Jump to content

மீள்குடியேற்றப் போர்வையில் மரணப் பொறிக்குள் தள்ளப்படும் வன்னி மக்கள்!


Recommended Posts

இன்னும் சில வாரங்களுக்குள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் அறிவித்திருக்கின்றார். இதேபோன்று மீள்குடியேற்றம் தொடர்பிலான செய்திகள் நாளாந்தம் ஊடகங்களை ஆக்கிரமித்தாலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் வெளித்தெரியாத பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்லீடர் அம்பலப்படுத்துகின்றது.

[size=4]அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்த கிராமங்களில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் தொடர்பிலான தகவல்கள் பெரிய அளவில் வெளிவரவில்லை. அவற்றில் சில சம்பவங்களைக் குறிப்பிடுகின்றோம்.[/size]

[size=4]புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் நந்திக்கடலுக்கு மிக நெருக்கமாக மல்லிகைத்தீவு என்றொரு கிராமம் உள்ளது. குறித்த கிராமத்தில் வாழும் மக்கள் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அதே நாள் ஒரு குடும்பப் பெண் தனது காணியில் தனது குடும்பத்தாருக்கு தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பு மூட்டியிருக்கின்றார். அதன் போது அடுப்பின் கீழிலிருந்த வெடிபொருள் ஒன்று வெடித்துச் சிதறியிருக்கின்றது. சம்பவத்தில் அவருடைய நெஞ்சுப் பகுதியைத் துளைத்த வெடிச்சிதறலால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கின்றார்.[/size]

[size=4]அதே போல ஆனந்தபுரத்தினை அண்மித்த சிவநகர் ஏழாம் வட்டாரம் பகுதியில் இரண்டு இடங்களில் காணிகளை துப்புரவு செய்த மக்கள் குப்பைகளுக்கு தீயிட்ட பொழுது குண்டுகள் பாரிய சத்தங்களுடன் வெடித்துச் சிதறியிருக்கின்றன.[/size]

[size=4]இந்த விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும் தமிழ்லீடர் சம்பவங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றது.[/size]

[size=4]இவ்வாறான நிலைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? என்று நோக்கினால் குறித்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்குப் பதிலாக காணிகளில் உள்ள பற்றைகளுக்கு தீயிட்டு இராணுவத்தினர் எரித்திருக்கின்றனர். அவ்வாறு எரிக்கப்பட்டதன் பின்னர் மக்களை மீள்குடியேற அனுமதித்திருக்கின்றனர்.[/size]

[size=4]வன்னியின் இறுதிப் போரில் மிக உக்கிரமான சண்டை நடைபெற்ற பகுதி ஆனந்தபுரம் என்ற கிராமத்தினை மையமாகக் கொண்ட பகுதி என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அவ்வாறான மிகத் தீவிரமான போர் இடம்பெற்ற பகுதியில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் மக்களை அனுமதித்திருப்பதன் மூலம் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையாக இந்தச் சம்பவங்கள் இருக்கக் கூடுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.[/size]

[size=4]இதேவேளை மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்படுகின்ற மக்களுக்கு எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் நிறைவு செய்து கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறு சிறு கொட்டில்களைக் கட்டிக்கொண்டு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. தமது காணிகளை விட்டு வெளியே சென்று காட்டுப் பகுதிகளில் தடிகளை வெட்டிக்கொள்வதிலும் அச்சம் காணப்படுகின்றது. காடுகளுக்குள் செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுக்கின்றமை மற்றும் காடுகளுக்குள் வெடிபொருள் ஆபத்துக்கள் இருக்கலாம் போன்ற அச்ச நிலைகள் காரணமாக மக்கள் காடுகளுக்குச் சென்று மரம் தடிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.[/size]

[size=4]தொடர்ந்தும் முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களின் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்கள் தமது அனைத்துத் தேவைகளையும் தொடக்கத்தில் இருந்தே தேடிக்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. கிராமங்களில் தொழில்களை உடனடியாகத் தொடங்க முடியாத நிலை, கிணறுகளையோ கழிப்பிடங்களையோ சுற்றி அடைப்பதற்குக் கூட ஓலைகள் இல்லாத நிலையில் அந்த மக்கள் வாழ்க்கையை கழிக்கவேண்டிய நிர்க்கதியான சூழல் காணப்படுகின்றது. வீடுகளே இல்லாத நிலையில் தற்காலிகக் கொட்டில்களில் வாழும் மக்கள் இரவு வேளைகளில் அச்சமான சூழல் காரணமாக விடியும் வரை விழித்திருந்தே காலத்தைக் கழிப்பதாக கவலை வெளியிட்டிருக்கின்றனர்.[/size]

[size=4]வசதியோடும் வனப்போடும் வாழ்ந்த மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ்வை மீளத் தொடங்கி முன்னெடுக்கும் சூழலில் மக்களின் எஞ்சிய வீட்டு யன்னல்கள், அவர்கள் விட்டு வெளியேறிய வாகனங்கள் அனைத்தையும் இரும்பிற்காக பிடுங்கிச் செல்லும் இரும்பு வியாபாரிகளும் தென்னிலங்கையில் இருந்து சென்று வன்னியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்களும் முடிந்த அளவில் அனைத்து இரும்புப் பொருட்களையும் வன்னியில் இருந்து அபகரித்து செல்ல முற்படும் அதேவேளை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுகளில் திருடுவதற்கும் தயங்குவதில்லை அவர்களிடம் இருந்தும் தாம் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் சிறிய அளவிலான பொருட்களையாவது காத்துவிடவேண்டும் என்ற ஏக்கமும் வன்னியில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட மக்களிடத்தில் காணப்படுகின்றது.[/size]

[size=4]இதேவேளை வன்னியில் அதிக தூரத்துக்கு ஒரு வீடு என்ற நிலையே காணப்படுவதால் அங்கு அச்சம் நிறைந்த பொழுதுகளையே கழிக்கவேண்டிய நிலை இளம் பெண்களையும், பெண் பிள்ளைகளையும் கொண்ட குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. தனித்துச் செல்லும் பெண்கள் இராணுவ நிலைகளையோ, இராணுவத்தினரையோ கடந்து செல்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தனியாகச் செல்லும் இளம் பெண்களிடம் இராணுவத்தினர் வலிந்து தமது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைக் கையளித்து வருவதாக பெற்றோர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். இதேபோன்று இராணுவத்தினர் வழங்கும் தொந்தரவுகளை அச்சம் காரணமாகவும் சமூகத்தில் நிலவும் மரியாதையின் நிமித்தமும் பலர் வெளிப்படுத்த முற்படுவதில்லை என்று தெரியவருகிறது.[/size]

[size=4]இன்னும் அளவிட முடியாத நெருக்கடிகளுக்குள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தள்ளப்பட்டிருக்கின்ற வன்னி மக்களை மீட்டெடுத்து அவர்களை மீண்டும் தமது பழைய நிலைக்கு இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பினை தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்க முன்வருவார்களா?[/size]

[size=4]நான்கு மேடைகளில் நான்கு வீரவசனம் பேசி மக்களை உணர்வின்பால் உந்தி வாக்குகளைப் பெற்றுக்கொண்டாலோ, நான்கு பென்சில்களையும், ஐந்து மண்வெட்டிகளையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு அதனைப் படம் பிடித்து இணையத்தளங்களில் வெளியிட்டாலோ மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாங்கள் தனி ஈழம் கேட்கவில்லை, எங்களுக்கு வடக்கு - கிழக்கு இணைப்பு வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் மட்டும் நின்றுவிட்டால் போதுமா?[/size]

[size=4]முதலில் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முற்பட வேண்டும். அதனைவிடுத்து கட்சிக்குள் இருக்கும் பிடுங்குப்பாடுகளை வளர்த்துக்கொள்ள எதிர்க்கட்சியினர் போல ஆளுக்கு ஆள் அடித்துக் கொண்டு வசைபாடிக்கொண்டு தனிப்பட்ட நபர்களுக்கு ஆள்பிடிப்பதில் பலன் இல்லை. கட்சி அரசியலை விடுத்து மக்களுக்கான அரசியலை செய்வதற்கு தமிழ்த் தலைமைகள் முன்வரவேண்டும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை கையிலெடுத்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.[/size]

[size=4]-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்[/size]

http://tamilleader.com/mukiaya/5730-2012-08-25-12-42-38.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.   பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.   மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.