Jump to content

ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன்


Recommended Posts

ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன் வரவிருக்கிறது.

நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள்.

நாளை தொடர்கிறேன்.

Link to comment
Share on other sites

நாளைக்கோ எழுத போறிங்க?

Link to comment
Share on other sites

நாளைக்கோ எழுத போறிங்க?

தீர்த்தம் முடிந்து நாளக்கு தான் மச்சம் சாப்பிடுவீனம் அது தான்

என்னை மாதிரி

:lol::o:o:o

Link to comment
Share on other sites

ஆஹா..... ஆட்டுக்கறியா !

அதை தானே ஒவ்வொரு நாளும் போடுறோம் அதற்கு பிறகும்

:lol::o:o:o

Link to comment
Share on other sites

லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?

Link to comment
Share on other sites

படங்களுடன் போட்டால் இன்னும் நல்லது புலிபாசறை

Link to comment
Share on other sites

தூயா மோகன் என்னுடைய படம் இணைக்கிற பைல் சைசினை உங்கட புள்ளிங்கால கொஞ்சம் கூட்டித்தந்தால் கலர் கலராக போட்டு கலக்குவேன். அது சரி உங்கள் சமையல் அறையில் சமையல் சம்பந்தமாக கதைக்கவெளிக்கிட்டு இந்த வில்லுவால் நாங்களும் குப்பை போட வெளிக்கிடுகிரம் என்று நினைக்கிறன். ஆக்வே அவரை கொஞ்சம் அமத்தி எழுதச்சொல்லுங்கோ. நான் வில்லங்கத்துக்கென்று வலிய போற ஆல் அல்ல படுத்திருந்த புலி இப்ப எழும்பி நிக்குது பாயப்பண்ணிப்போடுங்கள்.

Link to comment
Share on other sites

உறைக்கப் போகுது என்றுவேற சொல்லுறியள், ஆகவே கொஞ்சம் அமைதியாகச் செய்யுங்கள். செய்முறைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

Link to comment
Share on other sites

லிசாவின் ஸ்பெசலாக சுட சுட இன்றிரவு செய்து பார்த்த கையோடு தருகிறேன். பார்க்கப்போனா ரொம்ப உறைக்கப்போகுது. ஜமுனா நீங்கள் அளுதிடுவீங்க. என்ன லிசா தயாரா.?

பார்த்தாலே அழுதுடுவன் என்றால் சாப்பிட்டால்

:P

Link to comment
Share on other sites

ஐயய்யோ எல்லாம் இருக்கு லாம் ஸ்ரொக் சேவ்வேயில் வேண்ட மறந்திட்டேனுங்க ....கொஞ்சம் பொருங்க ஓடிப்போய் வேண்டிட்டு வந்து அப்புறமா சொல்லிரேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அதை வாங்கி வருவதற்குள் இதை கொஞ்சம் கேளுங்கோ!

தூயா! உங்களது சுவையருவியில் தோசை செய்முறையில் 12மணித்தியாலங்கள் தோசை மாவை புளிக்கவைக்கவேண்டுமெனசொன்ன

Link to comment
Share on other sites

இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

அப்படி உங்களை தடை செய்யவில்லை. தவறு உங்கள் பக்கம் இருக்கலாம் :lol:

இவ்வளவு நேரம் ஒரு மணித்தியாளமாக ரைப்பண்ணிப்போடு போஸ்ட் பண்ண வெளிக்கிட்டா மோகன் தடை மீண்டும் போட்டிட்டார் போல எல்லாம் போச்சு எழுதினது எல்லாம் போச்சு. .......படமும் இணக்கமுடியவில்லை. அனுப்ப வெளிக்கிடேக்க பாஸ் வேட்டை அடி என்ற ஒரு பொக்ஸ் வந்திச்சுது அதை பில் பண்ணிப்போட்டு வர மீண்டும் வர வெறும் பேப்பர் எழுதினது எல்லாம் போச்சு. :angry: :angry: :angry: :angry: :angry: :angry:
Link to comment
Share on other sites

லிசா, தூயா, ஜமுனா சோக்கான சமையள் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வந்து இரன்டு பியரையும் அடிக்கப்பண்ணி சாப்பிடக்கொடுத்து அனுப்பி இருக்கிறேன். சும்மா வாசத்தோட ஊரில கறி காச்சினமாதிரி இருந்துது. நாளைக்கு காலை என்ன பாடோ தெரியாது? நான் உங்களுக்கு மீண்டும் நாளை எழுதுகிறேன். மன்னிக்கவும். இப்ப சில நேரங்களில் ஒரு இரண்டு போஸ்ட் அடித்த கையோட இப்படி அடிக்கடி பாஸ்வாடினை அடி யென்று வருகுது. போஸ் அடிச்ச கையோட மோகன் சொல்லுறார் அப்படி ஒரு பிழையும் இல்லை என்று.

அது சரி இவர் நித்திரை கொள்ளிரது இல்லையோ. என்ன சாமத்தில எழும்பி போஸ்ரர் அடித்தாலும் பிடித்திடுவார் போல இருக்கு. என்ன மனுசனப்பா இந்தாள் பகலிலையும் பிடிக்கிரார், இரவுளையும் ஆள் இங்கை நிக்குது?எதுக்கும் கவனாமாய்தான் என்னை பொலோ பண்ணிரீனம் போல ;)

Link to comment
Share on other sites

நல்ல காலம் நான் பெரியபடிப்பு படிக்கேல்லை. :lol::lol:

எங்களுக்கும் வைத்திருக்கிறீங்களா அல்லது முடித்து விட்டீங்கலா

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம். :lol::lol:

Link to comment
Share on other sites

மெக்ஸிக்கன் மட்டன் கறி

mixicanza8.jpg

இதில் விசேடமாக மெக்ஸிக்கன் மிளகாய்களின் பங்கு பிரதானமாக இருப்பதால் உங்கள் நாடுகளில் உள்ள மெக்ஸிக்கன் பலசரக்கு கடையில் இதனை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ணில் பிறஸ்டன், விக்ரோரியா மாக்கெற்றில் உள்ள இத்தாலி கடைகளில் இதை பக்கற்றுகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையானவை:

- 3 காய்ந்த "அங்கோ" மிளகாய் எமது செத்தல் மிளகாயினை போல இருக்கும். எமது செத்தல் மிளகாயினையும் இதற்கு ஈடாக பாவிக்கலாம்.

- 2 டீஸ்பூன் ஒலீவ் ஒயில் அல்லது கொலஸ்ரோல் கூடிய ஆட்டு இறைச்சியில் உள்ள கொழுப்பினையும் பாவிக்கல்லாம் வதக்க.

- 1 பெரிய "யலபீனோ" என்ற உறைப்பு கட்டை மிளகாய் ரகம். அதற்கு பதிலாக சின்ன கொச்சிக்காய் உறைப்பாணது சிவப்பு பாவிக்கல்லாம். கொட்டையினை எடுத்துவிடுங்கள். அது வயிற்றில் இருந்து சமிபாடு அடையாது எரிச்சலை ஏற்படுத்தும்.

-ஒரு முழு வெங்காயம். வளையங்களாக வெட்டி வைக்கவும்.

- 4 உள்ளி நறுக்கியது

- 500 கிராம் தக்காளி சிறுதுண்டுகளாக நறுக்கியது.

50 கிராம் சுல்தான் என்று அழைக்கப்படும் சிறு திராட்ச்சை வற்றல்.

- 1/4 ரீஸ்பூன் கராம்புத்தூள்.

- 1/4 ரீஸ்பூன் கறுவாத்தூள்

- 250 மிலீ லாம் ஸ்ரொக்ஸ் சுப்பமாக்கற்றில் சூப் செக்சனில இருக்கு.

- தேவைக்கேற்ப உப்பு

- தேவையாயின் சிறிதளவு அரைத்த மிளகுதூள்.

- 1 கிலோ எழும்பில்லாத மட்டன் இறைச்சி

செய்முறை:

1. அங்கோ மிளகாயினை தாச்சியில் எண்ணைவிடாது இளகிய சூட்டில் மொறு மொறு என வர, வாசம் வரும் மட்டும் வறுத்து எடுக்கவும். பின்பு அதனை உடைத்து கொட்டைகளினை எடுத்து விட்டு, சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை மூடும் அளவுக்கு சுடுதண்ணி விட்டு 30 நிமிடங்கள் மூடி ஊறவிடவும். அதன் பின்பு ஊறியவுடன் மேலே ஊறவைத்த அங்கோ மிளகாயினையும் அதனுள் இருந்த தண்ணீரையும் அரைக்கும் புரோசஸ்சரில் போட்டு களியாக, பேஸ்டாக அடித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.

2. சோஸ்பானில் ஆட்டுகொழுப்பினை சிறிதளவு ஒலிவ் ஒயில் விட்டு அல்லது ஒலிவ் ஒயில் மட்டும் விட்டு. "ஜலபீனோ", வெங்காயம், உள்ளி ஆகியவற்றை பொன்னிறமாக வரும் வரை தாழிக்கவும்.

3. இப்போது தாழித்ததுகளின் மேலே தக்காளித்துண்டுகளினை போடு ஓரளவு களியாக வரும்வரை வதக்கவும்.

பதம் வந்ததும் சுல்தான், கற்வாத்தூள், கராம்புத்தூள், உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கவும்.

4. இப்போது மண்சட்டியில் இல்லாவிடில் சாதாரண சட்டியில் இதுகளினை மாத்தி அதனுள் மேலே சொன்ன அங்கோ பேஸ்டினையும் விட்டு கலக்கி, இறைச்சி துண்டுகளினை சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது கொழுப்பினையும் போட்டு, லாம் ஸ்ரொக்கினை 250மிலீ அளவு தண்ணியில் கலந்து இதனுள் விடவும். ஆட்டுக்கறிக்கு தண்ணி கூட விடக்கூடாது. அதில் உள்ள தண்ணி தானாக்வே வெளிவந்து அதில் அவையவிடவும்.

5. மூடிவிட்டு அளவான சூட்டில் அவியவிடவும்.

ஆகா சாப்பிட்டுப்பாருங்களேன். உறைப்புக்கு ஏற்றவாறு அதனை சரிசெய்ய வயிற்றுக்கு ஏதேனும் கறிகளினை தயார்படுத்தவும். அல்லாவிடில் அடுத்த நாள் வயிற்றில் எரிவு ஏற்படும்.

Link to comment
Share on other sites

ஆனா பாருங்க இந்த ஆட்டுக்கறியில் நாங்கள் சில புதுமைகளினை புகுத்தி கொத்தமல்லி, நற்சீரகம், கருவெப்பிலை, யாழ்ப்பாணத்தூளினையும் சிறிதளவு சேர்த்து சமைத்து பாருங்கல். சீரகம்+ கராம்பு+ கறுவா+ கொஞ்ச கொத்தமல்லி+மிளகு போட்டு மிக்ஸரில மாபோல அரைத்து அந்த கரம் மாசாலாவினையும் நாம்,

யாழ்ப்பாண தூளினையும் பாவித்து சமையள் பண்ணிப்பார்ப்போம். கடைசியாக ஆறவிட்ட பின்பு ஒரு அரை டேசிக்காயினையும் புளிந்து விட...

யாழ்பாண ஆட்டுக்கறி மெக்ஸிக்கனை தூக்கிச் சாப்பிட்டு விட்டிராது. :(

Link to comment
Share on other sites

லிசா என்ன சாஎ உங்களுக்காக மரக்கறி சாப்பிடுறநான் மச்சம் காச்சி அதுவும் கஸ்டப்பட்டு சாமானுகள் எல்லாம் தேடி ஒரு நன்றி கூறுவம் என்று ஒரு யோசனை வரவில்லையா? <_<

Link to comment
Share on other sites

:lol:

ஏதோ என்னிடமுள்ள கொஞ்சஅறிவை களத்திலே கரைப்பம். :lol::o

நீங்கள் இவ்வளவு தன்னடக்கமாக சொல்லும்போதே விளங்குது நீங்கள் அறிவாளி என்று

<_<

புலி தாத்தா எப்படி மான் இறைச்சி சமைக்கிறது என்று சொல்லுங்கோ சிட்னியில இப்ப மான் இறைச்சி ஒவ்வொரு புதன் கிழமையும் வருது வீட்ட சரியா செய்யினம் இல்லை பட் வேற வீட்ட சாப்பிட்டனான் அது நல்ல ருசியா இருந்தது அப்ப நான் என்ட வீட்ட சொன்னனான் நம்ம புலி தாத்தா நல்ல சமைப்பார் அவரிட்ட கேட்டு சொல்லுறேன் என்று ஆகவே புதன்கிழமைக்கு முன் சொல்லுங்கோ

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.