Jump to content

சனிபெயர்ச்சி பலன்கள்


Recommended Posts

நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் :D

நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி ( 15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6, விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு ( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார்.

சனிபகவான் சிலகாலம் எவரையும் பிடிப்பது இயற்கை. அவரவர் பூர்வ புண்ணியத்துக்கேற்ப சந்தோஷம் அனுபவிப்பதுபோல சில தடைகளையும் அனுபவித்தே ஆகவேண்டும். முன்ஜென்ம பாவ புண்ணியங்கள் நமக்கு நாமே சேர்த்து வைத்துள்ள சொத்து. இன்னும் ஒரு படி மேலே போய், இதை நமக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் என்றும்கூட சொல்லலாம். அந்த நற்சாட்சிப் பத்திரத்தின்படி சனிபகவான் கண்டிக்கிறார்; தண்டிக்கிறார். நமக்கு விதிக்கப்பட்டவை எல்லாம் இன்னொருவர் கொடுத்ததா, என்ன? அது நமக்கு நாமே முன் ஜென்மத்தில் கொடுத்து வைத்தது. எனவே நம் வினைப்பயனுக்கு தகுந்தவண்ணமே விதிப்பயனும் அமையும் என்பதைப் புரிந்துகொண்டால், எந்தக் குழப்பமும் ஏற்படாது.

இந்த சனிப்பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது . ஏற்கெனவே, கன்னி ராசிக்கும், துலா ராசிக்கும் ஏழரைச் சனி நடந்துகொண்டிருக்கிறது. இது தவிர, மீன ராசிக்கு அஷ்டம சனியும், மேஷ ராசிக்கு கண்ட சனியும் ஆரம்பமாகப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் திருத் தலங்களுக்குச் சென்று, சனிபகவானுக்குரிய வழிபாடுகளையும் , பரிகாரங்களையும் முறையாகச் செய்தால், சுபயோகம் ஏற்படும்.

mesha-rasi.gif

இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். நற்பலன்களைக் கொடுக்கவேண்டிய யோகம்தான் என்றாலும் குருவின் மாறுபட்ட நிலைகளால், நற்பலன்களை நீங்கள் முழுதுமாக அனுபவிக்க முடியாமல், இருந்தீர்கள். குருவின் நல்ல நிலைகள்கூட உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. குரு அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்ததால், உங்களால், எந்த நற்பலனையும் முழுதுமாக அடைய முடியாமல்தான் போனது. இப்போது, இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதை அவ்வளவு நல்லதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், ஒன்றை மட்டும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். உங்களூக்கு சனிப் பெயர்ச்சியால், பாதிப்புகள் நேரிடினும், அதனின்று மீள்வதற்கு கிரகங்கள் குறிப்பாக ராகு, கேதுக்கள் அனுசரணையாக செயல்படுவதால், சனியின் தாக்கம் தற்காலிகமாக இருக்குமேயல்லாது, பெரிதாக அமையாது. ராசிக்குரிய களத்திர வீட்டில், உச்ச நிலையில் பெயர்ந்த சனி, ராசிக்குரிய ஜீவன ஆதாயத்தை அளித்து மகிழ்வார். மிகுந்த பாதக விளைவுகளையும் கொடுத்து உங்களை அலைக்கழிக்கவும் செய்வார். மனைவியுடன் கருத்து வேற்றுமை, தொழில் பார்ட்னரால், சங்கடங்கள் ஏற்படும். தொழில் பார்ட்னரோடு தீராப்பகை ஏற்பட்டு பெருத்த பண நஷ்டத்தை ஏற்படுத்தும். வர்த்தக ஆதாயங்களில் இழப்பு, சொத்துக்களின் உரிமை பாதிப்பு , மனையாள் நோய் பாதிப்பு, மாரக கண்டங்கள் போன்ற நிலைகளில் சனி பிரச்சினைகளைத் தோற்றுவிப்பார். மொத்தத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் விட்டுக்கொடுத்துப் பழகவும். அக்கம்பக்கம் அனுசரணையாக இருந்துகொள்ளவும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்திலும் மன நலத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுடன் சண்டைகள், வாக்குவாதங்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும். திருமணம் செய்ய நினைப்பவர்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவது நல்லது. ஆனால், குருபார்வை இருப்பதால், ஓரளவுக்கு நல்லது. குரு பார்வை மூலமாக தந்தை வழியில் சொத்துக்களினால், நன்மை ஏற்படலாம். தொழில் வகையில் கவனம் தேவை. தொழிலை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது. லாப வகையில் கவனமாக இருந்துகொள்ளவும். வீண்வம்புகள், வழக்குகள் வராமலும் , வாகனங்களால், சிறு விபத்துக்கள் வராமலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் விரயச் செலவுகள் ஏற்படும். பண வரவுகளும் ஏற்படும். உடனே எப்படியாவது சேமித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், வீணாகக் கரைந்துவிடும். பேச்சு வார்த்தைகளை தேவையோடு பேசவும். இல்லையேல், ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்ள நேரும். கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், நிலம், வீடு, வாகனம் வாங்குதல் முதலியவற்றிலும் கவனம் தேவை. உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் நலம் சிறக்கும்.

சனிபகவானின் கெட்ட பார்வைகளில் ஒன்று நேர்ப் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உங்களிடமிருந்து சுறுசுறுப்பு மறைந்துவிடும். தாமதமாக முடிவெடுப்பீர்கள். அதிலும் குழப்பமான முடிவுகளையே எடுப்பீர்கள். வருமானம் செய்வதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

உங்களுக்கு சப்தமத்தில் வந்திருக்கும் சனி பகவான், உங்கள் ராசிக்கு 1,4,9-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். 1-ம் இடத்துப் பார்வையால், எப்போதும் நெஞ்சில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். வியாதியினால் துன்பப்படாமல் இருக்க போதுமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கைகளையும் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் தவறாது கடைப்பிடித்து வந்தால் மட்டுமே, நோய் நிவாரணங்களை அடைய முடியும். உடன் பிறந்தவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டியிருக்கும். பேசும் வார்த்தைகள் சரளமாக இருக்காது.

சனியின் 4-ம் இடத்துப் பார்வையினால், சில சுகங்களை இழக்க நேரும். பெற்றோர்கள் சொத்துக்களைப் பெறுவதில் தடை ஏற்படும். சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் தாயார் உடல்நிலை மோசமடையும். சொத்துக்கள் வாங்கினாலும் அதிலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரும். பேசும் வார்த்தைகளினால் பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

சனியின் 9-ம் இடத்துப் பார்வை தந்தையின் உடல்நலத்தைக் கேள்விக்குறியாக்கும். மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள், காரியத் தடைகள், பொது சேவையில் தெய்வ காரியங்களில் நிந்தனை ஏற்படுதல் ஆகியவை ஏற்படும். தொழில் பளு கூடி, பெரும்பாலோர் திணறவும், மற்றும் அயர்ச்சி, பின்னடைவு, தோல்வியில் துவளுதல் போன்றவை ஏற்படும். ஆனால், குருபகவானின் பார்வையால், கெடு பலன்கள் குறையலாம்; அல்லது நல்லதாகவேகூட நடக்கும்.

மேற்கூறிய கெடுபலன்கள் ஏகத்துக்கும் கலக்கமடைய வைத்திருந்தால், நீங்கள் அதிகமாக பயம் கொள்ளத் தேவையில்லை. குருவின் சஞ்சாரம் கை கொடுக்கும்.

இந்த இரண்டரை வருட சனி சஞ்சார காலத்தில் மூன்று முறை சனி வக்கிர கதியில் சஞ்சரிப்பார். அப்போது இரட்டிப்பு கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.

சனியின் வக்கிர காலங்கள்:

1. 9.2.12.முதல் 24.6.12.வரையில் (4 மாதம் 15 நாட்கள்) மற்றும்

2. 16.2. 2013 முதல், 12. 7. 13. வரை(4 மாதம் 26 நாட்கள்)

3. 3.3.14 முதல் 24.7.14.வரை ( 4 மாதங்கள் 20 நாட்கள்)

இந்தக் காலங்களில் எல்லாவற்றிலுமே சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. சாண் ஏறினால் முழம் வழுக்கும். ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தால், ஐயாயிரம் ரூபாய்க்கு பின்னாலேயே செலவு வந்து சேரும். கவனமாகவும் பொறுமையாகவும் இருந்தால், எல்லாவற்றையும் சமாளிக்கலாம். உறவினருடன் ஏற்படும் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் வாக்குவாதங்கள் முற்றி பெரிய சீரியஸ் பிரச்சினை ஆகிவிடும். உங்களுடைய பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் தோன்றி மறையும். கடமைகளும் பொறுப்புகளும் அதிகமாகி திணற வைக்கும். அவ்வப்போது ஊக்கத்திலும் உடல் நலத்திலும் பின்னடைவு ஏற்படும்.

கெண்ட சனி வந்துவிட்டதே என்று நொந்து போன மேஷ ராசி நேயர்களுக்கு மிகவும் ஆறுதல் தரும் விதமாக, சில காலக் கட்டங்கள் அமைகின்றன.

முதற்காலக்கட்டமாக 8.11.12 முதல் 4.11.13 வரையிலான ஏறக்குறைய 1 வருட காலத்துக்கு பலவித ராஜ யோகங்கள் தோன்றி உங்களை மகிழ்ச்சியில் உறைய வைத்து இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். மிகப் பெருமளவில் வர்த்தக லாபத்தை அடைய முடியும். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை நீங்கும். நீங்கள் எத்தனைதான் பாசம் காட்டினும், உங்களுடன் பகை பாராட்டிய , உங்களை மிரட்டிய உற்றார்- உறவினர்கள் இப்போது உங்களுடன் பகை நீங்கி ஒற்றுமையுடன் இணங்கி வருவர். உங்களிடம் பணிந்து நடந்துகொள்வார்கள். வர்த்தகம், வியாபாரம். இன்ஷ்யூரன்ஸ் , காய்கறித்தொழில். குத்தகை போன்ற துறைகளில் ஈடுபடுபவர்கள் பெருத்த லாபமடைவார்கள். பணம் சரளமாய்ப் புரளும். தொழிற்சாலைகளில் பணி புரிவோரும், அலுவலகப் பணியாளர்களும், இடையூறுகளற்ற பணி உயர்வும், வருமான உயர்வும் அடைவர்.

இரண்டாவது கட்டமாக, 5.11.13. முதல் 2.11.14வரையான காலக்கட்டமும் யோகமாகவே இருக்கும். துலாத்தில் சனியும், சூரியனும், வக்கிர புதனும், ராகுவும் நிற்க, ராசிநாதன் செவ்வாய், ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்று விருச்சிகத்தில் நிற்கும் சுக்கிரனைப் பார்த்திடவும்,ராசிக்கு வீரிய தானத்தில் விரியயாதிபதி குரு நின்று, துலாத்தைப் பார்வையிட்டு சனி சர்ப்ப தோஷத்தை முறிக்கத் துவங்கும். இக்காலத்தில் சர்ப்பங்களின் அனுக்கிரகத்தாலும், குருவின் அருள்பார்வையாலும், பருத்தி புடவையாய்க் காய்த்தது போல உங்களுக்கு தொடர்ச்சியாய் ராஜயோகங்கள் நேரடியாகவும் மறைவுத் தானாதிபதிகளாலும் கிடைக்கப்பெற்று சனியின் பாதிப்பால், கஷ்டம்-நஷ்டம், இழப்பு, இழிவு சோகம் ஏதுமின்றி சனியின் இரும்புப் பிடிலிருந்து நழுவித் தப்பித்துக்கொள்வீர்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் மிகுந்து திரளான செல்வத்தைப் பெற்று கடன் உபாதைகள் , அவச் சொல்லிலிருந்து மீண்டு, நிமிர்ந்து செருக்குடன் திகழ்வீர்கள். சில கிரக மாறுதல்கள் தொடர்ந்து ராஜயோகத்தைஉங்களுக்கு வாரி வழங்கும். இதனால், பணியில் ஏற்றம் அடைவதோடு, வீடு வாசல், வாகனம் என்று செலவத்தைத் திரட்டுவீர்கள். நிரந்தர செல்வந்தராகவும் ஆவீர்கள். நினத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு செல்வத்தை அடைவீர்கள். பணியாளர்களுக்கு பணிஉயர்வு, ப்ரமோஷன் எல்லாம் கிடைக்கும். நாள்பட்ட, தடைப்பட்ட திருமணங்கள் கிடுகிடுவென நடந்தேறும். பிரச்சினைகள் எளிதில் நீங்கும். சக தொழிலாளர்கள், பார்ட்னரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். சுபகாரிய விஷேஷங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். மொத்தத்தில் மேஷ ராசிக்கரர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் பாதிப்புகள் நேரிடினும், அதனின்று மீள்வதற்கு கிரகங்கள் குறிப்பாக ராகு கேதுக்கள் அனுசரணையாக செயல்படுவதால், சனியின் தாக்கம் தற்காலிக பாதிப்பாக இருக்குமேயன்றி, பெரிதாக அமையாது.

பரிகாரம்:

சனிக்குரிய தெய்வங்களான

(1.)லட்சுமி தாயாரைஅவரவர் வசதிக்கேற்ப தொழுது பணிந்து எழுந்திட சனிப்பீடை- தோஷம் விலகி நிற்கும

.(2), திருப்பதியில் எழுந்தருளியுள்ள பத்மாவதித் தாயார்;

(3) அரசன் கோவிலிலுள்ள சுந்தர மகா லட்சுமி;

(4). அரியலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலிலுள்ள வீர நாராயணப் பெருமாள் கோவிலில் (குருவாலப்பர்கோவில்) எழுந்தருளியிருக்கும், மரகதவல்லித் தாயார்;

(5). மரகதாம்பாள் உடனாய வரமூர்தீஸ்வரர் கோவில்;

(6). அரியத் துறை( கவரப்பேட்டை) அல்லது சோளிங்கர் ஆஞ்சநேயர்,

(7). திருக்கச்சி பெருந்தேவித் தாயார் தேவராஜப் பெருமாள் ;

(8). கஷ்டம் நீக்கிய பைரவர் திருப்பாச்சேத்தி ,மானாமதுரைவட்டம்,ஈரோடு,

(9). கொடுமுடிநாயகி உடனாய கொடுமுடி ஈஸ்வரர் மற்றும் திருக்குறுங்குடி( நான்குநேரி)

(10). குறுங்குடிவல்லி தாயார் உடனாய நம்பிராஜ பெருமாளுக்கு கைங்கரியம் செய்யும் நிலையில் ஈசனான பக்கம் நின்றார், (11). அனிலேஸ்வரருக்கும் க்ஷேத்திர பாலரான கால பைரவருக்கும்

உரிய அர்ச்சனைகளை செய்து மகிழ்வித்திட சனிபீடை விலகும்.

இது மட்டுமின்றி, சனிக்கிழமைதோறும், சனீஸ்வரனுக்கு விளக்கு போடுதல், குச்சானூர், திருநள்ளாறு முதலிய சனீஸ்வர ஸ்தலங்களுக்கு சென்று வருதல் சனீஸ்வனுக்குரிய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தல் முதலிய அனைத்து பரிகாரங்களையும் விடாது செய்து வந்தால், சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

http://www.moonramkonam.com/2011/07/sani-peyarchi-2011-2012-palan-rasi/#.ToGE2u53cvU.facebook

Link to comment
Share on other sites

rishaba-rasi1.jpg

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் அதாவது துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிரார். இந்த ஆறாமிடத்து சனி பகவான் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகிறார். பல ஆதாயங்கள் கிடைக்கும் நேரமிது.

இந்த சனிப் பெயர்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு தனது பார்வையால், 3, 8, 12 ஆகிய இடங்களைப் பார்வை செய்து அதற்குரிய பலன்களை வழங்குகிறார். இந்தக் காலத்தில் உங்களுடைய எதிரிகள் யாவரும் மறைவார்கள்; அல்லது சரணடைவார்கள். உங்களுடைய பழைய கடன்கள் யாவும் நல்ல முறையில் திரும்பிக் கிடைக்கும். உங்களுடைய புதிய கடன்கள் நல்ல முறையில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கையில் பணம் சரளமாக புழக்கத்தில் இருக்கும்.

முதற்கண் ,உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதனால் நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமாகிவிடும். உங்கள் மனைவி, நண்பர்கள் வகை , மற்றும் கூட்டுத் தொழில் விரயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வம்பு வழக்குகள், கோர்ட், வழக்குகள் நல்ல தீர்வுக்கு வரும். குடும்பத்தில் நிலவி வந்த குதர்க்கமான நிலை மாறி, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறையும். நோய் நொடிகள் இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள். உறவினர்கள் பகை நீங்கி நெருங்கி வந்து இயல்பாகப் பழகுவார்கள்.

போட்டி, பொறாமை, மறைமுகமான எதிர்ப்பு, வம்பு, வழக்கு போன்றவற்றையெல்லாம் பலத்துடன் முறியடிப்பீர்கள். புதிய நண்பர்களிடமிருந்து நல்ல உதவிகள் கிட்டும். வறுமை, சிக்கல், சிரமம் போன்றவற்றை விரட்டியடித்துவிட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

சனி உழைப்புக் கிரகம். அது உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் உழைப்பு வீண் போகாது. எல்லாவற்றிலும் நல்ல பலன் கிடைக்கும். வேலை கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு, விரும்பிய இட மாற்றம், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு முதலியவற்றை ஒருசேரக் கிடைக்கும் . புதிய தொழில் அல்லது வியாரம் செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான யோகம் கூடி வரும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய முயற்சிகளில் முன்னைவிட அதிகத் தெளிவும் உறுதியும் காணப்படும். ஆக்கபூர்வமான காரியங்களை எல்லாம் ஊக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். கடமைகளையும் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை படிப்படியாக உயரும். கடன்கள் கட்டுக்கடங்கும். வீடு, வாசல், தோட்டம், துரவு வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் வந்து சேரும். வாகன வசதியும் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்கள் மதிப்பு உயரும். பலவகையிலும் திரண்ட செல்வத்தை அடைந்து உலகம் சுற்றும் வாலிபனாக சுகபோக ஆடம்பர வாழ்க்கையை அடைந்து நட்சத்திர ஓட்டல்களில் ஓய்வெடுத்துக்கொண்டும், சொர்கலோகத்தில் சஞ்சரிப்பதுபோல மகிழும் நேரமிது.

உங்கள் குழந்தைகள் நலனிலும் தந்தையின் உடல்நிலையிலும் கவனம் தேவை.

8.11.12. முதல் 4.11.2013 வரையிலான காலகட்டத்தில், குரு ரிஷபத்திற்கு பெயர்ந்து, சர்ப்பத்தின் பிடியில் சிக்கி, தோஷத்துக்கு ஆளாகினும், சர்ப்பங்கள் சுக்கிரனுக்கு கட்டுப்பட்டவர்களாவதால், நன்மைகளை மிகுந்து செய்யாவிடினும், அதிகமான கெடுபலன்களைத் தரார். இந்தக் காலக் கட்டத்தில் முழுமையான சர்ப்ப வளையத்துக்குள் சனி சிக்கி விடுவதால், கொஞ்சம் எச்சரிக்கை தேவை. இந்த காலக்கட்டத்தின் பிற்பகுதியில் வளரும் இளம் கலைஞர்கள் கலைத் துறையில் சாதனையாளராகத் திகழ்வார்கள். மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, சின்னத் திரையிலும் பிரகாசிப்பார்கள். பணம் காய்ச்சி மரமாக செல்வம் நிரம்பி வழியும். பொதுவாக அனைத்து தொழிலில் ஈடுபடுபவர்களும் ஜீவன மேன்மையை அடைவார்கள் . ராசிக்காரர்கள் கருமயோகத்தை தொடர்ந்து பெற்று மேன்மையடைவார்கள். எனினும் ஒரு சிலருக்கு வர்த்தகம், தொழில் மற்றும் பணியில் பிரச்சினைகள் தோன்றி, பெருத்த துயரை சந்திக்க நேரும். செய்யும் பணியில் குற்றங்குறைகள் தென்பட்டு மேலிடத்து அதிகாரிகளால், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அவமானத்திற்கும் ஆளாகக்கூடும். இதுவரை மனைவி மக்களுடன் மகிழ்ந்திருந்த நீங்கள் இப்போது, பெரிய குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும், ஆளாக நேரும். இந்தக் காலக்கட்ட பிற்பகுதியில், வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

சனி பகவானின் சஞ்சார பலத்தால் அவருடைய பார்வை பலம் சக்தி வாய்ந்தது. துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் தம்முடைய 3,7,10 ஆகிய பார்வைகளால், உங்களுடைய அஷ்டம ஸ்தானம், விரய ஸ்தானம், தைரிய ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் அஷ்டம ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமாகிவிடும்.

சனி பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுடைய உழைப்பை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. உங்கள் உழைப்பு உங்களுக்கு நல்ல ஆதாயத்தைக் கொடுக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமான போக்கு காணப்படும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும்.

சனி பகவான் ஏழாம் பார்வையாக உங்களுடைய விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால், செலவுகள் கட்டுக்கடங்கி நிற்கும். அப்படியே செலவானாலும், அது பயனுள்ள செலவாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், எலெக்ட் ரானிக் பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை வாங்குவீர்கள். பொன்னும் பொருளும் சேரும். வீடும் நிலமும் வாங்கக்கூடும்.

சனி பகவான் பத்தாம் பார்வையாக உங்கள் தைரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்கள் உள்ளத்தில் ஊக்கமும் உறுதியும் உண்டாகி உங்களை எழுச்சியுடன் இயங்க வைக்கும். முயற்சியின் வேகம் மும்முரப்படும். உழைக்கும் சக்தி உங்களை தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பதால், மேலும் மேலும் உழைத்து சாதனை புரிவீர்கள்.

வறுமையும் சிறுமையும் வாட்டங்களும் பறந்து போகும். வசதியும் வாய்ப்புகளும் பெருகி வாழ்க்கையில் வளம் மிகுந்து நிற்கும். சுப காரியச் சுபிட்சங்கள் அனைத்தும் எளிதாகக் கைகூடும். தள்ளிக்கொண்டே போகும் திருமணப் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் ஏற்படும். புத்திர புத்திரிகளுக்கும் இனிமேல் அபிவிருத்தி உண்டு. போட்டிகளும் எதிர்ப்புகளும் முன்வரமுடியாமல் முடங்கிப் போகும். கடமைகளையும் காரியங்களையும் சீராகச் செய்து முடிக்க முடியும்.

சனி பகவான் கீழே குறிப்பிட்டுள்ள தருணங்களில் மூன்று முறை வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார். அந்தக் காலக் கட்டத்தின் சிறப்புப் பலன்கள் தரப்பட்டிருக்கின்றன.:

1. 9.2.12.முதல், 24.6.12வரையில் 4 மாதம், 15 நாட்கள்(சனி வக்கரம்) :

இந்தக் காலகட்டத்தில் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. நிலம், வீடு, வாகனம் வாங்குவது, விற்பதை தள்ளீப் போடவும். காரியத் தடைகள் ஏற்படலாம். சுற்றத்தாரிடம் கவனமாக உறவாடவும். பயணங்களைத் தவிர்க்கவும் அல்லது தள்ளிப் போடவும்.

2. 16.2.2013 முதல் 12.7.13 வரையில் 4 மாதம் 26 நாட்கள்( சனி வக்கிரம்):

இந்தக் காலக் கட்டத்தில் நல்ல அற்புதமான பலன்களாக நிகழும். எதிரிகள் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். வசூலாகாத பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். புதிய கடன்கள் அனைத்தும் நன்மையைத் தரும். நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உடல் நலம் சிறப்படையும். பங்காளித் தகறாறுகள் நல்ல முறையில் தீர்வடையும்.

3. 3.3. 2014 முதல்,23.7.14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்( சனி வக்கிரம் ):

இந்தக் காலத்தில் 19.6.2014 வரையில் வாக்கு வன்மை ஏற்படும். பணம் வரவு இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் உண்டாகும். கல்வி சிறப்படையும். குடும்பத்தில் கணவன் -மனைவிக்கிடையே அன்னியோன்னியம் ஏற்படும். செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் கூடும். சொல்வாக்கும் சிறப்படையும்.

இந்தக் காலத்தில் கடைசி 23.7. 14 வரையில் எதிலும் காரியத் தடைகள் ஏற்படும். முயற்சிகள் பலனடையாது. தோல்விகள் ஏற்படும். வேலைக்காரர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். சகோதரர்களிடம் வீண் சண்டைகள் வரும். தைர்யம், தன்னம்பிக்கை குறையும். பொன்னாபரணங்கள் வாங்குவதிலும் விரயம் ஏற்படும். உத்தியோகம், இடமாற்றம் போன்றவைகளால் வருத்தம் ஏற்படும்.

எந்த காரியத்தை எடுத்தாலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால், அமைதியோடு வாழலாம். இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதே. வக்கிர காலங்களைத் தவிர மீதி காலங்கள் சிறப்பான பலன்களையே தரும்.

பரிகாரம்:

1. காளிங்க நர்த்தனனை போற்றித் துதித்து வெண்ணெய், பால், தயிர் சாற்றி மகிழ்வித்திட நற்பலன் கூடும்.

2. தன்வந்திரி மகாமந்திர ஜப ஹோமம், மிருத்துஞ்ஜயஹோமம் போன்றவைகளை உரிய முறையில் வேத மந்திரங்களை ஓதும் மறையவர்களை வைத்து, உரிய பரிகாரங்களை செய்துகொள்ளவும்.

3. ஈரோட்டில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வணங்கி வரவும்.

இவை தவிர சனிபகவானுக்குரிய வழிபாடுகளை விடாமல் செய்து வரவும். பரிகார ஸ்தலங்காளான சனீஸ்வரன் ஆலயங்களைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே விரிவாகக் கூறியிருக்கிறோம். குச்சானூர், திருநள்ளாறு முதலிய ஸ்தலங்களுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று வாருங்கள். அனைத்திலும் சுபம் காணலாம். வாழ்க வளமுடன்.!

மிதுனம்

mithunam-rasi.jpg

இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது ராசிக்கு ஐந்தாமிடத்தில் பிரவேசிக்கப் போகிறார். இவ்வாறு ராசி மாறி வரும் சனிபகவான், முன்போல கடுமையான பலன்களைக் கொடுக்க மாட்டார்.ஓரளவுக்கு நற்பலன்களையே கொடுப்பார். தற்போதுள்ள சனிப் பெயர்ச்சியில் உங்களுடைய பொருளாதார நிலையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். நகை நட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்க முடியும். அது மட்டுமல்ல. வீடு மனை வாங்கவோ அல்லது சொந்தமாக வீடு கட்டவோ கூட முடியும். இருக்கும் இடத்தைப் பழுது பார்த்து வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளவும் முடியும்.

சுகஸ்தானமான நான்காம் இடத்திலிருந்து சனி இடம் பெயர்வதால், உங்களுடைய ஆரோக்கியத்தில் சொல்லத் தகுந்த அளவு முன்னேற்றம் உண்டாகும். அலுப்பு சலிப்பு அசௌகரியங்கள் நீங்கும். வேளாவேளைக்கு சாப்பிட முடியும். தளர்வடையாமல் தொடர்ந்து உழைக்க முடியும். நோய்கள் வந்தாலும் உடனுக்குடன் குணமடையும்.

நான்காம் இடம் என்பது மாத்ரு ஸ்தானம் ஆனதால், அங்கிருந்து சனி விலகிவிட்டதால், உங்கள் தாயாரின் உடல்நிலையில் அபிவிருத்தி ஏற்படும். மருத்துவ செலவு குறையும் உங்கள் தந்தையார் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அவ்ருடைய வேலைச் சுமைகள் குறையும். தந்தையாரின் தொழில் மற்றும் சமூக அந்தஸ்து இவை உயரும். அவருடைய முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக இருந்து வந்த தடைகள் விலகும் .

உங்கள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் இதுவரை நீங்கள் வருமானத்துக்கும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது . அப்படிப்பட்ட அதிகப்படியான வேலைப்பளு இப்போது குறையும். இதுவரை இருந்து வந்த அதிகமான உழைப்பு சற்று குறையும். அங்கேயும் இங்கேயும் அலைமோதித் திரிதல், அலைந்து அலைந்து பயனற்றுப் போதல், எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்காமல் போதல், நெருங்கிப் பழகுபவர்களே நம்பிக்கை துரோகம் செய்தல் போன்றவை இனி நடைபெறாது. பல அவசியமான திருப்பங்களுக்கு அடைப்பாக இருந்த பல வழிகள் திறந்துகொள்ளும். கடுமையான உபத்திரவங்களும் காலதாமதங்களும் இனி குறையும்.

ஈனத்தானதிற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கும், காரகம் வகிக்கும் சனீஸ்வரர் , ராசிக்கு பஞ்சமத்தில், உச்ச நிலையில் துலாத்தில் பெயர்ச்சியாகி , ராசிக்குரிய களத்திர ஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் தன் குடும்ப வீட்டையும் பார்வையிடுகிறார். இதனால், ராசிநாதர்களின் பாக்கிய இனங்கள் பெருகி தனம் , கீர்த்தி, புகழ், பெருமை சந்தான விருத்தி, , புதிய சொத்துக்களை அடைந்து ஜீவன வகைகளை பெருக்கி, சுகமான வளமான வாழ்க்கையை அடையப் போகிறீர்கள். வர்த்தகர்கள், முதலீட்டு ஆதாயங்களை அடைவர். அரசு சலுகைகளையும், , மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பையும், நீதிமன்ற விவகாரங்களில் சாதகமான தீர்ப்பையும், எதிர்பார்க்கலாம். தன கீர்த்தியடைந்து வாழ்க்கை வளங்களைப் பெருக்கிக்கொள்ளும் நேரமிது. தன்னுடைய மகன், மகள் திருமணம் மற்றும், பன்னாட்டுக் கல்வி போன்றவற்றை திறம்பட நிறைவேற்றி வைத்து ராசிக்காரர்கள் இனிமை காண்பார்கள். இறையருளால், இழப்பு, நஷ்டம், கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு கரையேறி விடுவீர்கள்.

சனி பகவானின் சஞ்சார பலத்தைவிட அவருடைய பார்வை பலம் மிகவும் சக்தி வாய்ந்தது. துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவன், தன்னுடைய 3,7, 10 ஆகிய பார்வைகளால், உங்களுடைய களத்திர ஸ்தனம், லாப ஸ்தானம், குடும்ப ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இந்தப் பார்வைகள் கெட்ட பார்வைகள் என்பதால், உங்களுக்கு பார்வைகள் நற்பலன்களைத் தரப்போவதில்லை. சனி பகவானின் மூன்றாம் பார்வை, உங்களுடைய ஏழாமிடத்தை பார்வையிடுவதால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் / மனைவியின் உடல்நலம் பாதிக்கப்படும். வேலை காரணமாகச் சிலகாலம் பிரிந்திருக்க நேரலாம். திருமண வயதில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களுக்கு திருமணமாவதில் கால தமதம் ஏற்படலாம். அல்லது நிச்சயமான திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படலாம். சனி பகவானின் ஏழாம் பார்வை, பதினோராம் இடமான லாபஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய ஆதார வரவுகள் தாமதப்படும் அல்லது தடைப்படும். கைநிறைய ஆதாயம் கிடைக்கும் என்று காத்திருப்பீர்களானால், எதுவுமே கிடைக்காமல், உங்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். பதினோராம் இடம் மூத்த சகோதரர்களின் இடம் என்றும் குறிக்கப்படுவதால், அண்ணன், அக்கா போன்ற மூத்த சகோதரர்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். அவர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கவேண்டிய அன்பும் ஆதரவும் தற்காலிகமாகத் தடைப்படும். அவர்களால், வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும். சனி பகவானின் பத்தாம் பார்வை இரண்டாமிடமான குடும்பஸ்தானத்தில் பதிவதால், பண வரவு பாதிக்கப்படும். வரவேண்டிய பணம் நிறைய இருந்தாலும், கைக்கு வந்து சேரும் பணம் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது. கொடுகல்- வாங்கலில் குளறுபடிகள், குறைபாடுகள், கோபதாபங்கள் போன்றவை இருக்கும். சில சமயங்களில் உங்கள் நாணயத்தைக் காப்பாற்ற முடியாமல் போகும். வேறு சில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்திலும் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் தலை தூக்கும்.

இனி இந்த சனிப் பெயர்ச்சியில் மூன்றுமுறை நிகழப்போகும் சனி பகவானின் வக்கிர சஞ்சாரங்களைப் பார்ப்போம்:

( 1) 9.2.12 முதல், 24.6.12.வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:

இந்தக் காலத்தில் சனி முதல்முறையாக வக்கிர சஞ்சாரத்தை மேற்கொள்ளப் போகிறார். இப்போது வருமானம் சிறப்பாக இருக்கும். அதைப் பெருக்கிக்கொள்ளவும் நல்ல வாய்ப்புகள் உருவாகும். ஆனால், அதே சமயம் செலவுகள் கடுமையாக ஏற்படும். நீங்களும் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். ஆனால், உங்கள் முயற்சி தோல்வியடையும். நீங்கள் எந்தக் காரியத்தையும் விரும்பும் வகையில் செய்யமுடியாது. சில காரியங்கள் எதிர்பாராத வகையில் திசை மாறிப் போகும். வெளிவட்டாரத்தில் உங்களுக்குச் சாதகமான போக்கு காணப்படும். முக்கியமான மனிதர்களை அவசரமாக சந்தித்துப் பேச நினைப்பீர்கள். ஆனால் முடியாது. நாலைந்து முறை அலைந்த பிறகே அவர்களைச் சந்திக்க முடியும். அப்படியே சந்தித்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் உதவி தாமதமாகத்தான் கிட்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்பட்டாலும், எதிர்பார்க்கும் லாபம் கிட்டாது. உத்தியோகம் பார்ப்பவர்கள் கடினமாக உழைத்தாலும், மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க முடியாது. கலைஞர்களுக்கு புதிய தொடர்புகளால், வருமானம் பெருகும். ஆனால், அதைவிட அதிகமாகச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கிக்கொண்டே இருக்கும். குடும்பச் செலவைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். இந்தக் காலத்தில் நிலம், வீடு,வாகனம் முதலியவற்றை வாங்குவது, அல்லது விற்பதில் கவனம் தேவை. அந்த வேலைகளை தள்ளிப்போடுவது நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வயிற்றுப் பிரச்சினைகள், அஜீரணக் கோளாறுகள் தோன்றலாம். பிரயாணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

(2) 16.2.13. முதல் 12.7.13.வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இந்தக் காலக் கட்டத்தில் சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிரமடைகிறார். இந்தக் காலத்தில் உங்கள் கைக்கு பணம் வந்த்தும் பறந்தோடிவிடும். செலவுகள் ஒருமடங்கிற்கு இரு மடங்காக வரும். வருமானம் ஒரு வழியில் அல்லது இரு வழியில் வருகிறது என்றாலும், செலவுகள் பல வழிகளில் வருகிறது. இந்தக் காரியத்திற்கு இன்றைக்கு இவ்வளவுதான் செலவழிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் செல்லுபடியாகாது. எதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையெல்லாம் உங்களால் ஊகிக்கவே முடியாது. இதில் ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால், எல்லா வகையான செலவுகளையும் சமாளிக்கும் அளவுக்கு எப்படியாவது வருமானம் வந்து விடும் என்பதுதான்.

இந்தக் காலத்தில் பொது சேவையில் கௌரவக் குறைவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். பூர்வீக சொத்துக்களில் கவனம் தேவை. உய்ர் அதிகாரிகளிடமும் உடன் பணி புரிபவர்களிடமும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக்கொள்ளவும். குழந்தைகள் வழியில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் கைக்கு வராமல், இழுபறியாக்கும்.

காலில் ஏதாவது இடர்ப்பாடுகள் தோன்றி மறையும். சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படும். கடுமையான உழைப்பு, அதிகப்படியான அலைச்சல், இவை உடலில் அழற்சியை ஏற்படுத்தும். இருக்கிற வீட்டை புதுப்பித்தல், புதிய மனை வாங்குதல், புது வீடு கட்டுதல், போன்றவற்றிற்கு உங்களால் பணம் புரட்ட முடியும். அதே சமயம் மறு பக்கம் கடன்களும் தொல்லை கொடுக்கும்.

(3). 3.3.2014 முதல்23.7.14. வரையில் 4 மாதம் 20 நாட்கள்:

இது மூன்றாவது முறையாக சனி வக்கிர சஞ்சாரம் செய்யும் காலமாகும். இந்தக் காலக் கட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், பொறுப்பு, கடமை ஆகியவற்றில், குறை, தவறு ஏற்படும். உங்களுடைய குறியும் இலக்கும் அடிக்கடி தவறிப் போகும். நல்லது கெட்டது புரியாத குழப்பம் ஏற்படும். சாண் ஏறினால், முழம் சறுக்கும். உங்களுடைய முன்னேற்றமும் முடக்கமாகும். அபிவிருத்திகளைக் காண்பது அரிதாகிப் போகும். நிலையில்லாத அலை மோதல்கள் இக்கட்டான விவகாரங்கள் போன்றவற்றால், வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும். கணிசமான தொகை ஒன்றை எதிர்பார்த்திருப்பீர்கள். அது கைக்கு வராது. தடங்கல்களும் குறுக்கிடுகளும் ஏற்படுவதால், வட்டிக்குக் கடன் வாங்கி சில அவசர செலவுகளை சமாளிக்க வேண்டி வரும். பற்றாக்குறைப் பிரச்சினை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். கடுமையான தட்டுப்பாடுகளும் அவசியமான தேவைகளும் கழுத்தை நெறிக்கும்போது, மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணம், குடும்ப நிர்வாகம் சம்பந்தமாக கணவன் -மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பிள்ளைகளின் ஆசைகளையும் தேவைகளையும்கூட உங்களால் உடனுக்குடன் நிறைவேற்ற முடியாது. அவர்களால் மருத்துவச் செலவுகளும் மற்ற விரயங்களும் ஏற்படும். இந்தக் காலத்தில் உடல் நலனிலும் மன நலனிலும் கவனமாக இருக்கவேண்டும். கௌரவம், அந்தஸ்து, மரியாதை ஆகியவைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் நன்மை ஏற்படும். பண வரவுகள் நன்மையைத் தரும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்:

1. சனியின் குருவான பைரவருக்கு, அஷ்டமி திதியில் ஹோமம் மற்றும் பூஜைகளை மேற்கொண்டு, சாந்தி செய்துகொள்வது நல்லது.

2. குடும்பப் பெண்கள் அஷ்ட லட்சுமிகளும் கூடிய உருவப் படத்தை வைத்து, விளக்கேற்றி, காலை 6.00 மணியளவிலும், நவக்கிரக மாக்கோலமிட்டு, துளசி மற்றும் முல்லை, நந்தியாவட்டைசெண்பக பூக்களால், லக்ஷ்மி அஷ்டோத்ரத்தைப் பாராயணம் செய்து பால் பாயசம் நைவேத்தியம் செய்வது நல்லது.

3.இவை தவிர சனிபகவானுக்குரிய வழிபாட்டு ஸ்தலங்களான குச்சானூர், திருநள்ளாறு முதலிய தலங்களுக்குச் சென்று உரிய வழிபாடுகளை முறைப்படி செய்து வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.

4. சனிக்கிழமைதோறும், காக்கைக்கு அன்னமிடல், நவக்கிரக கோவிலுக்குச் சென்று சனீஸ்வரனுக்கு எள்ளுதீபம் ஏற்றுதல், முதலியவை தொல்லைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும் . வாழ்க வளமுடன்!

Link to comment
Share on other sites

கடகம்

kadaga-rasi1.jpg

களத்திர ஈன ஸ்தானாதிபதியான சனீஸ்வர பகவான், சுகஸ்தானத்தில் உச்ச நிலையில் பெயர்ந்து, ஜீவனத்தில் நிற்கும் வக்கிர குருவை பார்க்கவும், குருவும் சனியை மறுபார்வை செய்யவும், அர்த்தாஷ்டம சனியாய் செயல்படுகிறார். மேலும் தன் பார்வையால், சத்ரு ஸ்தானத்தையும் ஜென்ம ராசியையும் பார்வையிடுகிறார். இதனால், உங்களுக்கு சனியினால் அதிகமாக நன்மைகள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வீண் விரயங்களும் தண்டச் செலவுகளும் ஏற்படும். வசதி வாய்ப்புகள் குறையும். பெற்றோர்களின் சொத்துக்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். தாயின் உடல்நலம் கெடும். உயர்கல்வி பெறுவதில் தடை ஏற்படும். ஏதேனும் சொத்துகள் வாங்கினாலும், அதை விற்பதிலும் வாங்குவதிலும் இன்னல்கள் வரும். வார்த்தைகளில் தெளிவும் இருக்காது. வார்த்தைகளே வம்புச் சண்டைக்கு வழி வகுக்கும். பிறர் விரோதங்கள் தேவையில்லாமல் வந்து சேரும்.

உங்களுடைய சுக சௌகரியங்கள் குறையும். இரவில் அதிக நேரம் கண் விழித்து வேலைகளை முடிக்க வேண்டியிருக்கும். சிறு நோய்கள் அடிக்கடி ஏற்பட்டு தொல்லை கொடுக்கும். வெயிலில் அலைந்து திரிந்தும் பிரயோஜனங்கள் எளிதாக வராது. ஊக்கமும் உற்சாகமும் குறையும். நன்கு உடை உடுத்திக்கொள்ளவும் தோன்றாது. ஏதாவதொரு காரியம் செய்ய வேண்டியிருந்தால், அதை செய்து முடிக்க முடியுமா என்ற மலைப்பு தோன்றி பின்வாங்க வைக்கும். மறதி, மயக்கம், தயக்கம், குழப்பம், மந்தம், தடுமாற்றம், தேக்கம், அலுப்பு, சலிப்பு, அலட்சியம், அவனம்பிக்கை அசதி, அசௌகரியம் போன்றவையே வாழ்க்கையாகிவிட்டது போலிருக்கும். பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், கால்பிடிப்பு, மூட்டுவலி, சக்கரை நோய் போன்றவை தோன்றும். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சினைகள், அடிக்கடி வீடு மாற்றிக்கொண்டே இருத்தல், வீடு அல்லது மனை வாங்கும் முயற்சி தாமதப்படுதல், வீடுகட்டும் திட்டம் தள்ளிக்கொண்டே போதல், போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் நிலவும். உங்கள் பொறுமையால் மட்டுமே சமாளிக்க முடியும்.

குழந்தைகளினால், வீண் விரயச் செலவுகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் சிக்கல்கள் உண்டாகும்.

திருமணங்களைத் தள்ளிப் போடவும். வம்பு வழக்குகள் கோர்ட்டுக்குப் போனாலும் தீராது. கோர்ட் வரை செல்வதை தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலம் கவனிக்கப்படவேண்டியதாகிறது. வண்டி வாகனங்களில் கவனம் தேவை.

உங்களுடைய உடல்நலத்திலும், மன நலத்திலும் கவனம் தேவை. உங்களுடைய அந்தஸ்து, கௌரவ பாதிப்புகள் ஏற்படலாம். கவனம் தேவை. சகோதர வழியில் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். தன்னம்பிக்கையும் தைரியமும் குறையாமல் இருப்பது மிகமிக அவசியம்.

இனி, சனி பகவானின் பார்வை பலன்களைப் பார்க்கலாம். சனி பகவானுக்கு அவருடைய சஞ்சார பலத்தைவிட அவருடைய பார்வை பலம் பெற்று விளங்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தபடி, துலா ராசியிலிருக்கும் சனி, தன்னுடைய 3, 7, 10 ஆகிய பார்வைகளினால், உங்கள் ராசிக்கு, 1,6, 10ம் இடங்களைப் பார்க்கிறார். 1-ம் இடத்துப் பார்வையினால் உங்கள் உடல்நிலையில் கோளாறுகள் வரலாம். ஆயுதத்தினாலும், நெருப்பினாலும், விபத்தினாலும் உயிருக்கு ஆபத்துகள் வரலாம். கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர்க்கவும். வீண் அலைச்சல்கள் தவிர்க்க முடியாதவை. உங்களுடைய பகைவர்கள் சிறுசிறு தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்காது. மாதத்திற்கு இரு முறையாவது மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கும். மருத்துவச் செலவுக்கு என்று தனியாக பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். நெருக்கடியைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டியிருக்கும். ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது.

சனி பகவானின் ஏழாம் பார்வை ஜீவன காரிய ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானம் பலவழியிலும் பாதிக்கப்படும். அது மட்டுமில்லாமல், உங்களுடைய உழைப்பும் பாதிக்கப்படும். கை நிறயச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் புறப்பட ஆயத்தமாகும் உங்களை, திடீரென நோய் தாக்கி படுக்கையில் தள்ளும். பல சமயம் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. மனம் சோர்ந்து போகும். எந்த ஒரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று இருக்காது. எல்லாமே இழுபறியாக இருக்கும். சின்னச் சின்ன காரியங்களைக்கூட செய்து முடிக்க முடியாது.

சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உங்கள் தன்னம்பிக்கை குறையும். சிறு பிரச்சினை இருந்தால்கூட அதை ஒருவர் உதவியுடன் முடிக்கலாமா என்று நினைப்பீர்கள். நீங்களே அதை முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்படாது. முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும் . தவறான முடிவெடுத்துவிட்டு தடுமாறுவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவரின் சொற்படி நடப்பீர்கள்.

பொதுவாக நீங்கள் செய்யும் தொழிலில் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரச்சினைகள் உருவாகலாம். உங்கள் வேலையாட்களினால், அதிகமான இடையூறுகளும் வருமானக் குறைவுகளும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் மனக் கஷ்டம் உருவாகலாம். காரியங்களில் தடை ஏற்படும். கௌரவத்துக்கு இழுக்கு வரலாம்.

இனி சனிபகவானின் வக்கிர சஞ்சாரங்களைப் பார்க்கலாம்: இந்த சனிப் பெயர்ச்சியில் மூன்று முறை சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்.

(1) 9.2.12 முதல் 24.6.12 வரையிலான 4 மாதம் 15 நாட்கள் ( சனி வக்கிரம் ):

பாபக் கிரகம் வக்கிர சஞ்சாரம் செய்யும்போது எச்சரிக்கை மிகமிக அவசியம். முன்னெச்சரிக்கையோடு இருந்தால், ஆபத்து வரும்போது தடுமாறிப்போக வேண்டியதில்லை. இந்தக் காலகட்டத்தில் பொறுப்புகள் பெருஞ்சுமையாகி உங்களைத் திணற வைக்கும். வருமானத்துக்கு ஆதாரமான அத்தனை விஷயங்களிலும் சிரமங்கள் இருக்கும். ஊக்கமும் உடல்நலமும் அவ்வப்போது பின்னடையும். பணத் தட்டுப்பாடுகளும் திடீர் செலவினங்களும் உண்டு. குடும்பத்தினரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். தொழில் செய்யும் இடத்தில் மனஸ்தாபம் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே பிணக்குகள் வரும். எந்த வேலையாக இருந்தாலும் தாமதமாகத்தான் செய்து முடிக்க முடியும். வக்கிர கதியில் பின்னோக்கிச் செல்லும் சனி பகவான், 18.5.12 அன்று சித்திரை நட்சத்திரம் கன்னி ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். அதனால் சற்று உற்சாகமான பலன்களைச் சந்திக்க நேரும். குறிப்பாக உங்களுடைய பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றமான பலன்களைக் காணமுடியும். நீங்கள் தேடிச் சென்றும் கிடைக்காத பணம் இப்போது உங்களைத் தானாகத் தேடி வரும். எல்லாவகையான செலவுகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். இழுத்துக்கொண்டே சென்ற வேலைகளை எளிதாக முடிக்க முடியும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளியூர்ப்பயணங்கள் ஆதாயத்தைத் தேடிக் கொடுக்கும்.

(2). 16.2.13 முதல் 12.7.13 வரையிலான 4 மாதம் 26 நாட்கள் (சனி வக்கிரம்):

இந்தக் காலக் கட்டத்தில் சனி இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில் தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் பொன்றவைகளைக் கையாளும்போது கவனம் தேவை. வீண் அலைச்சல்களைத் தடுக்க முடியாது. உயர் கல்வித் தடை ஏற்படும். கடமைகளையும் காரியங்களையும் செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் ஏதுவாக இருக்காது என்றாலும், வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வீட்டு வசதிகளும் குடும்ப சுபிட்சமும் அதிகரிக்கும். ஆனால், தாமதக் குறிக்கீடுகள், எந்த வேலையையும் விரைந்து செய்ய முடியாதபடியான தடங்கல்களை ஏற்படுத்தும். எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாத எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பொதுவான விரயங்கள், செலவினங்கள், சிரமங்கள் ஆகியவற்றுக்கு இடையிலும் வீடு, வாகனம், சொத்து, பத்து என்று வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். திடீரென்று பெரும் பணம் வந்து கடன் சுமைகளைக் குறைக்கவும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்த்ல் போட்டி பொறாமை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரித்துவிடாது. குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே அன்னியோன்னியம் உருவாகும். தாய்வழி உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறவினர்கள் மூலமாகவோ நல்ல உதவிகள் கிட்டும்.

(3). 3.3.14 முதல் 23.7.14வரையிலான 4 மாதம் 20 நாட்கள்( சனி வக்கிரம்):

இந்தக் காலத்தில் முதலில் 19.6.14 வரையில் வீண் விரயச் செலவுகள் ஏற்படலாம். ஆனால் உங்கள் முயற்சியின் பேரில் சுப விரயங்களாக மாற்றிக் கொள்ளலாம். உடல் நிலையில் ஏற்படும் கோளாறுகளையும் மருத்துவ ஆலோசனை மூலமாக மனநலத்தையும் உடல்நலத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம். புத்திசாலித்தனமாக நடந்துகொண்டால் மட்டுமே கௌரவம் அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம். 19.6.14க்குப் பிறகு உங்கள் உடல்நலனிலும் மன நலனிலும் கவனமாக இருந்துகொள்ளவும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, மரியாதை இவைகளுக்குப் பங்கம் ஏற்படலாம். இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எதற்கும் இரண்டு முடிவை எடுப்பீர்கள். அதில் எந்த முடிவை மேற்கொள்வது என்று குழம்பிவிட்டு கடைசியில் எதையுமே செய்யாமல் விட்டுவிடுவீர்கள். அடுத்த பிரச்சினைபற்றி சிந்திக்கத் தொடங்கிவிடுவீர்கள். பொருளாதார நிலை ஒரு அளவுக்கு சீராக இருந்தாலும், மன நிம்மதி குறையும். ஒரு தொகை கைக்கு வரும். ஆனால், அது முழுவதுமாகக் கரைந்தபிறகே அடுத்த தொகை சாவகாசமாகக் கைக்கு வரும். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்தபிறகே செய்ய வேண்டும். உங்களை சுற்றியிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால்தான், நினைத்ததை சாதித்து ஆதாயம் காணமுடியும். வீடு, நிலம் ஆகியவைகளை விற்றுவிட்டு புதிதாக வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். கூட்டுத் தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துக்கொண்டு சென்றால் மட்டுமே பிரச்சினையில்லாமல் சமாளிக்கலாம். குடும்பத்தில் உங்களையும் மீறிய அளவில் செலவுகள் மிக அதிகமாக ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனக் கசப்பு நீங்கும். சுபச் செலவு ஏற்படும்.

பொதுவாக நீங்கள் இந்த சனிப் பெயர்சிக் காலத்தில் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எதிலும் கவனமும் எச்சரிக்கையும் மிகமிக அவசியமாகிறது.

பரிகாரம்:

1. சனியின் குருவான பைரவரைப் போற்றி சரணடைந்து அஷ்டமி திதியில் உரிய பரிகாரங்களைச் செய்யவும்.

2. பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் சிவ பெருமானுக்கு காராம் பசுவின் பாலினால் அபிஷேகம் செய்யவும்.

3. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு எள் தீபமேற்றி இயன்ற அளவு தான தருமம் செய்க.

4. உங்கள் பிறந்த கிழமையில் அகதிகளுக்கு அன்னம் அளிக்கவும்.

5. சந்திர தரிசனம், பௌர்ணமி, பிரதோஷம், ஏகாதசி, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி காயத்ரி ஜெபம், நாக பஞ்சமி இதன் விரத வழிபாடுகளை உள்ளன்போடு செய்யவும்.

6. நான்கு திசை கணபதி ( நாகை ), ஸ்ரீவைகுண்டம் சனீஸ்வரர், திருக்கடையூர் அம்மன், அமிர்தகடையேஸ்வரர், யோக நரசிம்மர், கிருஷ்ணர், தேரெழுந்தூர், சதூர்கல பைரவர் திருவீச்சநள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர்-சிவகாசி காளி, விசாலாட்சி, சுடலேஸ்வரர், ஜாம்பவான், ஆகர்ஷண பைரவர் ஐந்து கடவுள்களும் ஒன்றாக இணைந்த விருதுநகர் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள் ஆலய பௌர்ணமி தரிசனம் இதன் ஆலயங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, திங்கள் கிழமைகளில் வழிபடுவது மிக உத்தமம்

சிம்மம்

simmam-rasi.jpg

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்துவந்த சனிபகவான் இப்போது நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியில் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த பெயர்ச்சியின் இரண்டரை ஆண்டு காலமும் உங்களுக்கு ஏற்றமானதாக இருக்கும். முதலாவதாக உங்கள் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். நோய் நொடிகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் குணமாகும். உள்ளத்திலும் ஊக்கமும் ஏற்பட்டு புதிய எழுச்சியுடன் காணப்படுவீர்கள். முயற்சியில் வேகமும் செயலில் தீவிரமும் கூடும். உழைக்கும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாவதால், கடினமாக உழைத்து பல சாதனைகளைப் புரிவீர்கள். வருமானத்துக்கு அதிகமான உழைப்பை அனைத்து செயல்களிலும் ஆர்வமாகக் காட்டுவீர்கள். உங்களுடைய உழைப்பை உபயோகமான வழியில் செலுத்த உங்கள் அறிவு ஒத்துழைக்கும். வளமை நிறைந்த பல வசதிகளும் வாய்ப்புகளும் வந்து சேரும். வறுமைப் பிடிகள் தளரும். சிறுமைகளும் வாட்டங்களும் நீங்கும். சுக போகங்களும், மகிழ்ச்சிகளும், சௌகரியங்களும் இனி ஒவ்வொன்றாக அபிவிருத்தி ஆகிக்கொண்டிருக்கும். போட்டிகளும் பொறாமைகளும் தலைதூக்க முடியாமல் தரையோடு தரையாக அமுங்கிப் போகும். வம்பு வழக்கு, பகை, விவகாரம் போன்றவை முறியடிக்கப்படும். கடமைகளையும் காரியங்களையும் சிறப்பாக நிறைவேற்றி உங்கள் முக்கியத்துவத்தை உணரச் செய்வீர்கள். பல சாதனைகள் புரிந்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் அமோகமாக நடைபெற்று ஏராளமான லாபம் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு பெறுவார்கள்.

கணவன் -மனைவிக்கிடையே நிலவிவந்த கருத்துவேற்றுமை நீங்கும். புத்திர புத்திரிகளுக்கும் அபிவிருத்திகள் ஏற்படும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்தக் காலக் கட்டத்தில் திருமணமாகும். அல்லது நிச்சயமாகும்.

இந்த சனிப் பெயர்ச்சியில் முக்கியமாக மூன்றாமிடத்துப் பலன்கள் நடைபெறும். செய்யும் காரியங்கள் யாவும் வெற்றியடையும். நோய்கள் குணமடையும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ளலாம். மதிப்பு, மரியாதை, கௌரவம் உண்டாகும். பணிக்கு புதிய பணியாட்கள் கிடைப்பார்கள். . தன்னம்பிக்கை, தைரியம் உண்டாகும். பங்காளிகள் ஒற்றுமை உண்டாகும்.

உங்கள் தாயின் நலனில் கவனம் தேவை. உயர் கல்வியில் வீடு, வாகனம், நிலம் வகையில் கவனம் தேவை. உங்கள் குழந்தைகளால், நன்மை உண்டாகும். தெய்வ அருள் உண்டாகும். பூர்வீக பலன்கள் நன்மையைத் தரும். உங்கள் தாய்மாமன் உடல்நலம் பாதிக்கப்படும். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். கவனம் தேவை. உங்கள் மனைவியின் தந்தை வகையில் பிரச்சினைகள் இருக்கும். அவருடைய உடல்நலம் பாதிப்படையும். போக்குவரத்துகளில் கவனம் தேவை. பதவி மாற்றம், இட மாற்றம் நன்மை உண்டாகும். மூத்த சகோதரர் வகையில் அனுசரணையாகப் போகவும்.

சனிபகவானின் பார்வை பலம்தான் அவரது சஞ்சார பலத்தைவிட சக்தி வாய்ந்தது என்று பலமுறை கூறியிருக்கிறோம். சனிபாகவான் தன்னுடைய 3,7, 10ம் பார்வயால், உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கிறார். இந்தப் பார்வை நல்ல பார்வை என்பதால், உங்களுக்கு யோக பலன்கள் அதிக அளவில் நடைபெறும்.

சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுடைய பூர்வ புண்ணீய ஸ்தானத்தில் பதிவதால், உங்கள் மறதி, மந்தம்., கவனக்குறைவு ஆகியவை நீங்கும். இனி எல்லாவற்றிலும் நல்ல முடிவு எடுப்பீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். தயக்கமில்லாமல், முன்னேறுவீர்கள். அலை பாயும் மனதை ஒரே இடத்தில் நிறுத்தி பலத்துடன் காட்சியளிப்பீர்கள். எதையும் உடனுக்குடன் செய்ய முடியும். மனதில் எப்போதும் நம்பிக்கை நிறைந்திருக்கும்.

சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால், ஆதாயமான வரவுகள் அதிகப்படும். வீடு, நிலம், தோட்டம்-துரவு ஆகியவற்றை வாங்கும் முயற்சி தீவிரப்படும். வேதனைகளும் சோதனைகளும் நீங்கி சாதனைகள் பல புரிந்து புகழ் பெறுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். வம்பு சண்டைக்கு வருபவர்கள் முறியடிக்கப்படுவார்கள். தான தருமங்கள் செய்வீர்கள். தைரியமும் தெம்பும் அதிகமாகும். தகப்பனாரின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சனி பகவானின் பத்தாமிடத்துப் பார்வை உங்கள் விரய ஸ்தானத்தில் விழுவதால், உங்கள் ஆரோக்கியமும் உங்கள் மனைவியின் ஆரோக்கியமும் பலப்படும். ஏமாற்றங்கள், இழப்புகள் என்பவை இல்லாமல், நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆதாயமும் தேடுவீர்கள். செலவுகளும் விரயங்களும் கட்டுப்படும். எல்லாவகையான செலவுகளையும் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். இரவில் குறுக்கீடு எதுவுமில்லாமல், நிம்மதியாகத் தூங்க முடியும்.

இனி சனி பகவானின் வக்கிர சஞ்சாரத்தைப் பற்றிக் காண்போம்:

(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதங்கள் 15 நாட்கள்:

இப்போது சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிட்டது. அதற்கான அறிகுறிகள் உங்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும். சிலர் வலிய வந்து உதவி செய்வார்கள். வேறு சிலர், உங்கள் நட்பை நாடி வருவார்கள். கையில் பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். கடன்களை எளிதில் தீர்த்து விடுவீர்கள். விலையுர்ந்த பொருட்கள், வீட்டுக்குத் தேவையான எலெக்ட்ரிக் பொருட்கள் போன்றவற்றை வாங்குவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு சாதகமான போக்கு காணப்படும். மிகவும் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்க முடியும். உங்கள் உழைப்பிற்கு எதிர்பார்ப்பதை விட அதிக ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த இது சரியான நேரம். உத்தியோகம் பார்ப்பவர்களின் நேர்மையும் திறமையும் மேலதிகாரிகளுக்குத் தெரியத் தொடங்கும். மாணவ மாணவிகள் விளையாட்டுகளிலும் வெற்றி பெற்று வருவார்கள். படிப்பிலும் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், குதர்க்கங்கள், கருத்து வேற்புபாடுகள் போன்றவை நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். உங்கள் உடல்நலம் தேறும். நோய்கள் அகலும். பயணங்கள் நன்மையைக் கொடுக்கும். 19.4.12க்குப் பிறகு 26.6.12 வரை கொஞ்சம் எதிர்மறையான பலன்களாக இருக்கும்.

(2). 16.2.13. முதல் 12.7.13 வரையிலான 4 மாதங்கள் 26 நாட்கள்:

இந்தக் கட்டத்தில் சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். நீங்கள் எடுக்கும் காரியங்கள் யாவும் சுலபமான வெற்றிகள் உண்டாக்கும். தங்க நகைகள் வாங்கலாம். உங்களிடம் பணி செய்யும் வேலையாட்களால் உபரியான வருமானம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் துவங்கலாம். சகோதரர்களால், மிகவும் நல்லது நடக்கும். முட்டுக்கட்டைகளாக எந்த விவகாரங்கள் குறுக்கிட்டாலும், அவற்றையெல்லாம் தாண்டிக்கொண்டு முன்னே செல்வீர்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களையும் அவசியமான கடமைகளையும் அடுத்தடுத்து செயல்படுத்திக்கொண்டு வருவீர்கள்.

உங்களுடைய பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்களை ஒழுங்குபடுத்திக்கொள்வீர்கள். கடன் சுமை பெரிதும் குறையும். ஆதாயங்கள் அதிகமாகக் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் இருக்கும் பழைய வீட்டை திருத்தம் செய்வார்கள்.

வருமானம் வரும் எந்த வேலையை நீங்கள் செய்தாலும் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம் வரும். பலவழிகளிலிருந்தும் பணம் வந்து சேரும். ஆடைகள், ஆபரணங்கள், ஆடம்பரப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், வசதியை அதிகப்படுத்தக்கூடிய சாதனங்கள், நவீனமான கருவிகள் புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வாங்குவீர்கள்.

(3) 3.3.14. முதல் 23.7.14 வரை யிலான 4 மாதங்கள் 20 நாட்கள்:

இப்போது சனி மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில் தொழில் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டாகும். காரியங்கள் யாவும் வெற்றியடையும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். உங்களின் நெருங்கிய உறவினர்களின் காரியங்கள் நல்லபடியாக முடிவையும். தீர்த்த யாத்திரை செல்லலாம். உடல்நலம் சிறப்படையும். வீடு.நிலம் வாகனம் வாங்கலாம். அல்லது புதுப்பித்துக்கொள்ளலாம். அடுத்ததாக சுப விரயசெலவுகள் உண்டாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும். உடல்நலம் சிறப்படையும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். இந்தக் காலத்தில் உங்களுடைய அறிவுக்கூர்மை, புத்தித் தெளிவு, தனிப்பட்ட திறமை போன்றவை அதிகரிக்கும். அற்புதமான பல சாதனைகளை உங்களால் செய்ய முடியும். புகழும் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். உயர்மட்ட மனிதர்கள் உங்களை நாடி வருவார்கள். உங்களுடைய சிந்தனைகளும் செயல்களும் சரியான பாதையில் செல்லும். நன்மைகளும் மேன்மைகளும் கிடைக்கும். எதையும் திறம்பட திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும். ஆடம்பரச் செலவுகளில் பணம் வேகமாகக் கரையும். செலவுகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள், கூட வேலை பார்ப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். தொழிலில் போட்டி பொறாமை ஏற்படும். குடும்பத்தில் மனைவியின் ஆர்ப்பாட்டம் பெரிதாக இருக்கும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். கலைஞர்களுக்கு வருமானம் சுமாராக இருக்கும். பெற்றொரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மறந்து விடாதீர்கள்.

பொதுவாக சனியின் மூன்றாமிடத்து சஞ்சாரம் உங்களுக்குப் பல வழியிலும் நன்மையாகவே இருக்கும்.

பரிகாரம்:

1. காக்கைக்கும், நாய்க்கும் சிவப்பு நிற பிராணிகளுக்கும், உணவு வைப்பது, ஏழை எளியவர்களுக்கு உணவோ மருத்துவ உதவிகளோ ஏதேனும் செய்வது நல்லது.

2. ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம், சத்ய நாராயண பூஜை , ஞாயிற்றுக் கிழமையில் வரக்கூடிய பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம், பௌர்ணமி பூஜை, பைரவர் வழிபாடு சிறந்தது.

3. ஜோதி பிள்ளையார் திருக்கருக்காவூர், திருநெல்வேலி, தாமிர நடராஜர், காந்திமதியம்மை, திருமோகூர் சக்கரத்தாழ்வார், சுதர்சன மூர்த்தி, சிம்ம வாகினியான மூகாம்பிகை சிம்மவாகன பைரவராகிய நாகை போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபடுவது மிக உத்தமம்.

இவை தவிர , குச்சானூர், திருநள்ளாறு, வேலூர் – திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏரிக்குப்பம் ஆகிய இடங்களில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரனின் திருத்தலங்களுக்குச் சென்று உரிய வழிபாடுகளைச் செய்வது நலம் பயக்கும்

கன்னி ராசி

kanni-rasi.jpg

இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ஏழரைச்சனியின் கடைசி இரண்டரையில் அடியெடுத்து வைக்கிறீர்கள். இதுவரை நடந்துவந்த ஜென்ம ராசியில் நீங்கள் பட்ட கஷ்டங்களும் , அனுபவித்த தொல்லைகளும் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். வெளியில் சொன்னது பாதி சொல்லாமல் விட்டது பாதி என்று மனதுக்குள் அடைத்து வைத்துப் புழுங்கியது கொஞ்சமா நஞ்சமா?. இப்போது வரப் போகும் சனிப் பெயர்ச்சி அந்த அளவுக்கு வாட்டி எடுக்காது என்றாலும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கலாம் என்பது போலவும் இருக்கும். இவ்வாறு ராசி மாறிவரும் சனி பகவானை முழுமனதுடன் வரவேற்க முடியாவிட்டாலும், ஓரளவு நிம்மதியுடன் வரவேற்கலாம். இதுவரை ஜென்ம ராசியிலிருந்த சனி பகவான் இனி பாதச்சனியாக சஞ்சரிக்கப் போகிறார். இது ஏழரைச் சனியின் மூன்றாவது பகுதியும் இறுதிப் பகுதியுமாகும்.

பொதுவாக சனி பகவான் விரயச் சனியாகவும், ஜென்ம சனியாகவும் சஞ்சரித்ததால் ஏற்பட்ட இழப்புகளை பாத சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் ஈடுசெய்து விடலாம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அது மட்டுமல்லாமல், சனி பகவான், விரயச் சனியாகவும், ஜென்ம சனியாகவும் சஞ்சரிக்கும் காலத்தில், ஒருவர் உருக்குலைந்துபோய்விடுகிறார். சனி பகவான் பாதச்சனியாக சஞ்சரிக்கும் காலத்தில், அவர் பழைய நிலையை அடைந்துவிடலாம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இந்த சமயத்தில் நீங்கள் செய்யவேண்டிய காரியங்களில் இதுவரை இருதுவந்த தடைகள், அலைச்சல், திரிச்சல்கள் எதுவும் இருக்காது.. எனவே எண்ணிய காரியங்களை எளிதாகச் செய்து முடிக்கலாம். மறதி, மந்தத்தனம், அவநம்பிக்கை, சந்தேகம் முதலியவை உங்களிடமிருந்து அறவே விடைபெற்றோடிவிடும். சங்கடம், சஞ்சலம், சோம்பல் இவை பறந்தோடிவிடும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய தோற்றத்திலும் சற்று பொலிவு ஏற்படும். சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள்.

தன்-குடும்ப- வாக்கு ஸ்தானமாகிய இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ‘ குடும்பச் சனி ‘ என்று குறிப்பிடப்படுவதும் உண்டு. பொருளாதார நிலையில் எப்போதும் பற்றாக்குறையே இருந்து வரும். பற்றாக்குறை பிரச்சினை, கொடுக்கல் வாங்கலில் குளறுபடிகள், கடுமையான பேச்சு வார்த்தைகள், வீணான வாக்குவாதங்கள், குடும்பத்தில் கோபதாபங்கள், ஏற்பட்டு குடும்ப நிம்மதி பறிபோகும். வீடு, மனை, தோட்டம். துரவு, வாங்குவதிலும் தடை ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது. நாணயம் தவறும். வீடு போன்ற சொத்துக்களை சீரமைப்பதில், சிரமம், பழுதுபார்ப்பதில் சிக்கல் போன்றவை ஏற்படும். மனைவியின் உடல்நலம் கெடும்.

இரண்டாமிடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால், சேர்த்துவைத்த பொருள்களையெல்லாம் இழக்கவேண்டிவரும். குடும்பத்தில் பிரச்சினை காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேற நேரிடும். உறவினர்களால், தொல்லையும் தொந்தரவும் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும். பொருள்கள் திருடு போகும். தன்னம்பிக்கை, தைரியம் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் தாயின் உடல் நலம், தந்தையின் உடல்நலம் சிறப்படையும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. குழந்தைகள் நலனில் அக்கறை தேவை. கல்வித் தடை ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. தாய்மாமன் வகையில் வம்பு வழக்குகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நண்பர்களிடம் பிணக்கு ஏற்படும். உங்கள் தொழிலுக்கு காரியத் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

இறைவழிபாடு மிகவும் அவசியம். இதுவரை இறை நம்பிக்கை இல்லாதவர்கள்கூட இப்போது ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

வீண் அலைச்சல்கள், வீண்செலவுகள் உண்டாகும். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டாகும். புதிய தொழிலில் தொழிலாளர்களின் மூலம் நடக்கும் காரியயங்கள் யாவும் பலிதமடையும். உங்களுக்கு தொழிலில் கிடைக்கும் லாபத்தில் வீடு, வாகனம் போன்றவைகளில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம். சகோதரர் வழியில் சுபவிரயம் நடக்கும். அதனால், பணத்தை சகோதரர் வழியில் செலவழிக்க வேண்டும்.

சனியின் சஞ்சார பலன்களைப் பார்த்தோம். இனி சனி பகவானின் பார்வை பலன்களைப் பார்க்கலாம். சனியின் 3,7,10-ம் பார்வைகள், உங்கள் ராசிக்கு 4, 8, 11-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். அதாவது உங்களுடைய மாத்ருபந்து ஸ்தானம், அட்டம ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கிறார். சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் மாத்ரு பந்துஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்கள் தாயாரின் ஆரோக்கியம் பாதிப்படையும். உங்களுக்கும் உங்கள் தாயாருக்குமிடையே அடிக்கடி கருத்துவேற்றுமை ஏற்படும். உறவினர்களிடம், சண்டைகள், மனக் கசப்புகள் ஏற்படும். உறவினர்களால் சில விரயங்களும் ஏற்படும். இந்த நான்காமிடம் உங்களுடைய சுக சௌகரிய ஸ்தானமாகவும் விளங்குவதால், உங்களுடைய சௌகரியங்கள் குறையும். உங்களைக் கவனித்துக்கொள்ள உங்களுக்கு நேரம் இருக்காது. அலைச்சல் காரணமாக நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. காரியத் தடைகள் ஏற்படலாம். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய அட்டம ஸ்தானத்தில் விழுவதால், உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் ரத்தக்காயம் ஏற்படலாம். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டால், வாக்குவாதம் செய்துகொண்டிருக்காமல், பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்துவிடுங்கள். இந்த நேரத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். கடன்பணம் திரும்பக் கிடைக்காது என்பதோடு, விரோதத்தையும் வளர்க்கும். போக்குவரத்துகள் எளிதாக இருக்காது. சில சிரமங்களை சந்திப்பீர்கள். வண்டி பழுது பார்த்தல், பராமரித்தல் போன்றவற்றிலும் சிரமங்கள் ஏற்படலாம். பயணங்களில் விபத்துகள் ஏற்படலாம். சனியின் பத்தாமிடத்துப் பார்வை உங்கள் லாப ஸ்தானமான பதினோராமிடத்தில் பதிவதால், உங்களுக்குக் கிடைக்கவேண்டிய ஆதாயம் தடைப்படும். கடினமாக உழைத்து கணிசமான லாபம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் ஆதாயமும் வந்து சேரும். ஆனால், முழுமையாக வந்து சேராது. அரைகுறையாக வந்துசேரும். மூத்த சகோதர சகோதரிகளும் இந்தப் பார்வையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுடைய ஆரோக்கியமும் சீராக இருக்காது. அவர்களுடைய அலுவல்களில் சிரமங்கள், ஏமாற்றங்கள் போன்றவை ஏற்படும். உங்களுக்குப் பதவி உயர்வும், வேண்டிய இடமாற்றமும் , வீடுமாற்றமும் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு, கௌரவம்,. புகழ், அந்தஸ்து கூடும்.

இனி சனி பகவானின் மூன்று வக்கிர சஞ்சாரங்களைப் பார்க்கலாம்:

(1): 9.2.2012 முதல் 24.6.2012 வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:

இந்தக் காலத்தில் 19.4. 2012. வரையில் வீண் விரயச் செலவுகள் அனைத்தும் சுப விரயச் செலவுகளாக நடக்கும். நீங்கள் எடுக்கும் செயல்கள் அனைத்தும், தடைகள், முடக்கம் இல்லாமல், வெற்றி பெறும். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். 19.4.12க்குப் பிறகு மேலே கூறப்பட்ட பலன்களுக்கு எதிர்மறையான பலன்களாக நடக்கும். கவனமாக இருந்துகொள்ளவும். இந்தக் காலக் கட்டத்தில், அவசர செலவுகள் , அவசிய செலவுகள், மருத்துவ செலவுகள், எதிர்பாராத செலவுகள் என்று பலவகையிலான செலவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல்களும் அலைக்கழிப்புகளும் அதிகமாகக் காணப்படும். எதிர்பாராமல் ஏற்படும் பிரயாணங்கள் ஏமாற்றத்தைத் தரும். விருப்பமில்லாத வகையில் இடமாற்றம் ஏற்படும். உங்களுக்குப் பொருளாதார நிலை திருப்திகரமாகத் தோன்றினாலும், அவசர செலவுகள் ஏற்படும்போது சமாளிக்க முடியாமல் திணறிப் போவீர்கள். கைக்கு நிறைய பணம் வருவதுபோல் தோன்றும். ஆனால், வராது. அதனால் மனச் சோர்வு ஏற்படும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் ஏதாவது தடை ஏற்படும். இரண்டு நாட்களில் செய்து முடிக்க வேண்டிய காரியத்தை இருபது நாட்களில் செய்து முடிப்பீர்கள். அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவீர்கள். சில சமயங்களில் காவல்நிலையம் வரை செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும். கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

தொழில், வியபாரத்தில், புதிதாக சில நெருக்கடிகள் தோன்றும். பொறுமையாகச் சமாளிக்கவேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கலைஞர்களுக்குப் புதிய தொடர்புகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.

குடும்பத்தில் வீட்டு நிர்வாகம் தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படும். சொந்த பந்தங்கள் மூலமாக செலவுகள் அதிகரிக்கும்.

(2). 16.2.13. முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இந்த காலகட்டத்தில் சனி பகவான் இரண்டாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில் உங்கள் குடும்பத்தில் பணத் தட்டுப்பாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளவும். மற்றவர்களுக்குத் தேவையில்லாமல் வாக்குறுதிகளைக் கொடுப்பது ஆபத்து. குடும்பத்தில், கல்வித் தடைகள் போன்றவை ஏற்படும். வீண் செலவுகளும், அக்கம் பக்கத்தாருடன் சண்டை சச்சரவுகளும் ஏற்படும். உங்களுக்கு ஊக்கமும் உந்து சக்தியும் சற்றுக் குறையும். அலுப்பு, அசதி, சோம்பல், சுகவீனம் போன்றவை அடிக்கடி தலைகாட்டும். சின்னச்சின்ன அசௌகரியங்கள்கூட பெரிய சிரமங்களை ஏற்படுத்தும். இப்போது உங்களுக்கு சாதகமான செலவுகளும் ஏற்படும். கடுமையான செலவுகளும் ஏற்படும் எவ்வளவு முயன்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. உங்களால் பணத்தை இறுக்கிப் பிடிக்கவே முடியாது. பணம் கைக்கு வந்ததும் பறந்துவிடும். நகை நட்டுகள், வீட்டுக்குத் தேவையான விலைஉயர்ந்த பொருள்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள், போன்றவற்றையும் வாங்குவீர்கள்.

உங்களுடைய பணம் எதிலாவதுபோய் முடங்கிக்கொள்ளும். அது சமயத்திற்கு கிடைக்காமல் சங்கடப்படுத்தும். நாளை தருகிறேன் என்று பணம் கடனாக வாங்கிச் செல்பவர்கள் அப்படியே காணாமல் போய்விடுவார்கள். அவர்களைத் தேடிக்கண்டிபிடிப்பதே சிரமமாக இருக்கும். சில ஏமாற்றங்களும் விரயங்களும் ஏற்படும்.

தொழில், வியாபாரம் மந்தமாக நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் அதிக முதலீடு தேவைப்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் அன்றாட வேலைகளை முடிக்கமுடியாமல் திண்டாடுவார்கள். கலைஞர்களுக்கு மருத்துவச் செலவுகள் சற்று அதிகமாகவே ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் பூசல்களும் தலைதூக்கும். பிள்ளைகளின் படிப்பு திருப்திகரமாக இருக்காது. திருமணப் பேச்சுவார்த்தை தடைப்படும்.

(3). 3.3.14.முதல் 23.7.14 வரையில் $ மாதம் 20 நாட்கள்:

இந்தக் காலக் கட்டத்தில், சனி பகவான் மூன்றாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். தொழில் நஷ்டம் ஏற்படும். காரிய முடக்கம் ஏற்படும். தொழிலில் தொழிலாளர்களால் பிரச்சினைகள், அரசால் பிரச்சினைகள் வீண் செலவுகள், உடல்நலக் குறைவுகள், நெருங்கிய உறவுகளில் அசுப செலவுகள் அவமானப்படல் என்ற கெட்ட பலன்கள்தான் ஏற்படும்.

இந்தக் காலத்தில் நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும். நல்ல பதவி உயர்வு இடமாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டாகும். காரியங்கள் வெற்றியடையும்.

தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். நல்ல பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை உண்டாகும். உறவுகளில் சுபகாரியம் ஏற்படும். தெய்வ தரிசன்ம், தீர்த்த யாத்திரை , உடல் நலம் சிறப்பு வீடு, நிலம் வாகனம் வாங்குதல் போன்ற நல்ல பலன்கள் உண்டாகும்.

குறிப்பாக பொருளாதார நிலை ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். ஒரு நேரம் கை நிறைய பணம் வைத்திருப்பீர்கள்; ஒருநேரம் கையில் பைசா இல்லாமல் ஈயடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பீர்கள். ஆனால், செலவுகள் மட்டும் வழக்கம்போல் ஏற்படும். கையில் பணம் இருக்கும்போது சமாளிப்பீர்கள். பணம் இல்லாதபோது யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசிப்பீர்கள். ஆனால், நேரத்துக்குக் கடன் கிடைக்காது, கடன் கிடைத்தாலும் சமாளிக்க முடியாமல் இருக்கும். நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கண்ணுக்குத் தெரியும் எதிரிகளைவிட கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து நிற்கும் எதிரிகள் உங்களுக்கு தொல்லை கொடுப்பார்கள்.

சில காரியங்கள் நீங்கள் நினைத்தபடி முடியும். சில காரியங்கள் நீங்கள் நினைத்தபடி முடியாது. பல இடையூறுகள் தோன்றி உங்களைக் கட்டிப்போட்டுவிடும். உதவி செய்வதாக வாக்களித்தவர்கள் ஒதுங்கிக்கொள்வார்கள். மூன்றாம் மனிதர்கள் யாராவது சிறுசிறு உதவிகள் செய்வார்கள். கால் தடுக்கி விழுதல், வாகனத்திலிருந்து கீழே விழுதல் போன்றவற்றால், ரத்த காயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

வக்கிரமில்லாத காலங்களில் உங்களுடைய சில செயல்கள் உங்கள் சாதனைகளை வெளிப்படுத்தும். உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் சிறந்து வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். கலைஞர்களுடைய திறமை வெளிப்பட்டு அவர்கள் வருமானம் பெருகும்.சிலருக்கு விருது கிடைக்கலாம். கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பெற்றோர் வழியில் சொத்துக்கள் வந்து சேரும். ஆக இந்த சனிப் பெயர்ச்சியில், துன்பங்கள் மலிந்திடினும், பாதிப்புகள் அதிகம் தோன்றா நிலையிலும், நன்மைகளே அதிகம் இடம்பெறுவதால், ராசிநேயர்கள் நிம்மதி காண்பார்கள்.

பரிகாரம்:

1. பிரதி சனிக்கிழமை விஷ்ணு ஆலயம் சென்று அங்குள்ள பெருமாளையும், தாயாரையும் பக்தி சிரத்தையுடன் வணங்கியபின்பு சக்கரத்தாழ்வாரை துளசிமாலை சாற்றி உள்ளன்புடன் வழிபட உள்ளக் கவலைகள் விலகும்.

2. மாலையில் நவக் கிரகத்துக்கு தீபம் ஏற்றி வழிபட்டு 9 முறை வலம் வரவும்.

3. இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவுங்கள். தர்மம் தலை காக்கும்.

4. தினசரி காக்கைக்கு அன்னமிடவும்.

5. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றவும்.

6. சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சனை செய்க.

6. ‘ சுதர்சன யந்திரம் ‘ தக்கவர் மூலம் பெற்று , அதனை மந்திர உபதேசத்துடன் வழிபட நன்று.

7. திருநள்ளாறு சென்று அங்குள்ள நவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் என்னும் ஐந்து வகை தீர்த்தங்களில் நீராடி, சனீஸ்வரரை தரிசித்து, , இயன்ற அளவு பரிகார வழிபாடுகளை செய்து வரவும்.

8. குச்சானூர் சனிபகவானை தரிசித்தல் நலம்.

9. வேலூர்- திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏரிக்குப்பத்தில் அமைந்திருக்கும் சனி பகவானை தரிசித்து வரவும்

ஹிட்ஸ் : 890

துலாம்

thulam-rasi1.jpg

இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் இப்போது ஜென்மஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதற்குமுன் விரயஸ்தானத்தில் இருந்தபடி உங்களுக்கு கடுமையான பலன்களைக் கொடுத்த சனி பகவான் இனி இரண்டாவது இரண்டரையில் அதாவது ஜென்ம ஸ்தானத்தில் பிரவேசிப்பது எப்படியிருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், அத்தை, பாட்டி. தாத்தா இவர்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து , கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால், இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. கடன்கள் பைசலாகும். நஷ்டங்கள் மறைந்து தன வரவுகள் பெருகி கடன் நிவாரணம் கிடைத்து நிம்மதி காண்பீர்கள். வருவாய் பெருகி சொத்துக்களின் மேல் உள்ள கடன்களைத் தீர்த்து பத்திரங்களை மீட்பீர்கள். தன வரவு தாராளமாகக் கிடைத்து உங்களை பெருத்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

பணம் மட்டுமே வாழ்க்கையாகாது இல்லையா? சனி பகவான் ஜென்ம சனியாகச் சஞ்சரிக்கும்போது உங்களுடைய உடம்பைத்தான் அதிகமாக பாதிப்படையச் செய்வார். உங்கள் உடம்பின் நிறம் மங்கும். ஆரோக்கியம்தான் வெகுவாக பாதிக்கப்படும். உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் குடிகொள்வதால், எந்த வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்கமாட்டீர்கள். உங்களை ஒப்பனை செய்துகொள்வதைக்கூட வெறுப்பாக உணர்வீர்கள். உடம்பில் ஒரு பொலிவின்மை தோன்றும். நோய் நொடிகள் வேறு தொல்லைப்படுத்தும். ஜென்ம சனி என்பது திரேக பாதிப்புகளை ஏற்படுத்தத் தயங்காது. ஆனால், அதே சமயம், முறையான வைத்தியம் செய்துகொள்வதின் மூலம், சரீர பலவீனம் நீங்கி ஆரோக்கியத்தைப் பெற முடியும். இக்காலக்கட்டம் அறுவை சிகிச்சைக்கான அவசியத்தைக்கூட ஏற்படுத்தலாம்; ஏற்படுத்தாமலும் போகலாம். ஆனாலும் நிவாரணம் கிடைக்கும். சனீஸ்வரருக்குரிய ஆயுஷ் ஹோமம், ஷேத்ராடனம் முதலியவை பெரிய பாதிப்புகள் ஏற்படாவண்ணம் உங்களைக் காப்பாற்றும். சனியால் நோய் வாட்டமும், மனவேதனையும் ஏற்படும், என்றாலும் உரிய பரிகாரங்களை மேற்கொண்டால், நன்மை கிடைக்கலாம்.

பொதுவாக சூழ்நிலைகள் உங்களுக்கு அநேகமாக சாதகமாக இருக்காது. காரியங்களைச் செய்து முடிப்பதில், தடைகளும் தடங்கல்களும் ஏற்பட்டு செயல்களைச் செய்யவிடாமலும், காரியங்களை முடிக்க முடியாமலும், போகும். எல்லாவற்றையும் நிதானமாகத்தான் முடிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.

பணவரவு சீராக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். திருப்திகரமான வருமானம் கிடைக்கும் என்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிக்கல் இருக்காது. குடும்பத்தில் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டு குழப்பநிலை நீடிக்கும். நீங்கள்தான் எல்லோரையும் சமாதானப்படுத்தி, ஒருசேர இணைக்கும் வேலையைச் செய்யவேண்டியிருக்கும். நீங்கள் கோபப்டாமல் இருக்கவேண்டியிருக்கும். எல்லோரையும் தைரியப்படுத்தவேண்டியிருக்கும்.

இனி சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றி பார்க்கலாம். சனி பகவான் தனது பார்வைகளான அ3,7,10-ம் இடத்து பார்வைகளின் மூலம் உங்களது தைரிய-பராக்கிரம-ஜெய ஸ்தானம்; களத்திரஸ்தானம்; ஜீவன காரியஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார்.

சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுவதால், உங்களுடைய உடல்சக்தி குறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். தைரிய உணர்ச்சி குன்றும். எதையும் செய்யப் பயந்து பின்வாங்கும் நிலையே காணப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் அடிக்கடி பலவித நோய்கள் ஓடிவந்து தொற்றிக்கொண்டு உறவு கொண்டாடும். நோய்ப் படுக்கையை நிரந்தரமாகப் போட்டுவைத்துக் கொள்வீர்கள். மனதைரியம் குறைவதும் இதற்கு ஒரு காரணமே. மனதில் தைரியம் குறைவதால், எதிர்த்து நிற்கவேண்டிய நேரத்தில்கூட பணிந்து சென்றுவிடுவீர்கள். உந்துசக்தி குறைவதால், உங்கள் செயல்களில் வேகம் இருக்காது. அதனால் பல வெற்றிகளை இழப்பீர்கள். எந்தப் பிரச்சினை வந்தாலும் நம்மால் முடியப்போவதில்லை என்று ஆரம்பத்திலேயே பின்வாங்கிவிடுவீர்கள். தைரிய ஸ்தானத்தில் சனி பகவானின் மூன்றாம் பார்வை பதிவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

சனிபகவானின் ஏழாம் பார்வை உங்களது களத்திர ஸ்தானத்தைப் பார்வையிடுவ்தால், மனைவி/கணவனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கணவன்-மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை தலை தூக்கும். அடிக்கடி வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள் என்று இருந்துகொண்டே இருக்கும். கணவன்- மனைவிக்கிடையே ஒரு மகிழ்ச்சியான சூழலைப் பார்க்க முடியாது. ஒருவரையொருவர் விரோதியாகப் பார்ப்பார்கள். வீட்டு நிர்வாகம் தொடர்பான வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்திலோ உங்களுக்கோ திருமணம் பேச்சுவார்த்தை அளவிலேயே நின்று போகும். நிச்சயிக்கப்பட்டவைகூட தள்ளிப்போகும். அதிகப்படியான் உழைப்பு காரணமாக கணவன்- மனைவி இருவரும் சோர்ந்து போகக்கூடும். இருவருக்குமிடையில் சிறு பிரிவு ஏற்படும். குடும்பத்தில் குதர்க்கம், குழப்பம் போன்றவை ஏற்படும். மூன்றாம் மனிதர் குறுக்கே புகுந்து இருவரையும் ஆட்டிவைத்து பிரித்துவிடுவர். எல்லாவற்றையும் தங்கள் முன்யோசனையாலும், பொறுமையினாலும் தவிர்க்கலாம்.

சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையினால் உங்களுடைய ஜீவன -காரிய ஸ்தானத்தைப் பார்ப்பதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு எளிதில் வேலை கிட்டாது. ஏதாவதொரு காரணத்தால் தள்ளிக்கொண்டே போகும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஏதாவதொரு காரணத்தால், மேலதிகாரிகளிடமிருந்து மெமோ வரும். வேலை நீக்கம் செய்யப்படுதல், விருப்பமில்லாத பணியிட மாற்றம் தற்காலிக -பணிநீக்கம் முதலியவை ஏற்படும். புதிதாக தொழில் ஏதாவது தொடங்கலாம் என்றாலும் அதற்கான சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமையாமல், முகாந்திர வேலைகளிலேயே நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். தொழில் வியாபாரத்தை ஏற்கெனவே நடத்திக்கொண்டு இருப்பவர்கள் சிறிசிறு தொந்தரவுகளையும் இடையூறுகளையும் சந்திப்பீர்கள். வேலையாட்கள் , உதவியாளர்கள் தொழிலாளர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்காது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது . முடிந்தவரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்வது நல்லது. பெருத்த லாபத்தையோ பெரும் மாற்றங்களையோ எதிர்பார்க்க முடியாது.

இனி சனி பகவானின் வக்கிர சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்:சனி பகவான் மூன்று முறை வக்கர சஞ்சாரம் செய்கிறார்.

(1) 9. 2. 12 முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:

இப்போது சனி பகவான் தனது முதலாவது வக்கிர சஞ்சாரத்தில் இருக்கிறார். சனி பகவான் ஜென்மத்தில் சஞ்சரிக்கும்போது வெற்றியை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. தோல்வியையும் சேர்த்தே எதிர்பார்க்கவேண்டும். அதாவது தோல்வியும் ஏற்படலாம் என்ற எண்ணம் இருந்தால்தான், தோல்வி ஏற்பட்டால் ஒரேயடியாக துவண்டு போகாமல் இருக்கலாம். ஓரளவு பணப்புழக்கம் இருக்கும் என்றாலும், கொடுக்கல்-வாங்கலில் குழப்பமும் குளறுபடிகளும் காணப்படும். சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும். அதனால், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனாலும் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. நீங்கள் நினப்பதுபோல் எதுவும் ந்டக்காது. உங்கள் எண்ணத்துக்கு எதிர்மாறாகத்தான் எல்லாம் நடக்கும். மனதில் எப்போதும் குழப்பம் நிறைந்திருக்கும். குழப்ப சிந்தனையின் விளைவாக உங்களால் சரியாகச் சிந்திக்க முடியாது. தவறான சிந்தனைகளால், உங்கள் முடிவுகள் அனைத்தும் தவறானவையாகவே இருக்கும். தவறான முடிவுகளையே நீங்கள் சரியான முடிவுகளாக நினைத்து ஏமாந்துபோவீர்கள். அந்த முடிவுகளின்படி நடந்துகொண்டு சில இழப்புகளை தேடிக்கொள்வீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காகப் போராட வேண்டியிருக்கும்.

உடன்பிறந்தவர்களால் பல தொல்லைகள் ஏற்படும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துக்கொண்டும், அரவணைத்துக்கொண்டும் செல்ல வேண்டும். தாழ்ந்தும், விட்டுக்கொடுத்தும் செல்லவில்லையென்றால், குழப்பங்கள் தலைதூக்கும். குடும்பத்தினர் உங்களைவிட்டுப் பிரிந்து சென்று விடுவர். எனவே பெருந்தன்மையாகப் பணிந்துபோய்விடுவது நல்லது.

2. (16.2.2013 முதல் 12.7.2013 வரையிலான 4 மாதங்கள்::

சனி பகவானின் இரண்டாவது வக்கிர சஞ்சாரம் இந்தக் காலக் கட்டத்தில் நடக்கிறது. இந்தக் காலத்தில் உங்கள் வேகம் குறைந்து போகும். எதையும் விரைந்து செய்து முடிப்போம் என்ற எண்ணம் உங்களிடம் காணாமல் போகும். வாழ்க்கையில் மற்றவர்களை முந்திக்கொண்டு முன்னேறிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இல்லாமல் போகும். எந்தக் காரியமாக இருந்தாலும் சாவகாசமாகச் செய்துகொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கும். உங்களுடைய ஊகங்களும் கணிப்புகளும் அடிக்கடி தவறிப்போகும்; திட்டங்கள் தவறிப் போய் திரும்பவும் செய்யும்படி நேர்ந்து, அதன்மூலம் பொருள் நஷ்டமும் ஏற்படும். வருமானம் தொடர்பான முயற்சிகளில், தடைகள், தவறுகள் நேரும். கவனக் குறைவு காரணமாக எந்த முயற்சியையும் சரியாகச் செய்யாமல் எல்லாவற்றிலும் குறை வைப்பீர்கள். உங்களுடைய முக்கியத்துவம் குன்றிப் போகும். சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்கிற கதையாக ஆயிரம் ரூபாய் லாபம் வந்துவிட்டால் பின்னாலேயே ஐயாயிரம் ரூபாய் செலவு வந்து சேரும். சில செலவுகளை சமாளிக்க நகை நட்டுகளை அடமானம் வைக்க வேண்டிவரும். பூர்வீக சொத்து கைக்கு வராது. சொத்து விவவகாரங்களில் பாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் எல்லாமே இழுபறியாக இருக்கும். உத்தியோகம் பார்பப்வர்களுக்கு அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போ, மேலதிகாரிகளிடம் பாராட்டுகளோ கிடைக்க வாய்ப்பில்லை. குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உற்றார்-உறவினர்களிடமிருந்து சில உதவிகள் கிடைக்கும்.

(3). 3.3.14. முதல் 23. 7. 14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:

இப்பொது சனி பகவான் மூன்றாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் வரவுகளை விட செலவுகளே அதிகமாக இருக்கும். கிடைக்கும் ஆதாயங்களை விட ஏற்படும் விரயங்களே அதிகமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகள் இருக்கும். யாரிடமும் கடுமையாகப் பேச வேண்டாம். விஷயங்கள் இன்னும் சிக்கலாகிவிடும். வருமானம் தடைப்படும். எந்தவிதத்திலும் யாரிடமிருந்தும் உதவி கிடைக்காது. பலர் இனிக்க இனிக்கப் பேசுவார்கள். ஆனால், எந்த உதவியும் செய்யமாட்டார்கள். சமயத்தில் நழுவி விடுவார்கள். நீங்கள் நிறைய காரியங்களை செய்துமுடிக்க திட்டமிடுவீர்கள். ஆனால், செயலிழந்து போனதுபோல் எண்ணிக்கொண்டு இரண்டு காரியங்களை செய்து முடித்தால் போதும் என்ற நிலைக்கு ஆளாகி விடுவீர்கள்.

முக்கியமான மனிதர்களை சந்திக்க முடியாமல் திண்டாடுவீர்கள். ஒருமுறைக்கு பலமுறை முயன்றும் முடியாமல் போகும். அப்படியே சந்திக்க முடிந்தாலும் எண்ணிப்போன காரியம் இடறும். நண்பர்களே உங்களுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். நீங்கள் மலைபோல் நம்பிக்கை வைத்திருந்த நண்பர்கள் எல்லாம், உங்களைப் பற்றி தவறாகப் பேசுவார்கள். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. கீழே விழுந்து ரத்தக் காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் சில தவறுகளைச் செய்துவிட்டு அதை சரிபண்ண முடியாமல் தவிப்பார்கள். இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும். திருமணமாகாதவர்களும் ,ஆண்களும் பெற்றோரின் ஆலோசனைப்படியும் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆலோசனைப்படியும் நடந்துகொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். அறவே ஈகோ பார்ப்பது கூடாது. கூட்டு வியாபாரத்தில் கருத்து வேற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். குடும்பத்தார் சம்பந்தமாக சுபச் செலவு ஏற்படும். உங்கள் முன்பாக நீங்கள் முடிக்கவேண்டிய பலவித வேலைகள் இருக்கும். நீங்கள் எதைச் செய்வது எதை விடுவது என்று புரியாமல் எதையுமே செய்யாமல் விட்டுவிடுவீர்கள்.

மொத்தத்தில் ஜென்ம சனியாக வரும் சனி பகவான் கஷ்டங்களைக் கொடுக்காமல் போக மாட்டார். ஆனாலும் நியாயவாதியான சனி பகவான், நம்முடைய செயல்பாடுகளைப் பார்த்துத்தான் நமக்குரிய பலன்களைக் கொடுக்கின்றார், என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆத்மார்த்தமான சனி வழிபாட்டின் மூலம் எதையும் தாங்கி சமாளித்துவிடலாம்.

பரிகாரம்:

1. வழிபாடுகள் வகையில் மகாலட்சுமி பூஜை, சங்கடஹர சதுர்த்தி, வைகாசி விசாக வழிபாடு, அருட்பெருஞ்சோதி வள்ளல் பெருமாள் வழிபாடு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, பைரவர்,காளி வழிபாடு உகந்தது.

2. பாபனாசம் 108 சிவலிங்க வழிபாட்டு ஸ்தலம் திருவாரூர் தசரத சக்கரவர்த்தி வழிபட்ட சனீஸ்வரர், இங்குள்ள ராஜதுர்க்கை புதுக்கோட்டை புவனேஸ்வரி, பஞ்சமுக ஆஞ்சனேயர் தில்லை காளி இவர்களின் ஸ்தலங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை, ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது உத்தமம்.

3. ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருநாராயணபுரம் ஆகிய இடங்களில் எழுந்தருளிய உடையவரையும், தாயாரையும், நாராயணனையும் தரிசிக்கவேண்டும்.

4. மடப்பள்ளி , மங்கலகிரி( விஜயவாடா) பாகை நரசிம்மரை தரிசிக்கவேண்டும்.

5. இவை தவிர பிரசித்தி பெற்ற சனீஸ்வரனின் திருத் தலங்களான குச்சானூர், திருநள்ளாறு, திருவண்ணாமலை- வேலூர் சாலையில் அமைந்துள்ள ஏரிக்குப்பம் ஆகிய இடங்கலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து வரவும்.

6. தினசரி காக்கைக்கு அன்னமிடல், சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றுதல் இவைகளையும் விடாது செய்து வரவும்

விருச்சிகம்:

viruchaka-rasi1.jpg

இதுவரை உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது உங்களுடைய விரய ஸ்தானமான பனிரண்டாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இதையே ஏழரைச் சனி என்று குறிப்பிடுவர். பனிரண்டாமிடம் என்பது விரய ஸ்தானமாகும். அங்கு சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. மன மகிழ்ச்சி இருக்காது . படுத்தல்கள் இருக்கத்தான் செய்யும். விரயச் சனியானவர் உங்களை அலைக்கழித்து தொல்லைப்படுத்துவார்.

ஒருவர் உழைத்தால் முன்னேற்றம் காணலாம். உழைப்புக்கு அதிபதிதான் சனிபகவான். ஆனால், அவர் வீற்றிருக்கும் இடம் விரய ஸ்தானம் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே விரயச்சனி எந்த விதத்திலும் லாபத்தைக் கொடுக்கமாட்டார். எதைத் தொட்டாலும் நஷ்டத்தையே ஏற்படுத்துவார். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டாது. சில சமயம் சிறிதளவு பலன் கிட்டும். வேறு சில சமயங்களிl உங்கள் உழைப்பின் பயனை வேறு யாராவது அனுபவிப்பார்கள்.

ஏழரைச் சனியின் மூன்று பகுதிகளில் இப்போது முதல் பகுதி ஆரம்பமாகியிருக்கிறது. இரண்டரை ஆண்டுகள் நடக்கப் போகும் விரயச்சனியாகும், இது.

இந்தக் காலத்தில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், படிப்புக்கேற்ற வேலையாக இருக்காது. குறைந்த சம்பளத்திலான வேலையாக இருக்கும். புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்குரிய சந்தர்ப்பம் அமையாது. அல்லது தாமதமாக அமையும். அப்படியே அமைந்தாலும் உடனே லாபம் கொட்டத் தொடங்காது. மார்க்கெட்டில் காலூன்றவே வெகு காலம் பிடிக்கும். மிகக் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். நீண்ட காலம் பொறுத்திருக்கவேண்டும். வருமானத்தைத் தேடிக் கொடுக்கும், எந்த வேலையிலும் போதுமான அபிவிருத்தியும் ஆதாயமும் இருக்காது. தொட்டது தொட்டபடியே இருக்கும். விட்டது விட்ட இடத்திலேயே நிற்கும். உங்களுடைய எண்ணங்களும் நோக்கங்களும் , செயல்களும் சரியான பாதையில் செல்லாமல், அடிக்கடி திசை மாறிச் செல்லும். செலவுகள் அனைத்தும் ஒருமடங்குக்கு இரு மடங்காகும். அவசிய செலவுகள், அவசர செலவுகள், மருத்துவச் செலவுகள், தண்டச் செலவுகள் இவை அனைத்தும் மாறி மாறி ஏற்படும். ஆனால் அதிகம் பயந்து கலங்க வேண்டிய அவசியம் இல்லை. பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தால், எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம்.

மனைவியின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. அடிக்கடி தொல்லை கொடுக்கும் என்பதோடு மருத்தவச் செலவுகளும் ஏற்படும். மனதில் இனம் புரியாத கவலை இருந்துகொண்டே இருக்கும். சனிபகவான் ஆறாமிடத்தைப் பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சரீர செக்கப் தேவைப்படும்போது, நோய் முற்றும்வரை காத்திருக்காமல் உடனுக்குடன் செய்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். நீர்கட்டி, மூட்டுவலி, நரம்பு, கர்ப்பப்பைக்கு அறுவை சிகிச்சை இப்படி ஏதாவது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கவே செய்யும்.

கல்வி சம்பந்தப்பட்ட வகையில் சனியின் மந்தமான போக்கின் மூலம் குறைந்த மதிப்பெண்தான் எடுக்க முடியும். உயர்கல்விக்குத் தடை ஏற்படும். பகுதிநேரப் படிப்பாவது ஓரளவுக்கு கை கொடுக்கும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பு கட்டாயம் தோல்வியில் முடியும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் நிந்தனை உங்களுக்கு ஏற்படும். அவர்களது கோபத்துக்கு ஆளாவதை முற்றிலும் தவிர்க்கவும்; முடிந்தால், திருப்திப்படுத்துங்கள்.

இனி சனியின் பார்வை பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். சனிபகவான் தன்னுடைய 3,7, 10-ம் பார்வையினால், உங்களுடைய தன-குடும்ப- வாக்கு ஸ்தானம்; பகை- ரோக – கடன் ஸ்தானம்; பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.இந்தப் பார்வைகள் மூலம் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

முதலில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுடைய தன – குடும்ப-வாக்கு ஸ்தானத்தில் பதிவதால், எப்போதுமே பணப் பற்றாக்குறை இருக்கும். அப்படியே பணம் சிறு அளவு பணவரவு கிடைப்பதாக இருந்தாலும் பலவித சிக்கல்களுக்குப் பிறகே கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் வழிகள் அனைத்தும் அடைபட்டுக் கிடக்கும். தடைகள் தாமதங்கள் அனைத்தும் குறுக்கிடும். கொடுக்கல்-வாங்கலில் தேக்கம் ஏற்படும். குடும்ப நிர்வாகத்தில் குளறுபடி ஏற்படும்.

நாக்கிலும் வாக்கிலும் சனி பதிந்திருப்பதால், உங்களிடமிருந்து தேவையற்ற வார்த்தைகள் வெளிப்படும். உங்கள் வார்த்தைகள் உங்களையும் மீறி வெளிப்படும். குதர்க்கமாகப் பேசுவது தேவையற்றது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அனாவசிய வார்த்தை ஜாலங்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். யாருக்கும் உங்கள் பேச்சு ரசிக்காது. உங்களையும் கோமாளியாக்கி, மற்றவர்களின் மனதையும் குத்திக் கிழிக்கும் பேச்சை யார்தான் ரசிப்பார்கள்? போலி சத்தியம் செய்வது, சவால் விட்டுப் பேசுவது ஆகியவையே இப்போது உங்களிடம் அதிகம் காணப்படும்.

சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய பகை-ரோக- கடன் ஸ்தானத்தில் பதிவதை உங்களுக்கு நல்லது என்று கூறலாம். உங்களுக்குப் பகையாளியாக இருப்பவர்களின் மீது உங்கள் [பார்வை பதிவதால், பகைவர்கள் மனம் மாறி, உங்கள் நட்பை நாடி வருவார்கள். உங்களுக்கு ஏற்படும் நோய்கள்மீது சனியின் பார்வை பதிவதால், நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஒடும். அதேபோல கடன்களைச் சமாளிக்கும் அளவு கைக்கு பணம் வந்து சேரும்.

சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால், உங்கள் தகப்பனாருடைய உடல்நலம் பாதிக்கப்படும். உங்களுடைய தகப்பனாருக்கு பாதிப்பும் அவருடைய பொறுப்புகளில் சிரமங்களும் ஏற்படும். நீங்கள் மனைவி மக்களின் வசதியைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். உற்றார் -உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள பாடு படுவீர்கள். ஆனால், நீங்கள் நினைத்தபடி எதுவும் நடக்காது. எல்லாவற்றிலும் சனி பகவானின் குறுக்கீடு இருக்கும்.

இனி சனி பகவானின் வக்கிர சஞ்சார பலன்களைப் பார்க்கலாம் இந்த இரண்டரை ஆண்டில் சனி பகவான் மூன்று முறை வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.

(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:

தொடர்ந்து பல வகையிலும் வியங்கள் ஏற்பட்டாலும் எப்படியாவது நீங்கள் எல்லா வகையான விரயச் செலவுகளையும் சமாளிக்கும் வண்ணம் எப்படியாவது வருமானம் வந்துகொண்டிருக்கும். எதிர்பாராத வகையில் ஆதாய வரவுகள் ஏற்படும். விரும்பும் பொருட்களையும் வாங்க முடியும்.

பேச்சில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.. நாவடக்கம் அவசியம் என்பதை ஏற்கெனவே பலமுறை சொல்லிவிட்டோம். யாரிடம் பேசினாலும் அவர்களுக்குரிய மரியாதையைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிடவேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் தரத்தையும் குறைக்கும். வாய்ச்சண்டை பெரிய அடிதடியில் கொண்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவத்ற்கில்லை. எனவே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால், முடிந்தவரை அவற்றை தவிர்ப்பது நல்லது. பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தது போல நடித்து அந்த இடத்தை விட்டு தள்ளிப் போய்விட்டால், நீங்கள் சண்டையையும் தவிர்த்தது போலாகிவிடும். உங்கள் தன்மானமும் காப்பாற்றப்பட்டுவிடும். சிறுசிறு திட்டங்களை ஓரளவுக்கு நிறைவேற்றிக்கொள்ளமுடியும். ஆனால் பெரிய திட்டங்களாகப் போட்டுவிட்டால் நிறைவேறாமல் போகும். இந்த நேரத்தில் யாரிடம் உதவி கேட்டாலும் கிடைக்காது. ஏனென்றால், வெளிவட்டாரச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது.

கலைஞர்களுக்கு ஆரோக்கியம் பாதிப்படையும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலையில் தவறு ஏற்பட்டு மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றும். குடும்பத்தில் செலவுகளைக் குறைக்க முயன்று தோற்றுப் போவீர்கள். உறவினர் வருகையால் புதுக் குழப்பங்கள் தோன்றும்.

(2). 16.2.13முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வம்பு, சண்டையை வரவழைத்துக்கொள்வீர்கள். ஆனால், பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாகவே முடிவடையும். கடமைகளும் காரியங்களும் உங்கள் முன் நிறைந்து கிடப்பதால், செலவுகள் எக்கச்சக்கமாக எகிறும். ஆனாலும் அத்தனை செலவுகளையும் சமாளிக்கும் வண்ணம் உங்களுக்கு வருமானம் வந்துவிடும். வாகனத்திலிருந்து கீழே விழுதல், எதிலாவது இடித்துக்கொண்டு ரத்தக்காயம் ஏற்படுவது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றாலும் ஏற்படும் அசௌகரியங்கள் உடனுக்குடன் நீங்கிவிடும். உங்களுக்கு சில விபரீத எண்ணங்கள் தோன்றும். அவற்றின் மூலம் பல சிக்கல்கள் தோன்றும். உங்கள் தகுதிக்கு கீழே உள்ளவர்களுடன் நட்பு கொள்வீர்கள். அவர்களின் மூலம் உங்களுக்கு சில லாபங்கள் தோன்றினாலும், மற்றவர்கள் உங்களை குறைத்து மதிப்பிடுவீர்கள். கலைஞர்கள் அகம்பாவமாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு வேலையைச் செய்து முடிப்பதற்குள் படாதபாடுபடுவீர்கள். தொழில், வியபாரத்தில் மிக அதிகமாக உழைத்து குறைவான லாபத்தை பார்க்கவேண்டியிருக்கும். தினமும் கணவன்- மனைவி சண்டை தொடர்கதை போலாகிவிடும். தாய்-தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.

(3). 3.3.14. முதல் 23.7.14.வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:

இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில், திடீர் திடீரென்று சோர்ந்து போவீர்கள். எந்தக் காரியத்தை எடுத்துக் கொன்டாலும் செய்யமுடியாதது போல் பலம் குன்றிப் போவீர்கள். தளர்ச்சியும் தன்னம்பிக்கையின்மையும் ஏற்படும். செலவுக்கு பணம் கிடைக்காது போகும். கடன் வாங்கினால் அசலையும் கொடுக்கமுடியாமல் வட்டியையும் கொடுக்கமுடியாமல் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். ஒரு பங்கு வருமானம் வந்தால் இரு பங்கு செலவு ஏற்படும். கடமைகளில் தவறுகள் ஏற்படும். உங்கள் இலக்கு அடிக்கடி தவறிப் போகும். நல்ல முடிவுகள் எடுக்க முடியாமல் மனம் தடுமாறும். வேகமாக செயல்படுவதுபோல தோன்றினாலும், நீங்கள் மிகவும் தாமதமாகத்தான் எதையும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த படாதபாடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில், அலைச்சல், அலைக்கழிப்புகள் போன்றவையே மிஞ்சும். கலைஞர்களுக்குப் போட்டியைச் சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும். குடும்பத்தில் அடிக்கடி பூசலகள் ஏற்படும். குடுபத்தினரின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்று குறை கூறுவார்கள்.

மொத்தத்தில் விரயச்சனி காலத்தில் பொருள் நஷ்டம், பண நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. கூடுதல் உழைப்பை தானம் செய்து ஓரளவுக்காவது வருமானத்தைப் பார்க்கலாம். சேமிப்பு என்று எதுவும் வேண்டாம்; செலவுகளைச் சமாளித்தாலே போதும் என்றாகிவிடும்.

பரிகாரம்:

1.. சனியால் ஏற்படும் தொல்லைகள் தீர சனியின் குருவான கால பைரவருக்கு அஷ்டமி திதிக்களில் உளுந்து வடைமாலை சாற்றி வணங்கிடவும்.

2. மகுடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று தோஷ பரிகாரங்களை உரிய முறையில் செய்து கொள்ளவும்.

3. பிரதோஷ காலத்தில் யோக நரசிம்மரை பக்தி சிரத்தியுடன் வழிபடவும்.

4, பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு 9 முறை வலம் வந்து வணங்கவும்.

5. திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம் முதலிய இடங்கலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரரை தரிசித்து பரிகார வழிபாடுகளைச் செய்யவும் .

வாழ்க வளமுடன்!

தனுசு

thanusu-rasi.jpg

இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருந்து பதினோராமிடத்துக்கு மாறி வருகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல மாற்றமே. இந்த மாற்றத்தை நீங்கள் இருகரம் நீட்டி வரவேற்கலாம். ஏனென்றால் பதினோராமிடம் என்பது லாபஸ்தானம் ஆகும். பதினோராம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அள்ளிக் கொடுத்து உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவார். உங்கள் வாழ்க்கைத் தரத்தை சனி பகவான் உய்ர்த்திக் காட்டுவார். இந்த இரண்டரை ஆண்டுக் காலமும் உங்களுக்கு யோகமான பலன்களாக நிகழப் போகிறது.

முதலாவதாக, உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதனால், நோய் நொடி வந்தால், உடனே குணமாகிவிடும். உங்களுடைய நடையில்கூட ஒரு துள்ளல் இருக்கும். சோர்வு, தளர்வு எல்லாம் ஓடிப் போயிருக்கும். பேச்சில்கூட விஷயம் எதுவும் இல்லாவிட்டாலும் புதிய உற்சாகத்துடன் பேசுவீர்கள்.

இந்தக் காலக்கட்டத்தில் சனிபகவான் உங்களுக்கு அள்ளிக் கொடுத்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகிறார். லாப ஸ்தானமான பதினோராமிடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டரை ஆண்டுக் காலமும் உங்களுக்கு ஏற்றமான -யோக காலமாகவே இருக்கும்.

உழைப்புக் கிரகமான சனி இப்போது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய உழைப்பு எதுவுமே தற்போது வீண்போகாது. உங்களுடைய உழைப்பு அனைத்தும் இப்போது ஏற்றத்தையும், யோகமான நல்ல பலன்களையும் கொடுக்கும். நிறைய ஆதாயங்களைத் தேடிக் கொடுக்கும். பொன் பொருள் வாங்குவீர்கள். , சொந்த வீடு, மனை வாங்கும் ஆசை இருந்தால், அது இப்போது நிறைவேற உங்கள் நிதி வசதி கை கொடுக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், வசதிகளைப் பெருக்கும் கருவிகள், மின் சாதனங்கள் வாங்கவும், பணவசதி இருக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கவும் பணம் தாராளமாக இருக்கும். ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் சொத்துக்களில் ஏதாவது வில்லங்கம் இருந்தால், அது இப்போது விலகி, நல்ல ஸ்திர உரிமை ஏற்படும். தேவைப்படும் சமயங்களில் தகுந்த உதவிகள் தாமதமில்லாமல் கிடைக்கும். பெரிய மனிதர்களுடனும், பிரபலங்களுடனும் உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டு, அதனால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அவர்களால் ஏற்றம் பெறுவீர்கள். வருமானம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் தொல்லை, தடை எதுவுமின்றி சுலபமாக நடைபெறும். போட்ட முதலுக்கு வரவேண்டிய வருமானம் இரு மடங்காக வரும். கொடுத்த கடனும் உடனுக்குடன் வசூலாகும். நீங்கள் எதிர்பார்க்கும் .

கடனுதவி தாராளமாகக் கிடைக்கும்.

மனைவி- கணவனின் உடல் நலம் சிறப்படையும். குடும்பத்தில் நிலவி வந்த வாட்டம், பிணி- பீடைகள், கருத்து வேற்றுமைகள் போன்றவை அகலும். பங்காளித் தகறாறு- உறவினரின் வேற்றுமை போன்றவை அகலும். உங்களைச் சுற்றி எப்போதும் மகிழ்ச்சி தவழும். மயங்கியும் பின்னடைந்தும் இருந்த நிலை மாறும். வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளுக்கும் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் எப்போதுமே மகிழ்ச்சி நிலவும்.

உத்தியோகம் பார்ப்பவர்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். தகுந்த பாராட்டுப்பத்திரங்களும் , பதவி, உயர்வும். விருப்பமான பணி இட மாற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நிலவி வந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். கணவன் -மனைவிக்கிடையிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

இனி சனிபகவானின் பார்வை பலன்களைப் பார்ப்போம். அவரது சஞ்சார பலன்களைவிட பலம் பெற்றது, பார்வை பலம.:

சனி பகவான் தனது 3, 7, 10-ம் இடத்துப் பார்வைகளை உங்கள் ஜென்ம ராசி, பூர்வ புண்ணீய ஸ்தானம், அட்டம ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார். இந்தப் பார்வைகள் நல்ல பார்வைகள் என்பதால், உங்களுக்கு மிகமிக நல்ல யோக பலன்களாகக் கிடைக்கப் போகின்றன.

சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிவதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய் நொடிகள் வந்தால், உடனுக்குடன் குணமாகிவிடும். உடம்பில் தெம்பு நிறைந்ததால், மனதிலும் சக்தி நிறையும். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதை உடனே செய்து முடித்துவிடுவதில் குறியாக இருப்பீர்கள். அதற்குரிய சாத்தியக்கூறுகள் நிறைந்திருக்கும். வழிவகைகளும் உங்களுக்கு க்ளியராக இருக்கும். வெற்றிகரமாகச் செய்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை உங்களுக்குத் தோன்றும். அவநம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை. எப்போதும் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்திருக்கும். உங்களுடைய உற்சாகமான பேச்சு பல நல்ல நண்பர்களைத் தேடிக் கொடுக்கும்.

சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால், உங்களிடம் காணப்பட்டுவந்த மந்தத் தன்மை , மறதி, மயக்கம், தடுமாற்றம் போன்றவை நீங்கும். உங்கள் மனதை நீங்கள் செய்யும் காரியங்களில் நிலை நிறுத்தி அந்தக் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதையாவது செய்துகொண்டே இருப்பீர்கள். உங்களுடைய செயல்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு ஏற்றம் கொடுக்கும் ஏணிப்படியாக இருக்கும். உங்களுடைய திட்டங்கள் அத்தனையும் செயலாகும் நேரம் இது. புத்திசாலித்தனமாகத் திட்டமிடுவீர்கள். பலவித குழப்பங்களும் ,சிக்கல்களும் நிலவிய விஷயங்களைக்கூட தெளிவான முடிவு வரும் அளவுக்கு நிறைவேற்றி முடிப்பீர்கள். மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு வெற்றியைக் குவிப்பீர்கள். நல்ல லாபத்தையும் ஈட்டுவீர்கள். வெற்றி வீரராக உங்களைக் காட்டும் நேரம் இது.

சனி பகவானின் பத்தாம் பார்வை உங்களுடைய அட்டம ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய உழைப்பில் ஒரு சதவீதம்கூட வீணாகாது. உங்களுடைய உழைப்பு முழுவதும் உங்களுக்கு பெரும் லாபத்தைத் தேடிக் கொடுக்கும். வேலை தேடுவோருக்கு நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய நல்ல வேலை கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகும். வம்பு சண்டைகள் வந்தாலும் ஒதுங்கிப் போகவேண்டிய அவசியமின்றி, ஒரு கை பார்த்துவிடுவீர்கள். கடமைகளையும் பொறுப்புகளையும் குறைவில்லாமல் நிறைவேற்றுவீர்கள்.

இனி சனி பகவானின் வக்கிர சஞ்சாரங்களைப் பற்றிப் பார்க்கலாம்: இந்த இரண்டரை வருட சனி சஞ்சாரத்தில், மூன்று முறை சனி பகவான் வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.

(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள் :

இப்போது சனி பகவான் வக்கிர சஞ்சாரம் செய்கிறார். எதற்கும் தயங்காமல், நல்ல நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியைக் குவிப்பீர்கள். ஈடுபடும் அனைத்து விஷயங்களிலும் ஈடுபாடு காட்டி அபிவிருத்தி காண்பீர்கள். பொறுப்புகள் நிறைவேறும். கடமைகளை நிறைவேற்றுவதிலும் தனிக்கவனம் காட்டுவீர்கள். எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதைச் செய்து முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிரபலங்களும் முக்கிய மனிதர்களும் உங்களைத் தேடி வருவார்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும். உங்களுடைய பொருளாதாரம் நல்ல நிலையில் காணப்படும். பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. பல வழிகளிலிருந்தும் பணம் கைக்கு வந்துகொண்டே இருக்கும். வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளவும் பல வாசல்கள் உங்களுக்குத் திறந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் நிலவி வந்த குளறுபடிகளை சரிப்படுத்திக்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொள்ள இது சரியான நேரம். அதிகமாக முதலீடு செய்துகொள்ளலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து குவியும். குடும்பத்தில் உற்சாகம் பொங்கும். நின்றுபோன திருமணப் பேச்சுவார்த்தை திரும்பவும் தொடங்கும்.

(2). 16.2.13. முதல் 12.7.13.வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இப்போது சனி பகவான் இரண்டாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக்கட்டமும் உங்களுக்கு யோகமாகத்தான் இருக்கும். பேச்சில் தெளிவும் செயல்களில் வேகமும் இருக்கும். உங்களிடம் சாமர்த்தியமும் மனதில் தைரியமும் நிறைந்திருக்கும். வெளிவட்டார சுழ்நிலையும் மிகவும் சாதகமாக இருப்பதால் நீங்கள் அத்தனையையும் உபயோகித்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதகமாக்கிக்கொண்டு ஆதாயம் காண்பீர்கள். புத்திசாலித்தனமான அணுகு முறைகளால், கடினமான காரியங்களையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். தேவைப்படும் உதவிகள் உடனுக்குடன் கிட்டும். மனம் அலைபாய்ந்துகொண்டே இருப்பதால் ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சிலசயம் செய்துகொண்டிருக்கும் கைக்காரியத்தைக்கூட பாதியிலேயே விட்டுவிட்டு போய்விடுவீர்கள். நண்பர்களுடன் ஈடுபடும் வாக்குவாதங்களில்கூட உங்கள் பக்கம் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தபோதும், பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்துவிடுவீர்கள். வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபடமாட்டீர்கள். ஆனால், உங்கள் மனதுக்குள் நீங்கள் சொன்னதுதான் சரி என்ற எண்ணம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதுப்புது உத்திகளைக் கையாண்டு நிறைய லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது. கலைஞர்களுக்கு வருமானமும் நன்றாக இருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சந்தேகங்கள் தலைதூக்கும். அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவது நல்லது. சுபச் செலவுகள் அதிகமாக ஏற்படும். அந்தவரையில் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

(3). 3.3.14, முதல் 23.7.14.வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:

இப்போது சனி பகவான் மூன்றாவது முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் சில பிரச்சினைகள் உங்களுக்குப் பாதகமாகத் தோற்றமளிக்கும். உணர்ச்சிவசப்பட்டால், பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையாகப் பிரச்சினைகளைக் கையாளவேண்டும். கோபப்படக்கூடாது. வாக்குவாதங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. விஷயங்களை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமானால், ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும். உங்களுடைய பொறுளாதாரமும் சற்று தேக்கமாகத்தான் இருக்கும். முன்போல் பணம் சரளமாகக் கைக்கு வராது. தடை, தாமதங்கள் ஏற்படும். கைக்கு வரவேண்டியது வராமல் தடைப்படும். கொடுக்கல்-வாங்கலில் இழுபறி ஏற்படும். கடன் விவகாரங்கள் கட்டுக்கடங்கி இருக்கும். நண்பர்களால், சில விரயங்கள் ஏற்படும். முக்கிய மனிதர்களிடமிருந்து முன்போல உதவிகள் கிடைக்காது. உங்கள் செல்வாக்கு சற்று குறையும். உங்களுடைய தகுதிக்குக் குறைவானவர்களிடம் நட்பு வைத்துக்கொள்வதையும் அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்பதையும் தவிர்ப்பது நல்லது. . வெளியூருக்குச் செல்லும்போதும் வெளியூரிலிருந்து திரும்பும்போதும் உங்கள் உடைமைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் இறங்குமுகமாக இருக்கும். போட்டி பொறாமைகளும் அதிகம் இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். கலைஞர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். தாயார், மனைவியால் சில பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால், வீண் செலவுகளும் விரயங்களும் ஏற்படும்.

மூன்று வக்கிர சஞ்சாரங்களில் மூன்றாவது சற்று கடுமையாகத் தென்படுகிறது. இந்த மூன்று சஞ்சாரங்களும் முடிந்தபிறகு மீண்டும் நல்ல பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். இடையில் ஏற்பட்ட மந்தத் தன்மை நீங்கும். பணம் எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் வரும்; எதிர்பாராத இடங்களிலிருந்தும் வரும். திட்டமிட்ட காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். திட்டமிடாத காரியங்களையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயங்களிலும் வெற்றி உங்களுக்குத்தான் என்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

பரிகாரம்:

1. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சித்து வணங்கவும்.

2. குருப் பிரதோஷம், சனிப் பிரதோஷம். சோமப் பிரதோஷமாகிய காலங்களில் சிவாலயத்தில் காராம் பசுவின் பாலினால், அபிஷேகம் செய்க.

3. சனீஸ்வரரின் திருத் தலங்களான திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம் முதலிய ஸ்தலங்களுக்கு சென்று சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்து வழிபடவும்.

வாழ்க வளமுடன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி வீணா.

பூர்வீகச் சொத்துக்களில் சிக்கல் உண்டாகும் என்று, எனது பலனில் போட்டிருப்பது உண்மையே....

என்னுடைய சீதன வீட்டிலும், காணியிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கண் வைத்துவிட்டது.

அதனை தடுக்க ஒவ்வொரு புரட்டாசிச்சனியும் விரதம் இருந்து, எள்ளெண்ணை எரிக்கின்றோம்.

Link to comment
Share on other sites

மகரம்:

makara-rasi.jpg

இதுவரை உமது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது உமது ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இதனை நீங்கள் வாழ்த்துக்கூறி வரவேற்க முடியாது. ஏனெனில் பத்தாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு நல்லது செய்யப் போவதில்லை. பலவகைக் கஷ்டங்களைக் கொடுக்கப் போகிறார்.

உங்கள் பத்தாமிடமான துலாம் சனிக்கு உச்ச வீடு. உமது ராசிநாதனும் குடும்ப அதிபதியும் அவரே . அவர் பத்தில் உச்சம் அடைவது சசயோகம் ஆகும். தந்தை மூலம் நிதியுதவி பெற்று தொழில் புரிபவர்கள் ஏற்றம் அடைவர். உத்தியோக உயர்வு, பணியிட மாற்றம் முதலியவை கிட்டும். பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் நுட்ப பணியினர் மிகுந்த மேன்மை அடைவர். தூர தேசத்திலிருந்து நற்செய்திகள் வரும்.

மற்றபடி, சனி பகவான் பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானத்திற்கும் செயல்பாடுகளுக்கும் சிரமங்கள் உண்டாகும். சௌகரியங்கள் பாதிக்கப்படும். எந்த முயற்சிக்கும் உடனே வெற்றி கிடைத்துவிடாது. நீங்கள் வெகு தீவிரமாகப் பாடுபட்டு எடுக்கும் முயற்சிகளுக்கும் போராடித்தான் வெற்றி பெற முடியும். வேலை தேடுபவர்களுக்கு உடனே வேலை கிடைத்துவிடாது. ஏகப்பட்ட பாடுகளும் கஷ்டங்களும் பட்ட பிறகு கிடைக்கும் வேலையும் அவ்வளவு பிடித்தமான விதத்தில் இருக்காது. குறைந்த சம்பளத்தில் இப்படியொரு வேலைக்குப் போக வேண்டுமா என்று நொந்துகொண்டுதான் போக வேண்டும். உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலையாகவும் இராது. எக்கச்சக்கமாகப் படித்துவிட்டு இந்த வேலைக்கா போகணும் என்று தோன்றும். வேலை கிடைக்காவிட்டால் போகட்டும். சுயதொழில் செய்யலாம் என்றாலோ சொந்தமாக வியாபாரம் செய்யலாம் என்றாலோ அதற்கும் வாய்ப்புகள் கூடிவருவது அரிதாக இருக்கும். அப்படியே கஷ்ட நஷ்டப்பட்டு தொடங்கிவிட்டாலும், தொடர்ந்து நடத்துவது என்பது பெரிய கஷ்ட காரியமாக இருக்கும். அந்த தொழில்/ வியாபாரம் மூலம் முன்னேறுவது என்பது பெரிய கேள்விக்குறி . ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும், பெரும் உபத்திரவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அதைத் தடுப்பதுதான் முதல் வேலை என்பது சனிபகவானின் விளையாட்டாகும். அது ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் கூட அதைத் தொடங்குவதும் நடத்துவதும் பெரிய மலையைப் புரட்டி எடுப்பது போலாகிவிடும். ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்குள் பல வேலைகள் வரிசையாக வந்து பெண்டிங்கில் நிற்கும். எதைச் செய்வது எதைச் செய்யாமல் விடுவது என்று தடுமாறிப்போய் நிற்பீர்கள். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற திருப்தி கிடைக்காது. வெகு பாடுபட்ட வேலைகள் எல்லாம் படு சொதப்பலாகிப் போய்விடும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. பல சமயங்களில் உங்கள் உழைப்பின் பலனை மற்றவர்கள் தட்டிச் சென்று விடுவார்கள். கடினமாக உழைத்து நிறைய பணம் வரும் என்று எதிர்பார்ப்பீர்கள். ஆனால், போட்ட முதல் கூடத் தேறாது.

சனிபகவானின் பார்வை பலன்கள்:

சனி பகவான் பத்தில் இருந்து தனது 3, 7, 10.-ம் பார்வையினால், உமது ராசிக்கு 12, 4, 7. ஆகிய வீடுகளைப் பார்வையிடுகிறார். தனது மூன்றாம் பார்வையினால், உமது ராசிக்கு 12-மிடத்தை பார்வயிடுவதால், அந்த விரய ஸ்தானத்துக்குரிய கெடு பலன்கள் மலிந்து காணப்படும். பண விரயம் இருக்கும். தினமும் ஒரு தண்டச் செலவு ஏற்படும். உங்களையும் மீறி நடக்கும் பண விரயத்தை உங்களால் தடுக்க முடியாது. வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள செலவு செய்ய நினைப்பீர்கள். அது முடியாமல் போகும். அவசியத்துக்கு செலவு செய்ய திட்டமிட்டால், அது அனாவசியத்துக்கு கரைந்துபோகும். வரவுக்கு மீறிய செலவுகள் வரும் யாருக்கோ எப்போதோ போட்ட ஜாமீன் கையெழுத்து இப்போது பிரச்சினை கொடுக்கும். சிலர் நீதிமன்றம் செல்ல நேரும். பணம் செலவு செய்து அதிலிருந்து விடுபட நேரும். பயணம் மூலம் பணி புரிபவர்கள் ஏற்றம் அடைவர். நீண்ட தூரப் பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணத்துக்கு திட்டம் போடுவீர்கள். ஆனால், அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஏதாவதொரு வகையில் தூக்கம் கெடும்.

சனி பகவான் தனது ஏழாம் பார்வையினால், உங்களது 4-வது வீட்டைப் பார்வை செய்வதால், கல்வியில் கூடுதல் கவனம் தேவை. வீடு கட்டும் பணியில் தகுந்த அனுமதி பெற்று தொடர்வது நன்று. வாகனம், கனரகப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நன்று. அக்கம்பக்கத்தை அனுசரித்துப் போவது நலம். இந்த சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் மாத்ரு-பந்து ஸ்தானத்தில் பதிவதால், உங்களால் நேராநேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. ஆறிப்போன உணவு கிடைத்தாலே போதும் என்றாகிவிடும். நேரம் தவறி சாப்பிடுவதால், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். எதையும் செய்ய ஊக்கம் இல்லாதவர்களாக இருப்பீர்கள். உறவினர்களுடன் பகை ஏற்படலாம். அது தீராப் பகையாகவும் மாறும்.

சனி பகவானின் பத்தாம் பார்வை உங்களுடைய களத்திர ஸ்தானத்தில் பதிவதால், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். சிறு பிரிவு ஏற்படவும் வாய்ப்புண்டு. மனைவிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும். மருத்துவச் செலவுக்கென்று தனியாக ஒரு தொகையை ஒதுக்கவேண்டியிருக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் இழுத்துக்கொன்டே போகும். அப்படியே முடிவாகி திச்சயதார்த்தம் ஆனாலும், அதன்பின் திருமணம் நடைபெறக்கூடிய ஒவ்வொரு காரியமும் தடைப்படும். திருமணம் நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கூட்டுத் தொழிலில் சிறுசிறு மனஸ்தாபம் உண்டாக ஏதுவாகும். கவனமுடன் பரிசீலித்து நடந்துகொள்வது நல்லது.

இனி சனி பகவானின் வக்கிர சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். இந்த சனியின் இரண்டரை ஆண்டு சஞ்சாரத்தில் மூன்று முறை வக்கிர அதியில் சஞ்சரிக்கிறார்.

(1). 9.2.12. முதல் 24.6.12.வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:

இந்தக் காலத்தில் உங்களுக்கு பணத் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். எந்த திட்டமும் முன்கூட்டியே போட்டுவிட முடியாது. கைக்கு வருவது போல இருக்கும் பணம் சமயத்துக்கு வராது. எனவே உங்கள் பட்ஜெட் தடுமாறும். திட்டமிட்ட வேலையும் சரிவர நடைபெறாது. வருமானம் சம்பந்தமான அத்தனை காரியங்களும் தடைப்படும். அதுமட்டுமில்லாமல் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் ஏதாவது தடை வந்துகொண்டே இருக்கும். அந்த இடையூறை நீக்கிவிட்டு முன்னேறுவதில் ஏகப்பட்ட சறுக்கல்கள் இருக்கும். அவசரப்பட்டாலோ அல்லது ஆத்திரப்பட்டாலோ எதுவும் நடக்காது. அன்றாட வேலைகளைக்கூட கவனிக்க முடியாமல், மறதி, தயக்கம், அசதி, அவநம்பிக்கை என்று நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அவ்வப்போது ஏதாவது நோய் வாட்டிக்கொண்டே இருப்பதால், ஆரோக்கியமும் சரியாக இருக்காது. உத்தியோகத்திலிருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவால், கஷ்டப்படுவார்கள். தொழில், வியாபாரங்கள் நஷ்டத்தில்தான் இயங்கும். பெரிய லாபத்தை எதிர்பார்க்கமுடியாது. குடும்பத்தில் பற்றாக்குறை ஏற்படும்.

(2). 16.2.13.முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிரகதியில் இயங்குகிறார். இந்தக் காலத்தில் எப்போதும் முகத்தில் ஒருவித வாட்டம் குடிகொண்டிருக்கும். உடம்பிலும் ஒரு புத்துணர்ச்சியோ சுறுசுறுப்போ இல்லாமல், இருப்பீர்கள். ஊக்கமில்லாமலே எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்ய முடியாமல் தத்தளிப்பீர்கள். மகிழ்ச்சி குறைந்து, சோர்வுடனும் துக்கத்துடனும் காணப்படுவீர்கள். மறதி, அலுப்பு, சோம்பல், சுகமின்மை என்று எப்போதும் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர் போல் இருப்பீர்கள். முகம் பொலிவிழந்து நடமாடுவீர்கள். ஊட்டமும் குறைவாக இருக்கும். மனதில் ஏதேதோ கலக்கங்கள் நிறைந்திருக்கும். அதனால், உங்களால் தெளிவான எந்த முடிவுக்கும் வர முடியாது. உடனடியாக எடுக்க வேண்டிய முடிவுகளைக் கூட எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உங்களுடைய சிந்தனைகள் திசைமாறிச் செல்லும். உங்களுடைய பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். சில சமயம் கைநிறைய பணம் புழங்கும். சில சமயம் கையில் பத்து ரூபாய்கூட இருக்காது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கையில் பணம் அதிகமாகப் புழங்கும்போது செலவு எதுவும் வராது. கையில் பத்து ரூபாய்கூட இல்லாதபோது தள்ளவே முடியாத செலவு வந்து படுத்திவிடும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகளும் ,கடன் நெருக்கடிகளும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில புதிய நெருக்கடிகள் தோன்றும். தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடுவார்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவார்கள். உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். தாய்வழி உறவினர்களால் பிரச்சினை ஏற்படும். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சுபச் செலவு ஏற்படும்.

(3). 3.3.14. முதல் 23.7.14 வரையிலான 4 மாதம் 20 நாட்கள்;

இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிரமடைந்திருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் காரணமில்லாமல் ஒருவித படபடப்புடன் காணப்படுவீர்கள். எதற்கெடுத்தாலும் மற்றவர்கள்மீது கோபப்பட்டு எரிந்து விழுவீர்கள். காரணமில்லாமல் மற்றவர்கள் மீது வெறுப்பும் எரிச்சலும் காட்டுவீர்கள். சில வெற்றிகள் பெற்றாலும் நீங்கள் சந்திக்கும் தோல்விகள் சில உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும். மனதில் குழப்பங்களும் கவலைகளும் தலைதூக்கும். உங்களுக்கு ஏற்படும் பணத்தேவைகளே அதற்குக் காரணமாகும். சில செலவுகளை எவ்வாறு சமாளிப்பது என்று தடுமாறிப் போவீர்கள். வாக்குவாதங்கள், வம்பு சண்டைகள் என்று வாழ்க்கை போர்க்களம் போலவே இருக்கும். பக்குவமாக எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் ஒதுங்கிப் போவது நல்லது. சிறு சிறு திட்டங்களில் கவனம் செலுத்தினால் அவற்றில் ஓரளவு வெற்றியும் கிட்டும். பெரிய திட்டங்களாகப் போட்டீர்கள் என்றால், அவற்றில் உங்களுக்கு வெற்றியே கிட்டாது. பெரிய திட்டங்களுக்கு இது உகந்த நேரமல்ல. ஆகைலால் அவற்றை மூட்டை கட்டி வைத்துவிடுங்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் மனைவியின் புலம்பல் பலமாக இருக்கும். தாய்வழி உறவினர்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். தாயார் வழியில் மருத்துவச் செலவு உண்டாகும்.

இப்படியாக இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் முடிவடைந்தபின் சற்று முன்னேற்றம் தெரிகிறது. பொருளாதார நிலை அபிவிருத்தி அடையும். மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் குடிகொள்ளும். செய்யவேண்டிய வேலைகளை வேகமாகச் செய்து முடிப்பீர்கள். கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்து சென்ற நண்பர்கள் இப்போது திரும்பி வந்து நட்பு பாராட்டுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களின் நிலை மேன்மையடையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் படிப்பு சிறந்தோங்கும். திருமணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

பரிகாரம்:

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க.

2. ஆதித்ய ஹிருதயம்(அ) தசரதர் அருளிய தூரித்ரய தகன ஸ்தோத்திரம் பாராயணம் செய்க.

3. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாத்தவும். வன்னி இதழ்களால் அர்ச்சிக்கவும். எள்ளு தீபம் ஏற்றவும்.

4. மகாப்பிரதோஷம், சதுர்த்தி, சனிவார அஷ்டமி, பௌர்ணமி பைரவர் அம்பிகை வழிபாடு, விஷ்ணு- லட்சுமி பூஜைகள் காயத்ரி ஜபம், கலைமகள் வழிபாடு யாவும் உகந்தது.

5. சனீஸ்வர ஸ்தலங்களான முக்குருணி வினாயகர் மதுரை; தனி சனீஸ்வரர் பிரம்ம ஸ்தான அம்பிகை திருச்சி : உறையூர் வெக்காளியம்மன்; பைரவன்பட்டி பைரவர்; நந்தியின் திருமண வைபவ ஸ்தலமான திருமழப்பாடி , யோகராமர், விஷ்ணு துர்கை அமைந்த படவேட்டைவேலூர், வட ஆற்காடு மாவட்டம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று குறிப்பாக அர்ச்சனை ஆராதனை, அன்னதானம் செய்து உள்ளன்புடன் சனி, வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது உத்தமம்.

6. சனீஸ்வரனின் புகழ்மிக்க ஸ்தலங்களான திருநள்ளாறு. குச்சானூர் ஆகிய இடங்களில் அமைந்த சனி பகவானையும் ஆற்காடு- ஆரணிக்கு அருகே ஏரிக்குப்பம் என்னும் கிராமத்தில் யந்திர ரூபத்தில் அமைந்த சனிஸ்வர பகவானையும் தரிசனம் செய்யவும்.

அனைத்து கஷ்டங்களும் நீங்கும் . வாழ்க வளமுடன்!

கும்பம்:

kumba-rasi.jpg

இந்த சனிப் பெயற்சி மூலம் உங்களுக்கு அஷ்டம சனியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதுவே பெரிய நன்மைதான். சனியின் அசுப பலன்கள் அமையாமல் இருந்தாலே பெரிய நன்மைதான். ” அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி” என்று ஒரு பழமொழி உண்டு. பணிச்சுமையும் குடும்பப் பொறுப்பும் கூடி உங்களை ஒரு வழியாக்கியது. தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திலிருந்து ஒன்பதாமிடத்திற்கு மாறப் போகிறார். ஒன்பதாமிடத்திற்கு பாக்கிய ஸ்தானம் என்றும் மகாலட்ஸ்மி ஸ்தானம் என்றும் பெயருண்டு. உமது ராசிநாதனான சனி பகவான் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். இதனால், ஓரளவு யோகத்தையும் தரும். தங்க சனியாக இந்தத் தரணியில் ஒளி வீசப் போகிறீர்கள். அஷ்டம சனியில் இருந்துவந்த சில இடையூறுகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். உங்க முயற்சி, முதலீடு எதிர்பார்ப்பு இவற்றில் சற்று சாதகம் அமையக்கூடும். ராசிநாதன் ஒன்பதில் உச்சம் பெறுவது மிகவும் விஷேஷம். தந்தை மூலம் தனலாபம் கிட்டும். வீடுகட்ட கடன் கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்க இடமேற்படும்.புத்திர பாக்கியம் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையில் இருந்து வந்த கருத்துவேற்றுமை அகலும். சனி பகவானின் ஒன்பதாமிடத்து சஞ்சாரம் உங்களுக்கு அடிப்படையான பாதிப்பு எதுவும் ஏற்படாது. எனினும் கடினமான வேலைப்பளு, காரியச் சிரமங்கள் அதிகமான செலவினங்கள், அசௌகரியங்கள் போன்றவை ஏற்படும். நீங்கள் இதுவரை செய்துவந்த தான தருமங்கள், தடைப்படும். தைரியமும் தெம்பும் குறைந்தது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படும்.மனதில் அச்சம் குடிகொள்ளும் .மனபலவீனம் ஒருவித தளர்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதார நிலை மிகமிக சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாவிட்டாலும், தேவைக்கேற்ற பணம் எப்படியாவது கிடைத்துவிடும். வருமானம் அதிகமானால், செலவுகளும் அதிகமாவதால், உங்களுக்கு சேமிப்பு என்று எதுவும் தங்க வழியில்லை. ஆனால், வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துகள் வாங்க வழி ஏற்படும். சண்டை சச்சரவுகள் வராமலிருக்காது. ஆனால், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. விட்டுக்கொடுத்து பின்வாங்கிவிடுவீர்கள். வழக்கு, விவகாரங்கள் இழுபறியாகவே இருக்கும். நோய் நொடிகள் வந்தலும் உடனுக்குடன் குணமாகிவிடும். சிறு அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்; என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். சிறு விபத்துக்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு. கணவன்-மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அது வெளியே தெரியாது. உடன்பிறந்தவர்களால், செலவினங்களும் ஏற்படும். விரயங்களும் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தையில் மந்தமான போக்கு காணப்படும். சிலர் வெளிநாடு சென்று படிக்க நேரும். ஏதேனும் ஒரு நூதன கலையால் விளம்பரம் ஆவீர்கள். ஒன்பதாமிட்ம் என்பது லட்சுமியின் ஸ்தானமாகும். இதனால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பயப்படக்கூடிய அளவு இருக்காது. தன்னுடைய முக்கியத் தேவைகளை தனக்கும் , தன் குடும்பத்திற்கும் வாரிசுகளுக்கும் பயன்படுத்திக்கொள்வீர்கள். அத்துடன் மனைவி., பிள்ளை பேரன் பேத்திகளுக்கு என்று பிற்காலத்துக்கு தேவையான திட்டங்களும் முதலீடுகளும் செய்வீர்கள். நல்ல வேலை, நல்ல அதிகாரி முதலாளி, தொழிலாளி ஒத்துழைப்பு என்று யாவும் சற்று சாதகமாக இருக்கும்.

சனி பகவானின் பார்வை பலன்களைப்பற்றிப் பார்ப்போம்:

சனி பகவான் தனது 3,7,10-ம் பார்வைகளால், உங்களுடைய லாப ஸ்தானம், தைரிய- பராக்கிரம ஸ்தானம், பகை- ரோக- கடன் ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுடைய லாப ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானம் பாதிப்படையக்கூடும். உங்கள் பொருளாதார நிலை எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். வருமானம் தொடர்பான செயல்களில் தடைகள், தடங்கல்கள், தாமதங்கள், இடையூறுகள் போன்றவை ஏற்படும். உழைப்புக் கிரகமான சனி உங்களுக்குப் பாதகமாக சஞ்சரிப்பதால், உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டாது. சில சமயங்களில் உங்கள் உழைப்பின் பயனைப் பிறர் தட்டிச் சென்று விடுவார்கள். இருப்பினும் உங்கள் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வந்து விடும்.

சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய – பராக்கிரம ஸ்தானத்தில் பதிவதால், மனதில் தைரியம் குறையும். எதையும் உங்களால் எதிர்க்க முடியாது. எதிர்க்க வேண்டிய மிக அவசியமான பிரச்சினைகளைக் கூட நீங்கள் சமாதாதானமாய்ப் போய்விடலாமா என்றுதான் யோசிப்பீர்களேயொழிய நியாயத்தை தட்டிக் கேட்கத் தயங்குவீர்கள். மனதில் தைரியம் குறையும். துணிச்சலாக செயல்படத் தயங்குவீர்கள். மனதில் நம்பிக்கை இல்லாமல் போய் அவநம்பிக்கை குடிகொள்ளும். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அதை வெற்றிகரமாக செய்யமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிடுவதால், அந்த விஷயத்தில் உங்களுக்குத் தோல்வியே கிடைக்கும். எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு வெற்றிகள் கிடைக்கும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஏற்றமான நிகழ்வுகள் நடைபெறும். தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தூர தேசத்திலிருந்து நற்செய்திகள் வரும். மனைவி வழியில் சுப நிகழ்ச்சியும் அதனால், கணிசமான செலவுகள் உண்டாகும். வீடு, மனை, பூமிபோன்றவற்றில் சீர்திருத்தம் செய்வீர்கள். உமது பெயரும் புகழும் ஓங்கும்.

சனி பகவானின் பத்தாம் பார்வை பகை- ரோக – கடன் ஸ்தானத்தில் பதிவதால், அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுதல், வாக்குவாதங்களின்போது தரக்குறைவாகப் பேசுதல், போன்றவை காரணமாக சிலரைப் பகைத்துக்கொள்ள நேரும். ஆரோக்கியம் சீராக இருக்காது. அடிக்கடி நோய் நொடிகள் ஏற்பட்டு உங்களை முடக்கிப் போடும். அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் . அதிக செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். பழைய கடன்களும் அவ்வப்போது தொல்லை கொடுக்கும். இது தவிர எதிரிகள் விலகுவர். உங்களுக்கு முன்னால், அவர்கள் மிகவும் பலவீனமடைந்து பின்வாங்குவர். கடன் தீரும். உங்களுடைய கவலைகள் சற்று குறையும். வீடுகட்ட, கார் வாங்க கடன் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையில் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வருமானம் குறைவில்லாமல் இருக்கும்.

சனி பகவான் இந்த இரண்டரை வருட சஞ்சாரத்தில் மூன்று முறை வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.

(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் :

இப்போது சனி பகவான் வக்கிரமடைந்து சஞ்சரிக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் சில சிரமங்கள் ஏற்படும். தடைகளும் தாமதங்களும் ஏற்படும். அஷ்டம சனியின் பிடியிலிருந்து முழுவதுவதுமாக விலகிவிட்டோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாது. சனிபகவானின் சஞ்சாரம் உங்களுக்குப் பாதகமாக இருப்பதால், அவர் கொடுக்கும் தொல்லைகளை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். நோய் நொடிகள் என்று வந்துகொண்டிருக்கும். உரிய நேரத்தில் தக்க சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து விடுவீர்கள். உங்கள் வேலைகளை தொடர்ந்து கவனிப்பீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. ஆயினும் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணம் கிடைத்துவிடும். கொடுக்கல்- வாங்கலில் குளறுபடிகள் ஏற்படும். பழைய கடன்களைத் தீர்க்க புதிய கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சினைகள் தோன்றினாலும், ஓரளவுக்கு லாபம் கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடினமாக உழைத்து மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுவீர்கள். கடன் வசதியும் கிடைக்கும். கடன்கள் தடங்கலின்றிக் கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையே நல்ல உறவு நிலவும். பிள்ளையின் படிப்பு வகையில் அதிக செலவு ஏற்படும்.

(2). 16.2.13. முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரத்தில் இருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் எதுவுமே நீங்கள் நினைப்பதுபோல் நடக்காது. நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். நடப்பது வேறொன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எது சொன்னாலும் அது மற்றவர்களுக்கு தப்பாவே தெரியும். நீங்கள் சொல்லும் நல்ல யோசனைகூட வீணாகிப் போகும். தற்போது உங்களிடம் காணப்படும் கவனக் குறைவினால், செய்யும் காரியங்களில் அதிகமான குளறுபடிகள் காணப்படும். கைகால்களில் அடிபடுதல், முதுகுவலி கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பேற்படும். உங்களுடைய பொருளாதார நிலைமை சிறப்பாக இல்லையென்றாலும், நிதி நெருக்கடிகளை எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் சற்று தொய்வு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வீட்டுத் திருமணங்களில் குடுப்ம்பத்துடன் கலந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். உத்தியோகம் பார்ப்பவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படாது. கலைஞர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு நிரந்தரமாக இருக்காது. ஒருநாள் இருக்கும் சந்தோஷம் அடுத்த நாள் இருக்காது. யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் காணாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி போயிருக்கும்.

(3). 3.3.14. முதல் 23.7.14. வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:

இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்த்க் காலக் கட்டத்தில் உங்களிடம் ஒரு நிலையற்ற போக்கு தென்படும். ஒரு நாள் சுறுசுறுப்பாக இருந்தால், இரண்டு நாட்கள் உம்மென்று உட்கார்ந்திருப்பீர்கள். ஒருநாள் உற்சாகம்; ஒரு நாள் கவலை என்று இருப்பீர்கள். நீங்கள் முடித்துவிடலாம் என்று லேசாக நினைத்த காரியங்கள் இழுத்துக்கொண்டே போகும். கடினமானது என்று நீங்கள் நினைக்கும் வேறு சில காரிய்ங்கள் சுலபமாக முடிவடையும். , ஒரு காரியத்தை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்; அதே சமயம் அடுத்த காரியயத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவீர்கள். ஒருநாள் கை நிறைய பணம் இருக்கும் இன்னொரு நாள் பத்துரூபாய்கூட இருக்காது. சின்னச் சின்ன செலவுக்குக்கூட தவிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அலட்சியம் காட்டாமல், முழு கவனம் காட்டினால்தான் லாபம் ஏற்படும் ; லாபம் இல்லையென்றாலும் நஷ்டத்திலிருந்தாவது தப்பிக்கலாம். ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்தவேண்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும் . அவைகளை தீர்க்கிறேன் பேர்வழி என்று இறங்கிவிட வேண்டாம். மனைவியோ குடும்பப் பெரியவர்கள் யாரோ தீர்த்துக்கொள்வார்கள். ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் இல்லாத காலங்களிலும் , மூன்றும் முடிந்த பிறகும், உங்களுக்கு சற்று ஆறுதலான காலமாக இருக்கும். நற்பயன்களாக நடக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் பணம் வரும்; எதிர்பாராத் இடங்களிலிருந்தும் பணம் வரும். செலவுகளை சமாளிப்பதில் சிரமம் இருக்காது. நகை, நட்டு, விலை உயர்ந்த பொருட்கள், வசதிகளைப் பெருக்கும் சாதனங்கள், மின் பொருட்கள் முதலியவற்றை வாங்குவீர்கள். மனதில் குழப்பமின்றி தெளிவாக சிந்தித்து நல்ல முடிவாக எடுத்து வெற்றிக்கொடி நாட்டுவிர்கள். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படும். அனைத்துவிதமான பலன்களும் நற்பலன்களாகவே இருக்கும்.

பரிகாரம்:

1. தத்தம் குலதெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள் மற்றும் குருமார்கள், சித்த புருஷர்கள் ஆகியோரை வணங்கவும்.

2. சனியின் குருவான பைரவ மூர்த்தி, ராம ஆஞ்சநேயர், அரசன்கோவில் சுந்தர மகாலட்சுமி, திருப்பட்டூர் புருஷோத்தம நாயகி; ஆகியோரை வழிபடவும்.

3. ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சித்த புருஷர்கள் , திருவக்கரை வக்கிர காளி ஆகியோரை வணங்கவும்.

4. பிரதோஷம், ஏகாதசி, அஷ்டமி, பைரவர், துர்க்கை பூஜைகள், நூல், தாமரை இவற்றின் திரியின் முலம் தீபம் ஏற்றுவது, லட்சுமி வழிபாடு யாவும் உகந்ததே.

5. குபேர கணபதி- பிள்ளையார்பட்டி; லிங்க வடிவில் உள்ள எந்திர சனீஸ்வரர் ஏரிக்குப்பம்; காயத்ரி விஷ்ணு துர்க்கையோடு உள்ள தனி ஸ்தலமான சிதம்பரம்; குபேரன் சங்கநிதி , பதுமநிதியோடு உள்ள சென்னை ரத்தின மங்களம் போன்ற இடங்களுக்குச் சென்று அர்ச்சனை ஆராதனைகள் செய்து வழிபாடுகளை மேற்கொள்ளவும்

6. பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி கருங்குவளை சாற்றி ” ஓம் சனீஸ்வராய நமஹ ” என்று சொல்லி 9 முறை வலம் வந்து வணங்கவும்.

7. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு காராம் பசுவின் பாலினால், அபிஷேகம் செய்து ” ஓம் நம சிவாய நம ஓம் ” என்று சொல்லிக்கொண்டு 11 முறை வலம் வந்து வணங்கவும்.

8. தவறாமல் திருநள்ளாறு, குச்சானூர் முதலிய சனீஸ்வர ஸ்தலங்களுக்குச் சென்று வரவும்.

9. தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும்.

மீனம்

meenam-rasi.jpg

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருந்து வந்த சனி பகவான் இப்போது எட்டாமிடத்துக்கு அஷ்டம சனியாக வரப் போகிறார். ஏழாமிடத்தில் இருந்த சனி பகவான் பலவித சங்கடங்களைக் கொடுத்து வந்தார். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் சங்கடங்கள், உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு சக ஊழியர்களாலும் மேலதிகாரிகளாலும் சங்கடங்கள் என்று பலவித தொல்லைகளை அனுபவித்து வந்தீர்கள். இப்போது சனி பகவான் அஷ்டமத்து சனியாக சஞ்சரிக்கப் போகிறார். உங்க ராசிக்கு இயற்கையிலேயே அசுபர் சனீஸ்வரர். அப்படிப்பட்டவர் உங்க அஷ்டமத்தில் சஞ்சரிப்பது விபரீத யோகம் என்று கூறப்படும். இப்படிப்பட்ட சனிபகவான் உங்கள் ஆயுள் பலனைக் கூட்டுவார். கெட்டவர் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறும். தேவ குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு அசுர குருவில் ராசியில் அமைந்த சனீஸ்வரர் அசுப பலனைத் தரக்கூடும் தக்க வழிபாடுகளின் மூலம் எதிலும் ஜெயித்து வாழ முடியும். உங்கள் ராசிக்கு பனிரெண்டுக்குரிய சனி பகவான் 8ல் உச்சம் பெறுவதால், பாதிப்புகள் அதிகம் இருக்காது. ஆனாலும் அஷ்டம சனிக்கென்று சில பயமுறுத்தல்கள் இல்லாமல் இருக்காது. ஏழாம் இடத்தில் சஞ்சரித்த காலத்தில் கொடுத்த அதிருப்தியான பலன்களைவிட அதிக அளவில் அதிருப்தியான பலன்களைக் கொடுத்து உங்களைச் சஞ்சலப்படுத்துவார்.

சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சிலருக்கு உழைப்பதற்கே உருப்படியாக சந்தர்ப்பம் கிடைக்காது. வேலை தேடி அலைபவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்காது. அப்படியே வேலை கிடைத்தாலும் அது நல்ல ஊதியத்தைக் கொடுக்கும் வேலையாக இருக்காது. புதிதாக தொடங்க நினைத்தாலும் தாமதமும் தடையும் ஏற்படும். அப்படியே தொடங்கிவிட்டாலும், தொடக்கத்தில் மந்தமான போக்கே காணப்படும். முயற்சியின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும், தடையும் தடங்கலும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். ஏற்கெனவே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருப்பவர்கள் புதிய நெருக்கடிகளை சந்திப்பார்கள். கவனமாக இல்லாவிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி இருக்கும். தற்காலிக வேலை நிக்கம் செய்யப்படலாம் . விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படும். பணநெருக்கடி ஏற்படும். பெரிய செல்வந்தராக இருந்தாலும் இந்தக் காலக் கட்டத்தில் ‘ஐந்துக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறப்பார்கள் ‘ என்பார்களே அதுபோல பணத்துக்கு நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க முடியாது. கொடுக்கல்-வாங்கலில் குளறுபடிகள் இருக்கும். கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு வாய்த் தகறாறு, அடிதடி என்று முடியும். குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். உடல் உபாதைகள் உண்டாகும். உரியவேளையில் செய்ய வேண்டியதை சரியாக செய்ய மாட்டீர்கள். மன பயம் இருக்கும். விரக்தி, விபரீத முடிவுகள் ,விரயங்கள், தடைகள் , தனக்கு எல்லாம் இருந்தும் எதையும் சாதிக்க முடியாதநிலை இப்படி சில இடையூறுகளுக்கு உள்ளாக நேரும். வெளிநாட்டு பயணம் கைகூடாது. அவ்வப்போது ஆரோக்கிய பாதிப்பு இருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நெருங்கிய உறவினரிடம் சுமுக நிலை குறையும். தன் பிள்ளை, பேரன்-பேத்திகள் இவர்களின் திருமண வைபவம் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு சந்தான பிராப்தி இவை எல்லாவற்றிலும் பூர்ண அம்சங்கள் இருக்காது.

இனி, சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். சனி பகவான் தன்னுடைய 3, 7, 10 இடத்துப் பார்வைகளால், உங்களுடைய ஜீவன- காரிய ஸ்தானம், தன-குடும்ப- வாக்கு ஸ்தானம் , பூர்வ புன்ணீய ஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.

சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கலுடைய ஜீவன காரிய ஸ்தானத்தில் பதிவதால், உங்களுடைய வருமானத்திற்கு ஆதாரமான எதிலும் கடினமான உழைப்போ அல்லது பிரச்சினையோ அடிக்கடி ஏற்படும். ஒரு காரியத்தை செய்வதற்குள் நீங்கள் கசக்கிப் பிழியப்பட்டு விடுவீர்கள். சனி பகவான் உமது ராசிக்கு பத்தாம் வீட்டைப் பார்வை செய்வதால், தொழில்வளம் பெருகும். நேரடி கவனம் அவசியம். புதிய முதலீடு செய்ய கடன் கிடைக்கும். பழைய கடன் அடைபடும் .சிலர் தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவர். புத்திர பாக்கியம் ஏற்படும். மாமன் -மைத்துனர் வழியில் சுபச் செலவு ஏற்படும்.

சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய ராசிக்கு இரண்டாமிடத்தைப் பார்ப்பதால், வாக்கினால் ஜீவனம் புரிபவர்கள் அதிக லாபம் அடைவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணம் கையாளும் பணியில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், பணம் கையிழப்பு ஏற்படும்.

சனி பகவான் தனது ஏழாம் பார்வையினால், பணவரவுகளில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார். நாணயம் பாதிக்கப்படும். குடும்பத்தில் வாக்குவாதங்கள், பிரிவினைகள், நிம்மதியின்மை போன்றவை ஏற்படும். பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையாது. வீண் வாக்குவாதம் செய்தல் தாறுமாறாகப் பேசுதல் போன்றவற்றால் பகை உண்டாகும்.

சனிபகவான் தன்னுடைய பத்தாம் பார்வையினால், உங்களுடைய பூர்வ- புண்ணிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். அவ்வப்போது மறதி, மந்தத்தன்மை, தாமதக்குணம், கவனக்குறைவு தவறான முடிவுகளை எடுத்தல், கோணல் மாணலாக சிந்தித்தல் போன்றவை ஏற்படும். இந்த நேரத்தில் தவறான முடிவுகளே உங்களுக்கு சரியான முடிவாகத் தெரியும். எது சரி, எது தப்பு என்று புரியாமல் தவிப்பீர்கள். பிரபலங்கள், பெரிய மனிதர்களின் தயவை நாடிச் சென்றாலும், அந்த முயற்சி சரிவர கைகூடாது. பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் தீரும். கணவன் (அ) மனைவி வழியில் அனுகூலம் கிட்டும். விரோதிகள் விலகிச் செல்வர். கோர்ட், கேஸ்களில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். நேரடி கவனம் செலுத்தினால், தொழிலில் அபிவிருத்தி கிட்டும். சுற்றத்தாரிடையே நிலவிய சங்கடம் விலகும். திருமணம், வளைகாப்பு முதலிய சுப நிகழ்வுகள் நிகழும்.

இந்த சனிபெயர்ச்சிக்குரிய இரண்டரை வருட கால கட்டத்தில் மூன்று முறை சனி வக்கிர சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.

அதற்குரிய பலன்களைப் பார்க்கலாம்.

(1).9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:

இப்போது சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் வம்பு சண்டைகள் தேடி வரும். ஒதுங்கிப் போய்விடுவது நல்லது. வாக்குவாதங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதுபோல் விட்டுக்கொடுத்துப் போய் விடுங்கள். சமாதானவிரும்பியாக ஒரு தோற்றத்தைக் கொடுத்து பின்வாங்கிவிடுங்கள். கால் தவறிக் கீழே விழுதல், வாகனத்திலிருந்து கீழே விழுதல் போன்றவற்றால் ரத்தக் காயம் ஏற்படலாம். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. வரவேண்டிய பணம் மொத்தமாக வராமல், சிறிதுசிறிதாக வரும். அதனால் அதை உருப்படியாக செலவு பண்ண முடியாமல் போகும். கொடுக்கல்- வாங்கலில் மந்தமான போக்கு காணப்படும். வருமானம் தொடர்பான செலவுகளில் தடையும் தடங்கல்களும் ஏற்படும். எந்தக் காரியத்தையும் எளிதாக செய்து முடித்துவிட முடியாது. தீவிர முயற்சி தேவைப்படும். நேற்றுவரை உங்களுடன் இருந்தவர்கள் இன்று திடீரென உங்களைவிட்டு விலகிச் சென்று உங்களைப் பற்றித் தப்பாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கு நிலவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். வேலைப்பளு அதிகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்காது. தொழிலாளர்கள் கிடைக்கவேண்டிய சம்பள உயர்வைக்கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கும்.. குடும்பத்தில் தாயார் அல்லது மனைவியால் பிரச்சினைகள் ஏற்படும். போதாக்குறைக்கு உறவினர்களும் வந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

(2). 16.2.13.முதல், 12.7.13.வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:

இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் செலவுகள் அதிகம் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வரும். ஆரோக்கியத்தில் சிறுசிறு அளவில் குறைகள் ஏற்பட்டாலும் உங்கள் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படாது. உழைப்புக் கிரகமான சனிபகவான் பாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுடைய உழைப்பு எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காது. இந்த நேரத்தில் பாதிப் பலன் கிடைத்தாலும் சந்தோஷப்படுக்க வேண்டியதுதான். கொடுக்கல்- வாங்கலில் மனஸ்தாபம் ஏற்படும். இப்போது உங்களுடைய சிந்தனை சரியான பாதையில் செல்லாது. தவறான முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் சில விரயங்களை ஏற்படுத்தும். எதிலும் திட்டமிடாமல் செயல்படுவீர்கள். அதனால் வெற்றி பெறுவது அரிதாக இருக்கும். அதிகமாக அறிமுகமில்லாதவர்களிடமிருந்து நல்ல உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் பிஸியாக நடைபெறுவதாக தோன்றினாலும், லாபத்தைப் பார்க்க முடியாது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில், மேலதிகாரிகளிடமிருந்தும், சக ஊழியர்களிடமிருந்தும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். கலைஞர்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கடன் பிரச்சினைகள் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மூலமாக சில நல்ல உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு.

(3). 3.3.13.முதல், 23.7.14. வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:

இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் பண வரவுகளில் தடைகளும் சறுக்கல்களும் ஏற்பட்டாலும் எப்படியாவது செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். நண்பர்களுடன் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்படும். பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. வாகனம் வாங்குதல், ஓட்டுதல், பழுது பார்த்தல் ஆகிய அனைத்திலும் குறைக்ளும் குளறுபடிகளும் ஏற்படும். ஆரோக்கியத்தில் குறைபாடுகள் வந்தாலும் அது உங்கள் செயல்பாடுகளைப் பாதிக்காது. நீண்ட தூரப் பயணங்கள், இடமாற்றங்கள் போன்றவை ஏற்படும். பொறுப்புகளின் சுமை அதிகமாகி உங்களைத் திணற வைக்கும். கடமைகளை சரிவர செய்ய முடியாது. தாமதமும் தேக்கமும் உண்டாகும். உங்களுடைய முக்கியத்துவம் குறையும். முன்னேற்றமும் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்க முடியாமல், கலங்கிப் போவார்கள். கடினமாக வேலைவாங்கி கசக்கிப் பிழிவார்கள். தாங்கமுடியாமல், கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் பற்றாக்குறைப் பிரச்சினை கணவ்ன்-மனைவிக்கிடையே பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

இந்த மூன்று வக்கிர சஞ்சாரங்களும் நீங்கப்பெற்றபின் ஓரளவுக்கு நிலைமையில் முன்னேற்றம் தெரியும். உங்களிடம் குடிகொண்டிருந்த மந்தத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். உடம்பில் ஊக்கமும் ஊட்டமும் அதிகமாகும். எப்போதும் உற்சாகமாக இருப்பீர்கள். முடக்கநிலை மாறி முயற்சிகள் எடுக்க ஆரம்பிப்பீர்கள் . முட்டுக்கட்டைகள் நீங்கும். வசதிகளும் வாய்ப்புகளும் பெருகும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணவரவில் எந்தவித தடையோ தாமதமோ ஏற்படாமல் பொருளாதார நிலை மேம்படும். வற்றாத அருவி போல கைக்கு பணம் வந்துகொண்டே இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம், ப்ணி உயர்வு, சம்பள உய்ர்வு முதலியவை கிடைக்கும். திருமணப்பேச்சுவார்த்தைகள் தொடரும். திருமணமும் நிச்சயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்:

1. குரு பிரதோஷம், சனிப் பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம் ஆகிய விஷேஷ தினங்களில் சிவாலயம் சென்று, அபிஷேக திரவியங்கள் முடிந்த அளவு வாங்கித் தரலாம். சிவ புராணம் படிக்கவும்.

2. பிரதி சனிக் கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி வழிபட நன்று.

3 தசரதர் அருளிய தாரித்ரய தகன ஸ்தோத்திர தீபம் பாராயணம் செய்க.

4. வழிபாடுகளில் பிரதோஷம், குறிப்பாக வியாழன், சனியில் வரும் பிரதோஷம், இதே கிழமைகலில் வரும் தேய்பிறை அஷ்டமி, பைரவர், துர்க்கை, காளி வழிபாடு, ராகுகால சரபேஷ்வரர் வழிபாடு குபேர லட்சுமி பூஜை , காயத்ரி உபாசணை, பிரம்மா சரஸ்வதி வழிபாடு அல்லது மூவருமாக இணைந்த தாத்தாத்ரேயர் வழிபாடு, ஆஞ்சனேயர் உபாசனை, ஆறுமுகப் பெருமான் வழிபாடு யாவும் ஏற்றதே.

5. அஷ்ட கணபதி, மற்றும் சனீஸ்வரர் மகன் மாந்தி வழிபட்ட ஆலயம், நர்த்தன பள்ளியறை கொண்ட மணக்குழ வினாயகர், பாண்டி, எட்டு கைகளுடன் கூடிய துர்க்கை, எமகண்டீஸ்வரம் பிரம்மஸ்தான ஆஞ்சனேயர்., சுவாமிமலை முருகன் இதன் ஸ்தலங்களுக்கு சென்று அர்ச்சனை, ஆராதனை , சனி, வியாழக் கிழமைகளில் வழிபடுதல் நலம்.

6. சுயம்பு லிங்கமாகக் காட்சி தரும் குச்சானூர் சனீஸ்வரர், ஆரணி ஏரிக்குப்பத்தில் எழுந்தளியுள்ள எந்திர வடிவிலான சனீஸ்வரர், கோளாறு நீக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் இவர்களைத் தரிசித்து தகுந்த பரிகாரங்களை செய்து வரவும்.

சுபம் உண்டாகும்.! வாழ்க வளமுடன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி வீணா.எனக்கு எவ்வளவு எதிர்மறையா போட ஏலுமோ அவளவு போட்டிருக்கு.பாப்பம் எவளவு உண்மை எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடபத்திற்கும் கடகத்திற்கும் இடையில் மிதுனத்தைக் காணவில்லையே!!

Link to comment
Share on other sites

இடபத்திற்கும் கடகத்திற்கும் இடையில் மிதுனத்தைக் காணவில்லையே!!

முதல் இணைக்க முடியவில்லை மிதுனம் மட்டும் இப்ப இணைச்சு இருக்கன் சரியா பாருங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடபத்திற்கும் கடகத்திற்கும் இடையில் மிதுனத்தைக் காணவில்லையே!!

வாத்தியார் மிதுன ராசியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இனி மேல் அட்டமத்து சனியாம் ஆனால் இப்பவே தொடங்கிட்டுது ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் மிதுன ராசியா?

மிதுனராசி தான் எப்போதும் நல்ல பலன்களைத் தருமாம் சிறி அண்ணா

அதனால் அதையே நானும் வாசித்து மனதைத் திருப்திப் படுத்தி கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி வீணா.

பூர்வீகச் சொத்துக்களில் சிக்கல் உண்டாகும் என்று, எனது பலனில் போட்டிருப்பது உண்மையே....

என்னுடைய சீதன வீட்டிலும், காணியிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கண் வைத்துவிட்டது.

அதனை தடுக்க ஒவ்வொரு புரட்டாசிச்சனியும் விரதம் இருந்து, எள்ளெண்ணை எரிக்கின்றோம்.

:D :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு உயிருக்கு எல்லாம் ஆபத்து வரும் என்று போட்டிருக்காங்கப்பா. அது கூடப் பறுவாயில்லை.. தாய் கூடத் தேறாது என்றாப் போல எழுதிறாய்யா. ஏதோ.. இவையின்ர காதில.. சனியன் ஓதிவிட்ட கணக்கா எல்லோ இருக்குது கதை..! இன்னும் கொஞ்சம் என்றால்.. நாசாவிடம் சொல்லி.. சனிக்கிரகத்தின் மீது அறுகம் புல் வீசுவதே.. பரிகாரம் என்று எழுதினாலும் எழுதுவாங்க போல இருக்கே..!

தமிழனுக்கு பிறந்தது முதல் தான் சனியன்.. சிங்களவன் உருவத்தில நின்று ஆட்டுது.. இதில.. சாஸ்திரம்.. ராசிபலன்.. என்று.. இது வேற..! :lol::icon_idea:

சிங்களவன்ர பயங்கரவாதப் பிரச்சாரத்தை விட மோசமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.. தன்னம்பிக்கையை தகர்க்கக் கூடியது.. இவ்வாறான எழுத்துக்கள். இவை குறித்து கவனமாக இருப்பது அவசியம்..! :icon_idea:

Link to comment
Share on other sites

நமக்கு உயிருக்கு எல்லாம் ஆபத்து வரும் என்று போட்டிருக்காங்கப்பா. அது கூடப் பறுவாயில்லை.. தாய் கூடத் தேறாது என்றாப் போல எழுதிறாய்யா. ஏதோ.. இவையின்ர காதில.. சனியன் ஓதிவிட்ட கணக்கா எல்லோ இருக்குது கதை..! இன்னும் கொஞ்சம் என்றால்.. நாசாவிடம் சொல்லி.. சனிக்கிரகத்தின் மீது அறுகம் புல் வீசுவதே.. பரிகாரம் என்று எழுதினாலும் எழுதுவாங்க போல இருக்கே..!

தமிழனுக்கு பிறந்தது முதல் தான் சனியன்.. சிங்களவன் உருவத்தில நின்று ஆட்டுது.. இதில.. சாஸ்திரம்.. ராசிபலன்.. என்று.. இது வேற..! :lol::icon_idea:

தலைவரே

உங்கட ஜாதகத்தை இங்கு இணைத்து விடுங்களேன்.

வேறொன்றுமில்லை நிறைய பொருத்தங்கள் வந்திருக்குது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரே

உங்கட ஜாதகத்தை இங்கு இணைத்து விடுங்களேன்.

வேறொன்றுமில்லை நிறைய பொருத்தங்கள் வந்திருக்குது. :lol:

ஜாதகம் என்றால்.. அந்தக் கட்டம் கீறி.. ஏதோ வி.. ச.. பு.. வெ.. செ.. என்று தூசணம் எழுதி கணக்கா... எழுதி.. வைச்சிருப்பாய்ங்காளே.. அதுவா. நமக்கு அது கிடையாது..!

நான் நினைக்கல்ல.. எனக்குப் பொருத்தமானது இந்தப் பூவுலகில் இருக்க வாய்ப்பிருக்கென்று. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

இது கொஞ்சம் கூட நியாயமா இல்லை <_<

பரிகாரப் பகுதியை வாசிக்க எனக்கு அவ்வளவா விளங்க இல்லை, ஆனால் ஒன்று மட்டும் புரியுது இதில பரிகாரம் பண்ண வெளிக்கிட்டால் எனக்கு வேலை போகும், அதுக்குப் பிறகு எவ்வளவு அலைஞ்சாலும் வேலை உருப்படியான வேலை கிடைக்காது, வேலை கிடைச்சாலும் நல்ல ஊதியமும் இல்லை என்று... :o:lol:

அது சரி தசரதர் யாரு? தசரதனா?? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாத சாத்திரிமார் எழுதுவீனம் இதைப் போய் பார்த்து என்ன ஆகப்போகிறது... ரைம்வேஸ்ட் தான்.. :lol:

Link to comment
Share on other sites

என்னோட ராசி ஒண்ணுக்கு காக்கைக்கு சோறு வைக்கணும்னு இருக்கு,,

என்ன வெளையாடுறீங்களா ...மிஸ்டர்.சனிபகவான்?

இருக்குற சோத்த காக்காக்கு வைச்சிட்டு , எனக்கு சோறுக்கு எங்க போறதாம்?

திட்டமிடாம செய்யுற எந்தவேலையிலயும், சனி தானாவே வந்து உட்காரும்!

இந்த கிரகங்களை சொல்லி தப்பிக்கிறது ,,தன்னைதானே பண்ணிக்குற சமாதானம்!

இதபத்தி நீளமா விபரிக்க , நம்ம நெடுக்குதான் வேணும் ,, நம்மால ஆகாதுடா சாமி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா இணைப்பிற்கு, வுட்டுகார அம்மாட்டைதான் எனக்கான பரிகாரம் இருக்கு, அவாட்ட காட்டினா சரி,

பலருக்கு நாக்கில சனி பிடிச்சு களத்தில எழுதுறாங்க அவங்களுக்கு என்ன பரிகாரம்

Link to comment
Share on other sites

நன்றி வீணா இணைப்பிற்கு, வுட்டுகார அம்மாட்டைதான் எனக்கான பரிகாரம் இருக்கு, அவாட்ட காட்டினா சரி,

பலருக்கு நாக்கில சனி பிடிச்சு களத்தில எழுதுறாங்க அவங்களுக்கு என்ன பரிகாரம்

நாக்கை இழுத்து வைச்சு அதில கற்பூரம் கொளுத்தி விட வேண்டியது தான் வேற வழி இல்லை :lol:

Link to comment
Share on other sites

தாய் கூடத் தேறாது என்றாப் போல எழுதிறாய்யா.

அப்ப அவர் உண்மையாகச் சாத்திரம் தெரிந்த ஆள் தான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இனி மேல் அட்டமத்து சனியாம் ஆனால் இப்பவே தொடங்கிட்டுது ^_^

ரதி நீங்களும் மீன ராசியோ வாழ்க வழமுடன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.