Jump to content

வெளியாக இருக்கும் எம்மவர் படைப்புகள்..


Recommended Posts

vinod1s.jpgபிறந்துவிட்டது புத்தாண்டு... புதுப்பொலிவுடன் வருகிறது சென்னை புத்தகக் காட்சி..! எந்தப் பதிப்பாளர், என்ன புத்தகம், யார் எழுத்தாளர், புத்தகத்தின் 'ஹைலைட்' என்ன என்பது பற்றி பிரபல பதிப்பகங்களில் அடித்த ஒரு ரவுண்ட் அப் இது...

புரட்சி, சிவப்புச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செயல்படும் 'விடியல்' பதிப்பகம் சுமார் 27 புத்தகங்களை வெளியிட இருக்கிறது. அதில் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பியின் 'இந்திய வரலாறு', பிடல் கேஸ்ட்ரோ தன் கைப்பட எழுதிய சுயசரிதை ஆகியவை முக்கியமானதாம்!

''இந்தியாவின் புகழ்பெற்ற வராலாற்றாசிரியர்களில் டி.டி.கோசாம்பியும் ஒருவர். இந்திய வரலாறு பற்றி இதற்கு முன் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகம் அவற்றில் இருந்து மாறுபடுகிறது. ஆசிய உற்பத்தி முறை அன்றைய காலத்தில் எவ்வாறு இருந்தது என்பது பற்றி கோசாம்பி விவரித்திருக்கிறார். இதை

vinod3.jpg

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்தவர் சிங்கராயர். அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புத்தகம் வெளிவருகிறது.

அடுத்து பிடல் காஸ்ட்ரோவின் சுயசரிதம் 'என் வாழ்க்கை' என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது. அதை தமிழில் மொழியாக்கம் செய்தவர் நா.தர்மராஜன். 'நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில்' இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் அவர்.

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டிய புத்தகம், விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த கேப்டன் மலரவன் (லியோ) என்று அழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயணக்குறிப்புகளைக் கொண்ட 'போர் உலார்' எனும் நூல். 1992ல் கேப்டன் மலரவன் பலாலி சிங்களப் படைத்தளத்தின் கிழக்குப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்பு அவரது உடைப் பையிலிருந்து எடுக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி 1993-ல் 'போர் உலா' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் என்பதை விடுதலைப்புலிகள் எப்படி உள்வாங்கப்பட்டது என்பதை நமக்குக் காட்டுவதாக அமைந்திருக்கிறது இது!'' என்கிறார் 'விடியல்' சிவா.

குழந்தைகள் இலக்கியம், எளிய தமிழில் அறிவியல் புத்தகங்கள் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் பாரதி பதிப்பகம் இந்த வருடமும் அறிவுப் பசிக்குக் குறை வைக்கவில்லை. அது பற்றி 'பாரதி புத்தகாலயம்' நாகராஜனிடம் கேட்டபோது, ''அல்பேனிய எழுத்தாளர் கிகோ புளூசி எழுதிய 'பெனி எனும் சிறுவன்' என்கிற நாவல் குழந்தைகளின் மன உலகத்தைப் பற்றிப் பேசுகிறது.

vinod4.jpg

பெனி எனும் சிறுவனை முன்வைத்து குழந்தைகளின் ஆளுமை எப்படி எல்லாம் வடிவமைக்கப்படுகிறது என்பது பற்றி சொல்கிறார் நூலாசிரியர். பெற்றோரிடம் இருந்து திணிக்கப்படும் கருத்துக்கள், கட்டுப்பாடுகள் குழந்தைகளிடத்தில் உருவாக்கும் பாதிப்புகள், குழந்தைகள் எதையும் அச்சமற்று அணுகுவது எப்படி, பிறருடன் தோழமை கொள்வது எப்படி என்பன போன்ற பல விஷயங்களை உரையாடுகிறது இந்தப் புத்தகம்.

அடுத்து, இரா.நடராசன் எழுதிய 'நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டுமா?' என்கிற நூல். இது அறிவியலின் வரலாற்றை எளிய முறையில் கதை போல் எளிமையாக எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் போதும் அதற்காக விஞ்ஞானிகள் செய்த தியாகத்தையும், மதம் மற்றும் ஆட்சியாளர்களின் எதிர்ப்பையும் பற்றி சுவாரஸ்யமான மொழிநடையில் சொல்கிறார் ஆசிரியர்!''.

சமகால அரசியல், சமூக நிகழ்வுகளை கனமான உள்ளடக்கத்துடன் புத்தகங்களாகக் கொண்டு வரும் கருப்புப் பிரதிகள் இந்த வருடமும் அப்படியான புத்தகங்களைக் கொண்டு வர இருக்கிறார்கள். 'கருப்புப் பிரதிகள்' நீலகண்டனிடம் கேட்டபோது,

'' 'vinod6.jpg

ஜாதியற்றவளின் குரல்' என்ற தலைப்பில் சுமார் 320 பக்கங்களில் ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியிடுகிறோம். பத்திரிகையாளர் ஜெயராணி கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இதில் அடங்கி இருக்கின்றன. தலித் பிரச்னைகள், மனித உரிமை, பெண்கள் பிரச்னைகள் பற்றியெல்லாம் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிற தொகுப்பாக இது இருக்கிறது.

அடுத்ததாக, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்று தற்போது கனடாவில் வசிக்கும் நெலிஞ்சிமுத்தன் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 'பிறண்டை ஆறு' என்ற தலைப்பில் கொண்டு வர இருக்கிறோம். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றி இதுவரை இலக்கிய ரீதியாக எந்தப் பதிவும் இல்லை. முதன் முதலாக அந்த நிகழ்வு பற்றி 'இல்ஹம்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. பிறகு, ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணங்கள், அதன் பின் இருக்கும் அரசியல், ஐரோப்பிய வங்கிகள் போர்க் கருவி செய்யும் நிறுவனங்களில் செய்திருக்கும் முதலீடு இவை பற்றியெல்லாம் மிக விரிவாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், நார்வே நாட்டில் வசிக்கும் கலையரசன். புத்தகத்தின் தலைப்பு 'காசு ஒரு பிசாசு!'."

தனித்த அடையாளத்துடன் வருவது 'அடையாளம்' பதிப்பகத்தின் பாணி. 'அடையாளம்' சாதிக்கிடம் இந்த வருடம் கொண்டு வர இருக்கிற புத்தகங்கள் பற்றிக் கேட்டதும், ''சீரியஸ் டைப் மட்டுமல்லாது கொஞ்சம் ஜனரஞ்சகமான வாசகர்களுக்காக இந்த வருடம் சில புத்தகங்களைக் கொண்டு வர இருக்கிறோம். ஆங்கிலத்தில் 'மை லைஃப் - எ ஹிஜ்ராஸ் ஸ்டோரி' என்கிற தலைப்பில் தன்

vinot5.jpg

கதையை விவரித்த திருநங்கை ரேவதியின் அந்தப் புத்தகம் தமிழில் 'வெள்ளை மொழி' என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பாக வர இருக்கிறது. இதில் ஒரு சுவாரஸ்யம் முதலில் அந்தப் புத்தகம் ரேவதியால் தமிழில்தான் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் அதை வ.கீதா மொழிபெயர்த்திருந்தார். பிறகு கன்னடத்திலும் வெளியானது. வெவ்வேறு ஹிஜ்ரா குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம், சமூகம் தன்னைப் பார்க்கும் விதம் போன்றவை பற்றி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

அடுத்து, மனநல மருத்துவ சிகிச்சை அளிப்பதில் உலகிலேயே முன்னணி நிறுவனமான லண்டன் 'ராயல் காலேஜ் ஆஃப் சைக்கியாட்ரிஸ்ட்' கல்லூரி ஆங்கிலத்தில் 'லிவிங் வித் ஸ்ட்ரேஞ்சர்' என்கிற தலைப்பில் மனநல பாதிப்பு உள்ள ஒருவருடன் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதை 'உங்களுடன் ஒரு அந்நியன்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறோம். அடுத்து, குட்டி ரேவதியின் 'யானுமிட்ட தீ' எனும் கவிதைத் தொகுப்பும், தமிழவன் எழுதி 'இரட்டைச் சொற்கள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் கொண்டு வருகிறோம்'' என்றார்.

கலை, இலக்கியம், சுயசரிதம் என கலந்துகட்டி வெளியிடும் சந்தியா பதிப்பகம் இந்த முறை சில முக்கியமான கள ஆய்வுகளைப் புத்தகமாகக் கொண்டு வர இருக்கிறார்கள். ''வட இந்தியாவின் பாட்டியாலா ராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர் திவான் ஜர்மானி தாஸ். அந்த ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மன்னர்கள், அவர்களின் கலாசாரம், ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியப் பெண்களுடன் அவர்களுக்கு இருந்த உறவு ஆகியவை பற்றி இருபது வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் 'மகாராஜா' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருந்தார்.

அதை தமிழில் அதே தலைப்பில் மொழிபெயர்த்து கொண்டு வருகிறோம்.

'இயற்பியலின் தாவோ', 'யுவான் சுவான் பயணக் குறிப்புகள்' போன்ற புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்த பொன்.சின்னத்தம்பி முருகேசன் தான் இதையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

அடுத்ததாக, உசிலம்பட்டியில் வாழ்ந்து வருகிற பிரமலைக் கள்ளர் எனும் சமூக மக்களைப் பற்றி பல ஆண்டுகளாகக் கள ஆய்வு செய்து அதை 'பிறமலைக் கள்ளர் - வாழ்வும், வரலாறும்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார் இர.சுந்தர வந்தியத் தேவன். வழக்கறிஞராக இருக்கும் அவரும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான். நிச்சயம் இது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும்.

'சில இறகுகள், சில பறவைகள்' என்ற தலைப்பில் வண்ணதாசன் மற்றவர்களுக்கு எழுதிய சமீபத்திய கடிதங்கள் ஒரு தொகுப்பாகவும், 'மணல் உள்ள ஆறு' எனும் தலைப்பில் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பையும் கொண்டு வருகிறோம். நான்காவதாக, ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவரின் சுயசரிதை 'நினைவலைகள்' என்ற தலைப்பில் வெளிவருகிறது. வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்ட போது, திருச்சியில் இருந்த இவர் வீட்டில் இருந்துதான் அந்தப் பயணம் துவங்கப்பட்டது. தமிழில் வந்த முக்கியமான சுயசரிதங்களில் ஒன்று என க.நா.சு. இதைச் சொல்வார்!'' ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் 'சந்தியா பதிப்பகம்' சௌந்தரராஜன்.

தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட 'உயிர்மைப் பதிப்பகம்' இந்த வருடமும் கலக்க இருக்கிறது. என்ன புத்தகம்... என்ன விசேஷம் என்று 'உயிர்மை' மனுஷ்யபுத்திரனிடம் கேட்ட போது, ''வா.மு.கோமுவின் இரண்டு நாவல்கள் வர இருக்கின்றன. அதில் ஒன்று 'மங்கலத்து தேவதைகள்'. கிராமப்புறங்களில் உள்ள ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இதுவரை யாரும் சொல்லாத வகையில் இதை எழுதி இருக்கிறார். அடுத்து, ஆர்.அபிலாஷ் எழுதிய 'கால்கள்' எனும் நாவல். இது நடக்கமுடியாத ஒரு பெண்ணின் வாழ்க்கைத் துயரத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்த துறையில் இதுவரை எந்த நூலும் தமிழில் எழுதப்படவில்லை. அந்த அடிப்படையில் இது சிறப்பு வாய்ந்தது.

மூன்றாவதாக, சுப்ரபாரதி மணியன் எழுதிய 'நீர்த்துளி' எனும் நாவல். திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகள், அங்கு நிலவும் வாழ்க்கை, மக்களின் துயரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய 'பசித்த பொழுது' கவிதைத் தொகுப்பும் வருகிறது. நவீன நகர வாழ்க்கையின் மனநெருக்கடிகளைப் பேசும் 236 கவிதைகள் அதில் இருக்கின்றன!'' என்றார்.

வழக்கம் போல 'காலச்சுவடு' பதிப்பகம் கிளாஸிக் வரிசை படைப்புகளோடு சில புதிய புத்தகங்களையும் கொண்டு வர இருக்கிறது. அது தொடர்பாக, 'காலச்சுவடு' கண்ணனிடம் கேட்டதற்கு, '' 'தமிழர் உணவு' என்ற புத்தகத்தைக் கொண்டு வர இருக்கிறோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பற்றி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி பல ஆண்டுகளாக 'காலச்சுவடு' இதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

இரண்டாவதாக, டாக்டர் பினாயக் சென் பற்றி ஆங்கிலத்தில் மின்னி வைத் என்ற பத்திரிகையாளர் எழுதிய 'எ டாக்டர் டு டிஃபென்ட்' என்கிற புத்தகத்தை, தமிழில் க.திருநாவுக்கரசு மொழிபெயர்க்க 'நீதி மறுக்கப்பட்ட கதை' என்கிற தலைப்பில் கொண்டு வருகிறோம். அடுத்து, இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் பற்றி 'கூண்டு' என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவர இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் நோக்காளராக இருந்த கார்டன் வைஸ் என்பவரின் எழுத்தில் இது படைக்கப்பட்டிருக்கிறது!'' என்று முடித்தார்.

தன்னம்பிக்கை புத்தகங்கள், ஆங்கில க்ரைம் த்ரில்லர்களை தமிழில் கொண்டு வருவது எனப் பல புதுமைகளைச் செய்யும் கண்ணதாசன் பதிப்பகத்தில் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு என்ன விசேஷம் என்று கேட்ட போது, '' 'டாக்டர் நோ' என்கிற புத்தகத்தைக் கொண்டு வருகிறோம். ஜேம்ஸ்பாண்ட் படம் பற்றிய புத்தகம் அது. 'டாக்டர் நோ' என்கிற தலைப்பில் 1958-ம் ஆண்டு இயான் ஃபௌமிங் ஒரு டிடெக்டிவ் நாவல் எழுதினார். பிறகு அது 1962-ல் ஷான் கானரி நடித்து வெளிவந்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படமாக திரையில் விரிந்தது. இந்த வருடத்துடன் அந்தப் படம் வந்து 50 வருடங்கள் ஆகின்றன. அதன் நினைவாக அந்தப் படம் தமிழில் மீண்டும் நாவல் உரு பெற்றிருக்கிறது.

அடுத்து, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் தன்னுடைய ஆட்களை அனுப்பி இங்கிலாந்தில் இருந்து சர்ச்சிலைக் கடத்திக் கொண்டு வர திட்டம் போடுகிறான். இந்தத் திட்டத்தை கர்னல் ஸ்டைனர் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து ஜாக் ஹிக்கின்ஸ் 1975-ல் 'தி ஈகிள் ஹேஸ் லேண்டட்' என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதினார். அதை இப்போது தமிழில் 'கழுகு தரை இறங்கிவிட்டது' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறோம். வாசகர்கள் தவறவிடக் கூடாது!'' என்று சிரிக்கிறார் காந்தி கண்ணதாசன்.

புத்தகங்கள் நல்ல புதையல்கள்... தேடிப் பிடித்து படித்து அனுபவிப்போம் வாருங்கள்!

http://news.vikatan....ex.php?nid=5892

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு தடவை போக வேண்டும் என ஆசை அடுத்த வருடமாவது சரி வருமோ என்று பார்ப்பம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு தடவை போக வேண்டும் என ஆசை அடுத்த வருடமாவது சரி வருமோ என்று பார்ப்பம்

எனக்கும்தான் ரதியக்கா..ஒருக்கா வெளிக்கிடத்தான் வேணும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.