Jump to content

நவனீதம் பிள்ளை போல் ஹூசெய்ன் செயற்பட மாட்டார்: இலங்கை


Recommended Posts

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் பக்கச் சார்பின்றி செயற்படுவார் என இலங்கை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹூசெய்ன் நேற்று பதவியேற்றார்.

இந்தநிலையில் இவர் பக்கச்சார்பின்றி செயற்படுவார் என நம்புவதாகவும், நவனீதம் பிள்ளை பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இரகசியமானதல்ல எனவும், நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது தகவல் தொழிநுட்ப அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் பக்கச்சார்புடன் செயற்பட்டதாக, அவர் இதன்போது கூறினார்.

அத்துடன் அல் ஹூசெய்னை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் வௌிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் எனவும் ஹெகலிய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஆறு வருடங்கள் பதவி வகித்த, தென்னாபிரிக்க வாழ் தமிழரான நவனீதம் பிள்ளை கடந்த மாத இறுதியுடன் (ஆகஸ்ட் 31) விடைபெற்றார்.

இவரது காலத்தில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை பல்வேறு சிக்கலைகளை எதிர்கொண்டது.

மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நிபுணர்கள் குழுவொன்றையும் பிள்ளை நியமித்துள்ளார்.

குறித்த குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் இதுவரை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  http://www.pathivu.com/news/33576/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

நல்ல மணக்க மணக்க கருவாட்டுக் கறியுடன் சாப்பாடு போட்டாலே அடங்கிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமை ஆனையாளராக எவர் வந்தாலும்கூட, அவருக்கு மேலேயிருக்கும் அதிகாரம்படைத்தவர்கள் சொல்வதற்கேற்பவே அவர் ஆடவேண்டும். அது மகிந்த விரும்புவதுபோலவோ அல்லது தமிழர்கள் விரும்புவதுபோலவோ இருக்கப்போவதில்லை. அவர் வேண்டுமென்றால் தனது சொந்தக் கருத்தைக் கூறிவிட்டுப் போகலாம், ஆனால் இறுதியில் நடப்பதெல்லாம் அமெரிக்காவினதும் அதன் பங்காளிகளினதும் விருப்பமே. சிலவேளை அமெரிக்காவினது விருப்புக்கூட சீன ரஷ்ஷிய முதலாளீகளால் அடிபட்டுப் போகலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.