Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! Feb 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் CarDriving.CA வழங்கிய மாசி மாதத்துக்குரிய... நினைவுப் பரிசைப் பெற்ற நெடுக்ஸிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள். மாசி மாதத்துக்குரிய ஒளிப்பதிவு, அஞ்சலியுடன் ஆரம்பித்தது... மனதை தொட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் போக்குவரத்து.

ஒரு நினைவு அஞ்சலியுடன் தொடங்கி அழகாக கருத்தாளர்களை தொகுத்துள்ளீர்கள். தொடரட்டும்.

அவர்களை ஊக்குவித்தும் உள்ளீர்கள், நன்றிகள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை முதன்மைப்படுத்தி ஆரம்பித்தது மிகவும் நன்றிக்குரிய விடயம்.

பரிசைப் பெற்ற நெடுக்ஸிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலியோடு அமைந்திருக்கும்.. "யாழின் பொற்கிளி எனக்குத் தான்" படைப்பு மனதை நெகிழச் செய்தது.

ஆக்கத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி போக்குவரத்து..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறுப்பினர்களின் தாய்க்கு அஞ்சலியுடன் ஆரம்பித்த உங்கள் பதிவு மிகவும் பாராட்டத் தக்கது ......மாசி மாத பரிசு பெற்ற நெடுக்க்ஸ் க்கு என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நெடுக்சுக்கும்,ஏனையவர்களுக்கும் நன்றி.சிறந்த கருத்தாளர்களை தெரிந்தெடுத்து ஊக்குவித்து அவர்களின் ஆக்கங்களை காணொளி மூலம் தொகுத்து அளித்த போக்குவரத்துக்கு மனமார்ந்த நன்றிகள். கள உறவுகளின் தாயாரின் அஞ்சலியை இணைத்ததற்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் போக்குவரத்து இனிவரும் காலங்கள்ஆக்கங்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்வதற்கு திக்கு முக்காடவேண்டிய கட்டங்கள் ஏற்படும்.

போக்குவரத்து,....

ஏனோ தானோ என்று வருபவர்களையும் , வாசிப்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கிறீர்கள்ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒவ்வொருபடியாக... முயற்சி திருவினையாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை போக்குவரத்து, நன்றாக தொகுத்து வளங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள் தொடர

நெடுக்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிர்பார்க்காத வகையில் எனக்கு ஒரு நினைவுப் பரிசில் gift voucher ( 36 பவுண்கள் பெறுமதியானது.) போக்குவரத்தால் [CarDriving.CA] அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி போக்குவரத்து. உங்களையும் யாழையும் யாழ் உறவுகளையும் நினைவு கூறும் வகையில் ஒரு பொருளை நிச்சயம் அதில் இருந்து வாங்கி வைத்துக் கொள்கிறேன்.

யாழிற்கும் எங்கள் ஆக்கங்களைப் படித்து அவற்றை ஊக்குவித்த உறவுகளுக்குமே உண்மையில் இந்தப் பரிசு உரித்துடையதாக வேண்டும். அவர்களுக்கும் நன்றிகள்..! :icon_idea: :)

எங்கள் வலைப்பூக்கள் மற்றும் முகநூலில் உங்களின் [CarDriving.CA] விளம்பரங்களை இணைக்க எமது உதவி தேவைப்பட்டாலும் நீங்கள் எம்மை நாடலாம். கட்டணம்: இலவசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணாவுக்கும்,போக்கு வரத்து நிறுவனத்தினருக்கும் நல் வாழ்த்துகள்...தங்கள் பணி தொடரட்டும்..

congratulations04.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கு வாழ்த்துக்களும் போக்கு வரத்துக்கு பாராட்டுக்களும். :)

Link to comment
Share on other sites

சிறப்பான தயாரிப்பு… வாழ்த்துக்கள் போக்குவரத்து.

களப் பதிவுகளை வாசித்ததோடு மட்டுமன்றி அதை அலசி அது குறித்த ஒரு காட்சிப் பதிவை தயாரித்துள்ளீர்கள்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் இது போன்ற ‘யாழ் கள ஆய்வொன்று’ பதிவிடப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

முன்னர் கலைஞன் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்.

சிறப்பான ஆக்கமோன்றை பதிவிட்ட நெடுக்கிற்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாகனம் : யாழ் உறுப்புரிமை உங்களுடையது.

வீதி : யாழ் கருத்துக்களம் உங்களுக்கானது.

சட்டங்கள் : யாழ் விதிமுறைகள் உங்களுக்கானது.

தொழில் நிறுவனமாகிய நாங்கள் அனுசரணையாளராக இங்கு பங்குபற்றி யாழ் போக்குவரத்திற்கு உதவி செய்து எம்மையும் முன்னேற்ற பார்க்கின்றோம். இது ஒரு கூட்டுமுயற்சி என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பல்வேறு வகைகளிலான எல்லோர் பங்களிப்புக்கும், ஊக்குவிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மீண்டும் Feb மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

குட்டி : சிறந்த கருத்து

ஜஸ்ரின் : சிறந்த கருத்து, சிறந்த கருத்து (2)

தும்பளையான் : சிறந்த கருத்து, சுவாரசியமான ஆக்கம் (2)

நுணாவிலான் : பயனுள்ள தகவல்

உதயம் : சிறந்த கருத்து

ராஜ் லோகன் : சிறந்த கருத்து

ஈசன் : சிறந்த கருத்து

ஈழத்திருமகன் : சிறந்த கருத்து

ஆர்.ராஜா : சிறந்த கருத்து

நெடுக்காலபோவான் : சிறந்த ஆக்கம், Feb 2012 யாழ் நினைவு பரிசு (2)

நன்றி

எங்கள் வலைப்பூக்கள் மற்றும் முகநூலில் உங்களின் [CarDriving.CA] விளம்பரங்களை இணைக்க எமது உதவி தேவைப்பட்டாலும் நீங்கள் எம்மை நாடலாம். கட்டணம்: இலவசம்.

நன்றி. இங்கு ஒவ்வொரு மாதமும் இணைக்கப்படும் யாழின் பொற்கிளி எனக்குத்தான் வீடியோக்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டால் யாழ் இணையத்தின் பங்காளிகளான யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளராகிய நாம் ஆகிய எல்லோரும் மிகுந்த பயன் அடைய முடியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

போன மாதம் 2 ஆம் திகதி போக்குவரத்து எனக்கு ஒரு தனிமடல் போட்டு இருந்தார். எதையோ என் மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளதாக. அலுவலகத்தில் கடும் வேலைப்பளுவுக்கு மத்தியில் அவசர அவசரமாக அதை வாசித்ததால், என் மரமண்டைக்கு சரியாக விளங்கவில்லை என்ன சொல்லி இருந்தார் என. வீட்டை போய் வாசிப்பம் என்று விட்டு அப்படியே மறந்து விட்டேன்

இன்று நெடுக்ஸ் தனக்கு நினைவுப் பரிசு போக்குவரத்து அனுப்பி உள்ளார் என்றதை வாசித்த பின் தான் எனக்கு கொஞ்சம் விளங்கியது. ஓடிப்போய் என் நிழலி மின்னஞ்சலை திறந்து போக்குவரத்து அனுப்பிய மடலை பார்த்தேன். அவர் போன மாசி மாதம் நினைவுப் பரிசாக 50 கனடிய டொலருக்கான voucher அனுப்பி இருந்தார்...அதுவும் Indigo புத்தகசாலையின் voucher !!. நான் இந்த புத்தகக் கடையில் என் வேலைக்கு தேவையான ஒரு புது தொழில்நுட்பமான jQuery பற்றிய புத்தகம் ஒன்றை வாங்கி படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த நிலையில் அதே கடையின் money voucher இனை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னேரம் ஓடிச் சென்று அந்தக் கடையில் JavaScript and jQuery புத்தகத்தினை 44 டொலருக்கு வாங்கி வந்தேன்... மிகவும் தேவையான நேரத்தில் எனக்கு கிடைத்த அருமையான ஒரு பரிசு இது.

மிக்க நன்றிகள் போக்குவரத்து...தக்க நேரத்தில் எனக்கு கிடைத்த நல்ல ஒரு உதவி.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, உங்களுக்கு கிடைத்த போக்குவரத்தின் முதல் பரிசை... பாக்கியமாக கருதியிருந்திருக்க வேண்டும்.

நீங்கள் அந்தப் பரிசை, அலட்சியம் செய்ததால்... நான் மிகவும், மனம் வருந்தினேன்.

சரி..., இப்போதாவது புத்தி வந்திச்சே.. என்று, சந்தோசப் படுகின்றேன். :)

Link to comment
Share on other sites

நிழலி, உங்களுக்கு கிடைத்த போக்குவரத்தின் முதல் பரிசை... பாக்கியமாக கருதியிருந்திருக்க வேண்டும்.

நீங்கள் அந்தப் பரிசை, அலட்சியம் செய்ததால்... நான் மிகவும், மனம் வருந்தினேன்.

சரி..., இப்போதாவது புத்தி வந்திச்சே.. என்று, சந்தோசப் படுகின்றேன். :)

நான் அலட்சியம் செய்யவில்லை தமிழ்சிறி... காலை 8 மணிக்கு வேலைக்கு போய் இரவு 8 மணிவரை வேலை செய்ய வேண்டியளவுக்கு கடும் Project வேலைகள் கிடக்கு. அதுக்குள் வரும் சில தனிமடல்களை அதிக சிரத்தையுடன் கவனிக்க முடிகின்றது இல்லை. என் தனிப்பட்ட மின்னஞ்சல் இலக்கத்தில் இன்னும் வாசிக்காத மடல்கள் கிட்டத்தட்ட 300 கிடக்கு..

சரி, என்ன சொன்னாலும் என்னில் தவறு இருக்கின்றது தான்... கூடிய வரைக்கும் நிவர்த்திக்க பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் போக்குவரத்து இனிவரும் காலங்கள்ஆக்கங்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்வதற்கு திக்கு முக்காடவேண்டிய கட்டங்கள் ஏற்படும்.

------

எந்த, அடிப்படையில்... இப்படிக் கூறுகிறீகள் வல்வை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதத்தின் 'பொற்கிழியைப்; பெற்ற நெடுக்கருக்கும், மற்றும் சிறப்பு விருதுகள் பெற்ற கருத்தாளர்களுக்கு,

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

அருமையான தொகுப்பை, வழங்கிய போக்குவரத்திற்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் Feb மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

குட்டி : சிறந்த கருத்து

ஜஸ்ரின் : சிறந்த கருத்து, சிறந்த கருத்து (2)

தும்பளையான் : சிறந்த கருத்து, சுவாரசியமான ஆக்கம் (2)

நுணாவிலான் : பயனுள்ள தகவல்

உதயம் : சிறந்த கருத்து

ராஜ் லோகன் : சிறந்த கருத்து

ஈசன் : சிறந்த கருத்து

ஈழத்திருமகன் : சிறந்த கருத்து

ஆர்.ராஜா : சிறந்த கருத்து

நெடுக்காலபோவான் : சிறந்த ஆக்கம், Feb 2012 யாழ் நினைவு பரிசு (2)

நன்றி

நன்றி. இங்கு ஒவ்வொரு மாதமும் இணைக்கப்படும் யாழின் பொற்கிளி எனக்குத்தான் வீடியோக்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டால் யாழ் இணையத்தின் பங்காளிகளான யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளராகிய நாம் ஆகிய எல்லோரும் மிகுந்த பயன் அடைய முடியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நிச்சயமாக காணொளிகளை பகிர்ந்து கொள்கின்றோம்.

மீண்டும் பாராட்டிற்கும் பரிசுக்கும் நன்றி. :)

அத்தோடு.. பாராட்டுப் பெற்ற மற்றைய கள உறவுகளுக்கும்.. எம்மை எமது ஆக்கங்களை படித்து ஊக்கிவித்த ஒவ்வொரு உறவுகளுக்கும் மேலும் இங்கு பாராட்டுத் தெரிவித்துள்ள உறவுகளுக்கும் எங்கள் நன்றி. :):icon_idea:

Link to comment
Share on other sites

.

நெடுக்ஸ் இன்னும் நிறைய எழுதலாம்...எழுத முடியும். :)

போக்குவரத்தின் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்.

கருத்துக்களத்தில் "எம்மவர் பொருளாதார முயற்சிகள்" என்ற ஒரு பிரிவையும் திறக்குமாறு மோகனிடம் கேட்டுப் பார்ப்போம்.

இதற்குள் பொருளாதார ரீதியான தகவல்கள் மற்றும் எம்மவர் / ஏனையோர் Business Directory போன்றவற்றையும் இணைக்கலாம். பிரியோசனமான பகுதியாக இருக்கும்.

மோகன் தான் டோன்ட் கெயார் மூட்ல இருக்கிற மாதிரி இருக்கு. :mellow: :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.நெடுக்ஸ் இன்னும் நிறைய எழுதலாம்...எழுத முடியும். :)

அவருக்கு, ஒரு கலியணமும், கச்சேரியும் இருந்தால்....

ஐஸ்வரியம் தந்துனாமே...... :lol:

Link to comment
Share on other sites

அவருக்கு, ஒரு கலியணமும், கச்சேரியும் இருந்தால்....

ஐஸ்வரியம் தந்துனாமே...... :lol:

கால்கட்டு போட்டால் நெடுக்ஸ் யாழில் எழுதிறது குறைஞ்சு போயிடும். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.