Jump to content

இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மீண்டும் இந்தியா, அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளனர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan_TNA150news.jpg

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில் கூட்டமைப்பின் முக்கிய அரசியல் தலைவர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வகையில் மே மாதத்தின் இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள், அங்கு இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயினும் அவர்கள் யார், யாரைச் சந்திக்கவுள்ளார்கள் என்ற விபாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதன்போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்பு மற்றும் அரசியல் தீர்வில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ள இக்குழுவினர், அரசியல் தீர்வை விரைவுபடுத்துவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் இந்திய அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்று திரும்பியதும் தமிழரசுக் கட்சியின் மாநாடு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு மீண்டும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், இப்போருக்குக் காரணமான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இது குறித்து சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் வற்புறுத்திய போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை. இத்தகையதொரு பின்னணியிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு கடந்த வருடம் அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து அந்நாடுகளின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை தெரிந்ததே.

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழம்பிட்டாங்கையா.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.