Jump to content

தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-2


Recommended Posts

தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-2

---------------------------

தமிழனனை தமிழனால் மட்டும் தான் ஏமாற்றவும் முதுகில் குத்தவும் ஏலும் பாருங்கோ!

2 நண்டுகளை ஒரு போத்தலுக்குள்ள போட்டால் ,அதில ஒண்டு மேல ஏற இன்னொண்டு அதுகின்ர கால இழுத்து கீழவிழுத்துமாம்!

பிறகு மற்றது ஏற இது கீழ இழுத்து விழுத்துமாம்!

கடைசியில ஒண்டும் தப்பாமல் செத்துபோகுமாம்.

இதுகள் தான் " தமிழ் நண்டுகள்"...!!

இப்பிடித்தான் எங்கட இனம் அழிஞ்சு போகுது!

பொதுநலவாய நாடுகள் மாகாநாடு சிறிலங்காவில் நடக்கவே கூடாது!

இதுக்கு இரண்டாம் பேச்சுக்கே இடமில்லை.ஆனால் சர்வதேச சமூகம் என்ற ஒரு கோதாரி விழுந்த சமூகம் மீண்டும் தமிழர்களை கிள்ளு கீரையாக நினைக்குது!

ஏனெண்டால் ஈழத்தமிழன் யாருமில்லாத அநாதைகள்!

கேள்வி கேட்க யாருமில்லாத ஈனப்பிறவிகள் எண்டு எல்லாருக்கும் தெரியும்!

பக்கத்தில 7 கோடி தமிழர் இருந்தும் 1 லச்சம் எங்கட சனம் துடிச்சு துடிச்சு சாக பாத்துக்கொண்டிந்த காலமும் இருந்ததுதானே!

விசயின்ர தலையின்ர படம் வரயில்லையெண்டா சாகும் சிலதுகள் இருக்கிற தமிழகத்தில தான் முத்துக்குமாரும் செங்கொடியும் உயிரை விட்டதுகள்!

கருணாநிதி போன்ற கோடாரிக்காம்புகளும் கருநாகங்களும் உள்ள தமிழத்தில தான் தோழர் தியாகு,ஐயா பழ நெடுமாறன்,மணிவண்ணன் போன்ற மனிதர்களும் வாழுகினம்!

நரியும் நாகமும் தேர்தலில நிண்டா எதுக்கு வாக்கு போடுறது?

சனம் என்ன செய்யும் பாவம்??

அடுத்தமுறை தேர்தலில வெல்ல மு.க என்ன திருகுதாளம் எல்லாம் பண்ணுவானோ தெரியயில்லை!

பொதுநலவாய மாநாட்டுக்கு தான் சொல்லித்தான் மன்மோகன் சிங் போகாமல் விட்டவர் எண்டு பெரிசா பீலா விடுவான் பாருங்கோ!

இதென்ன புதுக்கதை !

எப்ப மன்மோகன் சிங் போகமாட்டன் எண்டு சொன்னவர் எண்டு குழம்பாதையுங்கோ!

காங்கிரஸ் காரனும் தி.மு.க வும் சேர்ந்து பெரிய படம் காட்டினாலும் காட்டுவாங்கள்!

வாக்கு வேணும் பதவி வேணும் எண்டா என்ன குத்துக்கரணம் எண்டாலும் அடிப்பாங்கள்!

ஏன் எங்கட கூட்டமைப்புகாரர் அடிக்கிற குத்துக்கறணங்களையும் கூத்துகளையும் கண்ணால பாக்கிறியள் தானே!

எங்கட சனம்,இனம் என்ன பாவம் செய்ததோ தெரியயில்லை!!

பனையால விழுந்தவனை மாடேறி மிதிச்ச நிலமைதான் எப்பவும்!

சிறிலங்காவில தமிழனுக்கு நிகழ்ந்த அவலம் இந்தியாவில தமிழனுக்கு நடக்காது எண்டு மட்டும் நினைக்காதையுங்கோ!

காலப்போக்கில காங்கிரஸ் காரன் கெதியில செய்வாங்கள்!

என்ன இப்ப கொஞ்சம் நம்பிக்கையும் மரியாதையும் எங்கட பள்ளிக்கூட பொடியள் செய்யுற போராட்டத்தில வருகுது!

அதையும் உவங்கள் அதை இதைச் சொல்லி குழப்பிபோடுவாங்கள் எண்ட பயமும் கூடவே இருக்குது!

தமிழகத்தில மாணவர் புரட்சி போல எங்கட மண்ணிலையும் நடக்கவேணும்!

கட்டாயம் நடக்கும்!

சரி நானொருக்கா உவர் விதானையாரை பாக்க போகவேணும்.

இந்தியாக்காறர் ஏதோ வீட்டுத்திட்டம் குடுக்கிறாங்களாம்!

என்ர பேரும் கிடக்கோ எண்டு பாக்கவேணும்!

போட்டு வாறன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.