Jump to content

மகாத்மா காந்திக்கு ’தேச தந்தை’ என்று பெயர் வைத்தது யார்..? - பதில் தெரியாமல் விழிக்கும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்திக்கு ’தேச தந்தை’ என்று பெயர் வைத்தது யார்..? - பதில் தெரியாமல் விழிக்கும் அரசு

img1120404029_1_1.jpg

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய ஆறாவது படிக்கும் மாணவி கேட்ட கேள்விக்கு சரியான தகவல் இல்லை என்ற பதிலை மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பரஷ்ஹார் என்ற 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் வழக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்தியாவின் தேசத்தந்தை என மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்டது எப்போது, அதற்குரிய ஆவணங்கள் உள்ளனவா? என விவரம் தருமாறு கோரியிருந்தார்.

இந்த மனு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் உள்துறை அமைச்சகத்திடம் போதிய ஆதாரம் கிடைக்காததால், மனு இந்திய தேசிய ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய ஆவண காப்பகத்திலும் காந்திக்கு தேசத்தந்தை பட்டம் வழங்கப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால், இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் துணை இயக்குனர் ஜெயப்பிரபா ரவீந்திரன், மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் எங்கு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்து, மனு செய்த மாணவிக்கு பதில் அனுப்பியுள்ளார்.

மேலும், மாணவி விரும்பினால், காந்தி குறித்த தகவலை பெற இந்திய அரசின் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜெயப்பிரபா ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

விக்கிப்பீடியா தகவல் களஞ்சியத்தில் உள்ள தகவல் படி, காந்திக்கு மாகாத்மா என்ற பட்டம் எப்படி வந்தது என்றால், 1944-ல் சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ், காந்தி குறித்து வானொலியில் பேசும் போது, மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டிருந்தார். பின்னாளில் அது இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காந்தி படுகொலை செய்யப்படும்போது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலியில் பேசும் போது, “தேச தந்தை நம்மோடு இல்லை... “ என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1204/04/1120404029_1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன சந்தேகம் இப்போது?

பிள்ளைகளைப் பார்க்கத் தெரிகின்றதே, இவர் தான் தந்தையாக இருந்திருப்பார் என்று!

தோழர் உங்கள் தேசத்தந்தை, செஞ்சிக்கோட்டை சிங்கமாக்கும்! :D

Link to comment
Share on other sites

குரங்குகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்க உத்தேசித்தன.

முதல் குரங்கு சொல்லியது, "நாம் மிகவும் கட்டுபாடோடு இதைக் கடைபிடித்து மாலை ஆறு மணிக்கு சாப்பிடலாம். உண்ணாவிரதம் முடிப்பதற்கு தேவையான வாழைப்பழத்தை இப்போதே ஓரிடத்திற்கு கொண்டு வந்து வைத்து விடலாம்."

குரங்குகளும் அப்படியே செய்தன.

...

இரண்டாவது குரங்கு சொல்லியது, "உண்ணாவிரதம் முடியும் போது மிகுந்த பசியோடு இருப்போம் அதனால் அவரவருக்குரிய பங்கை ஒரு இலையில் அவரவர் முன்னாலையே வைத்து கொண்டால் சாப்பிடுவதற்கு ஓட வேண்டியதில்லை."

சரி என அப்படியே செய்தன.

முன்றாவது குரங்கு, "அவரவர் ஒரே ஒரு பழத்தை மட்டும் தோலுரித்து தயாராக வைத்து கொள்ளலாம்; அப்படி செய்தால் உடனே சாபிடுவதற்கு இன்னும் வசதியாக இருக்கும்" என்றது.

நான்காவது குரங்கு, "நமக்குதான் சாப்பிடாமல் வாயில் அடக்கி வைத்துக் கொள்கின்ற ஆற்றல் உள்ளதே. அதனால் பழத்தை வாயில் அடக்கி வைத்து, விரதம் முடிந்ததும் விழுங்கலாமே" என்றது.

எல்லா குரங்கும் சம்மதித்தன.

இனி உண்ணாவிரதம் என்னவாகும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்க உத்தேசித்தன.

முதல் குரங்கு சொல்லியது, "நாம் மிகவும் கட்டுபாடோடு இதைக் கடைபிடித்து மாலை ஆறு மணிக்கு சாப்பிடலாம். உண்ணாவிரதம் முடிப்பதற்கு தேவையான வாழைப்பழத்தை இப்போதே ஓரிடத்திற்கு கொண்டு வந்து வைத்து விடலாம்."

குரங்குகளும் அப்படியே செய்தன.

...

இரண்டாவது குரங்கு சொல்லியது, "உண்ணாவிரதம் முடியும் போது மிகுந்த பசியோடு இருப்போம் அதனால் அவரவருக்குரிய பங்கை ஒரு இலையில் அவரவர் முன்னாலையே வைத்து கொண்டால் சாப்பிடுவதற்கு ஓட வேண்டியதில்லை."

சரி என அப்படியே செய்தன.

முன்றாவது குரங்கு, "அவரவர் ஒரே ஒரு பழத்தை மட்டும் தோலுரித்து தயாராக வைத்து கொள்ளலாம்; அப்படி செய்தால் உடனே சாபிடுவதற்கு இன்னும் வசதியாக இருக்கும்" என்றது.

நான்காவது குரங்கு, "நமக்குதான் சாப்பிடாமல் வாயில் அடக்கி வைத்துக் கொள்கின்ற ஆற்றல் உள்ளதே. அதனால் பழத்தை வாயில் அடக்கி வைத்து, விரதம் முடிந்ததும் விழுங்கலாமே" என்றது.

எல்லா குரங்கும் சம்மதித்தன.

இனி உண்ணாவிரதம் என்னவாகும்?

தேவையில்லாத கதை இது, ஒரு விடுதலை போரட்டதை நடத்தியவர் மீது, விடுதலைக்காக போரடும் உணர்வுள்ள இனம் இப்படி எழுத மனம் வராது.

எனக்கும் சோனியா, காங்கிரஸ் & றோ இல்ல ஆத்திரம் இருக்கு, அதற்காக எத்தனையோ ஆயிரம் உள்ளங்களில் வாழும் ஒருவரின் திரிக்கு கீழ் இப்படி ஒரு கதை தேவையில்லை

அவரின் கால் தூசிக்கு கூட லாயக்கில்லை நாங்கள்

Link to comment
Share on other sites

ஒரு விவாதத்திற்கு இன்றும் இந்தியாவை இங்கிலாந்து ஆட்சி செய்து அங்கு காந்தி அகிம்சைவழியில் போராடினால் அதை ஏற்கும் பக்குவம் இங்கிலாந்திற்கு இருந்திருக்கலாம். அதனால் இன்றும் அவர் தேசத்தின் தந்தையாகும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் அதை மதிக்கும் பக்குவம் இன்றைய இந்தியாவுக்கும் இருந்திருக்குமா என்பது கேள்வியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.