பினும் அடிப்படையில் இது முன்னேற்றகரமான நடவடிக்கை எனக்கொள்வதற்கு இல்லை.

ஏனெனில, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதோ அன்றி நோர்வேயை ஏற்பாட்டாளராகக் கொண்டு வருதல் என்பதோ புதியதொரு விடயமல்ல. விடுதலைப் புலிகள் அதற்கு எதிராகவும் இல்லை. மாறாக நீண்ட நாட்களாக-அதாவது சனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே விடுதலைப் புலிகள் இக்கோரிக்கை களை விடுத்தே வந்துள்ளனர்.

இதேசமயம் மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை தொடர்பாக விதித்த இரு நிபந்தனைகளும் விடுதலைப் புலிகளால் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் நிராகரிக்கப்பட்ட விடயமாகவும் இருந்தது. அதாவது ஆசிய நாடொன்றில் பேச்சு என்ற நிலைப்பாடும், யுத்தநிறுத்த உடன்பாட்டை மாற்றியமைத்தல் என்பதும் புலிகளால் நிராகரிக்கப்பட்ட விடயங்களாகும். இது சனாதிபதியாக மகிந்தராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தீர்;மானம் அல்ல. அதற்கு முன்னரே அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதே தெரிவிக்கப்பட்டதொன்றாகும். அதாவது மகிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போதே கூறப்பட்ட விடயமாகும்.

இந்த வகையில் பார்க்கையில் மகிந்த ராஜபக்ஷ தனது ஐம்பது நாட்கள் ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைக்குச் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற hPதியிலோ, அரசியல் தீர்;வு என்ற hPதியிலோ முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதையும் செய்துவிட்டதாகக் கூறிக் கொள்வதற்கு எதுவுமில்லை. பேச்சளவில் மட்டுமானதாவே அவரின் செயற்பாடுகள் இருந்துள்ளன.

ஆனால் இவ் ஐம்பது நாட்களில் இயல்பு வாழ்விற்கு மாறாகவும், சமாதான முயற்சிகளுக்கு எதிராகவும் அவரது நடவடிக்கைகள் உறுதியானதாகவும், தீவிரமானதாகவுமுள்ளது. வேறுவிதமாகக் கூறுவதானால் இனப்பிரச் சினைக்கு இராணுவ hPதியிலான தீர்விற்கு ஏற்ற வகையில் சிறிலங்கா அரச இயந்திரம் செயற்படத்தக்கதான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனின் மிகையாகாது.

மகிந்தராஜபக்ஷ தீவிர இனவாத சக்திகளினதும், பௌத்த-சிங்கள அடிப்படைவாத சக்திகளினதும் ஆதரவுடன் சனாதிபதி பதவியைக் கைப்பற்றியவர் என்பது வெளிப்படையானது. குறிப்பாக தீவிர இனவாதச் சக்தியாகச் செயற்படும் ஜே.வி.பி, பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்தியான ஜாதிக ஹெல உறுமய என்பவற்றின் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்.

இவரின் இத்தேர்தல் கூட்டணி குறித்து முன்னர் சில எதிர்மறையான விமர்சனங்களும், முன்வைக்கப்பட்டதுண்டு. அதாவது மகிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதியல்ல. தேர்தல்தல் வெற்றிக்காகக் கூட்டுச்சேர்ந்துள்ள அவர், வெற்றியின் பின் அவர்களை நாசுக்காக அகற்றி விடுவார் எனக்கூறப்பட்டது. ஆனால் இம் மதிப்பீடு தவறானது என்பதை மகிந்த ராஜபக்ஷ தனது புதிய அரசாங்கத்தை - அதாவது அமைச்சரவையை அமைப்பதிலிருந்தே தெளிவுபடுத்தத் தொடங்கியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்கதாக பிரதமராகவும், அத்தோடு பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவைத் தெரிவு செய்தமையைக் குறிப்பிட முடியும்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஏற்கனவே இவ்விரு பதவிகளையும் வகித்தவராயினும் இம்முறை அவர் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினராகும். இதனைத்தவிர கடந்த காலத்தில் இப்பதவியை வகித்த வேளையில் யுத்த முன்னெடுப்புக்களில் தீவிரமாகப் பணியாற்றியவராகும். பௌத்த - சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைதல் வேண்டும் எனத் தனது முன்னையப்பதவிக் காலத்தில் தென்னிலங்கையில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவராகும். பத்தாயிரம் பௌத்த-சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாகக் கூறி பிரச்சாரத்தை முன்னெடுத்தவர். இத்தகைய ஒருவரை மீண்டும்- அதிலும் பொதுசன ஐக்கிய முன்னணியின் செயலர் டி.எம்.ஜெயரட்ணவிற்குப் பிரதமர் பதவி வழங்கப்போவதாகத் தகவல்கள் வெளிவந்த பின்னரும் அதனை மாற்றி ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுக்கு மகிந்தராஜபக்ஷ வழங்கியதும், பின்னர் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும் அவரை நியமனம் செய்தமையும் மகிந்தராஜபக்ஷ தீவிர இனவாதப் போக்குக் கொண்ட தலைமையை விரும்பியமைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்கதாகும்.

அடுத்ததாக புதிய இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சரத் பொன்சேகா மகிந்த ராஜபக்ஷ தெரிவு செய்தமையைக் குறிப்பிட முடியும். யுத்தவெறி கொண்டவரும் தன்னைப் பற்றிப் பெருமை பேசுபவருமான சரத் பொன்சேகாவின் நியமனமானது இராணுவத்தை யுத்தத்திற்கு தயாராக்கும் நோக்கிலானது என்பது நிராகரிக்க முடியாததுமாகும்.

இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதும் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தின் வரலாற்றையும் அதில் தான் 30 வருடத்திற்கு மேலாகப்; பதவி வகித்ததையும் மறந்து விட்டவராகத் தான் எத்தகைய படை நடவடிக்கைகளிலும் தோற்றதில்லை எனப் பெருமை பேசினார். தான் சார்ந்திருந்த இராணுவம், தான் பங்குபற்றிய களங்கள் என்பனவற்றில் ஏற்பட்ட தோல்விகள், பின்னடைவுகள் என்பனவற்றிற்கும், தனக்கும் சம்பந்தமில்லை எனப் பெருமை பேசும் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்தே தீவிர யுத்த முனைப்புக்கள் அரசால் முன்னெடுக்கப்படத் தொடங்கி விட்டதெனலாம்.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளுடனோ, தமிழ் மக்களுடனோ இணக்கமானதொரு போக்கை கடைப்பிடிக்க மாட்டார் என்பதற்கு யுத்தகாலத்தில் அவர் காட்டிய கடும்போக்கு மட்டுமல்ல. சமாதான காலத்தில் அவர் காட்டிய கடும்போக்கையும் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்ட முடியும்.

தாய்லாந்துப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட உபகுழுக்கள் என்ற hPதியில் கூட்டப்பட்ட பாதுகாப்பு உப குழுவின் செயற்பாடு முடக்கத்திற்கு வந்ததும், தோல்வி அடைய நேரிட்டதும் சரத் பொன்சேகாவின் நிபந்தனைகளினாலேயே ஆகும். அதாவது உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவேண்டுமானால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து பேச்சுக்களில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி பின்னர் அது தோல்வியில் முடிவடையவும் காரணமாக இருந்தவர்.

லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தற்பொழுதும் அத்தகையதொரு போக்கையே கொண்டிருப்பதை அண்மைய அவர் நடவடிக்கைகள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. எடுத்துக்காட்டாகத் தற்காப்புப்பயிற்சி பெற்றுள்ள தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளே எனக் கூறி நிராயுதபாணிகளாகவுள்ள அவர்கள் மீதும் ஆயுத hPதியிலான தாக்குதலை நடத்துவதற்கு இராணுவத்தினருக்கு அவர் வழங்கியுள்ள அனுமதியில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.

சந்தேகத்திற்கு இடமானவர்கள் மீது தாக்குதல் நடத்தலாமென இராணுவத்தளபதி வழங்கியுள்ள அதிகாரம் இனப்படுகொலைகளுக்கு சரத் பொன்சேகா வழங்கிய அங்கீகாரமாகவே கொள்ளத்தக்கது. மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போன்று சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எல்லாம் புலிகளாகத் தெரிவது ஒன்றும் ஆச்சரியமாக இருக்க மாட்டாது.

அடுத்ததாகப் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்கள ஆலோசகராக முன்னாள் பொலிஸ்மா அதிபரான கொட்டகதெனியவை மகிந்த ராஜபக்ஷ நியமனம் செய்ததைக் குறிப்பிடமுடியும். அதாவது தீவிர இனவாதியான இவரைத் தெரிவு செய்;ததன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக-இனாPதியிலான செயற்பாடுகளில் மகிந்தராஜபக்ஷ அக்கறை காட்டியுள் ளதை இது தெளிவுபடுத்தியதாகவே கொள்ளத் தக்கதாகும்.

கொட்டகதெனிய, ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர்களில் ஒருவர் என்பதினால் மட்டும் இவ்வாறு இங்கு குறிப்பிடவில்லை. அவர் கடந்த காலத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த போது இனவாத hPதியாகச் செயற்பட்டவர். கொழும்பில் பெரும் தொகையில் கைதாவதற்கும், பலர் காணாமற்போனமைக்கும் இவரும் காரணமாக இருந்தவர் என்பது கடந்த கால வரலாறு.

இதனை நிரூபிப்பது போன்றே அவர் தற்பொழுதும் பதவி ஏற்றதன் பின்னர் வெளியிட்ட அறிவுப்புக்களும் அவரது நடவடிக்கைகளும் உள்ளன. பதவியேற்ற பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பைக்கருதி கொழும்பிலுள்ள வீடுகள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் எனக்கூறினார். இதனை நிரூபிப்பது போன்று கடந்த வாரத்தில் கொழும்பில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டு 1000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதே சமயம் கடந்த வாரத்தில் திருமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலையுடன் கொட்டகதெனியாவும் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டக தெனியாவின் பணிப்பில் சிறிலங்காவின் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரே இப்படுகொலைகளைப் புரிந்ததாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, ஒரு இனவெறி பிடித்த பௌத்த -சிங்கள அடிப்படைவாதியை மகிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் ஆலோசகராக நியமித்துள்ளமை பாதுகாப்பமைச்சையும், பொலிஸ் திணைக்களத்தையும் எதனை நோக்கி மகிந்த ராஜபக்ஷ வழிநடத்திச் செல்ல முயல்கின்றார் என்பதையே வெளிப்படுத்தியுள்ளதெனலாம்.

மற்றொரு நியமனமாக பாதுகாப்பமைச்சின் செயலாளராக முன்னாள் கேணலான கோட்டபாய ராஜபக்ஷவை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமனம் செய்தமையாகும். தனது சகோதரர் ஒருவருக்கு உயர் பதவியொன்றை சனாதிபதி வழங்கத் தீர்மானித்தார் என்பதற்கு அப்பால் ஒரு யுத்த வெறியரை இனவாதியை பாதுகாப்பமைச்சின் செயலாளராக நியமனம் செய்ய சனாதிபதி தீர்மானம் செய்தார் என்பதே நிஜமானதாகும்.

அவ்வாறு இல்லாதுவிடில் சிறிலங்காப் படைத்தரப்பிற்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கீழ் மட்டத்தில் நடக்கும் சந்திப்புக்களுக்கு அவர் தடை விதித்திருக்கமாட்டார். அதாவது விடுதலைப் புலிகளுக்கும்- படையதிகாரிகளுக்கும் இடையில் நடைபெறும் கீழ்மட்டச் சந்திப்புக்கள் பல நடைமுறைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவுவதோடு பதற்றத்தைத் தணிக்கச் சிறிதளவேனும் உதவுவதற்கு வாய்ப்புக்கொடுப்பதாக இருந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக யாழ். குடாநாட்டில் நீர்வேலியில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை, புங்குடுதீவில் கடற்படையினரால் இளம்பெண் தர்சினி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டமை, அவற்றையடுத்து படையினர் மீது நடந்த கிளைமோர் தாக்குதல், கைக்குண்டு வீச்சுக்கள் என்பனவற்றை அடுத்து யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதிக்கும், யாழ். மாவட்ட இராணுவத்தளபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இறுதி நேரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பெயரில் இச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது. அவ்வாறு இல்லாதிருப்பின் யாழ். குடாநாட்டில் ஓரளவு பதற்றம் தணிவதற்குச் சிலவேளை வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் கோட்டபாயவின் பணிப்பு இதனை இல்லாது ஒழித்ததினால் வன்முறை தொடரவும் இதன் காரணமாக பலர் கொல்லப்படவும், பலர் காயங்களுக்குள்ளாகவும் ஆயிரக்கணக்கானோர் தமது குடியிருப்புக்களை விட்டு பாதுகாப்புத்தேடி இடம்பெயரவும் வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தவகையில் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஒருபுறத்தில் அழைப்பு விடுத்து வந்தாலும் அவரின் நடவடிக்கைகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கோ அன்றி நாட்டில் அமைதி நிலை உருவாவதற்கோ ஏற்றதொன்றாக இருக்கவில்லை. அதாவது பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை ஏற்படுத்துவதாக இல்லை.

அதாவது மகிந்த ராஜபக்ஷ பலவீனமானதொரு அரசியல் தளத்திலிருந்து கொண்டு பலமானதொரு இனவாத அணியைச் செயற்பட வைத்துள்ளார் எனலாம். ஆகையினால் மகிந்தராஜபக்ஷ விரும்பினாலும், விரும்பாது விட்டாலும் கூடப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக்கூடியதொரு சூழ்நிலையை அவரால் உருவாக்க முடியாது.

ஏனெனில் அவரின் அரசியல் தளம் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்பனவற்றால் மட்டுமல்ல சுதந்திரக்கட்சியினால் கூட பலவீனப்படுத்தப்படும் ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்பதைக்கூட அவரால் உறுதியான நிலைப்பாட்டுடன் மேற்கொள்ள முடியாது.

இதேசமயம் அவரது நியமனங்களும் யுத்தத்திற்கும், இன ஒடுக்குமுறைக்கும் ஆதரவான சக்திகளைத் தெரிவு செய்வதாகவே இருந்துள்ளது. அண்மையில் கொழும்பில் நடந்த கைதுகளும், திருமலையில் நடந்த மாணவர் படுகொலைகளும், யாழ். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையும், சனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விதத்தில் நடந்தவையா? என்ற கேள்வி எழக்கூடிய வகையில் அவரின் நிலை உள்ளது.

அத்தோடு சனாதிபதியின் நியமனங்கள் அவரை மீறியதான செயற்பாட்டைக் கொண்ட வையாகக் கூட மாறலாம் என்பதற்கு சனாதிபதி மகிந்தவுக்கும்- தமிழர் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இடைநடுவில் குழப்பத்திற்குள்ளானமை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்கதாகும்.

அதாவது இச்சந்திப்பு பாதுகாப்புச் செயலாளரினதும், இராணுவத் தளபதியினதும் பிரசன்னத்தையடுத்து தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்குச் சென்;றதினால் மகிந்த ராஜபக்ஷவினால் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது மகிந்த ராஜபக்ஷவினால் கட்டுப்படுத்த முடியாத அளவிலானதான அளவில் முரண்பாட்டை உருவாக்கும் நபர்களாக இவர்களால் செயற்பட முடிந்துள்ளது.

இந்த வகையில் பார்க்கையில் பலவீனமான அரசியல் தளத்தில் உள்ள சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது விருப்பு வெறுப்புக்கள் யாவற்றையும் ஓரந்தள்ளிவிட்டு தனது அரசியல் தளத்தை பலப்படுத்திக்கொள்ள தனது பின்னாலுள்ள இனவாத அரசியல் சக்திகளையும், தான் நியமனம் செய்த கடும் கோட்பாட்டாளர்களினதும் செயற்பாட்டிற்குப் பின்னால் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

நன்றி: ஈழநாதம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.