Jump to content

டில்லிராணியும் அலறும் அப்பாவிப் பெண்களும் .... வன்னியில் அரங்கேறும் அவலங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டில்லிராணியும் அலறும் அப்பாவிப் பெண்களும் .... வன்னியில் அரங்கேறும் அவலங்கள் - 1 –

18 அக்டோபர் 2013


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுதர்ஸினி பெனான்டோ

விடை தெரியாத பல கேள்விகளுடன் உங்களிடம் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களை நான் சந்திக்க இருக்கிறேன்;.....


தேர்தலில் மிகப்பலமான வெற்றியை பெற்று விட்டோம் என்ற வீரப்பிரதாபங்கள்; இன்னும் ஓயவில்லை. அவலங்களை சுமந்து அனாதரவாய் வாழும் எம்மக்கள் துரும்பாய் தந்த வாக்குகள் இன்று அரசியல் கழுத்தறுப்புகளுக்கும், பந்தாக்களுக்கும், கதிரைகளைப் பற்றிப் பிடிப்பதற்கும் பயன்பட்டுக்கொண்டு இருக்கின்றன.


இத்தகைய அபத்தமான சூழலில் என் மனதில் எம் சமூகம் தொடர்பாக எழுகின்ற கவலையுடன் கூடிய விடை தெரியாத பல பிரச்சினைகள் கண்களிற்கு தெரிகின்றன. அவ்வப்போது தேவை நிமித்தம் வன்னி செல்லும் போது அந்த மக்களின் வாழ்வின் கொடுமைகளை என்னால் முடிந்தளவிற்கு தெரிநிதுகொள்ள முற்படுகிறேன். அவற்றை இனங்கண்டு வருகின்றேன். இந்தப் பிரச்சனைகள் முற்றி, கனிந்து, விதையாகி, மண்ணில் புதையுண்டு, முளைப்பதற்கு முன்னர் தடுக்கப்பட வேண்டும் இல்லையேல் விடுதலைக்காய் உயிர் நீத்த லட்சக்கணக்கான உறவுகளின் தியாகங்கள் விளலுக்கு இறைத்த நீராவதனை யாரும் தடுக்க முடியாது. அதனால் வாரம் ஒரு முறை குளோபல் தமிழ்ச் செய்திகளின் ஊடாக உங்களை சந்திப்பேன்....

சுதர்ஸினி பெனான்டோ -

திருமுறிகண்டியில் அரை ஏக்கர் திட்டத்தில் (மீள் குடியேற்ப்பட்ட இவர்களின் நிலத்தில் இராணுவம் குடியிருக்கின்றது) இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் வீ.........ம் தே.......னி என்பவர் தற்போது சவூதியில் வீட்டுப்பணிப் பெண்னாக தொழில் புரிகின்றார். போரில் கணவரை இழந்தவர். வயது 34. இவர் 4 பிள்ளைகளின் தாய். இவர் எவ்வாறு; சமூக விரோத கும்பல்களினால் ஏமாற்றப்பட்டு வெளிநாடு சென்றார் என்பதனையும் இங்கு நோக்கப்படவேண்டியது.


சாந்தபுரத்தில் வசிக்கும் டில்லி ராணி என்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் பெண்ணே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு காரணம் என அறியப்படுகிறது. இவரின் பிரதான தொழில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் மிகவும் வறுமையான வெளி உலகம் தெரியாத பெண்களை தெரிந்தெடுத்து இராணுவத்திற்கு தேவையான போது விபச்சாரத்திற்கு அனுப்புதல் மற்றும் ஆடைத்தொழிற் சாலையில் வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறி பெண்களை ஏமாற்றி இராணுத்தின் துணையுடன் கொழும்பின் புறநகர் பகுதிகளிற்கு விபச்சாரத்திற்கு அனுப்புதல். (இதில் சரியான அணுகுமுறைமைகளின் ஊடாக உண்மையாகவே ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைபெற்று தொழில் புரியும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் டீல்லிரானியால் அனுப்பபட்டு சீர்கேட்டுக்கு உள்ளாகுபவர்களில் உள்ளடங்க மாட்டார்கள். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)


அவ்வாறு கொழும்பிற்கு அனுப்பட்ட பெண்களில் ஒருவரே வீ...........ம் தே.......னி ஆவார். இவருடன் 3 பெண்களை கொழும்பில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். அதில் 2 பெண்கள் வீடு திரும்பி வந்து விட்டதாகவும் வீ........ம் தே........னி மட்டுமே சவூதி சென்றதாகவும் அவரின் இயலாத தாய் கண்ணீர் விட்டு புலம்புகின்றார்.


இந்த தாய்க்கு தான் வாழும் வன்னியைத் தவிர வேறு பிரதேசங்களையோ கொழும்பையோ தெரியாது இவ்வாறான குடும்பங்களே பரிதாபமாக ஏமாற்றப்படுகின்றார்கள். தற்போது இந்த தாய் அவரின் மகள் பெற்ற 4 பிள்ளைகளையும் சேர்த்து சுமக்க வேண்டிய மூதாட்டி ஆகிவிட்டாள். டில்லி ராணியின் மூலம்; சவூதி அனுப்பப்பட்ட பெண் அங்கு சென்று 6 மாதங்கள் ஆகிவிட்டன இதுவரை 1 தடவை மட்டுமே தொடர்பு கொண்டு 18 000 டூபா பணம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.


டில்லி ராணியினால் பாதிக்கப்படுவோர் கண்ணீரில் நனைகின்றனர். இராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கும் டில்லிராணி பற்றி வாய்திறக்கவே அங்குள்ளவர்கள் நடுங்குகிறார்கள்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97786/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இங்கிருந்து வீரம் பேசுபவர்கள் போய் அந்தப் பெண்ணை அடக்கலாமே ^_^
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.